Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kaalangalil aval vasantham movie – Touring Talkies https://touringtalkies.co Tue, 01 Nov 2022 18:49:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kaalangalil aval vasantham movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 காலங்களில் அவள் வசந்தம் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kaalangalili-aval-vasantham-movie-review/ Tue, 01 Nov 2022 18:49:07 +0000 https://touringtalkies.co/?p=26383 காதல் கதைகள் அரிதாகி வரும் இன்றைய தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. கல்யாணத்திற்கு பிறகான காதலை சொல்லும் படம். அன்புதான் இந்தப் படத்தின் அடிப்படை கரு. காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நாயகன், உண்மையான காதல் எது என்பதை கல்யாணத்துக்குப் பிறகு தெரிந்து கொள்வதுதான் இந்தப் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. ஆனால், இந்தக் காதல்,  கல்யாணத்திற்குப் பிறகு எப்படியெல்லாம் பிரிந்து, விரிந்து, பறந்து […]

The post காலங்களில் அவள் வசந்தம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
காதல் கதைகள் அரிதாகி வரும் இன்றைய தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. கல்யாணத்திற்கு பிறகான காதலை சொல்லும் படம். அன்புதான் இந்தப் படத்தின் அடிப்படை கரு.

காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நாயகன், உண்மையான காதல் எது என்பதை கல்யாணத்துக்குப் பிறகு தெரிந்து கொள்வதுதான் இந்தப் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

ஆனால், இந்தக் காதல்,  கல்யாணத்திற்குப் பிறகு எப்படியெல்லாம் பிரிந்து, விரிந்து, பறந்து செல்கிறது என்பதை சுற்றி வளைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.

நாயகன் கெளசிக், பணக்கார வீட்டுப் பிள்ளைதான். ஆனால் காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். காதலிகள்தான் தங்க மறுக்கிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக காதலிகள் தப்பியோட கடைசியாக ஒரு காதலியுடன் பேசி ஓகே வாங்கி வைத்திருக்கிறார்.

இந்தச் சூழலில் அவரது அப்பாவின் நெருங்கிய நண்பரின் மகளான அஞ்சலி நாயருக்கு நாயகனைப் பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. ஏன்.. எதற்கு.. எப்படி. என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேட அவகாசம்கூட கிடைக்காமல் கல்யாணத்திற்கு ஓகே சொல்கிறார் நாயகன்.

கல்யாணம் முடிந்த பின்பு நாயகனுக்கு நாயகிக்குப் பிடித்தாற்போல் நடந்து கொள்வதில் குழப்பம்.. நாயகிக்கோ நாயகனுக்குப் பிடித்ததுபோல் நடந்து கொள்வதில் குழப்பம். இந்தக் குழப்பத்திற்கிடையில் பழைய காதலியும் தேடி வந்து நிற்க கிறுக்குப் பிள்ளை போலாகிறார் நாயகன்.

இதன் விளைவாய் நாயகி பிரிய.. நாயகன் தனிமையில் துவள.. கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

புதுமுகம் கௌசிக் ராம் ஹீரோவுக்கு ஏற்ற உடல்வாகுடன், அழகான ஹேர் ஸ்டைலுடன் ஹீரோ ஸ்டைலில் இருக்கிறார். ஒரு படித்த அப்பாவி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாக பொருந்துகிறார் கெளசிக்.

நடிப்பில்கூட அப்பாவித்தனத்தையும், அசமஞ்சத்தனத்தையும் ஒன்றாகவே கொடுத்திருக்கிறார். மனைவியிடமும், காதலியிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கும் கணவனாக இவர் படும் பாடு ரகளையானதுதான்.

‘பப்பாளி’, ‘ஐஸ்கட்டி’ என்று மனைவிக்கும், காதலிக்கும் பட்டப் பெயர் வைத்து அழைப்பதிலும் வண்ணத்துப் பூச்சியை வைத்து காதல் ரசனையை வெளிப்படுத்துவதிலும் கொஞ்சம் ‘ஏ’ கிளாஸ் ரசனையைத் தொட்டுப் பிடித்திருக்கிறார் இயக்குநர்.

நாயகி அஞ்சலி நாயர் இதுவரையிலும் நடித்திராத ஒரு கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவருடைய அழகினால், இவர் வரும் காட்சிகளில் ஸ்கிரீனைவிட்டு நகர மறுக்கின்றன நமது கண்களை.

கணவன் ஒரு மண்டுவாக இருந்தாலும் இப்படிப்பட்டவன்தான் தனக்கு வேண்டும் என்று பிடிவாதமாக அவனைக் கல்யாணம் செய்து கொள்வதிலும், கல்யாணமான பிறகு அவனை தனக்கானவனாக ஆக்க முடியாமல் தவிப்பதிலும் தனது நடிப்பை செவ்வனே காட்டியிருக்கிறார் அஞ்சலி நாயர்.

