The post சீனு ராமசாமி படத்தில் இரவின் நிழல் நாயகி பிரிகிடா! appeared first on Touring Talkies.
]]>அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். பிக் பாஸ் புகழ் முகேன் நடிப்பில் வெளியான வேலன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரிகிடா நடித்திருந்தார்.
அதன்பிறகு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பலதரப்பட்ட சினிமா, ஊடகம் மற்றும் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
இரவின் நிழல் படம் வெளியாகி பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்தது. இந்நிலையில் நீர்ப்பறவை , தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
The post சீனு ராமசாமி படத்தில் இரவின் நிழல் நாயகி பிரிகிடா! appeared first on Touring Talkies.
]]>The post விருதுகளை குவிக்கும் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ ! appeared first on Touring Talkies.
]]>ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023-ம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது. தற்போது ‘கண்ணே கலைமானே’ படம் சிறந்த படத்துக்கான 17-வது அமெரிக்க சோகால் திரைப்பட விருதையும் வென்றுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் செப்டம்பர் 12-ந்தேதி நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது.
இதுகுறித்து டைரக்டர் சீனு ராமசாமி கூறும்போது, “நல்ல படைப்புகள் காலம் கடந்தும் பேசப்படும். அந்த வகையில் ‘கண்ணே கலைமானே’ படம் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகிறது. உலக படத்துக்கான தன்மைகள் இந்த படத்தில் இருப்பதால் சோகால் விருதை வென்று அமெரிக்க சர்வதேச பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது!” என்றார்.
The post விருதுகளை குவிக்கும் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ ! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஆண்டிப்பட்டி கணவாக் காத்து ஆள் தூக்குதே’ பாடல் நூறு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை appeared first on Touring Talkies.
]]>The post ‘ஆண்டிப்பட்டி கணவாக் காத்து ஆள் தூக்குதே’ பாடல் நூறு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை appeared first on Touring Talkies.
]]>The post கலைக்கல்வி: விஜய்க்கு வித்தியாச வேண்டுகோள் வைக்கும் சீனு ராமசாமி! டு வேண்டுகோள் appeared first on Touring Talkies.
]]>இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இந்த நிகழ்வை குறிப்பிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “கல்விக்கு ஊக்க கண் திறக்கும் ‘நண்பா’ இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன்.
நடிப்பில் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic (யதார்த்தமான) படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
The post கலைக்கல்வி: விஜய்க்கு வித்தியாச வேண்டுகோள் வைக்கும் சீனு ராமசாமி! டு வேண்டுகோள் appeared first on Touring Talkies.
]]>The post “காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு”: சீனு ராமசாமி கண்டனம் appeared first on Touring Talkies.
]]>இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு, “படைப்பு சுதந்திரத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பதா” என கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இயக்குநர் லெனின் பாரதி, “பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து மனிதனை மலம் அள்ள வைக்கும் இந்து மதத்தின் அடிப்படைவாதத்தை தனது படைப்பின் மூலம் கேள்விக்குள்ளாக்கிய விடுதலை சிகப்பிக்கு துணை நிற்போம்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மேலும் இயக்குநர் சீனு ராமசாமி, “தம்பி விடுதலை சிகப்பியின் மீதான வழக்குகள் வாபஸ் பெற வேண்டுகிறேன். காயம்பட்ட பறவைகள் கதைக்க/ கவிபாட/ இசைக்க/ அட எழுதி கிறுக்க ஊர் உண்டு/ உறவுண்டு/ நிலமுண்டு/ நீண்டு வாழ வாழ்வுண்டு/ உரிமையுண்டு/ அடியேனும் அதற்கு துணையுண்டு.. இழிவு செய்யும் நோக்கமில்லை. இளைஞன் அவன் இன்னல் செய்யாதீர்..” எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post “காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு”: சீனு ராமசாமி கண்டனம் appeared first on Touring Talkies.
]]>The post இனி நான் விஜய் சேதுபதி உடன் இணைய போவதில்லை!: மேடையிலேயே அறிவித்த இயக்குனர் சீனு ராமசாமி. appeared first on Touring Talkies.
]]>இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் 3 தேசிய விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 20-ம் தேதி ரஷ்யாவில் நடைபெற இருக்கும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சீனு ராமசாமி- விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான மாமனிதன் திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் மையத்தில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சீனு ராமசாமி “நடிகர் ராஜேஷ் தான் என்னுடைய வழிகாட்டி. வீரபாண்டிய கட்டபொம்மன் படம் எப்படி ரஷ்யாவுக்கு சென்றதோ அதேபோல் மாமனிதன் திரைப்படம் ரஷ்யாவுக்கு செல்கிறது. மாக்ஸின் கார்கியின் ’தாய்’ நாவல் தான் தென்மேற்கு பருவக்காற்று படம். நான் சினிமாவுக்கு வந்த நோக்கங்கள் தற்போது நிறைவேறி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க பெருமை வாய்ந்த ரஷ்ய நாட்டிற்கு மாமனிதன் படம் செல்ல இருப்பது நினைத்து மிக பெருமை அளிக்கிறது.
