The post ரகுவரன் கொடுத்த கோளாறால் சூப்பராக அமைந்த சீன்! appeared first on Touring Talkies.
]]>இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் ரகுவரன், ‘ஐ நோ.. ஐ நோ..’ என திரும்பத்திரும்ப சொல்லும் காட்சி மிக பிரபலம். வித்தியாசமான முகபாவணையில், தொணியில் அதே வார்த்தையை கூறி அசத்தி இருப்பார்.
இந்த காட்சியை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கெனவே திட்டமிடவில்லை.
ரகுவரன் கொடுத்த கோளாறுதான் இந்த காட்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
அப்படி ரகுவரன் கொடுத்த கோளாறு என்ன..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post ரகுவரன் கொடுத்த கோளாறால் சூப்பராக அமைந்த சீன்! appeared first on Touring Talkies.
]]>The post ரகுரவன் எடுத்த ரிஸ்க்! பயந்த கே.எஸ்.ரவிக்குமார்! appeared first on Touring Talkies.
]]>“படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ரகுவரன், இறந்துவிடுவது போல் காட்சி உள்ளது. இந்த காட்சியில் அவரது மனைவியாக நடித்த ரேகா பீரோவின் கதவை திறக்கும்போது அதில் இருந்து ரகுவரன் இறந்து விழுவார். அவரது கழுத்து அறுந்து ரத்தம் வரவேண்டும் இதுதான் காட்சி.
இந்த காட்சிக்காக ரகுவரனின் கழுத்தில் சிகப்பு சாயம் பூசப்பட்டது. ஆனால் அவருக்கு வியர்வை அதிகம் வந்ததால் சாயம் நிற்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் நிற்காததால், ஒரு கத்தியில் சிகப்பு பவுடரை வைத்து கழுத்தில் தேய்த்துக்கொண்டிருந்தார். இதை பார்த்த நான் அதிர்ச்சியில் என்ன பண்ற என்று கேட்டேன்.
ரத்த சாயம் நிற்கவில்லை. அதனால் கத்தியில் வைத்து கழுத்தியில் தேய்க்கிறேன் என்று சொன்னார். கொஞ்சம் அழுத்தி தேய்ச்சா சொத்துபோய்டுவ… எனக்கு முதல் படம் எதாவது விபரீதம் ஆகிவிட போகிறது என்று சொல்லி கத்தியை பிடுங்கிவிட்டேன். நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்வார் ரகுவரன்” என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
The post ரகுரவன் எடுத்த ரிஸ்க்! பயந்த கே.எஸ்.ரவிக்குமார்! appeared first on Touring Talkies.
]]>The post “கண்கலங்க வைத்த அந்த இயக்குநர்!”: சரத்குமார் appeared first on Touring Talkies.
]]>“லுங்கில் மகேஷ் பாபு நடித்த, ‘பாலச்சந்துருடு’ என்ற திரைப்பட படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் 60 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டேன். அறுவை சிகிச்சை நடந்து, படுக்கையி்ல் இருந்தேன். கழுத்தைக் கூட திருப்ப முடியவில்லை. ஆதலால் என்னை ஒப்பந்தம் செய்த இயக்குனர்கள் – தயாரிப்பாளர்கள் பலரும்கொடுத்த அட்வான்ஸை திரும்ப பெற வந்தனர்.
அப்போது “புரியாத புதிர்” திரைப்படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்திருந்த கே.எஸ்.ரவிக்குமாரும் வந்தார்.
என்னால் அப்போது பேசமுடியாமல் இருந்ததால் ‘நீங்களும் என்னிடம் அட்வான்ஸை திரும்ப பெற வந்துருக்கிறீர்களா?’ என எழுதிக் காண்பித்தேன்.
அதற்கு அவர் ‘இல்லை. அந்த படத்தில் நீங்கள்தான் நடிக்கிறீங்க. எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்ல. நான் வெயிட் பண்ணி எடுக்குறேன்’ என்றார். இத்தனைக்கும் அவருக்கு அது முதல் படம். அப்படியும் அவர் நான் குணமாகி வரும் வரை காத்திருந்து எனது காட்சிகளை எடுத்தார். அந்த சம்பவத்தை என்றைக்கு நினைத்து பார்த்தாலும் எனக்கு கண்ணீர் வரும்’ என்றார் சரத்குமார்.
The post “கண்கலங்க வைத்த அந்த இயக்குநர்!”: சரத்குமார் appeared first on Touring Talkies.
]]>The post மன நோயாளியை திரையில் அற்புதமாக சித்தரித்தவர் ரகுவரன் – Dr.Karthikeyan | Chai With Chithra | Part 2 appeared first on Touring Talkies.
]]>