இன்னொரு நாயகியான ஹீரோஷினி பார்க்க சின்னப் பொண்ணாக.. சின்னப் பிள்ளை மாதிரியே நடித்து நமது அனுதாபத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

கௌசிக்கின் அப்பா மேத்யூ மகனின் குணமறிந்து திருமணத்திற்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்து பின்பு பிரச்சினையைத் தீர்க்க முயலும் வித்தியாசமான அப்பாவாக நடித்திருக்கிறார்.  கௌசிக்கின் அம்மாவாக வரும் ஜெயா சுவாமிநாதனின் சராசரி அம்மா கேரக்டர் சுவாரஸ்யமானது.

நண்பனாக வரும் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் தனது சொந்த அனுபவத்தை வைத்து பெண்களின் ஜாதகத்தைச் சொல்லும் காட்சியில் சிரிப்பலைதான். அலுவலக தோழியாக வரும் அனிதா சம்பத்துக்கு பெரிய வேலை இல்லை.

படத்தில் குறிப்பிடத்தக்கது ஒளிப்பதிவுதான். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஸ்கிரீன் முழுவதும் கலர், கலராக காட்டுகிறார் ஒளிப்பதிவாளர். மழை காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகைக் கொட்டியிருக்கிறார்கள். ஹரி எஸ்.ஆரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை தேவைப்படவே இல்லை.

படத்தில் இருக்கும் பெரிய பிரச்சினையே ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுற்றி திரைக்கதை வருவதுதான். இதுவே ஒரு கட்டத்துக்கு மேல் நமக்கு அலுப்பைத் தருகிறது. போதாக்குறைக்கு திரைக்கதையை நகர்த்தும் வசனங்கள் அனைத்தும் புரியாத, பூடக மொழியில், இன்டலெக்ச்சுவலாக சொற்பொழிவாற்றுவதுபோல பேசியிருப்பதும் நம்மை மிகவும் களைத்துப் போக வைக்கிறது.

இந்த வசனங்களை மால் தியேட்டரில் படம் பார்ப்பவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாது. மற்றைய தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் கதி..?

காலங்களில் அவள் வசந்தம் – கலைகளிலே இது கோட்டோவியம்..!

The post காலங்களில் அவள் வசந்தம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கல்யாணத்துக்குப் பிறகான காதலைச் சொல்ல வரும் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் https://touringtalkies.co/kaalangalil-aval-vasantham-is-a-film-about-love-after-marriage/ Sat, 15 Oct 2022 16:37:51 +0000 https://touringtalkies.co/?p=25475 அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ‘டாணாக்காரன்’ புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர்.ஜே.விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக […]

The post கல்யாணத்துக்குப் பிறகான காதலைச் சொல்ல வரும் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் appeared first on Touring Talkies.

]]>
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.

புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன்’ புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர்.ஜே.விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.

காதல் கதைகள் அரிதாகி வரும் இன்றைய தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை விழா திரை பிரபலங்கள், படக் குழுவினர் கலந்து கொள்ள… பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் இயக்குநரான ராகவ் மிர்தாத் பேசும்போது, “என் அப்பா, அம்மாவுக்கு நன்றி. என் மனைவிக்கு மிக்க நன்றி. அவர்கள் ஆதரவில்தான் நான் இங்கு இருக்கிறேன். ஸ்போர்ட்ஸில் லவ் ஆல்’ சொல்லி துவங்குவது போல்தான் இந்தப் படத்தைத் துவங்கியுள்ளேன்.

இந்தப் படம் கல்யாணத்திற்கு பிறகான காதலை சொல்லும் படம். அன்புதான் இந்தப் படத்தின் அடிப்படை. மெச்சூரிட்டியை புரிந்து கௌஷிக் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர், ஹெரோஷினி இருவரும் கண்டிப்பாக பாராட்டை பெறுவார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகப் பெரிய அளவில் உழைத்துள்ளார்கள்.  இந்தப் படத்தில் ஹரி மிக அற்புதமான இசையை தந்துள்ளார். கண்டிப்பாக இசை மிகப் பெரிய அளவில் பேசப்படும். அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் நன்றி.” என்றார்.

இந்தக் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை தமிழகமெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது.

The post கல்யாணத்துக்குப் பிறகான காதலைச் சொல்ல வரும் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் appeared first on Touring Talkies.

]]>
‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் டிரெயிலர் வெளியானது https://touringtalkies.co/kaalangalil-aval-vasantham-movies-trailer-was-released/ Thu, 13 Oct 2022 15:52:45 +0000 https://touringtalkies.co/?p=25360 அறம் எண்டர்டெயின்மெண்ட், ஶ்ரீஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரெயிலர் நேற்றைக்கு வெளியானது. அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையாக உருவாகியிருக்கும் படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. புதுமுகம் கவுசிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ‘டாணாக்காரன்’ புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர்.ஜே.விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் […]

The post ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் டிரெயிலர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
அறம் எண்டர்டெயின்மெண்ட், ஶ்ரீஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரெயிலர் நேற்றைக்கு வெளியானது.

