The post ‘அந்த’ போட்டோவை தைரியமாக வெளியிட்ட நித்யாமேனன்! appeared first on Touring Talkies.
]]>படப்பிடிப்புக்கு சென்றதும் மேக்கப் போட்டுக்கொள்வார்கள். சொந்த வேலையாக வெளியே செல்லும்போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் மேக்கப்புடனேயே இருப்பார்கள். இதற்காக ஒவ்வொரு நடிகையும் சம்பளம் கொடுத்து மேக்கப் கலைஞர்களை அருகிலேயே வைத்து இருக்கிறார்கள்.
வீட்டில் இருக்கும்போது மட்டுமே மேக்கப்பை கலைப்பது உண்டு. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் நித்யாமேனன் மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் பாராட்டியும், இன்னும் சிலர் நித்யாமேனனா இது? அடையாளமே தெரியவில்லையே என்று வியந்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
தைரியம்தான் உங்களுக்கு என்றும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
The post ‘அந்த’ போட்டோவை தைரியமாக வெளியிட்ட நித்யாமேனன்! appeared first on Touring Talkies.
]]>The post எங்களுக்கு இதுதான் கடவுள்: நடிகை நயன்தாரா appeared first on Touring Talkies.
]]>ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தோல்வி,வெற்றி அனுபவம் என்று எத்தனையோ வலிகளை கடந்து விருதுகளை சுமந்து சாதனை பெண்ணாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் நயன்தாரா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சில தினங்களுக்கு முன் நேரடி பேட்டி கொடுத்த நயன்தாரா. என்னை போன்ற சினிமாவில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமானது மேக்கப். அதுதான் எங்களை வாழ வைக்கிறது. எங்களின் உணர்வுகளை முகபாவனைகளை கொண்டு வர உதவுகிறது.
சாப்பிட நேரமில்லாமல் இருந்திருப்போம் ஆனால் மேக்கப் போடாமல் இருந்ததில்லை. கேமரா முன்னாடி நிற்கும் போது எங்களை நடிகையாக உணரவைப்பது இந்த மேக்கப் தான் ஆகவே அது எங்களுக்கு கடவுள் மாதிரி என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நயன்தாரா.
The post எங்களுக்கு இதுதான் கடவுள்: நடிகை நயன்தாரா appeared first on Touring Talkies.
]]>