The post உருவாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் பயோபிக்! சிக்னல் கொடுத்த தலைவர்… appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் தற்போது ரஜினியின் பயோபிக் உருவாக இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. முன்னதாக சாவித்ரி, ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி உள்ளது.அதே போல் இளையராஜாவின் பயோபிக்கும் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் வாழ்க்கை வரலாற்று படமும் இணைய உள்ளது.
பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா தயாரிக்க இருக்கிறாராம்.ஏற்கனவே சூப்பர் ஸ்டார் தன் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுத நினைத்து அதில் உண்மை அனைத்தையும் சொல்ல வேண்டும்.அந்த தைரியம் தனக்கு இல்லாததால் அதை பாதியில் நிறுத்தி விட்டேன் என அவரே குறிப்பிட்டு இருந்தார். அப்படி யோசித்தவர் தற்போது பயோபிக் படத்திற்கு சிக்னல் கொடுத்து சம்மதம் தெரிவித்தது ஆச்சரியமும் வியப்பும் தான்.
இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் அவை அனைத்தும் முடிந்தவுடன் பயோபிக் பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post உருவாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் பயோபிக்! சிக்னல் கொடுத்த தலைவர்… appeared first on Touring Talkies.
]]>The post வேட்டையன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மும்பை பறந்த ரஜினிகாந்த்… அமிதாப் பச்சன் ரஜினி சந்தித்த புகைப்படங்கள் ட்ரெண்டிங்! appeared first on Touring Talkies.
]]>வேட்டையன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்பீம் படத்துக்குப் பிறகு ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது வேட்டையன் திரைப்படம்.
முன்னாதக வேட்டையன் படத்தின் சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. அமிதாப் பச்சன் அந்த காட்சிகளில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருந்தாக கூறப்பட்டது.மீண்டும் தற்போது மும்பையில் சில காட்சிகளை படமாக்க ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அங்கிருந்து விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பிச் சென்ற காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில் வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகின்றன.இருவரும் பேசிக்கொள்வதும் மற்றும் கட்டியணைப்பதும் போஸ் கொடுப்பதும் போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.இதனை கண்ட ரசிகர்கள் இப்புகைப்படங்களை பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அதோபோல வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் கூலி படத்தின் சூட்டிங் நடிகர் ரஜினிகாந்த் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post வேட்டையன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மும்பை பறந்த ரஜினிகாந்த்… அமிதாப் பச்சன் ரஜினி சந்தித்த புகைப்படங்கள் ட்ரெண்டிங்! appeared first on Touring Talkies.
]]>The post இவர் இல்லை என்றால் அவரே இல்லை…கங்கை அமரன் பேச்சுக்கு பதில் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்… appeared first on Touring Talkies.
]]>சில நாட்களுக்கு முன்பு வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில், இசை மட்டுமே முக்கியமல்ல, பாடல் வரிகளும் முக்கியம் என்று மறைமுகமாக இளையராஜாவை விமர்சித்தார். அதற்குப் பதிலாக கங்கை அமரன் வைரமுத்துவைக் கடுமையாக தாக்கிப் பேசியது மிகவும் தவறு என்று ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடலை எழுத வைரமுத்துவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவர் ஒரு பாடலாசிரியராக வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்றும், அவரை வளர்த்தெடுத்தது தாங்கள் தான் என்று கூறுவது மிகவும் தவறானது என்றும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
கங்கை அமரன் சொல்வதுபடி பார்த்தால் பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு கொடுக்கவில்லை என்றால் அவர் ஒரு இசையமைப்பாளராக வளர்ச்சி அடைந்திருக்க முடியுமா என்றும் திறமையானவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களது திறமை அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், மொழியும் இசையும் கலந்ததுதான் பாடல், நாம் அனைத்தையும் ரசிக்க வேண்டும் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
The post இவர் இல்லை என்றால் அவரே இல்லை…கங்கை அமரன் பேச்சுக்கு பதில் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்… appeared first on Touring Talkies.
