The post பல நினைவுகளை தூண்டும்’நிக்லே தி கபி ஹம் கர் சே’ பாடல் பற்றி ஷாருக்கான் appeared first on Touring Talkies.
]]>டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் நேற்று வெளியிடப்பட்டது, இந்த பாடல் இந்தியா முழுதும் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. பழைய ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது என, டங்கி படத்தின் சமீபத்திய பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் பற்றி ஷாருக்கான் பகிர்ந்திருக்கிறார்.
டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் நேற்று வெளியிடப்பட்டது, இந்த பாடல் இந்தியா முழுதும் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. பாடல் மீதான ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடு சமீபத்திய ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளிப்படுத்தினார்.
சிறந்த எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணத்தையும், அன்புக்குரியவர்களை விட்டுச் சென்ற கணத்தையும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டும் வகையில், இந்த பாடல் பார்வையாளர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும் உணர்வைத் தூண்டும் வகையில், இந்த பாடல் உண்மையில் தங்கள் வீட்டைத் தவறவிட்டு, அதை விட்டு விலகி இருப்பவர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு கீதமாக இருக்கும் என்றார் ஷாருக்கான்.
The post பல நினைவுகளை தூண்டும்’நிக்லே தி கபி ஹம் கர் சே’ பாடல் பற்றி ஷாருக்கான் appeared first on Touring Talkies.
]]>The post பழசை மறக்காத கமல்! appeared first on Touring Talkies.
]]>இந்த மேக்-அப் போடுவதற்கு 4 மணி நேரம் ஆகும். ஆனால், படப்பிடிப்பில் 5 மணி நேரம் கூட அந்த மேக்கப் இருக்காதாம்.
இவ்ளவு சிரமப்பட்டு கமல் நடித்த அவ்வை சண்முகி பெரும் வெற்றி பெற்றது. படம் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு, படத்தின் மேக் அப் மேனை சந்திக்க கமல் விரும்பினார். அதன்படி கடந்த வரும், மேக் அப் மேன்வெஸ்ட்மோரை கமல் சந்தித்தார். வெஸ்ட்மோரின் மகளும் நடிகையுமான மெக்கென்சி கேட் வெஸ்ட்மோர் இது குறித்து நெகிழ்ச்சியாக அப்போது கூறினார்.
The post பழசை மறக்காத கமல்! appeared first on Touring Talkies.
]]>The post பாத்ரூமில் உட்கார்ந்து உணவு சாப்பிட்டேன்… பிரியங்கா சோப்ரா appeared first on Touring Talkies.
]]>உணவுப்பண்டங்கள் வாங்கிக் கொண்டு யாரும் பார்க்காமல் பாத்ரூமுக்குள் சென்று தின்றுவிட்டு கிளாஸ் ரூமுக்கு சென்று விடுவேன். அந்த நாட்களில் வேறு யாருடனும் நான் சேர்ந்து எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. எனக்கு இருந்த பயத்தினால்தான் அப்படி நடந்து கொண்டேன். அத்தனை பயங்களையும் ஒதுக்கி விட்டுத்தான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். சுமார் 4 வாரங்கள் அங்கு ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாக கவனித்தேன். அதன் பிறகு எனக்குள் தைரியம் வந்தது. பள்ளியில் இருக்கும் இதர மாணவர்களோடு நட்புக்காக என்னை மாற்றிக் கொண்டேன். டேட்டிங் செல்வது, லேட்நைட் பார்ட்டிகள் இதெல்லாம் எங்கள் குடும்பத்தில் அனுமதிக்க மாட்டார்கள் என்று நண்பர்களுக்கு புரியும்படி கூறினேன்” என்றார்.
The post பாத்ரூமில் உட்கார்ந்து உணவு சாப்பிட்டேன்… பிரியங்கா சோப்ரா appeared first on Touring Talkies.
]]>The post “உன் மேல வெறுப்பு…” : பிரபல நடிகரை திட்டிய சரத்குமார் appeared first on Touring Talkies.
]]>எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி நடிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் இவர்.
இந்நிலையில், ராதிகாவின் தயாரிப்பில் வெளியான செல்வி என்ற சீரியலில் வில்லனாக நடித்தார்.
இது குறித்து தெரிவித்த அவர், “ஏற்கெனவே, சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் காமெடி வேடத்தில் நடித்தபோது பலரும் பாராட்டினர். ஆனால் அடுத்து வந்த செல்வி தொடரில் நான் வாய்ப்பு கிடைத்து. இந்த தொடரில் ஆண்டவர் லிங்கம் என்ற வில்லன் வேடத்தில் நடித்தேன்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் காமெடியாக பார்த்து ரசித்த பலரும் வில்லனாக நடிப்பது ஏன் என்று கேட்க தொடங்கிவிட்டனர். என் மனைவி சாப்பாடு போட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
அதேபோல் என் மகள் படிக்கும் பள்ளியில் இருந்து என்னை அழைத்து வில்லன் ரோலில் நடிப்பது குறித்து திட்டினார்கள். இதையெல்லாம் விட நடிகர் சரத்குமார் நெப்போலியன் இருவருமே என்னிடம் கோபப்பட்டார்கள். பட்டாபியாக ரசிக்க வைத்த நீ இப்போது வெறுப்பை ஏற்படுத்திவிட்டாய் உன் மூஞ்சில் விஷம் சொட்டுது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
The post “உன் மேல வெறுப்பு…” : பிரபல நடிகரை திட்டிய சரத்குமார் appeared first on Touring Talkies.
