The post கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் பலருக்கும் இவரை வில்லனாக தான் அடையாளம் தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனர். தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ராஜ் கபூர் நடிகர் அஜித் குமாரை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராக பிரபலமானார்.
அண்மையில் உழைப்பாளர் தினம் எனும் ஒரு புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ் கபூர், கதைக்கும் டைட்டிலுக்கும் ஒரு சம்பந்தமே இல்லாம கில்லின்னு பேர் வைக்கிறானுங்க என்றார்.இந்த படத்துக்கு தான் சரியாக உழைப்பாளர் தினம்னு பெயர் வச்சுருக்காங்க என்றார்.
இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் போன்ற நல்ல பெரிய இயக்குநர்களை பெரிய நடிகர்கள் அழைத்து படம் கொடுக்கிறேன்னு சொல்லி காலி பண்ணிடுறாங்க என பேச அந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பரியேறும் பெருமாள் எனும் நல்ல படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்.
அதோபோல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாரி செல்வராஜ்க்கு வெற்றியை தேடிதந்தது.இச்சமயத்தில் மாரி செல்வராஜை எந்த நடிகர் அழைத்துச் சென்று காலி செய்தார் என ரசிகர்கள் ராஜ் கபூருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
The post கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் appeared first on Touring Talkies.
]]>The post “கருப்பை வாரி பூசிக்கொண்டு ஜெயித்தவர் விஜயகாந்த்” – மாரி செல்வராஜ் புகழஞ்சலி appeared first on Touring Talkies.
]]>விஜயகாந்த் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதில், “என் அம்மாவுக்கு பிடித்த நடிகர் விஜயகாந்த்.அவரின் துணிச்சல் மிகவும் பிடிக்கும். நான் சிறுவனாக இருந்தபோது விஜயகாந்த் தூத்துக்குடியில் அரசு மருத்துவமனைகளுக்கு படுக்கைகள் வழங்க வந்திருந்தார். அந்த விழாவுக்கு என்னையும் எனது அம்மா அழைத்துச் சென்றதால் அப்போது முதல்முறையாக கேப்டனை சந்தித்தேன். அப்போதே அவரை பார்ப்பது அவ்வளவு பிரமிப்பாக இருந்தது.
அலையோசை அவரின் படங்களில் நான் அதிகம் பார்த்தது. அவரின் நிறமும், விழிகளும் எனக்குள் ஆழமாக பதிந்துள்ளன. கருப்பை வாரி பூசிக் கொண்டு ஜெயித்தவர். நெருப்பு மாதிரியான இப்படி ஒரு ஹீரோ கிடைக்க மாட்டாரோ என ஏங்கி இருக்கிறேன். நிச்சயம் இது பெரிய இழப்புதான்.
ரஜினி ரசிகராக இருந்தாலும் சரி, கமல் ரசிகராக இருந்தாலும் சரி விஜயகாந்த் என்றால் சொந்தம் கொண்டாடி கொள்வது கிராமங்களில் இயல்பாக இருந்தது. கிராமங்களில் அதிகமாக திரை கட்டி திரையிடப்பட்ட படம் விஜயகாந்த் சாரின் படங்கள்தான். காரணம் அனைவருக்கும் பிடித்தவர். நம்மில் ஒருவர் என்று மக்களை நினைக்க வைத்தவர்.
சினிமா நடிகர் என்கிற பிம்பத்தை தாண்டி, அவரின் குரல் மக்களிடம் நேரடியாக சென்று சேர்ந்தது. கிராமங்களில் விஜயகாந்தின் படங்களின் வசனங்கள் ஒலிநாடாக்களாக இரவு முழுவதும் ஒலிக்கப்பட்டு இருக்கும். அவரின் குரலை கேட்டு கேட்டு கிராம மக்களிடம் நெருக்கமாக இருந்தவர் அவர்” என்று தெரிவித்துள்ளார்.
