கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – திரிஷா நடித்து வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இப்படத்தின் பாடல் மனதை வருடும் படி அமைந்திருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த கவுதம் மேனன் ‘தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து நான் ஒரு படம் இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அவருக்காக ஒரு கதை எழுத துவங்கினேன். அவர் ஆக்ஷன் படங்களில் நடிப்பவர். ஆனால், எனக்கு காதல் கதைதான் மனதுக்கு தோன்றியது. கதை யோசித்த போது ‘இந்த உலகத்துல இவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெர்சிய லவ் பண்ணேன்’ என்கிற வசனத்தைதான் முதலில் எழுதினேன். மகேஷ்பாபு அந்த கதையில் நடிக்க விரும்பவில்லை. அதன்பின்னர்தான் அந்த படத்திற்குள் சிம்பு வந்தார்’ என கவுதம் மேனன் கூறினார்.