]]>The post குஷ்பூவுக்காக மாற்றப்பட்ட கதை!: நாட்டாமையில் நடந்தது என்ன? appeared first on Touring Talkies.
]]>1994 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் முன்னணி ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் நாட்டாமை. இந்த படத்தை தமிழில் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தெலுங்கில் பெத்தராய்டு என்னும் பெயரில் ரீமேக் ஆகும்போது அவரே விரும்பி விஜயகுமார் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்திருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகி தேர்வு என்பதே திட்டமிடாமல் நடந்ததுதானாம். நடிகை லட்சுமியை, குஷ்பு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம் இயக்குனர். ரவிக்குமார் எதேர்ச்சையாக ஒரு படபிடிப்பு தளத்தில் குஷ்பூவை பார்க்கும் பொழுது அவர் இந்த படத்தின் கதையை கேட்டு நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னாராம்.
இதை தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியிடம் சொல்ல அவரும் ஒப்புக்கொண்டாராம். குஷ்பூ அந்த நேரத்தில் முன்னணி நடிகையாக இருந்ததால், அவருக்காக தான் அந்த ஃப்ளாஷ் பேக் காட்சியில் பெண் பார்க்கும் சீன் மற்றும் ‘கொட்ட பாக்கு’ பாடலும் சேர்க்கப்பட்டதாம். அதேபோல் மற்றொரு கதாநாயகியாக மீனாவை நடிக்க வைக்க முதலில் திட்டமே இல்லையாம். இதற்கு காரணம் படத்தின் பட்ஜெட்.
இந்த படத்தில் விஜயகுமார் இருந்ததால் அவருடைய மனைவி மஞ்சுளா விஜயகுமார் மீனாவை நடிக்க வைப்பதற்கு ரொம்பவும் சிபாரிசு செய்தாராம். லோ பட்ஜெட் படம் என்பதால் யோசித்த ரவிக்குமார் பிறகு மீனாவையே நடிக்க வைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சரத்குமார் மற்றும் கவுண்டமணி இருவருக்குமே சரிசமமான சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள்.
படத்தின் மொத்த பட்ஜெட் 50 லட்சம் ரூபாயாம். இதில் 10 லட்சம் சரத்குமார் மற்றும் கவுண்டமணிக்கு சம்பளமாக போக மீதி இருந்த 40 லட்சத்தில் விஜயகுமார், மீனா, குஷ்பூ, சங்கவி, செந்தில், மனோரமா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு சம்பளமும் கொடுத்து படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவ்வளவு லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமாக பேசப்பட்டு வருகிறது.
The post குஷ்பூவுக்காக மாற்றப்பட்ட கதை!: நாட்டாமையில் நடந்தது என்ன? appeared first on Touring Talkies.
]]>The post “சில்க் ஸ்மிதாவுக்கும் எனக்கும் போட்டியா?”: மலரும் நினைவுகளில் ஷகிலா appeared first on Touring Talkies.
]]>தற்போது இவர் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
70களில் ஆரம்பித்து கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய பயோ பிக் ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்னும் பெயரில் வெளியாகி இருந்தது. அதில் ஷகிலா கதாபாத்திரமும் வந்தது.
இது குறித்து அவர், “அந்த திரைப்படத்தில் சில்க் மார்க்கெட் கொஞ்சம் சரியும் நேரத்தில் நான் அவருக்கு போட்டியாக வந்திருப்பதாக வசனமும், அது சம்மந்தப்பட்ட காட்சிகளும் வரும். அது பொய். முதலில் சில்க் ஸ்மிதாவிற்கு தங்கையாகவே நடித்தேன். எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை.
உண்மையை சொல்ல போனால் சில்க்கின் மார்க்கெட் குறைந்த ஒரு சில வருடஙக்ளுக்கு பின்பு தான் எனக்கு மலையாள திரைப்பட உலகில் வாய்ப்பு கிடைத்து. என்னை தவறாக காட்டிய அந்த படக்குழு மீது கடும் கோவத்தில் இருக்கிறேன்” என ஷகிலா கூறியிருக்கிறார்.
The post “சில்க் ஸ்மிதாவுக்கும் எனக்கும் போட்டியா?”: மலரும் நினைவுகளில் ஷகிலா appeared first on Touring Talkies.
]]>