The post “கருப்பை வாரி பூசிக்கொண்டு ஜெயித்தவர் விஜயகாந்த்” – மாரி செல்வராஜ் புகழஞ்சலி appeared first on Touring Talkies.
]]>The post உதயநிதி ஸ்டாலின் என்னை காண்காணிக்கிறாரு!: மாரி செல்வராஜ் பகீர் appeared first on Touring Talkies.
]]>இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், “சந்தோசமாக உள்ளது. மாமன்னன் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதுக்கு மக்களே காரணம்” என்றார். அப்போது, நாங்குநேரி சம்பவதுக்கு சாதிய எண்ணம் கொண்ட திரைக்கலைஞர்கள் காரணம் என்று பேச்சு எழுகிறது என்று கேள்வி எழுப்பியதற்கு, “என்னுடைய மூன்று படங்களும் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எதையும் மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார்.
தொடர்ந்து ரத்னவேலு கதாபாத்திரம் தவறாக கொண்டாடப்பட்டது குறித்த கேள்விக்கு, “தவறாக கொண்டாடியவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் ” என்றார்.
The post உதயநிதி ஸ்டாலின் என்னை காண்காணிக்கிறாரு!: மாரி செல்வராஜ் பகீர் appeared first on Touring Talkies.
]]>The post நாங்குநேரி கொடூரம்: திரையுலகினர் கண்டனம் appeared first on Touring Talkies.
]]>இந்த சம்பவத்துக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என பதிவிட்டுள்ளார்.
மாரிசெல்வராஜ், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என பதிவிட்டுள்ளார்.
மோகன்.ஜி, “மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பல திரையுலகப்புள்ளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post நாங்குநேரி கொடூரம்: திரையுலகினர் கண்டனம் appeared first on Touring Talkies.
]]>The post இப்போதாவது மாரி செல்வராஜ் புரிந்துகொள்ளட்டும்! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் மாரி செல்வராஜ், “கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் வடிவலு நடித்த இசக்கி கதாபாத்திரம் எனக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்தியது. சாதி ரீதியான ஒடுக்குமுறையை ஆதரித்த படமாக அது இருந்தது. அந்த இசக்கியைத்தான் மாமன்னன் படத்தில் கொண்டு வந்து இருக்கிறேன்” என தொடர்ந்து பேசி வந்தார்.
இதற்கு நெட்டிசன்கள் பலர், “அந்த படத்தில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கான பிரச்சினைதான் சொல்லப்பட்டது. தவிர வன்முறை வேண்டாம் என்பதையே படம் பறைசாற்றியது” என்றனர்.
ஆனால் மாரி செல்வராஜ் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் அவரது இயக்கத்தில் மாமன்னன் படம் வெளியானது. இதில் சாதி வெறியர் கதாபாத்திரத்தில் பகத்பாசில் நடித்து இருந்தார்.
இது குறித்து, “பகத்தின் கதாபாத்திரம் அதீதமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இது சாதிபற்றுள்ளவர்களை தூண்டிவிடக்கூடும்” என்று பலரும் சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.
அது தற்போது நடந்துவிட்டது.
பகத் நடித்த காட்சிகளை கட் செய்து ஜாதி பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு, சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆக, அன்று சொன்னது நடந்துவிட்டது. போகட்டும், இப்போதாவது, தேவர் மகன் படத்தில் திட்டமிட்டு காட்சி அமைக்கப்படவில்லை என்பதை மாரி செல்வராஜ் புரிந்துகொள்ளட்டும்” என தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் ராமு.
The post இப்போதாவது மாரி செல்வராஜ் புரிந்துகொள்ளட்டும்! appeared first on Touring Talkies.
