The post சைத்ரா – திரை விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>இந்த படத்திற்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு,சதீஷ் குமார்
சைத்ரா கதை என்ன?
நாயகி யாஷிகா ஆனந்த், தற்கொலை செய்ய கட்டிடத்தின் மேல் தளத்தில் சென்று நிற்கிறார். எதற்காக தற்கொலை செய்ய நினைக்கிறார் என்ற கதை ப்ளாஷ் பேக் செல்கிறது.
இரண்டு நண்பர்களுடன் காரில் செல்கிறார் யாஷிகா ஆனந்த். கார் விபத்துக்குள்ளாக இரண்டு நண்பர்களும் விபத்தில் உயிரிழக்கின்றனர்.
பிறகு இறந்தவர்கள் ஆவியாக வந்து யாஷிகாவை மிரட்டுகின்றனர். யாஷிகாவை எதற்காக இருவரும் துன்புறுத்துகிறார்கள்.? அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக செய்து முடிப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் கதைக்கு தகுந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சைத்ரா கதாபாத்திரமாகவே மாறி படம் முழுவதும் அந்த கதாபாத்திரத்தோடு நம்மை பயணிக்க வைத்து விட்டார் யாஷிகா. மற்ற படங்களில் இருந்து இப்படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
யாஷிகாவின் கணவராக வரும் அவிதேஜ், தனக்கு கொடுக்கப்பட்டத்தை அளவோடு அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை கட்சிதமாக நடித்து காட்சிகள் அனைத்திற்கும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு த்ரில்லிங்க் படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்து ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர்.
இயக்கத்திற்கு இணையாக இசையும் ஒளிப்பதிவும் பொருத்தமாக உள்ளது. சைத்ரா – ரசிக்க த்ரில்லான அனுபவத்தை கொடுக்கும்.
The post சைத்ரா – திரை விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post ’மியூசிக்’ இசை நிறுவனம் தொடங்கியது பிரபல வைஜெயந்தி மூவிஸ்..! appeared first on Touring Talkies.
]]>இந்நிறுவனம் தொழில்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிறுவனம். இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவனம் புதிதாக ‘வைஜெயந்தி மியூசிக்’ எனும் இசை நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. 50 ஆண்டுகள் நிறைவடையொட்டி இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2024 ஆம் ஆண்டு வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ‘கல்கி 2898 கி.பி.’ என்ற பிரம்மாண்ட இலட்சிய படைப்பின் வெளியீட்டிற்கு முன்னதாக அவர்கள் இந்த வைஜெயந்தி மியூசிக் எனும் இசை நிறுவனம் தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
மேலும் ‘எங்கள் இசையை உங்கள் வாழ்வில் கொண்டு வருவோம்’ என்பதுதான் வைஜெயந்தி மியூசிக் எனும் மியூசிக் பிராண்டின் நோக்கம் என இந்நிறுவனம் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.
The post ’மியூசிக்’ இசை நிறுவனம் தொடங்கியது பிரபல வைஜெயந்தி மூவிஸ்..! appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” appeared first on Touring Talkies.
]]>பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி. அந்த பாடல்களை ஆதிராஜன் மிகுந்த ரசனையுடன் படமாக்கி இருக்கிறார்.
பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது.
பழனி பாரதியின் வார்த்தை ஜாலங்களில் கார்த்திக்கின் மயக்கும் குரலில் உருவான “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற முதல் பாடல் ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. பிரபல இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் செய்தனர். நன்றி அவர்களுக்கு. பாடல் எல்லோராலும் விரும்பப்படுகிறது என்பதை பின்னூட்டங்களில் பார்க்க முடிகிறது. அருமையான ஒரு மெலடியாக அப்பாடல் அமைந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.
தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
The post இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி படத்துக்கு யுவன் இசையமைக்காதது ஏன்? appeared first on Touring Talkies.
]]>அப்படி கேட்கப்பட்ட கேள்விகள் சில..
கேப்டன் மில்லர் தாமதம் ஏன்?
ரஜினி படத்துக்கு யுவன் இசையமைக்காதது ஏன்?
அஜித் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
எம்.எஸ். சுப்புலட்சுமியை சினிமாவில் அறிமுகம் செய்தவர் யார்?
கேரளாவில் தமிழ் ஹீரோக்களுக்கு பிசினஸ் எப்படி உள்ளது?
# இந்த கேள்விகள் உட்பட மேலும் பல கேள்விகளுக்கு விடை தெரிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post ரஜினி படத்துக்கு யுவன் இசையமைக்காதது ஏன்? appeared first on Touring Talkies.
]]>The post யுவன் இசையில் விஜய் பாடிய ஒரே பாடல்! appeared first on Touring Talkies.
]]>யுவன் இசையமைக்கிறார்.
20 வருடங்களுக்கு முன், புதிய கீதை படத்திற்கு இப்போதுதான் விஜய் – யுவன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
விஜய் தன்னுடைய படங்களில் ஒரு பாடலை பாடுவது வழக்கம் தான். ஆனால், புதிய கீதை படத்தில் விஜய் பாடவில்லை.
ஆனால், விக்னேஷ் ஹீரோவாக நடித்திருந்த வேலை என்ற படத்தில், காலத்துக்கு ஏத்த ஒரு கானா என்ற பாடலை யுவன் இசை அமைக்க விஜய் பாடியிருந்தார். ஆகையால், தளபதி 68 படத்தில் விஜய் பாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
The post யுவன் இசையில் விஜய் பாடிய ஒரே பாடல்! appeared first on Touring Talkies.