]]>The post இந்தி சிறுவனை வம்பிழுத்த ரஜினி… தெறித்து ஓடிய சிறுவன் வேட்டையன் பட ஷூட்டிங்-ல் சுவாரஸ்ய சம்பவம்…. appeared first on Touring Talkies.
]]>இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடைய ரஜினிகாந்த் குறித்த இந்தச் சுவாரஸ்யமான தகவலை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஒரு பேட்டியில் கூறினார். அதில், சிவாஜி படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது, செட்டில் ஒரு ஹிந்திப் பையன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுக்குத் தமிழ் சரியாக வராததால், தமிழும் இந்தியும் கலந்து பேசுவான். அதைக் கேட்பது நகைச்சுவையாக இருக்கும் என்பதால், ரஜினி எப்போதுமே அந்தப் பையனை வம்புக்கு இழுத்துக்கொண்டே, சிரித்துக்கொண்டே இருப்பார்.
ஒருநாள் ஒரு சிறுவன் ரஜினியோடு புகைப்படம் எடுக்க விரும்பினான். அதற்கு ரஜினி சம்மதித்து, நீ காத்திரு, என் தலைமுடியை சீர் செய்துவிட்டு வருகிறேன் என்றார். இதைக் கேட்ட சிறுவன் கவலைப்பட்டு, உங்கள் தலையில் விக் இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்களோடு புகைப்படம் எடுக்க மாட்டேன். எங்கள் ஊரில் நீங்கள் இப்படித்தான் இருந்தால் ரசிப்பார்கள் என்று கூறிவிட்டு ஓடிச்சென்றான். பிறகு அந்த சிறுவனை அழைத்து ரஜினி விக்கோடு புகைப்படம் எடுத்ததாகப் பகிர்ந்துள்ளார்.
The post இந்தி சிறுவனை வம்பிழுத்த ரஜினி… தெறித்து ஓடிய சிறுவன் வேட்டையன் பட ஷூட்டிங்-ல் சுவாரஸ்ய சம்பவம்…. appeared first on Touring Talkies.
]]>The post பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! appeared first on Touring Talkies.
]]>ரஜினி சூப்பர் ஸ்டார் ஹீரோவாக இருந்த போதும் அவரது படம் நஷ்டத்தையும் அப்போது சந்தித்திருந்த நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.1993-ஆம் ஆண்டில் ஆர்.பி. உதயகுமார் இயக்கத்தில், ரஜினி, மீனா உள்ளிட்டோர் நடித்த ‘எஜமான்’ படம் வெளியானது. இந்தப் படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது திருவண்ணாமலை தியேட்டர் உரிமையாளரை ரஜினி அழைத்துப் பேசினார்.அதாவது படம் எவ்வளவு கலெக்ஷன் போய்க் கொண்டிருக்கிறது என்பதை கேட்டிருக்கிறார்.ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிய படம் இதுவரை 10 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் 20 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் என்று தியேட்டர் உரிமையாளர் கூறினார்.
வேறு என்னென்ன படங்கள் தியேட்டரில் ஓடுகிறது என்று ரஜினி கேட்டுள்ளார். நாசர், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் நடிப்பில் உருவான வரவு எட்டணா செலவு பத்தணா படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ன சொல்லி உள்ளார்.
அதோடு 20 லட்சம் போட்டு ஒரு கோடி வரை கிடைச்சிருக்கு என்று தியேட்டர் ஓனர் கூறினார். இதைக் கேட்டு ரஜினியே மிரண்டு போய் விட்டாராம். குறிப்பாக ஆட்டோக்காரனாக வடிவேலு நடித்த ரோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் ஓடும்போது தியேட்டர் வாசலில் இருவதற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிற்குமாம். இதனால் தான் அடுத்ததாக பாட்ஷா படத்தில் மாணிக்கம் கதாபாத்திரத்தில் ஆட்டோக்காரனாக ரஜினி நடித்தார் என்பதை இயக்குனர் வி சேகர் கூறியிருக்கிறார்.
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் 1993இல் பிப்ரவரி மாதம் எஜமான் படம் வெளியான நிலையில் அடுத்த வருடம் 1994 இல் ஏப்ரல் மாதம் தான் வரவு எட்டணா செலவு பத்தணா படம் வெளியானது.