]]>The post மாரி செல்வராஜ் மீது கோபப்படும் மாமன்னன் நடிகை! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் மாமன்னன் படத்தில் ஃபகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்த ரவீனா ச பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “மாமன்னன் படத்துக்காக மொத்தம் 17 நாட்கள் ஷூட்டிங் சென்றேன். நான் வசனம் பேசும் காட்சிகளிலும் நடித்தேன். ஆனால் அதை மொத்தமாக இயக்குநர் வெட்டி தூக்கிவிட்டார். அதனால்தான் என்னுடைய கேரக்டருக்கு வசனம் எதுவுமே படத்தில் இல்லை. Serial actress Raveena : இவரைத்தான் காதலிக்கிறாரா ரவீனா.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் கேள்வி! அதுகூட பரவாயில்லை என்னுடைய கேரக்டருக்கு பெயர்கூட இல்லை.
படம் வெளியான பிறகு அதை பார்த்த எனக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் மீது கடுமையான கோபமும், வருத்தமும் ஏற்பட்டது. ஆனால் எனது கதாபாத்திரம் நன்றாக ரீச்சாகிவிட்டதால் அந்த கோபம் வருத்தமெல்லாம் போய்விட்டது” என்றார். ரவீனா ரவி: ரவீனா ரவி அடிப்படையில் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆவார். அப்படிப்பட்ட அவரையே படத்தில் ஒரு வசனம்கூட பேசவிடாமல் மாரி செல்வராஜ் செய்துவிட்டாரே என படம் வந்த புதிதில் நெட்டிசன்கள் கலாய்த்தது குறிப்பிடத்தக்கது. ரவீனா ரவி லவ் டுடே படத்தில் ப்ரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
The post மாரி செல்வராஜ் மீது கோபப்படும் மாமன்னன் நடிகை! appeared first on Touring Talkies.
]]>The post “காறித்துப்புற மாதிரி படம் எடுக்கும் மாரி செல்வராஜ்!” : ஆத்திரப்பட்ட இமான் அண்ணாச்சி appeared first on Touring Talkies.
]]>“இன்றைய சினிமா மிக மோசமான நிலையில் உள்ளது. மேல் தட்டு கீழ்த்தட்டு என தட்டு தட்டாக பிரித்து திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.
மக்கள் அனைவரும் சாதிய பாகுபாடுகள் கடந்து தற்சமயம் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் குறிப்பிட்ட சாதியினர் தங்களுடைய சாதியை தூக்கி பிடிப்பதற்காக இந்த மாதிரி திரைப்படங்களை எடுத்து வருவது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்” என்றவர், “அது என்ன படம்” என கேட்க, கூட்டத்தில் பலரும், “மாமன்னன்” என்றனர்.
“ஹாங்…” என்று இழுத்த இமான், “இப்பொழுதெல்லாம் படம் பார்த்துவிட்டு வெளியே காரித்துப்பும்படி இருந்தால்தான் வெற்றி படமாக அமைகிறது. அந்தக் காலத்தில் எல்லாம் 100 நாள் 200 நாள் ஓடிய திரைப்படத்தின் இயக்குனர்கள் கூட இப்படி படம் எடுக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் ஜாதியை வைத்து படம் எடுத்தால் மக்களிடையே பிரச்சினையை உண்டு செய்யும் என்று. அவங்கள பார்த்து நல்லா கத்துக்கோங்க” என்று காட்டமாக பேசினார் இமான்.
The post “காறித்துப்புற மாதிரி படம் எடுக்கும் மாரி செல்வராஜ்!” : ஆத்திரப்பட்ட இமான் அண்ணாச்சி appeared first on Touring Talkies.
]]>The post பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களை புகழ்வது அவலம்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் லீனா மணிமேகலை தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘மாரி செல்வராஜ் அல்லது பா.ரஞ்சித் படங்களை விமர்சித்தால் போதும்… நீங்கள் உங்கள் வாழ்க்கையையே சாதி ஒழிப்பிற்கு ஒப்புக் கொடுத்திருந்தாலும் சாதி வெறியர் பட்டம் கிடைத்துவிடும்.
