The post நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் appeared first on Touring Talkies.
]]>கலைஞானம், தமிழ்த் திரைப்படக் கலைஞரான இவர் 67 ஆண்டுகளாய் சினிமாவில் பயணித்தவர். இவர் 1960 – 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட எனப் பன்முகத்தன்மைப் படைத்தவர்.
கலைஞானம் தனக்குள் எப்படி சினிமா ஆசை வந்தது மற்றும் டூரிங் டாக்கீஸில் அவர் படம் பார்த்த அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
The post நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் appeared first on Touring Talkies.
]]>The post ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் வாங்கிய பாடலாசிரியர்! appeared first on Touring Talkies.
]]>இதனால் இந்த படத்தில் தனக்கு பாட்டெழுத வாய்ப்பு இல்லை என நினைத்து ஆதங்கப்பட்டார் பூவை பூவை செங்குட்டுவன்.
ஆனால் அதன் பிறகு நடந்தது சுவாரஸ்யமான சம்பவம். ஆம், இதில் எழுதிய ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் பெற்றார் பூவை.
இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் வாங்கிய பாடலாசிரியர்! appeared first on Touring Talkies.
]]>The post குப்பை பொறுக்கிய சூர்யா! appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர், “சூர்யா நடித்த சிங்கம் 1,2, 3 ஆகியவற்றுக்கு நான் பாடல் எழுதினேன். அதில் ஒரு பாடல் காட்சி கடற்கரையோரம் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்பத் தயாரானார்கள்.
அப்போது சூர்யா, மைக்கில், ‘நாம் வந்தபோது இந்த பகுதி சுத்தமாக இருந்தது. இப்போது குப்பை,கூளமாக கிடக்கிறது. இதை மறுபடி சுத்தப்படுத்திய பிறகே நாம் செல்ல வேண்டும்’ என்றார்.
அதோடு முதல் ஆளாக, தானே குப்பைகளை சேகரிக்கத்துவங்கினார். இதைப் பார்த்தவுடன் மொத்த படப்பிடிப்பு குழுவம் சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியது.
இந்த செயலைப் பார்த்த ஊர் மக்கள் நெகிழ்ந்துபோய்விட்டனர். பேச்சளவில் மட்டுமின்றி செயலிலும் சமூகப்பொறுப்போடு நடந்துகொள்பவர் சூர்யா” என்றார் விவேகா.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளுக்கு கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..
The post குப்பை பொறுக்கிய சூர்யா! appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர் ஸ்டார் பாடல் எழுதியவருக்கு ரஜினி பாராட்டு! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் வெளியானது. இப்பாடலை பாடலாசிரியர் சூப்பர் சுப்பு எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த பாடலுக்காக பாடலாசிரியர் சூப்பர் சுப்புவை ரஜினிகாந்த் பாராட்டி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், வணக்கம் சுப்பு, ரஜினிகாந்த் பேசுறேன். ஹும்கும் பாடலை கேட்ட பிறகு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள். நீங்க சூப்பர் சுப்பு. உங்களுக்கு இது பெரிய வெற்றியாக இருக்கும், கொண்டாடுங்கள். நன்றி என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post சூப்பர் ஸ்டார் பாடல் எழுதியவருக்கு ரஜினி பாராட்டு! appeared first on Touring Talkies.
]]>The post வாலியை டார்ச்சர் செய்த பாக்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து வாலியே ஒரு விழா மேடையில் கூறியிருக்கிறார்.
அவர், “ஒருமுறை பாக்கியராஜ் என்னை தொலைப்பேசியில் அழைத்து ‘நானே என் படத்திற்கு இசையமைக்க இருக்கிறேன். அதில் ஒரு பாடலை நீங்கள் எழுத வேண்டும்’ என அழைத்தார்.
அவரின் வீட்டுக்குச் சென்றேன். பத்து நாட்கள் சோறு, தண்ணி, உறக்கம், சரியாக இல்லாமால் ஆர்மோனிய பெட்டியை வாசித்து இசையை அவர் கற்று தேர்ந்திருந்தார் என்பது தெரிந்தது.பிரமித்தேன்.
ஆனால், எப்போதும் சிகரெட்டை ஊதிச் தள்ளுவார். அந்த புகையை நானும் வாங்க வேண்டியிருக்கும்.
தவிர பல்லவியை நான் எழுதி கொடுத்து, தூங்கி விழுந்து, எழுந்து, அவரின் மனைவி பூர்ணிமா எனக்கு டிபன் கொடுத்து நான் சாப்பிட்டு முடித்துவிடுவேன். அதன் பின்னரும் அவர் அந்த பல்லவியையே பார்த்துக்கொண்டிருப்பார். ஒரு முடிவுக்கே வரமாட்டார்.
