The post ‘ஜவான்’ திரைப்படத்தில், விஜய் நடிக்கிறாரா? appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால், அது தவறு என்பது தெரியவந்துள்ளது.
லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்த விஜய், ஓய்வுக்காக வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
The post ‘ஜவான்’ திரைப்படத்தில், விஜய் நடிக்கிறாரா? appeared first on Touring Talkies.
]]>The post செல்பி ரசிகர்; தட்டிய ஷாருக் கான்! appeared first on Touring Talkies.
]]>அப்போது, நடிகர் நடிகர் ஷாருக் கான் அவரை அந்த பக்கம் தள்ளி விட்டார்.
விமான நிலையத்தில் இருந்து ஷாருக் கான் வெளியே வந்ததும் ரசிகர்கள் கும்பலாக அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது, பலரும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முயன்றனர். அதில் இந்த ரசிகர் சற்று நெருங்கி சென்று உள்ளார். இதனால், அவரதை தள்ளி நிற்கச் சொல்லி தட்டிவிட்டார் சாரூக் கான்.
இதில் அந்த ரசிகரின் போன் சற்று தள்ளி போய் கீழே விழுந்தது. அந்த நபரை முறைத்து பார்த்து விட்டு திரும்பிய நடிகர் ஷாருக் கான் மற்றவர்களை நோக்கி புன்னகைத்து விட்டு, உடனடியாக தனது காரை நோக்கி விரைந்து சென்றார்.
The post செல்பி ரசிகர்; தட்டிய ஷாருக் கான்! appeared first on Touring Talkies.
]]>The post துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுகிறது! appeared first on Touring Talkies.
]]>
Vijay ajith Shah rukh khan pathaan varisu thunivu
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகின்றன.
இதனால் அடுத்து பிப்ரவரி மாதம் வரை தமிழில் வேறு எந்த படங்களையும் திரையிட தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழில் அடுத்து புதிய படம் வெளியீடு பிப்ரவரி 3-ந் தேதிதான் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு பாலிவுட்டில் ஷாருக்கான நடிப்பில் வெளியான பதான் படம் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ஷாருக்கான் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுக்கும் படமாக இந்த பதான் படம் அமைந்துள்ளது. இப்படம் உலகம் முழுதும் நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது
அதே போல முதல் நாள் வசூல் எதிர்பார்த்தது போல இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.
‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகியவை மட்டுமே வெளியாகி இரு வாரங்கள் ஆகிவிட்டன. ஆகவே, தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் முன்பதிவு குறைந்துள்ளதால், அப்படங்களின் காட்சிகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து பதான் படத்துக்கு அதிக அளவில் திரையரங்கம் ஒதுக்கப்பட்டும் என திரையுலக புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.
The post துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுகிறது! appeared first on Touring Talkies.
]]>The post விமர்சனம்: பதான் appeared first on Touring Talkies.
]]>இந்தியாவின் உளவாளியாக இருக்கும் ஜான் ஆபிரகாம், ஒரு கட்டத்தில் தேசத்துக்கு எதிராக மாறுகிறார். இந்தியாவை அழிக்க புறப்படுகிறார் இன்னொரு உளவாளியான ஷாருக்கான். ஆனால் அவரை தனது காதல் வலையில் வீழ்த்துகிறார் தீபிகா படுகோன். இதனால் ஷாருக்கான் தடுமாறி, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலை.
இந்த இடைவேளை ட்விஸ்ட்டுக்கு பிறகு, மீளும் அவர், ஜான் ஆபிரகாமை துரத்தி துரத்தி அடித்து உதைத்து, இந்தியாவுக்கு எதிரான சதியை முறியடிப்பதே கதை.
8 பேக்ஸ் உடம்புடன் ஷாருக்கான் மிரட்டுகிறார். இன்னொரு பக்கம், ஜான் ஆபிரகாமும் தனது கட்டுடல் காட்டி அதிரடிக்கிறார். இருவரும் ரசிகைகளை கவர்வார்கள் என்பது உறுதி.
இவர்களுக்கு தான் சளைத்தவர் இல்லை என தீபிகா படுகோன், பிகினி உடையில் உலா வருகிறார். இது ரசிகர்களுக்கு விருந்து.
அதிரடி ஆக்சனில் மட்டுமின்றி, சென்ட்டிமெண்ட் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார் ஷாரூக்கான். அதே போல ஜான் ஆபிரகாம், உண்மையிலேயே கொடூர வில்லனோ என நினைக்கும் அளவுக்கு மிரட்டி இருக்கிறார்.