ஆணாதிக்கம், வன்முறை, சாதிப்பெருமை கொண்ட ‘கர்ணன்’ படத்தை பேசினாலோ, ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற பாசாங்கான அரைவேக்காட்டு பெண்ணியப் படத்தைக் குறித்து பேசும்போதோ, இப்படி பட்டங்கள் வந்துவிடுகின்றன.
கலை நேர்மையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு இவர்கள் செய்வதையெல்லாம் வானளாவ புகழ்ந்துவிட்டால் போதும், சாதி எதிர்ப்பு போராளி என பெயர் வாங்கிவிடலாம்.
மற்றபடி களத்தில், கருத்தியலில் எல்லாம் வேலை செய்ய வேண்டியதில்லை என்கிற நிலை ஏற்பட்டு விட்டது.
வியாபார சினிமாவை எடுத்து, சாதி ஒழிப்பு போராளியாக முகம் காட்டுபவர்களை புகழ்வது ஒரு அவல நாடகம்” என இயக்குநர் லீனா மணிமேகலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
The post பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களை புகழ்வது அவலம்! appeared first on Touring Talkies.
]]>The post விமர்சனம்: மாமன்னன் appeared first on Touring Talkies.
]]>சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரின் மகன் வீரன் அலைஸ் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை ஆசானாக இருக்கும் வீரன், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய அடக்குமுறையில் தந்தையின் செயல் பிடித்துப் போகாமல் அவருடன் ஆண்டுகள் கடந்தும் பேசாமல் இருக்கிறார்.மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வழித்தோன்றலில் (வாரிசு அரசியல்வாதியாக) ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்) செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் தோழர் லீலா (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் இடத்தில் நடத்தும் இலவச கோச்சிங் சென்டரை ரத்னவேலின் அண்ணன் அடித்துநொறுக்க பிரச்சினை அரசியலாகிறது. அந்த அரசியலில் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி எளியவர்களின் உரிமைகளை அடக்கத் துடிக்கிறார்கள் என்பதை தற்போதைய சாதிய அரசியலை மையப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதே ‘மாமன்னன்’ படத்தின் திரைக்கதை.’எப்போதும் நின்று கொண்டு பேசாதீங்க… உட்கார்ந்து பேச பழகுங்க…’ என்று சமநிலை எண்ணம் கொண்ட மாமன்னன் வடிவேலுதான் படத்தின் கதாநாயகன்.மாமன்னன், பேருக்கு ஏற்ப நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். தன் மகனுக்கு நடந்த கொடுமைக்கு நீதியை பெற்றுத்தர முடியவில்லை என்ற விரக்தியில் அமைதியாக ஒரு பாறை மேல் நின்று கொண்டு ஏமாற்றத்துடனும், வலியுடனும் அவர் அழும் காட்சி படத்தின் ஆரம்பத்திலேயே மாமன்னனை நம்முள் கடத்திவிடுகிறது. அதேநேரம், அடக்குமுறையின் விரக்தியில் கையில் கத்தி எடுக்கும் தருவாய் வடிவேலுவுக்கான மாஸ். தமிழ் சினிமா இதுவரையில் இப்படியான வடிவேலுவை பார்த்ததில்லை என்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கான ட்ரீட்.