சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் பழைய பேச்சு ஒன்று சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.
அதில் ரஜினி, “ஆரம்பத்தில் நான் பஸ் கண்டெக்டராக இருந்தபோது, ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் இருந்தால் போதும் என்றே ஆசைப்பட்டேன். தினமும் மது, மாமிசம், சிகரெட்.. இதற்கு அது போதும். இதை மீறி நான் எதையும் நினைத்ததில்லை.. பிற்காலத்தில் என் மனைவிதான் என்னை மது பழக்கத்தில் இருந்து மாற்றினார்” என்று கூறியுள்ளார் ரஜினி.