]]>The post பொன்னியின் செல்வன் 2 : இசை & ட்ரெய்லரை வெளியிடும் கமல் appeared first on Touring Talkies.
]]>ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், மார்ச் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய விருந்தினர் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கலந்து கொள்வதாக லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெர்விக்கப்பட்டுள்ளது. இந்த டிவீட்டில் உலக நாயகன் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பொன்னியின் செல்வன் 2 : இசை & ட்ரெய்லரை வெளியிடும் கமல் appeared first on Touring Talkies.
]]>The post வைரமுத்து – இளையராஜா! சங்கடத்தில் தவித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.
]]>
பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் ஏராளமான பாடல்கள் ஹிட் ஆகின. ஆன்ல ஒரு கட்டத்தில் இளையராஜாவிடம் இருந்து மற்ற இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து வைரமுத்துவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “வைரமுத்துவிற்கு இளையராஜா பிரச்சனை, இளையராஜாவிற்கு வைரமுத்து பிரச்சனை” என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாள் பிஸ்மி, ஒரு பேட்டியில் இது குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
“கடலோரக் கவிதைகள்” திரைப்படத்தின் பாடல்கள் பதிவின்போது “பள்ளிக்கூடம் போகாமலே” என்ற பாடலை வைரமுத்து எழுதுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் அந்த பாடலை இளையராஜாவே எழுதிவிட்டார்.
வைரமுத்து இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு போனபோது, இளையராஜா அவரது உதவியாளரை கொண்டு வைரமுத்துவை திரும்ப வீட்டிற்கே அனுப்பிவிட்டார்.
இதனை தொடர்ந்து பாரதிராஜா, “வேதம் புதிது” திரைப்படத்தை இயக்கியபோது இளையராஜா, “வைரமுத்து பாட்டெழுதுவதாக இருந்தால் நான் இசையமைக்கமாட்டேன்” என கூறினார்.
அதனை தொடர்ந்துதான் பாரதிராஜா “வேதம் புதிது” திரைப்படத்திற்கு தேவேந்திரனை இசை அமைக்க வைத்தார்” இவ்வாறு பிஸ்மி கூறினார்.
The post வைரமுத்து – இளையராஜா! சங்கடத்தில் தவித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.
]]>The post இயக்குனரை ஸ்டுடியோவிலிருந்து விரட்டிய இளையராஜா!: appeared first on Touring Talkies.
]]>அந்த மாதிரி சம்பவம் இது..
தங்கர்பச்சான் இயக்கிய அழகி திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்தார். அப்படத்தின் பாடல்கள் பலரையும் நெகிழ வைத்தன.
அதன்பின் தங்கர்பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்திற்கு ராஜா இசையமைத்தார். ஆனால், அதன்பின் தங்கர்பச்சான் இயக்கிய 7 படங்களுக்கு ராஜா இசையமைக்கவில்லை.
இதற்குக் காரணம்..
ஒருமுறை இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு ஷாட்ஸ் (டவுசர்) அணிந்து தங்கர்பச்சான் சென்றார். ஆத்திரமான ராஜா ‘என்ன உடை இது.. இந்த இடம் கோவில் மாதிரி.. இது போன்ற உடையணிந்து இங்கே வரக்கூடாது. வெளியே போ’ என அவரை விரட்டி விட்டார்.
அதன் பின்னரே இளையராஜாவிடம் தங்கர்பச்சான் செல்வது இல்லை.
சமீபத்தில் இந்த சம்பவத்தை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.
The post இயக்குனரை ஸ்டுடியோவிலிருந்து விரட்டிய இளையராஜா!: appeared first on Touring Talkies.
]]>The post ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ் appeared first on Touring Talkies.
]]>‘தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் ‘தி நைட் மேனேஜர்’. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ‘பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடருக்கு தமிழ் திரையுலகினைச் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளரான சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
‘விக்ரம் வேதா’ எனும் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு இசையமைத்து பாலிவுட் திரையுலகிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற சாம் சி எஸ், ‘தி நைட் மேனேஜர்’ எனும் இந்தி இணைய தொடருக்கு திறமை வாய்ந்த பல சர்வதேச இசை கலைஞர்களின் ஒத்துழைப்புடன் பின்னணி இசையமைத்திருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ் appeared first on Touring Talkies.
]]>The post அரை மணி நேரத்தில் ஐந்து பாடல்கள்!: இளையராஜாவின் அந்த படம் எது தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், இயக்குநர் பி.வாசு ஒரு தகவலை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
அவர், “எனது இயக்கத்தில் பிரபு – குஷ்பு நடித்து ஹிட் அடித்த திரைப்படம் சின்ன தம்பி. இதற்கு இளையராஜா இசை அமைத்த பாடல்களும் பெரிய அளவில் ரீச் ஆகின. அவற்றில் ஒன்றான, ‘தூளியிலே..’பாடலை குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க தாய்மார்கள் பாடுவது இன்றளவும் நடக்கிறது.
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். சுச்சுவேஷனை சொன்னதும் அரை மணி நேரத்தில், ஐந்து பாடல்களுக்கும் மெட்டு போட்டு கொடுத்துவிட்டார் இளையராஜா” என்றார் பி.வாசு.
இளையராஜா என்றாலே ஆச்சரியம்தான்!
The post அரை மணி நேரத்தில் ஐந்து பாடல்கள்!: இளையராஜாவின் அந்த படம் எது தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>