The post ரஜினி ஆசைப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அதில் ரஜினி, “ஆரம்பத்தில் நான் பஸ் கண்டெக்டராக இருந்தபோது, ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் இருந்தால் போதும் என்றே ஆசைப்பட்டேன். தினமும் மது, மாமிசம், சிகரெட்.. இதற்கு அது போதும். இதை மீறி நான் எதையும் நினைத்ததில்லை.. பிற்காலத்தில் என் மனைவிதான் என்னை மது பழக்கத்தில் இருந்து மாற்றினார்” என்று கூறியுள்ளார் ரஜினி.
The post ரஜினி ஆசைப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post பொன்னம்பலத்துக்கு 45 லட்ச ரூபாய் கொடுத்த சிரஞ்சீவி! appeared first on Touring Talkies.
]]>அவருக்கு என் உடல்நிலை சரியில்லை. தங்களால் இயன்ற உதவியை எனக்கு செய்யுங்கள் என ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினேன். உடனே பத்தே நிமிடத்தில் எனக்கு சிரஞ்சீவி போன் செய்தார். சரி ஏதோ ஒரு லட்சமோ 2 லட்சமோ உதவி செய்வார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் போனில் ஹாய் பொன்னம்பலம் எப்படி இருக்கீங்க. உங்களுக்கு என்ன ஆச்சு, கிட்னி பிரச்சினையா, நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். உங்களால் ஹைதராபாத் வர முடியுமா என கேட்டார்.
நான் உடனே அண்ணா குடும்பம் எல்லாம் இங்கே இருக்கிறார்கள் என்றேன். உடனே சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். சரி டயாலிசிஸ் செய்ய உதவி செய்வார் என நினைத்தேன். ஆனால் என்னிடம் என்ட்ரி ஃபீஸ் ரூ 200 கூட வாங்கவில்லை. கிட்டதட்ட 45 லட்சம் வரை செலவானது. அனைத்தையும் அவரே கவனித்து கொண்டார். ராம் சரணின் மனைவி உபாசனா என்னை நேராக வந்து பார்த்து சிரஞ்சீவி சொன்னதாக சொல்லி என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். கடவுள் போல் எனக்கு சிரஞ்சீவி உதவினார் என்று கூறினார்.
The post பொன்னம்பலத்துக்கு 45 லட்ச ரூபாய் கொடுத்த சிரஞ்சீவி! appeared first on Touring Talkies.
]]>The post ‘நிழல்கள்’ ரவி செய்த தரமான சம்பவம்! கண்ணீர்விட்ட இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் யு டியுப் சேனல் ஒன்றில் பேசிய இவர், “சிறு வயதில் இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆசை. என் அம்மா கொடுத்த 600 ரூபாயை வாங்கிக்கொண்டு சென்னைக்கு வந்தேன். பல நாட்களாக சென்னையில் அலைந்து திரிந்தேன். கையில் இருந்த காசும் கரைந்துக்கொண்டே வந்தது.
ஒரு நாள் இரவு நேரத்தில் பனகல் பார்கில் உள்ள நல்லி சில்க்ஸ் கடையின் வாசலில் நடிகர் நிழல்கள் ரவி சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார்.
அவரிடம் சென்ற நான், ‘திருநெல்வேலியில இருந்து வரேன். எனக்கு சினிமாவுல நடிக்கனும்ன்னு ஆசை.. யாரை பார்க்குறதுன்னே தெரியல. எதாவது உதவி செய்ய முடியுமா?” என கேட்டேன்.
உடனே நிழல்கள் ரவி, ‘சாப்பிட்டியா?’ என்றார். நான் ம் என பொய் சொன்னேன். ஆனால் என் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிட்ட ரவி, நூறு ரூபாய் கொடுத்து, போய் சாப்பிடு என்றார். அதோடு, நாளை எனது வீட்டுக்கு வா என முகவரியும் கொடுத்தார்.
மறுநாள் காலை அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே எனக்கு சாப்பாடு போட்ட அவர், சினிமா டைரியை கொடுத்தார். அதைப் பிரித்தால் அதிலும் நூறு ரூபாய்.
‘இதில் திரைப்பட இயக்குநர்கள் முகவரிகள் உள்ளன. தேடு. நீ நடிகனாகி விட்டால் என்னை வந்து பார்’ என கூறி அனுப்பிவைத்தார். முன்பின் தெரியாத என் மீது அவர் காட்டிய அன்பை மறக்கவே முடியாது” என்று கண்ணீர் மல்க சொன்னார், இயக்குநர் ஜெ.சுரேஷ்
The post ‘நிழல்கள்’ ரவி செய்த தரமான சம்பவம்! கண்ணீர்விட்ட இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>