The post மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ சவுதி அரேபியாவில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ‘நடனப்புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது.
பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின்போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன.
‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த படம், சர்வதேச தரத்திலான படைப்பாக உயர்வு பெற்றிருக்கிறது. அதனால் இதனை ஒரு உலக சினிமா என்றும் குறிப்பிடலாம்.
மேலும் இந்தப் படத்தில் 70 சதவீதம், இந்தியாவிற்கு வெளியேயுள்ள பிற நாட்டை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அரபு நாடுகளில் இந்த திரைப்படம் அரபு மொழியில் வெளியாகவிருக்கிறது. சவுதி அரேபியாவில் ஒரு இந்திய திரைப்படம், இத்தகைய அற்புதமானதொரு கவனத்தை பெறுவது இதுவே முதல் முறை.
பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா இந்தப் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். இந்தப் படத்தின் உலகளாவிய கவனத்திற்கு இந்த நடனமும் ஒரு முக்கிய காரணி.
அத்துடன் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில், பாடலாசிரியர்கள் பிகே ஹரி நாராயணன் மற்றும் சுஹைல் கோயா ஆகியோர் எழுதிய பாடலுக்கு இந்திய மற்றும் அரபு நாட்டினை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா உள்ளிட்ட இந்திய கலைஞர்களுடன் துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் என பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.
ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்தோ -அரேபிய கூட்டுத் தயாரிப்பாக உருவாகியிருக்கும் ‘ஆயிஷா’, சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரேபிய மொழியில் வெளியாகிறது.
இதனால் இந்திய கலைஞர்களும், படைப்பாளிகளும் சர்வதேச அளவிலான கவனத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ சவுதி அரேபியாவில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post மஞ்சு வாரியரை நடனமாட வைத்த பிரபுதேவா…! appeared first on Touring Talkies.
]]>நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள புதிய பாடலுக்கு பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
‘ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏழு மொழிகளில் தயாராகிறது.
இந்த பாடலுக்கு நடிகை மஞ்சு வாரியருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.
‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடன அசைவில் தயாராகியிருக்கும் இந்த லிரிக்கல் வீடியோவில் நடிகை மஞ்சு வாரியருடன் பல நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் இடம் பெற்று நடனமாடியிருப்பதாலும், இந்த படத்தில் இடம் பெற்ற ஆயிஷா ஆயிஷா எனும் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது என்பதாலும், இந்த பாடலுக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
The post மஞ்சு வாரியரை நடனமாட வைத்த பிரபுதேவா…! appeared first on Touring Talkies.
]]>The post உனக்கு வாய்ப்பு தர மாட்டேன் என்ற கே.வி.மகாதேவன்-CHAI WITH CHITHRA -LYRIICIST PIRAI SOODAN-PART 2 appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி கேட்ட கேள்வி /CHAI WITH CHITHRA -PROD.EXECUTIVE RAMADURAI – PART 3 appeared first on Touring Talkies.
]]>The post “இயக்குநர் ஆதிக் பல திறமைகளைக் கொண்டவர்” – நடிகர் பிரபுதேவா பாராட்டு appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் பிரபுதேவா பேசும்போது, “இந்த ‘பஹிரா’ படத்தின் தயாரிப்பாளர் பரதன் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறந்த நடிகர். ஆதிக் ஒரு காட்டாறு. ஆறு வளைந்து, வளைந்து சென்று ஒரு கடலில் கலக்கும். அதுபோல்தான் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் பல வேலைகளை செய்து ஒரு நல்ல படத்தை இயக்கி இருக்கிறார். முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்து இருக்கிறார் கணேஷ்.
நாயகி ஜனனி அழகாக இருக்கிறார். அழகாகவும் நடிக்கிறார். அப்புறம் காயத்ரியும், சாக்ஷி, அமைரா, சஞ்சிதா, சோனியா அகர்வால் அனைவரும் அழகாக நடித்திருக்கிறார்கள். காஸ்டியூம் டிசைனர் சத்யா, ஒவ்வோரு சீனுக்கும் புது புது டிரஸ் கொடுத்து அசத்தினார். படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். இந்த ‘பஹிரா’ திரைப்படம் அனைவரும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்…” என்றார்.
படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, “இந்த ‘பஹிரா’ திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம் பிரபுதேவா மாஸ்டர்தான். அவரிடம் சீன் சொல்லி நடிக்க சொல்ல பயமாக இருந்தது. என் பயத்தை போக்கினார். ‘பஹிரா’ படத்தின் கடைசி 7 நாட்களை என்னால் மறக்க முடியாது.
படத்தில் கதாநாயகிகளே இல்லை. அனைவரும் திறமையான நடிகர்கள். அமைராவுக்கும், பிரபு தேவாவுக்கும் நிறைய காம்பினேஷன் சீன்கள் இருக்கிறது. அமைராவிற்கு தமிழ் தெரியாது. ஆனால், நான் சொன்னதை கேட்டு திறமையாக நடித்து கொடுத்தார். பிரபு தேவாவுடன் உடன் அழுது நடிக்கும் உணர்ச்சிகரமான காட்சியில் தனது அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, அசத்தியுள்ளார். அவர் கண்டிப்பாக சினிமாவில் மிகப் பெரிய இடத்தை பிடிப்பார் என்றார்..” என்றார்.
நடிகை சாக்ஷி அகர்வால் பேசும்போது, ‘பஹிரா’ படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது “படத்தில் மொத்தம் 7 நாயகிகள்” என்று கூறினார். அதை கேட்டவுடன் இந்தப் படத்தை இவர் எப்படி இயக்குவார் என்று நான் பயந்தேன். ஆனால், நினைத்ததைவிட சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
நான் பிரபு தேவாவின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்களுடன் நடித்ததன் மூலம் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது…” என்றார்.
The post “இயக்குநர் ஆதிக் பல திறமைகளைக் கொண்டவர்” – நடிகர் பிரபுதேவா பாராட்டு appeared first on Touring Talkies.
]]>The post அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>மேலும் ஜான் விஜய், வி.டி.வி.கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க, ஆண்டனி படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அறிமுக இயக்குநரான சாம் ரோட்ரிக்ஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் பற்றி இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில், ”பிரபு தேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்சன் படமாக இது தயாராகிறது. இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி, ரசிகர்களுக்கு புதுமையான ஒரு அனுபவமாக இருக்கும்…” என்றார்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் நாயகன் பிரபுதேவா, தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
The post அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>The post பிரபுதேவா-ஐஸ்வர்யா ராஜேஷ் – கல்யாண் கூட்டணியில் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>தமிழ்த் திரையுலகத்தில் ஆரம்பக் காலத்தில் நடன இயக்குநராக இருந்து வந்த பிரபுதேவா பின்பு திடீர் ஹீரோவானார். சில வருடங்கள் கழித்து நடிப்பையும் தாண்டி இயக்குநரானார் பிரபுதேவா. அதில் பல வெற்றிகள் கிடைத்தன. பிறகு தொடர் தோல்விகளும் கிடைத்தன. உடனே அங்கிருந்து விலகி மீண்டும் நடிப்புக்கு வந்தார். அவரது நடிப்பில் தற்போது ‘பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில்தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இயக்குநரான சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் அந்தப் படத்திற்கு பூஜை போட்டு, படப்பிடிப்பையும் தொடங்கி நேற்றுதான் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு ‘பொய்க்கால் குதிரை’ என பெயர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைக்கு அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறார் பிரபுதேவா. இன்று தொடங்கிய பிரபுதேவாவின் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறவர் இயக்குநர் கல்யாண். அவர் வெறும் கல்யாண் அல்ல; ‘அதிர்ஷ்டக்கார கல்யாண்’ என்று தமிழ்த் திரையுலகத்தில் சொல்கிறார்கள்.
சினிமாவில் சில இயக்குநர்களுக்கு ஹிட் கொடுத்தாலுமே அடுத்தப் பட வாய்ப்பு அமையாது. சிலர் தோல்விகளை மட்டுமே தருவார்கள். ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தின் அட்வான்ஸ் அவர் கையில் இருக்கும். இயக்குநர் கல்யாண் இது போன்ற அதிர்ஷ்டக்காரர்தான்.
