The post ஃபர்ஸ்ட் நைட்லயே பிரச்னையாம்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய சம்யுக்தா, “நான் சின்ன பெண் என்று கூட விஷ்ணுகாந்த் பார்க்கவில்லை. 24 மணி நேரமும் அவருக்கு அது வேண்டும்” என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் விஷ்ணுகாந்த், ”ஆரம்பத்தில் எங்கள் திருமணத்துக்கு அவரது அம்மா ஒப்புக்கொண்டார். பிறகு ஏதேதோ சொல்லி பிரச்சினை செய்தார். ஒரு வழியாக திருமணம் முடிந்தது. ஆனால் முறைப்படி அவரது வீட்டில் முதலிரவு வைத்துக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஆகவே முதலிரவை எங்கு வைப்பது என்றே தெரியவில்லை. பிறகு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கினோம். இப்படி எல்லாமே அவரால் பிரச்சினைதான்” என்று கூறியிருக்கிறார்.
The post ஃபர்ஸ்ட் நைட்லயே பிரச்னையாம்! appeared first on Touring Talkies.
]]>The post விஷ்ணுகாந்த்- சம்யுக்தா பிரிவு பின்னணி இதுதானா? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் சம்யுக்தா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், “விஷ்ணுகாந்த் கொடுத்த அத்தனை இன்டர்வியூகளிலும் நான் அஃபேரில் இருந்ததாக கூறியுள்ளார். இது பற்றி கேட்டபோது அவர் இன்டர்வியூவில் பதில் சொல்ல மறுத்து டாப்பிக்கை மாற்றிவிட்டார். அந்த அஃபேர் என்ற வார்த்தைக்கு எனக்கு மீனிங் தெரிந்தாக வேண்டும் விஷ்ணுகாந்த்.
திருமணம் செய்துகொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என சொல்லி மிரட்டினார். அவருக்கு 32 எனக்கு 22 வயது. 10 வயது வித்தியாசம் என்றாலும் நான் அவருக்கு ஓகே சொன்னேன். ஏன்னா நல்லவரா இருந்தா போதும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் நான் என் காதலை வெளிப்படுத்திய பிறகுதான் தெரிந்தது இவரது உண்மையாக சுயரூபம் என்ன என்று. அதன்பிறகு நான் எதாவது சொன்னால் இது செட் ஆகாது உனக்கு ப்ரேக்கப் ஆகிவிட்டது என்று இன்ஸ்டாவில் போடு என்று சொல்லுவார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயந்து நான் அவரது காலில் விழுவேன். பண்ணாத தப்புக்கு நான் சாரி கேட்டேன்.
என் ஜாதகத்தில் இருக்கிறது. 25 வயதுக்குள் கல்யாணம் பண்ணால் இந்த கல்யாணம் நிலைக்காது என்று. 2-வது கல்யாணம் தான் நிலைக்கும் என்று என் ஜாதகத்தில் இருக்கிறது. இதை அவரிடம் சொன்னபோது ஜாதகம் எனக்கு நம்பிக்கை இல்லை. சம்யுக்தா இல்லை என்றால் நான் செத்துவிடுவேன் என்று என் அம்மாவிடம் சொல்லி கல்யாணதிற்கு சம்மதம் வாங்கிவிட்டார். 8 மாத பழக்கத்தில் என் மகளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று அம்மா கேட்டார்.
இல்லை நான் சம்யுக்தாவை நன்றாக பார்த்துக்கொள்வேன். என்னுடன் அவரை பழக விடுங்கள் என்று சொன்னார். அதன்பிறகு கொஞ்சநாள் போகட்டும் பார்த்துக்கொள்வோம் என்று என் அம்மா சொன்னார் இதுதான் நடந்தது” என்று கூறியுள்ளார் சம்யுக்தா.
The post விஷ்ணுகாந்த்- சம்யுக்தா பிரிவு பின்னணி இதுதானா? appeared first on Touring Talkies.
]]>The post தனுஷின் ‘வாத்தி’: ஜக்பாக்ஸ் வெளியீடு! appeared first on Touring Talkies.
]]>இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் அனைத்து பாடல்கள் இடம்பெற்ற ஜக்பாக்ஸ்ஸை (தொகுப்பை) படக்குழு வெளியிட்டுள்ளது.
The post தனுஷின் ‘வாத்தி’: ஜக்பாக்ஸ் வெளியீடு! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் நிதின் சத்யா கதாநாயகனாக நடிக்கும் ‘கொடுவா’ appeared first on Touring Talkies.
]]>பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கின்றார் உடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘பேச்சுலர்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தயாரிப்பு – துவாரகா புரொடக்ஷன்ஸ் (பிளேஸ் கண்ணன்), இயக்கம் – சுரேஷ் சாத்தையா, ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து, இசை – தரண் குமார், படத் தொகுப்பு – சாபு ஜோசப், கலை – சுரேஷ் களரி, தயாரிப்பு மேற்பார்வை – அன்பு மோகன் ரத்தினவேலு, K.சக்திவேல், நடன இயக்கம் – அசார், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).
ராமநாதபுரத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை.
இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் ‘ஐங்கரன்’ கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குநர் ராஜேஷ் M.செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.
The post நடிகர் நிதின் சத்யா கதாநாயகனாக நடிக்கும் ‘கொடுவா’ appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் ‘பிக் பாஸ்’ சம்யுக்தா..! appeared first on Touring Talkies.
]]>பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ திரைப் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.லஷ்மன் குமார் தனது #5வது படைப்பாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, இசை – டி.இமான், படத் தொகுப்பு – சிவ நந்தீஸ்வரன், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அன்பறிவு, நிர்வாகத் தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – A. பால் பாண்டியன், மக்கள் தொடர்பு – A. ஜான், எழுத்து, இயக்கம் – எம்.ஹேமந்த்குமார்.
கிராமத்து பின்னணியில் ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் பிரம்மாண்டமான செலவில் உருவாகும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் சம்யுக்தா ஷான் நடிக்கிறார்.
கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இத்திரைப்படத்திற்கான பாடல் பதிவு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.
The post இயக்குநர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் ‘பிக் பாஸ்’ சம்யுக்தா..! appeared first on Touring Talkies.
]]>