நான் ரஷ்யாவுக்கு போகவில்லை. ஆனால், மேற்கு தொடர்ச்சி மலை, என் ஊரில் மேய்ந்த கோழியும், மனிதநேயமும், கலாச்சாரமும் தான் போகிறது.திரையரங்கில் 20% ரசிகர்களோடு மாமனிதன் திரைப்படம் ஓடி முடித்தது. நீங்கள் தான் எட்டு படம் எடுத்து விட்டீர்களே ஒரு படம் தானே டிவியில் அனைத்து மக்களும் பார்ப்பார்கள் என்றார்கள். 8 பிள்ளை பெற்றாலும், உயிரோடு இருக்கும் ஒரு பிள்ளையை பார்க்க வேண்டாமா? ஆனால் இந்த ஒரு பிள்ளை தற்போது உலக ஒலிம்பிக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதியின் நடிப்பு உலகம் முழுவதும் தெரிய வேண்டும். உலக அரங்கில் மாமனிதன் திரைப்படம் தற்போது வரை 650 முறை திரையிடப்பட்டு ஈ இருக்கிறது. அதோடு OTT மூலம் மாமனிதன் திரைப்படம் 51 கோடி வசூல் செய்து இருக்கிறது. திரையரங்கில் வெற்றி பெற முடியாத படம் ஓடிடியில் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும், விஜய் சேதுபதியுடன் இணையும் வாய்ப்பு இனி கிடையாது. 12 ஆண்டு காலத்தில் நான்கு படங்களை விஜய் சேதுபதியுடன் சேர்ந்து இயக்கியுள்ளேன். நான் இறந்தாலும் இந்த படங்கள் பேசும்” என்று கூறி இருக்கிறார்.
The post இனி நான் விஜய் சேதுபதி உடன் இணைய போவதில்லை!: மேடையிலேயே அறிவித்த இயக்குனர் சீனு ராமசாமி. appeared first on Touring Talkies.
]]>The post பிரபல இயக்குநருக்கு சிறை! விடுவிக்க சீனு ராமசாமி கோரிக்கை! appeared first on Touring Talkies.
]]>சாபர் பனாகி உலக அளவில் கவனிக்கப்படும் ஓர் இரானிய திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய முதல் திரைப்படமான, ‘தி ஊன்டட் கெட்ஸ்’ திரைப்படம் 1988ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து, கிஷ், தி ப்ரெண்ட், தி மிரர், ஆஃப்சைட் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம், உலக அளவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
2000மாவது ஆண்டு நடைபெற்ற வெனிசு திரைப்பட விழாவில், இவரது, ‘தி சர்க்கிள்’ திரைப்படத்துக்கு தங்க சிங்கம் விருதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் ‘ஆப்சைடு’ என்ற திரைப்படத்துக்கு வெள்ளிக்கரடி விருதும் கிடைத்தன.
உலகப் புகழ் பெற்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஜாபர் பனாஹியை வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரபல தமிழ்த் திரைப்ட இயக்குநர் சீனு ராமசாமி வலியுறுத்தி உள்ளார்.
சாபர்பனாகி உலக அளவில் கவனிக்கப்படும் ஓர் இரானிய திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய முதல் திரைப்படமான, ‘தி ஊன்டட் கெட்ஸ்’ திரைப்படம் 1988ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து, கிஷ், தி ப்ரெண்ட், தி மிரர், ஆஃப்சைட் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம், உலக அளவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
2000மாவது ஆண்டு நடைபெற்ற வெனிசு திரைப்பட விழாவில், இவரது, ‘தி சர்க்கிள்’ திரைப்படத்துக்கு தங்க சிங்கம் விருதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் ‘ஆப்சைடு’ என்ற திரைப்படத்துக்கு வெள்ளிக்கரடி விருதும் கிடைத்தன.
ஈரான் அரசின் மத ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் பேசியதற்காக கடந்த 2010ம் ஆண்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
‘இருபது வருட வீட்டுச்சிறை.. தவிர, இந்த காலகட்டத்தில் அவர் திரைப்படம் எடுக்கக்கூடாது.. ஸ்டார்ட், கட் என்ற வார்த்தைகளையே பயன்படுத்தக்கூடாது’ என்று உத்தரவிட்டது ஈரான் அரசு.