நாயை இரக்கமின்றி அடித்துக்கொள்ளும் வில்லத்தனத்துடன் அறிமுகமாகும் ஃபஹத் ஃபாசிலின் மிரட்டல் நடிப்பால் படம் முழுக்க மொத்த திரையிலும் அவரையே தேட வைக்கிறது. தனக்கு மேல் உள்ளவர்களிடமும், தனக்கு சமமாக உள்ளவர்களிடமும் தோற்றுப் போனாலும் பரவாயில்லை; ஆனால், தனக்கு கீழ் உள்ளவர்களிடம் தோற்றுப்போய் அவமானப்பட கூடாது என்ற தந்தையின் கூற்றை வேத வாக்காக, அதிகாரத்தின் மூலம் அடுத்தவர்களை அடக்கி ஆளத் துடிக்கும் ஆதிக்கக் குணம் கொண்டு மாவட்டச் செயலாளராக பக்காவாக பொருந்திப் போயிருக்கிறார் ஃபஹத். கண் அசைவில், ஒற்றை பார்வையில் இவ்வளவு வில்லத்தனம்.அதிவீரன் உதயநிதி… அப்பாவுக்கான உரிமையை பெறத் துடிக்கும் மகனாக, வலிகள் கொண்ட இளைஞனாக, ஆக்ரோஷமும், இறுக்கமும் கலந்த நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார். ஃபஹத், வடிவேலு என்ற இரு நடிப்பு அசுரர்கள் மத்தியில் கிடைத்த ஸ்பேஸை பயன்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார்.பரியேறும் பெருமாள், கர்ணன் பாணியில் இல்லாமல் மாரி செல்வராஜின் புதிய கதாநாயகி லீலா. இடதுசாரி போராளியாக சில பல காட்சிகளே வந்தாலும், இதுவரை பார்த்திராத பாத்திரமாக வெளிப்பட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். விஜயகுமார், அழகம் பெருமாள், கீதா கைலாசம், ரவீனா ரவி போன்ற எண்ணற்ற பாத்திரங்கள் இருந்தாலும், லால் மட்டுமே ஓரளவுக்கு ஸ்கோர் செய்கிறார்.விஜயகுமார், ரவீனா ரவிக்கு ஒரு வசனம் கூட இல்லை.தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மாரி செல்வராஜ் காட்ட நினைத்த, களத்தை பார்வையாளனின் கண்முன் கச்சிதமாக கொண்டுசேர்த்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ராசாக்கண்ணு உள்ளிட்ட பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்றாலும், படத்துக்கு அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை பேசப்பட வேண்டிய ஒன்று. காட்சிகளுக்கு வசனங்களே தேவையில்லை என்னும் அளவுக்கு பின்னணி இசை மூலம் காட்சியையும் காட்சியின் வலியையும் கடத்தியிருக்கிறார் ரஹ்மான்.துணிந்து சொல்ல வேண்டிய கதைக்கரு, அதற்கு தகுந்த பலமான திரைக்கதை என ‘மாமன்னன்’ மாரி செல்வராஜின் படைப்பு (அரசியல்) என்பதை நிரூபித்துள்ளது.பலரும் சொல்ல துணியாத மேற்கு மாவட்ட அரசியல் மட்டுமல்ல, தற்போதைய சூழலும்கூட மாமன்னன் பேசும் அரசியல். ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகத்தின் பெயரை வெளிப்படையாக சொல்லி, அவர்கள் எப்படி ஆதிக்க வர்க்கத்தினர் அதிகாரத்தை கைப்பற்ற தேர்தல் அரசியலில் பகடைக் காயாக பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக பேசிய விதத்தில் இயக்குநர் மாரியை வெகுவாகப் பாராட்டலாம்.
