The post கொலை வழக்கில் சிக்கிய நாகேஷ்! appeared first on Touring Talkies.
]]>அந்த நேரத்தில் நாகேஷுக்கு பட வாய்ப்புகளை தர, பலரும் யோசித்தனர். ஆனால் ஒரு இயக்குநர் மட்டும், தனது படத்தில் நாகேஷ்தான் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தார்.
அந்த இயக்குநர் யார்.. குறிப்பிட்ட வழக்கில் இருந்து நாகேஷ் எப்படி மீண்டார்..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=_Oi0CA5QWqc
The post கொலை வழக்கில் சிக்கிய நாகேஷ்! appeared first on Touring Talkies.
]]>The post நாகேஷ் வாழ்க்கையில் நடந்த ஆச்சரிய சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>வளரும் நடிகராக இருந்த அவருக்கு, இந்த படத்துக்குப் பிறகுதான் திரைவாழ்வில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் இந்த பட வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது ஒரு மிராக்கிள் அனுபவம்..
அதை தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post நாகேஷ் வாழ்க்கையில் நடந்த ஆச்சரிய சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post நாகேஷூக்கு இப்படி ஒரு நண்பரா..! தெரிஞ்சா அதிர்ச்சி ஆயிடுவீங்க! appeared first on Touring Talkies.
]]>அந்த நடிகர், தான் ஒப்பந்தமாகும் படங்களில் எல்லாம் “ இவர் நாகேஷ். அற்புதமான நடிகன்.. வாய்ப்பு கொடுங்கள்” என்று கூறுவார்.
வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர்,, தான் நடிக்கும் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களிடம், “எனது சம்பளத்தைக் குறைத்துக்கொள்கிறேன். நாகேஷூக்கு வாய்ப்பு கொடுங்கள்..” என்றார்.
அதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, “உங்களுக்கு வேண்டுமானால் சம்பளத்தை அதிகமாக தருகிறோம். இவருக்கு வாய்ப்பு தரமுடியாது” என்று கூறிவிடுவார்கள்.
பிறகுதான் ஒரு கட்டத்தில் நாகேஷுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.. ஜொலிக்க ஆரம்பித்தார்..
நாகேஷுக்காக தனது சம்பளத்தையே விட்டுக்கொடுக்க முனைந்த.. அந்த அற்புத நண்பர்.. நடிகர் யார்..
The post நாகேஷூக்கு இப்படி ஒரு நண்பரா..! தெரிஞ்சா அதிர்ச்சி ஆயிடுவீங்க! appeared first on Touring Talkies.
]]>The post சென்சார் போர்ட் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்ட நாகேஷ்! appeared first on Touring Talkies.
]]>பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி, தேவிகா உள்ளிட்ட பலரும் நடித்து 1963ம் வருடம் வெளியான திரைப்படம் அன்னை இல்லம். இந்த படத்தில் திக்குவாய் உள்ள கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருந்தார். படம் சென்சாருக்கு போனது. அப்போது சவுத்ரி எனும் சென்சார் அதிகாரி இருந்தார். அவர் இந்த படத்தை பார்த்துவிட்டு ‘படம் நன்றாக இருக்கிறது. ஆனால், நாகேஷ் நடித்துள்ள காமெடி காட்சிகளை மொத்தமாக வெட்டிவிடுங்கள்’ என சொன்னார். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
நாகேஷை வர சொல்லுங்கள் நான் பார்க்க வேண்டும் என சாஸ்திரி சொல்ல நாகேஷ் அவரை பார்க்க சென்றார். அவரின் ‘நாகேஷ் நானும் உங்கள் ரசிகர்தான். ஆனால், கொஞ்சம் யோசித்து பாருங்கள். வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்தால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும். அவர்களை அசிங்கப்படுத்துவது போல் இருக்கிறது உங்கள் காமெடி. நீங்கள் இப்படியெல்லாம் நடிக்க கூடாது’ என அறிவுரை சொல்ல நாகேஷ் ‘உண்மைதான். தெரியாமல் செய்துவிட்டேன். இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன்’ என சொன்னாராம். அதன்பின் நாகேஷ் நடித்த சில காட்சிகளை மட்டும் வெட்டிவிட்டு சென்சார் சான்றிதழ் கொடுத்தாராம் அந்த அதிகாரி.