அதோடு பாட்ஷா படத்தில் முதலில் ரஜினியை பஸ் கண்டக்டராக நடிக்க வைக்க தான் சுரேஷ் கிருஷ்ணா முயற்சி செய்துள்ளார். ஆனால் பஸ்ஸை வைத்து எடுப்பதில் சிரமம் இருந்ததால் அதன் பின்பு ஆட்டோவே இருக்கட்டும் என மாற்றப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post நெல்சனுக்கு கொக்கி போட்ட சன் பிக்சர்ஸ்! ஜெயிலர் 2ல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>ஜெயிலர் படத்தின் வெற்றியையும் வசூலையும் கண்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ காரையும் அதேபோல் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் காரை கலாநிதி மாறன் அன்பு பரிசாக வழங்கி இருந்தார்.
அதேபோல் ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாகுவதை ஏற்கனவே முதல் பாகத்திலேயே சொல்லியிருந்தார் இயக்குனர் நெல்சன். தற்போது ஜெயிலர் 2 படத்திற்கான விதை போடப்பட்டுள்ளது அதாவது இப்போது ஜெயிலர் 2 படத்திற்கான ஆபீஸ் அமைக்கப்படுள்ளது.
அதுமட்டுமின்றி நெல்சனுக்கு ஜெயிலர் 22 படத்தில் சுமார் 55 கோடியை சம்பளமாக பேசியுள்ளதாகவும் இப்படி இந்தளவுக்கு எந்தவொரு இயக்குனர்களுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை தந்தது இல்லை என சொல்லப்படுகிறது.
இதற்கான காரணம் இம்முறை ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மூலம் கலெக்ஷனை டபுளாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்கள்.ஜெயிலர் 2 படத்திற்க்கான லைசென்ஸ்-ஐ சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது நெல்சன்க்கு கொணுத்துள்ளதால் இனி நெல்சன் சூப்பர் வேகத்தில் செயல்படுவார் எனவும் இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post நெல்சனுக்கு கொக்கி போட்ட சன் பிக்சர்ஸ்! ஜெயிலர் 2ல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்…பாடிக்கொண்டே எதிரிகளை துவம்சம் செய்யும் ரஜினி… appeared first on Touring Talkies.
]]>நினைத்தாலே இனிக்கும் படம் நடிகர் ரஜினிகாந்தின் திரை பயணத்தில் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. கமல்ஹாசனுக்கு வில்லனாக நாம் கண்ட ரஜினி இப் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்திருந்து அசத்தியிருப்பார். இப் படத்தில் ஜெகமே தந்திரம் என்ற பாடலுக்கு சோலோவாக மாஸான ஆட்டம் போட்டிருந்தார் ரஜினி. இப் பாடலில் இடம்பெற்ற வரிகள் தான் அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்ற வரிகள்.
இந்த கூலி படத்தில் தங்கம் கடத்தல் நடக்கும் குடோனில் புகுந்து எதிரிகளை துவம்சம் செய்யும் ரஜினிகாந்தின் கைகளில் எடுக்கும் வாட்ச்களால் ஆன சங்கிலி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு என்று எதிரிகளை பறக்கவிடுகிறார். இதைதொடர்ந்து பிண்ணியில் D-I-S-C-O டிஸ்கோ ஒலிக்க தன்னுடைய கூலி பேட்ஜ் மீதுள்ள ரத்தத்தை துடைக்கிறார் ரஜினிகாந்த்.
தமிழில் முன்னதாக கூலி என்ற படம் வெளியாகியுள்ளது.அப்படத்தின் டைட்டில் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது சில கேள்விகளை எழுப்பியுள்ளது.தற்போது கூலி படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்த பணிகளுக்காக லோகேஷ் கனகராஜ் மங்களூர் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.லோகேஷ் கனகராஜ்இந்த ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டு சென்னை வரவுள்ளார்.
இதையடுத்து கூலி படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இது மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்றும் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
The post அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்…பாடிக்கொண்டே எதிரிகளை துவம்சம் செய்யும் ரஜினி… appeared first on Touring Talkies.