அவர் இயக்கிய ‘கத சொல்லப் போறோம்’, ‘குலேபகாவலி’, ‘காத்தாடி’, ‘ஜாக்பாட்’ என்ற நான்கு படங்களுமே வெற்றி பெறவில்லை. இதில் ‘குலேபகாவலி’யில் பிரபுதேவாதான் ஹீரோ. இப்போது இந்தப் படத்தில் மறுபடியும் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் பிரபுதேவா, நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கல்யாண், தயாரிப்பாளர் அபிஷேக் பிள்ளை மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
The post பிரபுதேவா-ஐஸ்வர்யா ராஜேஷ் – கல்யாண் கூட்டணியில் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>The post ஒரே நேரத்தில் 8 தமிழ்ப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.
]]>இவர் தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘திரிஷ்யம்’ பட வெற்றி கூட்டணியான மோகன்லால் – ஜீத்து ஜோஸப் மற்றும் திரிஷா நாயகியாக நடிக்க மும்மொழிகளில் உருவாகும் ‘ராம்’ படத்தையும் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த நேரத்தில் தற்போது புதிதாக 8 படங்களைத் தயாரிக்கிறார்.
இந்தப் படங்களில் பிரபுதேவா, சத்யராஜ், நயன்தாரா, காஜல் அகர்வால், ரம்யாகிருஷ்ணன், லட்சுமி ராய், அனுசுயா ஆகியோர் நடிக்கிறா்கள். டான்சேண்டி – ராகவன் – ராஜா சரவணன் – கல்யாண் – விபின் ஆகிய இயக்குநர்கள் இந்தப் படங்களை இயக்குகிறார்கள்.
இதில் பிரபுதேவாவின் நடிப்பில் 3 படங்கள், நயன்தாராவின் நடிப்பில் 2 படங்கள், காஜல் அகர்வால் நடிப்பில் 1 படமும் தயாராகிறது.
ரெஜினா கேஸண்ட்ரா நடிப்பில் டான் சேண்டி இயக்கும் படம்
‘மகாபலிபுரம்’, ‘கொரில்லா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டான்சேண்டியின் கதை – திரைக்கதை – வசனம் – இயக்கத்தில் ‘பிளாஷ்பேக்’ எனும் புதிய படம் உருவாகிறது.
இந்தப் படத்தில் ரெஜினா கேஸண்ட்ரா, இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன், ‘96’ பட புகழ் சூர்யா, ‘மெர்சல்’ பட புகழ் அக்ஷன்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – S.யுவா, இசை – சாம் C.S., கலை இயக்கம் – S.S.மூர்த்தி, பாடல்கள் : யுகபாரதி, படத் தொகுப்பு – சான் லோகேஷ், நிர்வாகத் தயாரிப்பு – ஷங்கர் சத்தியமூர்த்தி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பு – ரமேஷ் பி.பிள்ளை, கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் – டான்சேண்டி.
அழகிய காதல் கதையினை, முற்றிலும் அழகான பின்னணியில் அனைவரும் ரசிக்கும் வகையில், உணர்வுகளின் உயிர்ப்போடு வெளிப்படுத்தும். பிரமாண்டமான பொருட்செலவில் படைக்கப்படும் இப்படம் பார்ப்பவர்கள் அனைவரும் தாங்கள் சந்தித்த, பாதித்த, கடந்து வந்த உணர்வுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் முக்கியமான பகுதிகள் படமாக்கப் பட்டுள்ளது.
பிரபுதேவா, ‘மஞ்ச பை’ ராகவன் இணையும் புதிய படம் ‘மை டியர் பூதம்’
இயக்குநர் சற்குணத்திடம் பல படங்களில் இணை–துணை இயக்குநராக பணியாற்றி ‘மஞ்சப் பை’ படம் மூலம் இயக்குநராக முத்திரை பதித்த ராகவன், ‘கடம்பன்’ படம் மூலம் தனி அடையாளம் கண்டார்.