தீபிகா படுகோன் கவர்ச்சியில் மட்டுமல்ல.. சண்டைக் காட்சியிலும் தூள் பறத்துகிறார்.
ஓடும் ரயிலில் சண்டை.. ஹெலிகாப்டரில் சண்டை, மலை உச்சியில் சண்டை.. என படம் முழுதும் சண்டைதான். ஆனால் ஸ்பெயின், ரஷ்யா என பல நாடுகளில் அசரடிக்கும் லோகேஷன்களில் படத்தை எடுத்து, நம்மை மயக்கி விடுகிறார்கள்.
சண்டைக் காட்சி மட்டுமின்றி அதை சிறப்பாக படமாக்கிய ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வேண்டும்.
மற்றபடி நம்ப முடியாத காட்சிகள்தான்.
தவிர, ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
ஷாருக்கான், தீபிகா படுகோனிடம், “நீ ஒரு பாம். அதில் பிளாஸ்ட் ஆக நான் ரெடி” என்கிறார்.
இன்னொரு இடத்தில் பூபிள்ஸ் என்று கூறுகிறார்.
மொத்தத்தில் லாஜிக் இலாவிட்டாலும், தனது திரைக்கதை மேஜிக்கால் ரசிக்கவைத்து விடுகிறார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த்.
சிறுவயதில் காமிக்ஸ், பிறகு ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் பார்த்து ரசித்தவர்கள் இப்படத்தை ரசிக்கலாம்.
The post விமர்சனம்: பதான் appeared first on Touring Talkies.
]]>The post முதலமைச்சருக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார்! appeared first on Touring Talkies.
]]>இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது.
‘அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற, பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் நடனமாடி இருக்கிறார். இது இந்து மதத்தை இழிவு படுத்துகிறது’ என இந்துத்துவ அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது. அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர், ‘ஷாருக் கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன்’ என்று கூறி அதிர்ச்சி கிளப்பினார்.
பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும், குறிப்பிட்ட பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சில இடங்களில், படத்தின் போஸ்டர்கள், பெரிய அளவிலான கட்-அவுட்டுகள் உள்ளிட்டவற்றை கிழித்து, வீசி எறிவதும் நடக்கிறது.
இப்படத்தை வெளியிடக்கூடாது என திரையரங்குகளுக்கும் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தி நகரில் பதான் படம் வெளியாக கூடிய திரையரங்குகளுக்குள் பஜ்ரங் தள அமைப்பினர் புகுந்தனர். அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்தும், எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ஷாருக் கான் யார்? அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது பதான் படம் பற்றியும் எனக்கு தெரியாது” என்றார்.
மேலும், “மக்கள் அசாமை பற்றி கவலைப்பட வேண்டும். இந்தி திரைப்படங்களை பற்றி அல்ல. ஷாருக் கான் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஒருவேளை, அவர் என்னை தொடர்பு கொண்டால் அதுபற்றி விசாரிப்பேன். சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்பட்டு இருந்தால், வழக்கு பதிவு செய்யப்படும்” என கூறினார்.
இந்நிலையில், இன்று அதிகாலை அசாம் முதலமைச்சரை, ஷாருக்கான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இது குறித்து தனது டுவிட்டரில் முதலமைச்சர் பிஸ்வா வெளியிட்டு உள்ள செய்தியில், ‘பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது படம் திரையிட உள்ள திரையரங்கில் நடந்த அசம்பாவித சம்பவம் பற்றி வருத்தம் தெரிவித்து பேசினார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை என அவருக்கு உறுதி கூறினேன். இதுபற்றி நாங்கள் விசாரணை செய்து, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’ என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
The post முதலமைச்சருக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார்! appeared first on Touring Talkies.
]]>The post தமிழ் சினிமாவில் என் நண்பன் யார்?ஷாருக்கான் ஓபன் டாக் appeared first on Touring Talkies.
]]>பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கான் தயாரிப்பாளர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழில் இவர் தேசம்,ஹே ராம், சாம்ராட் அசோகா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் மற்றும் நண்பன் யார் என கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் அஜித் ரொம்ப பிடிக்கும். அவரை எனது நண்பராக பார்க்கிறேன் என்றார். அவரது இந்த பதில் தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஷாருக்கான் மற்றும் அஜித் இருவரும் சாம்ராட் அசோகா என்ற படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ் சினிமாவில் என் நண்பன் யார்?ஷாருக்கான் ஓபன் டாக் appeared first on Touring Talkies.
]]>