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு, செல்போன் மூலமாக – தனது நிலை குறித்து… ஒடுக்கு முறையின் கொடூரம் குறித்து – படம் எடுத்தார், ஜாபர் பனாஹி. அதை பென் டிரைவில், பதிந்து ரகசியமாக வெளியே அனுப்பினார். “This Is Not A Film” என்ற அந்தத் திரைப்படமும் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், அவருக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது ஈரான் அரசு.
இதைத் தொடர்ந்து, “கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் நீண்ட நாட்களாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இயக்குநர் ஜாபர் பனாஹியை விடுதலை செய்ய வேண்டும்” என்று பிரபல தமிழ் இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் ஈரான் நாட்டில், அபதான் தீவில் செயல்படும் ‘மூவிங் திரைப்பட கல்லூரி’ அளிக்கும் த் திருவிழாவில்’ சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது. இதையும் தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ள சீனு ராமசாமி, “ நவீன யதார்த்த ஈரானிய சினிமா மேதை இயக்குநர் + நடிகர் ஜாபர்பனாகி, எனக்கு கலை உந்து சக்தியாக இருப்பவர். அவர் ஆறு வருட சிறைதண்டனை பெற்று இரானின் டெக்ரான் சிறையில் இருக்கிறார்
கருத்து சுதந்திர உலகில் அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமென இந்நேரத்தில் வேண்டுகிறேன்.
ஈரான் தந்த விருதின் ஈரத்தோடு இதை கேக்கிறேன்” என்று சீனு ராமசாமி குறிப்பிட்டு உள்ளார்.
“சீனு ராமசாமியின் கோரிக்கையினால், ஈரான் இயக்குநர் ஜாபர் பனாஹியின் கைது சம்பவம், தமிழ்நாட்டில் கவனம் பெற்றுள்ளது. திரைத்துறையின் மற்ற ஆளுமைகளும், இதே கோரிக்கையுடன் குரல் கொடுக்க வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
The post பிரபல இயக்குநருக்கு சிறை! விடுவிக்க சீனு ராமசாமி கோரிக்கை! appeared first on Touring Talkies.
]]>The post ‘மாமனிதன்’ படத்துக்கு மேலும் ஒரு கவுரவம்! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் நூற்றாண்டு கடந்த – பாரம்பரியம் மிக்க – காசி இந்து பல்கலைக்கழகத்தில் மாமனிதன் படம் திரையிடப்பட்டது.
காசி தமிழ் சங்கம விழாவை ஒட்டி, நடந்த இந்தத திரையிடல் நிகழ்ச்சியை இந்திய கல்வித்துறை மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார். காசி இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் டாக்டர் ஜெகதீஷன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.
மாமனிதன் திரையிடலுக்குப் பிறகு, படம் குறித்த கலந்துரையாடலும் நடந்தது.
இறுதியில் பேசிய சீனு ராமசாமி கூறும் போது, “மாமனிதன் படத்துக்கு தொடர்ந்து கிடைத்து வரும் அங்கீகாரம் மன நிறைவை அளிக்கின்றது. குறிப்பாக இவ்விழாவில் கர்ணன், திருவிளையாடல், கப்பலோட்டியத் தமிழன் என நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் திரையிட உள்ளனர். இதில் மாமனிதன் திரைப்படமும் இடம் பெற்றதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.
The post ‘மாமனிதன்’ படத்துக்கு மேலும் ஒரு கவுரவம்! appeared first on Touring Talkies.
]]>The post “நீர்ப்பறவை-2-ம் பாகம் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் அடுத்து ‘நீர்ப்பறவை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி அறிவித்துள்ளார். ‘நீர்ப்பறவை’ படம் கடந்த 2012-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இதில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். கடலோரத்தில் வாழும் ஒரு இளைஞனின் வாழ்வியல் இந்தப் படத்தில் கதையாக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ‘நீர்ப்பறவை’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “நீர்ப்பறவை பாகம்-2′ தொடங்கப்படும். ‘நீர்ப்பறவை’ அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடு கட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைபெருமக்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
The post “நீர்ப்பறவை-2-ம் பாகம் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post விரைவில் திரைக்கு வருகிறது ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘இடம் பொருள் ஏவல்’.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் லிங்குசாமி தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். 2014-ம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, 2015-ம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதற்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்தப் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கிய வேறு படங்களே வெளியாகிவிட்டன.
இதனிடையே, தற்போது இந்தப் படம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட்டு படத்தை வெளியிடவும் நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டதாம். இதனால் இத்திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரும் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
The post விரைவில் திரைக்கு வருகிறது ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>