The post பிரசாந்த்தை மறைத்துவைத்த அப்பா தியாகராஜன்! appeared first on Touring Talkies.
]]>ஆனால், வெகுகாலம், தனது மனைவி, மகனை மறைத்தே வைத்து இருந்தார் தியாகராஜ ன்.
இது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறினார்.
அவர், “எனக்கு திருமணம் ஆன விஷயத்தையே திரையுலகினருக்கு தெரியாமல் பல வருடங்கள் மறைத்து வைத்தேன். ஹீரோ இமேஜ் பாதித்துவிடுமோ என்கிற பயம்தான் காரணம்.
ஒரு நாள் சத்யராஜ் தியாகராஜனின் வீட்டிற்கு வந்தார். 12 ஆம் வகுப்பு முடித்திருந்த பிரசாந்த் அப்போது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்.
“தியாகராஜன் வீட்டில் இல்லையா?” என சத்யராஜ் கேட்க, அதற்கு பிரசாந்த் “அப்பா, வெளில போயிருக்காங்க” என கூறியிருக்கிறார். “நீ தியாகராஜன் பையனா?” என அவர் கேட்க அதற்கு பிரசாந்த் “ஆமாம்” என பதில் அளித்திருக்கிறார்.
எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற தகவலையும் ஒரு பையனும் இருக்கிறார் என்ற தகவலையும் சத்யராஜ் சினிமா துறையில் உள்ள பலருக்கும் சொல்லிவிட்டாராம். அப்படித்தான் திரையுலகத்துக்கு பிரசாந்த்தை தெரிய வந்தது” என்றார் தியாகராஜன்.
The post பிரசாந்த்தை மறைத்துவைத்த அப்பா தியாகராஜன்! appeared first on Touring Talkies.
]]>The post ‘அந்தகன்’ படத்திற்காக ‘டோர்ரா புஜ்ஜி’ பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது appeared first on Touring Talkies.
]]>படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட காட்சிக்காக ‘டோர்ரா புஜ்ஜி’ என்ற பாடலை ‘ராக் ஸ்டார்’ அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த பாடலுக்கு ‘நடனப் புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்துத் தர இசைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பாடல் காட்சி படமான உடனே ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘அந்தகன்’ படத்தை கலைப்புலி S.தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.
The post ‘அந்தகன்’ படத்திற்காக ‘டோர்ரா புஜ்ஜி’ பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது appeared first on Touring Talkies.
]]>