The post ‘காதல் தி கோர்’ படத்தை பாராட்டிய ஐஸ்வர்யா லக்ஷ்மி! appeared first on Touring Talkies.
]]>மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘காதல் தி கோர்’ இது தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மம்மூட்டி என்னைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். வலி, தனிமை, பயம், அவர் எடுக்க வேண்டிய முடிவுகளின் கணம் என படத்தின் ஒவ்வொரு பார்வையும் என்னை பாதித்தது. இரண்டாம் பாதியில் வரும் எண்டே தெய்வமே காட்சி’ படத்தின் சிறப்பான பகுதியாக இருந்தது. திரையரங்கில் ஒரு குழந்தையைப் போல அழுதேன். ஜியோ பேபி உங்களின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எங்களை திரும்பி பார்க்க வைக்கிறது. ஓமணா கதாபாத்திரத்தின் மூலம் நீண்ட நாட்களுக்கு எங்கள் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள் ஜோதிகா. இப்படியான ஒரு படத்தைக் கொடுத்த படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த ஆண்டின் சிறப்பான, அழகான அடர்த்தியான படம். மம்மூட்டி, நீங்கள் தான் என்னுடைய ஹீரோ. இதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. ஜோதிகா லவ் யூ. ஜியோ பேபி நீங்கள் ஒரு லெஜண்ட்” என பதிவிட்டுள்ளார்.
The post ‘காதல் தி கோர்’ படத்தை பாராட்டிய ஐஸ்வர்யா லக்ஷ்மி! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியின் 171- வதுபடம் : ரஜினியுடன் நடிக்க தயார் –மம்மூட்டி appeared first on Touring Talkies.
]]>இந்த சூழ்நிலையில் இதுபற்றி பேசியுள்ள மம்மூட்டி, ‘‘ரஜினிபடத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அப்படி கேட்டால், கண்டிப்பாக நடிப்பேன்” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி நடித்த ‘தளபதி’ படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
The post ரஜினியின் 171- வதுபடம் : ரஜினியுடன் நடிக்க தயார் –மம்மூட்டி appeared first on Touring Talkies.
]]>The post எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய மம்மூட்டி – ஜோதிகாவின் ’காதல் தி கேர்’ட்ரெய்லர் appeared first on Touring Talkies.
]]>‘நான் மேத்யூ தேவஸ்ஸி வார்டு-3 இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்’ என்ற மம்மூட்டியின் பின்னணிக் குரலுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்புகளும், சிக்கல்களும் எழுகிறது. இதற்கிடையில் வழக்கு ஒன்றில் அவர் சிக்கியிருப்பதாகவும் காட்சிகள் வந்து போகிறது. யாரிடமும் அதிகம் பேசாத சுபாவம் கொண்டவர் என தன்னைப் பற்றி குறிப்பிடுகிறார் மம்மூட்டி. அவர் சொல்வதைப்போலவே ட்ரெய்லரில் பின்னணி குரல் தாண்டி அவர் பேசும் காட்சிகள் குறைவுதான்.
சில காட்சிகளில் வந்து மட்டுமே வசனமின்றி வந்து செல்கிறார் ஜோதிகா. முக பாவனைகளால் மட்டுமே தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். தங்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன என பின்னணியில் மம்மூட்டியின் குரல் ஒலிக்கிறது. ஆனால் ‘காதல் தி கோர்’ என்ற டைட்டிலுக்கு ஏற்றார்போல இருவருக்குள்ளும் காதலோ, சந்தோஷமான தருணங்களோ இருப்பதாக ட்ரெய்லரில் காட்சிகள் இல்லை.
ட்ரெய்லரில் ஒருவித அமைதியும், பிரச்சினைகளும் மட்டுமே வந்து செல்கின்றன. மொத்தத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒருவரின் முடிவு அவரது குடும்பத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. மேலும், மம்மூட்டி – ஜோதிகா இடையிலான காதலை டைட்டிலுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சர்ப்ரைஸாக படத்தில் ஜியோ பேபி வைத்திருக்கலாமோ என யோசிக்க முடிகிறது.