‘இனிமேல் இவர் இசையில் பாடல்களே எழுதக்கூடாது’ என நான் நினைக்கும் நேரத்தில், என்னிடம் ஒரு கவரை தருவார். அதில் ஐந்தாயிரம் ரூபாய் இருக்கும். அப்புறம் நான் எப்படி எழுத மாட்டேன் என சொல்வேன். அதன் பிறகு அவர் இசையமைத்த ஆறு திரைப்படங்களில் பாட்டெழுதினேன்” என்று நகைச்சுவையாக பேசியிருந்தார் வாலி.
The post வாலியை டார்ச்சர் செய்த பாக்யராஜ்! appeared first on Touring Talkies.
]]>The post நள்ளிரவில் வைரமுத்துவை எழுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்! appeared first on Touring Talkies.
]]>இந்த பாடல் அனுபவம் பற்றி கூறிய வைரமுத்து, “ அந்த பாடலை முழுதுமாக எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். இரவு தூங்கி கொண்டு இருந்தேன். நள்ளிரவில் போன் அடித்தது.
எடுத்தால், எதிர் முனையில் ஆர்.ரஹ்மான். அவர், ‘பாடலின் இரண்டாம் வரியை மட்டும் கொஞ்சம் மாற்ற வேண்டும். பாடகி நாளை ஊருக்குச் செல்கிறார். ஆகவே இப்போதே பதிவு செய்ய வேண்டும். அந்த இரண்டாம் வரியை மட்டும் அனுப்ப முடியுமா’ என்றார்.
அந்தத் தூக்கத்திலும் நான் உடனடியாக, ‘உன்னோட புருசன்..’ என்ற வார்த்தையைச் சொன்னேன். அது சரியாக அமைந்துவிட்டது” என்றார் வைரமுத்து.
The post நள்ளிரவில் வைரமுத்துவை எழுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்! appeared first on Touring Talkies.
]]>The post ‘நடிகர் சந்திரமோகன்!’: கண்ணதாசனின் இன்னொரு முகம்! appeared first on Touring Talkies.
]]>“அப்பாவுக்கு பாடலாசிரியராகத்தான் வரவேண்டும் என்கிற திட்டம் இல்லை. எப்படியாவது திரைத்துறைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.
17 வயதில் திரை ஒளி என்கிற இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.. கவிதைகள் எழுதி இருக்கிறார்.
திரைத்துறையைப் பொறுத்தவரை, சந்திரமோகன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டு, நடிகராகத்தான் வாய்ப்பு கேட்டு வந்தார்.
ஆனால் வசனம் எழுத வாய்ப்பு வந்தது. அந்த பணியை மேற்கொண்டார். அந்த நிலையில், வசனம் எழுத ஆரம்பித்தார். அப்படி வாய்ப்பு கேட்டு ஒரு நிறுவனத்துக்குச் செல்லும்போது மேனேஜர் வெங்கடசாமி, ‘வசனம் எழுத பலர் இருக்கிறார்கள்.. பாடல் எழுதத்தான் ஆட்கள் குறைவாக உள்ளனர். ஆகவே பாடல் எழுது’ என்று சொல்லி, இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாவிடம் அழைத்துச் சென்றார்.
அப்படி அவர் எழுதிய, ‘கலங்காதிருமனமே..’ பாடல் தான் அப்பாவின் முதல் திரைப்பாடல்” என்று பலருக்கும் தெரியாத விசயங்களை பகிர்ந்துகொண்டார் அண்ணாதுரை கண்ணதாசன்.
பின்னாட்களில் கண்ணதாசன், சில திரைப்படங்களில் தோன்றி இருக்கிறார். ஆனால், ‘நடிகர் சந்திரமோகன்’ என்ற பெயர் காற்றோடு போய்விட்டது!
விசித்திரம்தான்!
.
The post ‘நடிகர் சந்திரமோகன்!’: கண்ணதாசனின் இன்னொரு முகம்! appeared first on Touring Talkies.
]]>The post ‘பத்து வருசம் கழிச்சு என் பாடல் இருக்காது! : பாடலாசிரியர் விவேக் appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இது குறித்து கூறிய அவர், “ அந்தப் பாடலில் உள்ள வரிகள் எதிர்காலத்தில் கேள்விகளுக்கு ஆளாகும். பெண்களை ஏன் சிங்கத்துடன் ஒப்பிட வேண்டும்.. தவிர, ஆண் இனமே ஏன் வணங்க வேண்டும்.. என்றெல்லாம் வினாக்கள் வரும்.
குறிப்பாக சொல்லப்போனால் பத்து வருடங்கள் கழித்து அந்த பாடல் இருக்காது.
இப்போதைய சூழலை.. மனிதர்களின் புரிதலை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல் அது. மற்றபடி ஆணும் பெண்ணும் சமம்தானே என்கிற குரல் இப்போது இருப்பதை விட அதிகமாக ஒலிக்கும். அதனால்தான் சொல்கிறேன்.. இன்றைய அந்தப் பாடல் எதிர்காலத்தில் தேவைப்படாமல் போகும்” என்றார்.
v
The post ‘பத்து வருசம் கழிச்சு என் பாடல் இருக்காது! : பாடலாசிரியர் விவேக் appeared first on Touring Talkies.
]]>