]]>The post இனி தலைவர் 171 இல்லாமா இது கூலி! தாறுமாறாக வெளியான டைட்டில் டீசர்… appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் ஒரு தங்கம் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை ரஜினி தேடி செல்கிறார் அங்கே கடத்தல்காரர்களுக்கும் ரஜினிக்கும் இடையேய ஏற்படும் மோதல்களை அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.டைட்டில் டீசரையே அதிரடியாக தெறிக்கவிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் அப்போது படம் எப்படி அதிர வைக்கும் என உற்சாகத்தில் ரசிகர்கள் டைட்டில் டீசரை கொண்டாடி வருகின்றனர்.
டைட்டில் டீசரை காண லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
The post இனி தலைவர் 171 இல்லாமா இது கூலி! தாறுமாறாக வெளியான டைட்டில் டீசர்… appeared first on Touring Talkies.
]]>The post சிரித்த பா.ரஞ்சித்….ரஜினியின் முதுகில் குத்திவிட்டார் என ரசிகர்கள் கொந்தளிப்பு! appeared first on Touring Talkies.
]]>ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் தீவிரமாக நடித்துவருகிறார்.இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க போகிறார் ரஜினிகாந்த்.இப்பட டைட்டில் ஏப்ரல் 22 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் பாஸிட்டிவ் நெகடிவ் என பல விமர்சனங்களை சந்தித்து உள்ள ரஜினிகாந்த் என்றும் முடங்கி போனதே இல்லை.எல்லா விமர்சனங்களையும் தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு இன்றும் கொடிக்கட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு ரோல்மாடலாக இருந்து வருகிறார்.
இப்படியிருக்க, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்த விதம் பரபரப்பையும் ரஜினி ரசிகர்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் எக்ஸ்ல் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் நடித்தித்தார் ரஜினிகாந்த். இந்த படங்கள் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திற்கு ஆதரவாக வந்த படங்கள் அவர்களின் வலிகளை பேசும் படங்கள் இப்படங்களில் ரஜினிகாந்த் நடித்தார்.சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் பா ரஞ்சித்திடம், ரஜினியின் கபாலி மற்றும் காலா குறித்து இந்த படங்கள் தலித் சமூகத்திற்கு ஆதரவான படங்கள் என்று தெரியாமல் ரஜினிகாந்த் நடித்தாரா என்று கேள்வி கேட்க அதற்கு பா.ரஞ்சித் நக்கலாக சிரிப்பதாய் தெரிந்தது.
இதை கண்ட ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.இரு படங்கள் நடித்து வாய்ப்பு தந்து வாழ்க்கை தந்தவரை நன்றிக்கெட்ட தனமாக பா.ராஞ்சித் ரஜினிகாந்த் முதுகில் குத்திவிட்டார் என நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ்டேக் மூலம் அவர்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
The post சிரித்த பா.ரஞ்சித்….ரஜினியின் முதுகில் குத்திவிட்டார் என ரசிகர்கள் கொந்தளிப்பு! appeared first on Touring Talkies.
]]>The post குறி வச்சா தப்பாது! வேட்டையன் ரீலீஸ் அப்டேட்… இது தான் கதையா? appeared first on Touring Talkies.
]]>ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டையும் மிகப்பெரிய வசூலையும் கொடுத்தது. அதேசமயம் கடந்த பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்த லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாமல் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் திணறியது .இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகவும் போலி என்கவுண்டருக்கு எதிரான படம் என்றும் சொல்லப்படுகிறது.மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வேட்டையன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்று நம்பப்படும் நிலையில் இப்படத்தின் மொத்த சூட்டிங்கும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் அதைதொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் வேட்டையன் திரைப்படம் தீபாவளி சமயத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது தற்போது அந்த தகவல் உறுதியாகும் வகையில் அக்டோபர் மாதம் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படத்தின் மூலம் ஒன்றாக இணைவது இப்படத்தை மேலும் வலுவாக சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளது.இப்படி பல அம்சங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள வேட்டையன் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கலாம்.
The post குறி வச்சா தப்பாது! வேட்டையன் ரீலீஸ் அப்டேட்… இது தான் கதையா? appeared first on Touring Talkies.
]]>