காதல் – கமர்ஷியல் – ஹாரர் – திரில்லர் என தொடர் வரிசை படங்களிலிருந்து மாறுபட்டு முற்றிலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இணைந்து மகிழும்படியான கதை – திரைக்கதையமைப்பில் பேண்டஸி படமாக பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் ராகவன்.
இந்தப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் இதுவரையிலும் ஏற்றிடாத அற்புதமான, அபிமான வேடத்தில் பிரபுதேவா நடிக்கிறார். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்திற்கு பின் எப்படி ‘ரஜினி அங்கிள்’ என்று அவரை கொண்டாடினார்களோ, அதைப்போல் இப்படத்திற்கு பின் அனைத்து குழந்தைகளும் PD (பிரபுதேவா) அங்கிள் என கொண்டாடும்விதமாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
மிகுந்த பொருட்செலவில் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்காக அமெரிக்கா மற்றும் லண்டனிலுள்ள VFX நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
கல்யாண் குமார் இயக்கத்தில் பிரபுதேவா
‘கதை சொல்ல போறோம்’, ‘காத்தாடி’, ‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’, ‘கோஷ்டி’, ‘ஷூ’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கல்யாண் குமார் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் பிரபுதேவா உடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, தங்கதுரை, டோனி, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இது ஒரு ஹாரர் கலந்த காமெடி குடும்ப படமாக உருவாகவிருக்கிறது. ஜேக்கப் ரத்தன் ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், அஸ்வின் இசையமைக்கிறார், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்கிறார், கலை அமைப்பபை மோகன் மேற்கொள்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
நயன்தாரா நடிக்கும் இரண்டு புதிய படங்கள்
நயன்தாரா நடிக்கும் முதல் படத்தை, இயக்குநர் ஷாஜி கைலாசிடம் ‘ஆகஸ்ட் 15’, ‘துரோனா’, ‘ரெட் சில்லிஸ்’ போன்ற படங்களிலும், இயக்குநர் மது சுதாகரனின் ‘சேண்ட்விச்’ மற்றும் ‘10:30 am லோக்கல் கால்’ படங்களிலும் துணை, இணை இயக்குநராக பணியாற்றிய விபின் முதன் முறையாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக தமிழில் அறிமுகாகிறார்.
இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். இது ஒரு சைக்காலாஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் படமாக இருக்கும்.
நயன்தாராவின் இரண்டாம் படத்திற்கான குழு மற்றும் இதர விரைவில் அறிவிக்கப்படும்.
காஜல் அகர்வால், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லக்ஷ்மி ராய் நடிப்பில் – ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகிறது ‘ரவுடி பேபி’ திரைப்படம்.
ஒளிப்பதிவு – செல்லதுரை, இசை – சாம் C.S., கலை இயக்கம் – ரெமியோன், பாடல்கள் – ‘கவிப்பேரரசு’ வைரமுத்து, படத் தொகுப்பு – தீபக் துவாரகநாத், சண்டை இயக்கம் – ‘சுப்ரீம்’ சுந்தர், தயாரிப்பு நிர்வாகம் – ஆனந்த் – சசிகுமார், நிர்வாக தயாரிப்பு – S.ஷங்கர் சத்தியமூர்த்தி – கிட்டு, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பு — அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை.
பல முன்னணி இயக்குநர்களுடன் உதவி, இணை இயக்குநராக பணியாற்றியவரும், கதை–வசனம், VFX, எடிட்டிங், மார்கெடிங் என பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்று பணியாற்றிவருமான ராஜா சரவணன் ‘ரவுடிபேபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
எல்லா குழந்தைகளும் ஏஞ்சல் அல்ல என்ற வரிகளுடன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் பரபரப்பாக பேசப்பட்டது. சுவாரஸ்யமான காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள், பயம் கலந்த, கவனம் பிசகாத, அதிர்ச்சியான காட்சியமைப்புகளுடன் கூடிய திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர் – நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படுப்படுமாம்.
The post ஒரே நேரத்தில் 8 தமிழ்ப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.
]]>