இங்கு அடையாளத்துக்காகவும், அரசியலுக்காக மட்டுமே சமூக நீதி பேசப்படுகிறது. அதிகாரமே வந்தாலும் சாதியம் ஒடுக்கப்பட்டவர்களை அடிமையாகவே நடத்த துடிக்கும் என்பதை மட்டுமல்ல, அதிகாரத்தை அடைய சாதியை தூண்டவும், சாதிய சங்கங்களின் காலில் தவழுவும் ஆதிக்கம் தயங்காது என்ற நிகழ்கால அரசியல் இழிவையும் மாரியின் திரைக்கதை விரிவாக அலசியுள்ளது.நாட்டார் தெய்வம், நாய், புத்தர், பன்றி என வழக்கமான மாரியின் பல குறியீடுகளுக்கு மத்தியில் ‘யார் ஜெயிச்சங்கிறது முக்கியம் இல்ல, யார் பயந்தாங்கிறதுதான் முக்கியம்’, ‘நாலு பேரோட கொலை வெறி எப்படி 400 பேரோட மான பிரச்சினை ஆகும்’, ‘நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வரவேண்டியிருக்கு’, ‘ஏழைகள் கோவப்படவே இங்க தகுதி தேவைப்படுது’, ‘யுத்தம்னு வந்துட்டா பகை இருக்கக் கூடாது’ போன்ற கூர்மையான அரசியல்மிகு வசனங்கள் மாமன்னன் என்கிற படைப்பை பட்டை தீட்டியுள்ளன.படத்தின் இன்டெர்வெல் காட்சி இன்டென்ஸ் மிகுந்த கூஸ்பம்ப்ஸ், எனினும் இரண்டாம் பாதியில் வணிகத்துக்காக சில சமரசங்கள் செய்யப்பட்டுள்ளன. இடைவேளைக்குப் பிறகு தேர்தல் களம், ஃபஹத் – உதயநிதி இருவரிடையேயான போட்டியில் யூகிக்கக் கூடிய காட்சிகள் போன்றவை படத்தை சற்று தொய்வாக்குகிறது. எனினும், க்ளைமாக்ஸ் காட்சியும், துணிந்து பேச வேண்டிய அரசியலும் மாமன்னனை எந்தவித சமரசமும் இல்லாமல் அரியணை ஏற்றுகிறது எனலாம். மொத்தத்தில், ‘மாமன்னன்’ பேச வந்த அரசியலும், பேசிய விதமும் கவனத்துக்குரியது.
The post விமர்சனம்: மாமன்னன் appeared first on Touring Talkies.
]]>The post “ஜாதிவெறி!”: மாரி செல்வராஜுக்கு பேரரசு கண்டனம்! appeared first on Touring Talkies.
]]>அந்த கவிதைியில், “ஊரில் நாடார் கடை செட்டியார் மில் ஐயர் ஹோட்டல் என்று நாம் அழைத்தபோது எந்த பிரச்சனையும் இல்லை; உ.வே.சுவாமிநாத அய்யர் ராமசாமி படையாச்சி சரோஜினி நாயுடு இப்படி வரலாறு படிக்கும்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை; ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் வாகினி நாகிரெட்டி தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவர் சிவஶ்ரீ பிக்சர்ஸ் மணி அய்யர் இப்படி தயாரிப்பாளர்களை ஜாதியைச் சொல்லி அழைத்தபோது திரைத்துறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை; குறத்தி மகன் தேவர் மகன் சின்னக் கவுண்டர் அய்யர் தி கிரேட் இப்படி ஜாதிப் பெயரில் படங்கள் வந்தபோதும் எந்தப் பிரச்சினையும் இல்லை;
இன்று தொட்டதெற்கெல்லாம் ஜாதிப் பிரச்சனை! யார் காரணம்? ஜாதி, மதம் மறந்து கலைஞனாக மட்டுமே தன்னை அர்ப்பணித்தவர்களுக்குள் ஜாதி வெறியை வித்திட்டவர்கள் யார்? இன்று உடன் பணிபுரிபவரின் ஜாதியை எவனும் ஆராய்வதில்லை! மீண்டும் அந்த ஆராய்ச்சியை ஆரம்பித்து வைத்துவிடாதீர்கள்! வாய்ப்பு கேட்பவனிடம் எவன் ஜாதியை கேட்கிறானோ அவனே மனிதப்பிழை! பெரும்பாலும் சமநிலை அமைந்துவிட்ட நிலையில் மீண்டும் ஒற்றுமைக்கு சமாதி கட்டிவிடாதீர்கள்! தெளிந்த குளத்திற்குள் பாறாங்கல்லை எறியாதீர்கள் ஜாதிப்பற்று மனித இயல்பு ஜாதி வெறி மனிதத்தின் அழிவு!” என்று பேரசசு கூறி இருக்கிறார்.
The post “ஜாதிவெறி!”: மாரி செல்வராஜுக்கு பேரரசு கண்டனம்! appeared first on Touring Talkies.
]]>