The post உதவி இயக்குனர்களுக்கு லேப்டாப் பரிசளித்த பி.வாசு! appeared first on Touring Talkies.
]]>இவர் தற்போது ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது. இயக்குனர் பி.வாசு தனது பிறந்த நாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது இயக்குனர் பி.வாசு தன்னுடைய உதவியாளர்களுக்கு லேப்டாப்களை பரிசாக வழங்கினார். இந்த கொண்டாட்டத்தில் ஜி. கே. எம். தமிழ் குமரன் மற்றும் ராகவா லாரன்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
The post உதவி இயக்குனர்களுக்கு லேப்டாப் பரிசளித்த பி.வாசு! appeared first on Touring Talkies.
]]>The post ‘சந்திரமுகி 2’ : வேட்டையன் பராக்! appeared first on Touring Talkies.
]]>இதில் ராகவா லாரன்ஸுடன், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கீரவாணி இசையமைத்து இருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டு இருக்கிறார்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தில் வரும் வேட்டையன் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
The post ‘சந்திரமுகி 2’ : வேட்டையன் பராக்! appeared first on Touring Talkies.
]]>The post ‘சந்திரமுகி 2’ அப்டேட் appeared first on Touring Talkies.
]]>ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எம். எம். கீரவாணி இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக்கினை அடுத்த மாதம் வெளியிட இருப்பதாக, படக்குழுவினர் அப்டேட் கொடுத்துள்ளனர்.
The post ‘சந்திரமுகி 2’ அப்டேட் appeared first on Touring Talkies.
]]>The post அரை மணி நேரத்தில் ஐந்து பாடல்கள்!: இளையராஜாவின் அந்த படம் எது தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், இயக்குநர் பி.வாசு ஒரு தகவலை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
அவர், “எனது இயக்கத்தில் பிரபு – குஷ்பு நடித்து ஹிட் அடித்த திரைப்படம் சின்ன தம்பி. இதற்கு இளையராஜா இசை அமைத்த பாடல்களும் பெரிய அளவில் ரீச் ஆகின. அவற்றில் ஒன்றான, ‘தூளியிலே..’பாடலை குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க தாய்மார்கள் பாடுவது இன்றளவும் நடக்கிறது.
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். சுச்சுவேஷனை சொன்னதும் அரை மணி நேரத்தில், ஐந்து பாடல்களுக்கும் மெட்டு போட்டு கொடுத்துவிட்டார் இளையராஜா” என்றார் பி.வாசு.
இளையராஜா என்றாலே ஆச்சரியம்தான்!
The post அரை மணி நேரத்தில் ஐந்து பாடல்கள்!: இளையராஜாவின் அந்த படம் எது தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி நடிக்கத் தயங்கிய பாடல்! appeared first on Touring Talkies.
]]>அவர், “மன்னன் படத்துக்காக, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே..’ பாடலை இளையராஜா இசை அமைத்தார்.. பாடலும் எழுதியாகிவிட்டது ஆனால் நாயகனான ரஜினி, அந்த பாடலில் நடிக்கத் தயங்கினார். இதையடுத்து இளையராஜா, ஏன் என்று கேட்க.. ‘படத்தின் முதல் பாடல் துள்ளலாக இருக்க வேண்டும் என என் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இது சென்டிமென்ட் பாடலாக இருக்கிறதே’ என்றார்.
அதற்கு இளையராஜா, ‘ என் மீது நம்பிக்கை வைத்து நடியுங்கள், இந்தப் பாடல் உங்களை தாய்மார்களிடமும் கொண்டு சேர்க்கும்’ என்றார். அதன் பிறகு அப்பாடல் காட்சியில் ரஜினி நடித்தார். பாடலும் பெரிய அளவில்
The post ரஜினி நடிக்கத் தயங்கிய பாடல்! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியை வெடிச்சிரிப்பு சிரிக்க வைத்த ராதாரவி! appeared first on Touring Talkies.
]]>ரஜினிக்கும் தனக்கும் இடையிலான ஒரு சம்பவத்தை சொல்கிறார் ராதாரவி:
“ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படத்தை பி.வாசு இயக்குவதாக இருந்தது. அப்போது வாசி, ‘நீதான் வில்லன். படக்குறிப்புகளில் ஆர் ஆர் என உனது பெயரைத்தான் வில்லன் வசனங்களுக்கு முன் குறிப்பிட்டு இருக்கிறேன்’ என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் ஒரு நாள் ரஜினியிடமிருந்து போன். தனது வீட்டுக்கு வரச் சொன்னார்.
அப்போது அவர், ‘அருணாச்சலம் படத்தை பி.வாசு இயக்கவில்லை. சுந்தர் சி. இயக்குகிறார். அதே போல படத்தில் ஒரு வில்லன் என்பதை மாற்றி மூன்று வில்லன் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கோம். ஆகவே உங்களுக்கு அந்த கதாபாத்திரங்கள் எதுவும் சரியாக வரும் என தோன்றவில்லை.. தவறாக நினைக்க வேண்டாம்’ என்றார்.
இதை கூப்பிட்டுச் சொல்லி இருக்க வேண்டாம் என தோன்றியது.
அந்த ஆதங்கத்தில், ‘பரவாயில்லை.. சினிமாவின் தலையெழுத்து என்ன தெரியுமா? (ரஜினியைச் சுட்டிக்காட்டி) அந்த அதிர்ஷ்டத்தைத் தேடி, (என்னைச் சுட்டிக்காட்டி) இந்தத் திறமை வரவேண்டி இருக்கிறதுதான்’ என்றேன்.
ஆனால் அதற்கு கோபப்படாமல், ‘அடேங்கப்பா.. அடேங்கப்பா’ என சொல்லிச் சொல்லி சிரித்தார் ரஜினி!” என தனது நினைவுகளை கூறினார் ராதாரவி.
The post ரஜினியை வெடிச்சிரிப்பு சிரிக்க வைத்த ராதாரவி! appeared first on Touring Talkies.
]]>The post என்னைக் கண்கலங்க வைத்த விஜய்- PRODUCER MANICKAM NARAYANAN CHAI WITH CHITHRA -MARATHON appeared first on Touring Talkies.
]]>The post உனக்கு வாய்ப்பு தர மாட்டேன் என்ற கே.வி.மகாதேவன்-CHAI WITH CHITHRA -LYRIICIST PIRAI SOODAN-PART 2 appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி கேட்ட கேள்வி /CHAI WITH CHITHRA -PROD.EXECUTIVE RAMADURAI – PART 3 appeared first on Touring Talkies.
]]>