The post சென்சார் போர்ட் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்ட நாகேஷ்! appeared first on Touring Talkies.
]]>The post நாகேஷ் காட்சியை காப்பாற்றி சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திருவிளையாடல், 1965 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமானாகவும், சாவித்திரி பார்வதி ஆகவும் நடித்திருப்பார். சிவனின் திருவிளையாடல் என்று ஆறு பகுதிகளை கொண்டதாக இந்த படம் இருக்கும்.
இதில் ஒரு பகுதியில் தருமி என்னும் கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருப்பார். அந்த நாட்டின் மன்னனால் கவிதை போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பொன்னும் பொருளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும். ஏழைப் புலவனாக இருக்கும் தருமி சிவன் கோவிலில் சென்று இதுபற்றி சொல்லி புலம்புவார். அப்போது சிவனான சிவாஜி கணேசன் நேரடியாக தோன்றுவார்.
இவர்கள் இருவரும் நடிக்கும் இந்த காட்சியில் நாகேஷ் தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார். ரொம்ப சீரியஸ் ஆக நிற்கும் சிவாஜி அவர் எதிரே புலம்பி தவிக்கும் நாகேஷ். இன்று வரை இந்த காட்சியை பார்க்கும் பொழுது அதில் சிவாஜி கணேசன் இருக்கிறார் என்பதே பார்ப்பவர்களுக்கு மறந்து விடும். நாகேஷ் விட்டு கண்கள் அசையாத அளவுக்கு அவர் நடித்திருப்பார்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த இயக்குனருக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டதாம். நடிகர் திலகத்தை நாகேஷ் நடிப்பில் ஓவர் டேக் செய்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட இயக்குனர் நாகராஜன் இதைப்பற்றி சிவாஜி கணேசனிடம் சொல்லியிருக்கிறார். மேலும் இந்த காட்சியை நீக்கிவிடலாம் என்று கூட பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் சிவாஜி ரசிகர்கள் ரசிக்க வேண்டியது நடிப்பைத்தானே தவிர ஹீரோவை இல்லை என்று கூறி அந்த காட்சியை வைக்க சொன்னாராம்.
The post நாகேஷ் காட்சியை காப்பாற்றி சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>The post “காசேதான் கடவுளடா..”: அனுபவத்தை பகிர்ந்த சிவா appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் பேட்டி ரீமேக் படத்தில் நடித்தது குறித்து சிவா கூறும்போது, “இந்த படத்தில் நடித்தது நல்ல அனுபவம். நானும், கண்ணனும் இணைந்து படம் பண்ண நீண்ட நாள் திட்டமிட்டு தற்போது நிறைவேறியுள்ளது. எல்லா ரீமேக் படத்திலும் ஒப்பீடு இருக்கும். அதுபோல் இந்த படத்தையும் நிச்சயம் ஒப்பிடுவார்கள்.
காசேதான் கடவுளடா மிகப்பெரிய வெற்றி பெற்ற கிளாசிக் காமெடி படம். அதை விட மேலாக எங்களால் செய்ய முடியாது, எனவே அந்த படத்துடன் ஒப்பிடாமல் பார்த்தால் நிச்சயம் படம் மகிழ்விக்கும்.
படத்தை இயக்குனர் கண்ணன் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பழைய படத்தில் இடம்பெற்ற காட்சிகளை தற்போது எடுப்பது கொஞ்சம் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியால் அதை எப்படி செய்வார் என்று யோசித்தேன். ஆனால், மிக சிறப்பான திட்டத்தோடு காட்சிகளை படமாக்கினார். படம் அனைவரையும் சிரிக்க வைக்கும்” என்றார்.
The post “காசேதான் கடவுளடா..”: அனுபவத்தை பகிர்ந்த சிவா appeared first on Touring Talkies.
