சமீபத்தில் சரத்குமார், தான் கண் கலங்கிய சம்பவத்தைத் தெரிவித்து உள்ளார்:
“லுங்கில் மகேஷ் பாபு நடித்த, ‘பாலச்சந்துருடு’ என்ற திரைப்பட படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் 60 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டேன். அறுவை சிகிச்சை நடந்து, படுக்கையி்ல் இருந்தேன். கழுத்தைக் கூட திருப்ப முடியவில்லை. ஆதலால் என்னை ஒப்பந்தம் செய்த இயக்குனர்கள் – தயாரிப்பாளர்கள் பலரும்கொடுத்த அட்வான்ஸை திரும்ப பெற வந்தனர்.
அப்போது “புரியாத புதிர்” திரைப்படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்திருந்த கே.எஸ்.ரவிக்குமாரும் வந்தார்.
என்னால் அப்போது பேசமுடியாமல் இருந்ததால் ‘நீங்களும் என்னிடம் அட்வான்ஸை திரும்ப பெற வந்துருக்கிறீர்களா?’ என எழுதிக் காண்பித்தேன்.
அதற்கு அவர் ‘இல்லை. அந்த படத்தில் நீங்கள்தான் நடிக்கிறீங்க. எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்ல. நான் வெயிட் பண்ணி எடுக்குறேன்’ என்றார். இத்தனைக்கும் அவருக்கு அது முதல் படம். அப்படியும் அவர் நான் குணமாகி வரும் வரை காத்திருந்து எனது காட்சிகளை எடுத்தார். அந்த சம்பவத்தை என்றைக்கு நினைத்து பார்த்தாலும் எனக்கு கண்ணீர் வரும்’ என்றார் சரத்குமார்.