The post எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய மம்மூட்டி – ஜோதிகாவின் ’காதல் தி கேர்’ட்ரெய்லர் appeared first on Touring Talkies.
]]>The post சர்வதேசத் திரைப்பட விழாவில் மம்மூட்டி – ஜோதிகாவின் ‘காதல் – தி கோர்’! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், மலையாளத்தில் மம்மூட்டி ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் – தி கோர்’ படம் கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கி உள்ளார்.
இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. வருகிற டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக மலையாள திரை வட்டாரம் தெரிவிக்கின்றன. இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா. மேலும் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டியுடன் முதல் முறையாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
The post சர்வதேசத் திரைப்பட விழாவில் மம்மூட்டி – ஜோதிகாவின் ‘காதல் – தி கோர்’! appeared first on Touring Talkies.
]]>The post “உங்களில் பாதி அப்பா”: மம்மூட்டிக்கு துல்கர் சல்மானின் உருக்கமான வாழ்த்து appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன்முறையாக கேமரா முன்னால் நின்ற போது உங்களைப்போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன். தந்தையானபோது நான் ஆக விரும்பிய அனைத்தும் நீங்களாக இருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் உங்களில் பாதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மம்மூட்டியின் நடிப்பில், ‘காதல் தி கோர்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’, ‘பிரமயுகம்’, ‘பிரம்மயுகம்’ உள்ளிட்ட படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
The post “உங்களில் பாதி அப்பா”: மம்மூட்டிக்கு துல்கர் சல்மானின் உருக்கமான வாழ்த்து appeared first on Touring Talkies.
]]>The post மம்முட்டி பெயர் எப்படி வந்தது தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>ஆனால் இவரது இயற்பெயர் மம்முட்டி அல்ல. தவிர சினிமாவுக்காக இவர் வைத்துக்கொண்ட பெயரும் அல்ல.
# அந்த பெயரை இவருக்கு யார் வைத்தார்கள்.. அந்த சம்பவம் என்ன…
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post மம்முட்டி பெயர் எப்படி வந்தது தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post என்னை விரட்ட நினைத்த மம்மூட்டி: ஷகிலா அதிரடி பேட்டி appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் அவர் அளித்த பேட்யில், “ஷகிலா என்றாலே ஆபாச நடிகை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் ஆபாச காட்சியில் நடித்தது இல்லை. அதே நேரம், எனது படங்களில் செக்ஸ் காட்சிகளை பிட்டு போட்டு ஒட்டி ரிலீஸ் செய்தார்கள். சென்சார் முடித்த படங்களையே இப்படி செய்திருக்கிறார்கள்.
இதன் பிறகு நான் நடித்த இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு சென்சார் கிடைப்பதே சிக்கலாகிவிட்டது.
நான் மோகன்லால் சார் ரசிகை. மம்மூட்டி மேலே எனக்கு கோபம் இல்லை. ஆனால், அவர் தான் என் படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்தார். இது கூட நான் கேள்விபட்டது தான்.
அவரின் கோபம் நியாயமானது தான். அவர்கள் 5 கோடி செலவழித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் 10 லட்சத்தில் படம் எடுக்கிறோம். 10 லட்சம் ரூபாய் படம், ரூ.4 கோடி படத்தை காலி பண்ணால் கோபம் வரத்தானே செய்யும். அப்படி தான் என் மீது வருத்தம் இருந்திருக்கும்.
அவர்கள் என்னை தடை செய்ய நினைத்த போது, நானே என் நடிப்பதை நிறுத்திவிட்டேன்’’ என்று அந்த பேட்டியில் ஷகிலா கூறியுள்ளார்.
The post என்னை விரட்ட நினைத்த மம்மூட்டி: ஷகிலா அதிரடி பேட்டி appeared first on Touring Talkies.