]]>The post நாகேஷ் திறமையானவர்தான்… ஆனால்..! appeared first on Touring Talkies.
]]>பாலச்சந்தரின் மிக நெருங்கிய நண்பரான, நாகேஷ், அவரது திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பாலச்சந்தருக்கும் நாகேஷுக்கும் சிறு விரிசல் உருவானது. ஆனாலும் மீண்டும் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் இருவரும் இணைந்தனர்.
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், நாகேஷ் குறித்து சில விசயங்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர், “நாகேஷிற்கு அதிகமாக புகை பிடிக்கும் பழக்கமும் மதுப்பழக்கமும் இருந்தது. இதனால் 1970களில் ஒரு முறை உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்குப் பிறகு நாகேஷ் உடல் நலம் தேறி மீண்டு வந்தார்.
நாகேஷினுடைய அற்புதமான நடிப்பும், ஞாபக சக்தியும் அவருடைய மிகப்பெரிய பிளஸ்கள். அவருடைய பலவீனம் என்னவென்றால் ஒரு காலகட்டத்தில் அவர் மதுவுக்கு பெரிதளவில் அடிமையானார். அதன் காரணமாக பல பட வாய்ப்புகளை அவர் இழந்தார். ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் நாகேஷுக்கும் இடையே சில பிரச்சனைகள் வருவதற்கும் அவரின் மது பழக்கம் காரணமாக இருந்தது. மேலும் இது போன்ற மதுப்பழக்கத்திற்கு தற்போதுள்ள நடிகர்கள் அடிமையாகக்கூடாது” என்று தெரிவித்தார் சித்ரா லட்சுமணன்.
இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளை தெரிந்துகொள்ள…
The post நாகேஷ் திறமையானவர்தான்… ஆனால்..! appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஜி.ஆருக்கு பயந்த நாகேஷ்! appeared first on Touring Talkies.
]]>அவர் குறித்து நடிகர் மதன்பாபு ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
“நாகேஷ் சிறந்த நடிகர் என்பதோடு அனைவரிடமும் அன்பாக பழகுவார். ஆனால் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதுவும் படப்பிடிப்புக்கு வரும்போதே காலையிலேயே மது அருந்துவிட்டு வருவார். எம்.ஜி.ஆருடன் நடிக்க வேண்டிய ஒரு காட்சி… அப்போதும் அப்படி வந்துவிட்டார் நாகேஷ். எம்.ஜி.ஆரோ மது, புகை பழக்கம் இல்லாதவர். அதோடு பிறரும் அந்தப் பழக்கத்துக்கு அடிமையைகி விடக்கூடாது என நினைப்பவர்.
வழக்கமாக படப்பிடிப்புக்கு வரும்போது, எம்.ஜி.ஆருடன் வந்து கைகுலுக்கிவிட்டுச் செல்லும் நாகேஷ் அன்று ஓரமாக ஒதுங்கிப் போய்விட்டார். இது எம்.ஜி.ஆருக்கு உறுத்தலாக இருக்கவே, அவரை அழைத்தார். அவரோ பயந்துகொண்டு ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக்கொண்டே இருந்தார்.
பிறகு எம்.ஜி.ஆர். அதட்டியவுடன் நாகேஷ் வந்தார். எம்.ஜி.ஆருக்கு உண்மை தெரிந்தது.
அவர், ‘பார்த்தாயா.. மதுப் பழக்கம் என்பது.. உன் தைரியத்தையே குறைத்துவிட்டது. கம்பீரத்தை குறைத்துவிட்டது. எனக்கு பயந்து செல்லும் நிலைக்கு ஆளாக்கிவிட்டது. இனி மதுவைத் தொடாதே’ என்று அறிவுரை கூறினார்.
அதிலிருந்து எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு என்றாலே மதுவைத் தவிர்த்துவிடுவார் நாகேஷ்!” என்றார் மதன்பாபு.
The post எம்.ஜி.ஆருக்கு பயந்த நாகேஷ்! appeared first on Touring Talkies.
]]>