]]>The post மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் புதிய படத்தை Mammootty Kampany மற்றும் Wayfarer Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு காதல் – தி கோர் என பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தினை மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘The Great Indian Kitchen’ படத்தினை இயக்கிய இயக்குநரான Jeo Baby இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இவர் முதல் முறையாக மம்மூட்டியுடன் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரை ஜோதிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர்.
நடிகர் மம்மூட்டியும் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தச் செய்தியை வெளியிட்ட கையோடு ஜோதிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் சொல்லியிருக்கிறார்.
The post மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா..! appeared first on Touring Talkies.
]]>The post மம்மூட்டிக்கு கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் கடும் கண்டனம்..! appeared first on Touring Talkies.
]]>அதேசமயம் மலையாள திரைப்ட தயாரிப்பாளர் சங்கமும் அவர் மீது புதிய படங்களில் நடிப்பதற்கு தற்காலிக தடை விதித்தது. இந்த சம்பவத்திற்கு முன்னதாக அவர் மீது ஏற்கனவே சில புகார்களும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்ததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணம்.
இந்த நிலையில் ‘ரோர்ஸ் காட்ச்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் மம்மூட்டியிடம், ஸ்ரீநாத் பாஷி மீதான தடை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த மம்முட்டி, “யாராக இருந்தாலும் ஒருவரின் வாழ்வாதாரத்தை பறிக்கும்விதமாக தடை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்” என்று பதிலளித்தார். ஸ்ரீநாத் பாஷி சமீபத்தில் வெளியான ‘பீஷ்ம பர்வம்’ படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பதால் மம்முட்டி அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சு எழுந்தது.
இந்த நிலையில் மம்முட்டியின் இந்தப் பேச்சுக்கு பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளரும், நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ்குமார் கூறும்போது, “தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையில்லாமல் பிரச்சனைகளை கொடுக்கும் நபர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முழு விபரம் என்னவென்று தெரிந்து கொண்டு மற்றவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
மம்முட்டி இது குறித்து விசாரித்துவிட்டு பின் பதில் சொல்கிறேன் என கூறி இருக்கலாம். மோகன்லாலும் மம்முட்டியும்கூட இது போன்ற தயாரிப்பாளர்களின் நடவடிக்கைகளை முடக்கும் விதமாக குரல் கொடுப்பதை கண்டு நாங்கள் பயப்பட போவதில்லை.
நடிகர்களுக்கு மட்டும்தான் வாழ்வாதாரமே இருக்கிறதா..? தயாரிப்பாளர்களுக்கு இல்லையா..? தயாரிப்பாளர்கள்தானே அந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்கே ஆதாரம்.. அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டாமா..? யார் ஒருவர் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்து வருகிறார்களோ அவர்கள் மீதுதானே நடவடிக்கை எடுக்கப்படுகிறது..? அப்படிப்பட்ட ஒருவருக்காக எதையும் முழுதாக தெரிந்து கொள்ளாமல் ஆதரவு குரல் கொடுப்பது முறையல்ல…” என்று கூறியுள்ளார்.
The post மம்மூட்டிக்கு கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் கடும் கண்டனம்..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் மம்மூட்டியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெறுகிறது appeared first on Touring Talkies.
]]>‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி வருகிறார்.
இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஏற்கெனவே ‘ஆமென்’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘இ.ம.யோ’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சுருளி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
இதில், ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் இந்தியா சார்பில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.
தற்போது மம்மூட்டி நடிப்பில் இந்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இது தமிழ், மலையாளம் என்று இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது.
இந்தப் படத்தை நடிகர் மம்முட்டியே தனது மம்மூட்டி கம்பெனி என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.
இந்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ‘கர்ணன்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘பேரன்பு’, ‘புழு’ ஆகிய உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
இந்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனி அருகேயிருக்கும் ஒரு கிராமத்தில் நடந்து வருகிறது. மம்முட்டி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பதால் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
The post நடிகர் மம்மூட்டியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெறுகிறது appeared first on Touring Talkies.
]]>