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையாக உருவாகியிருக்கும் படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.

புதுமுகம் கவுசிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ‘டாணாக்காரன்’ புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர்.ஜே.விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.

காதல் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸுக்கு கதை எழுதி அனுபவம் பெற்றவருமான ராகவ் மிர்தாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர், “காதல் என்றால் வெறும் ஆண், பெண் கவர்ச்சியா இல்லை.. அதையும் தாண்டிய ஒரு உணர்வா என்னும் கேள்விக்கு விடை தேடும் ஒரு ஜனரஞ்சசகமான ரொமாண்டிக் திரைப்படமே ‘காலங்களில் அவள் வசந்தம்” என்றார்.

இந்தப் படத்தின் டிரெயிலரை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார். சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி மாநில செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ மற்றும் ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும்.

The post ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் டிரெயிலர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
சி.வி.குமார் தயாரிக்கும் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் துவங்கியது..! https://touringtalkies.co/c-v-kumars-movie-kaalangalil-aval-vasantham-starts-today-in-chennai/ Mon, 03 Jan 2022 09:56:33 +0000 https://touringtalkies.co/?p=20074 பிரபல தயாரிப்பாளரான சி.வி.குமார் தனது அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறார். கொரோனா காலக்கட்டம்.. மூன்றாவது அலை துவங்கிவிட்டது.. தியேட்டர்களில் கூட்டம் வரவில்லை.. என்றெல்லாம் புலம்பல்கள் தமிழ்த் திரையுலகத்தில் இருந்தாலும் படத் தயாரிப்புகளும் நிற்கவில்லை. திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமார் இன்று தனது புதிய படத்தின் படப்பிடிப்பினைத் துவக்கியிருக்கிறார். இந்தப் புதிய படத்தில் ஆண் மாடலிங் துறையில் முன்னணியில் இருக்கும் கெளசிக் ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ‘நெடுநல்வாடை’ படத்தில் நடித்த அஞ்சலி நாயர் நடிக்கிறாராம். அறிமுக இயக்குநரான […]

The post சி.வி.குமார் தயாரிக்கும் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>
பிரபல தயாரிப்பாளரான சி.வி.குமார் தனது அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறார்.

கொரோனா காலக்கட்டம்.. மூன்றாவது அலை துவங்கிவிட்டது.. தியேட்டர்களில் கூட்டம் வரவில்லை.. என்றெல்லாம் புலம்பல்கள் தமிழ்த் திரையுலகத்தில் இருந்தாலும் படத் தயாரிப்புகளும் நிற்கவில்லை.

திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமார் இன்று தனது புதிய படத்தின் படப்பிடிப்பினைத் துவக்கியிருக்கிறார்.

இந்தப் புதிய படத்தில் ஆண் மாடலிங் துறையில் முன்னணியில் இருக்கும் கெளசிக் ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ‘நெடுநல்வாடை’ படத்தில் நடித்த அஞ்சலி நாயர் நடிக்கிறாராம். அறிமுக இயக்குநரான ராகவ் மிர்தாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஒரு இளம் ஜோடிக்கு இடையேயான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையை ஆராயும் ஒரு காதல் நாடகம்தான் இந்தப் படத்தின் கதைக் கருவாம்.

ந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது பற்றி நாயகி அஞ்சலி நாயர் கூறும்போது, ​​“இந்தப் படம் சம்பந்தமாக சில வாரங்களுக்கு முன்பு எனது மேலாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் இந்த ஸ்கிரிப்ட் பற்றி என்னிடம் கூறினார், மேலும் இந்த கதாபாத்திரத்திற்கு நான் கச்சிதமாக இருப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

பின்னர், நானும் இயக்குநர் ராகவும் ஸ்கிரிப்ட் விவரிப்பதற்கான வீடியோ அழைப்பை அமைத்தோம். 3-4 மணி நேரத்தில், நான் என் கதாபாத்திரத்தின் மீது காதல் கொண்டேன்.  ராகவ் எவ்வளவு அழகாக கதையை எழுதியிருக்கிறார்.

ஒரு பையன் ஒரு பெண்ணைச் சந்தித்து காதலில் விழுவது ஒரு ரன்-ஆஃப்-மில் பாடம் அல்ல. நிஜ வாழ்க்கையில் உறவுகள் எவ்வாறு செயல்படுகின்றன? ஆண்களும் பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.. திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் என்ன மாதிரியான யதார்த்தமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை இந்தப் படம் ஆழமாக ஆராய்கிறது.

நெடுநல்வாடை படத்தில் எனது நடிப்பைப் பார்த்திருந்த ராகவ், இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயரை ராதா என்றே வைத்திருக்கிறார்…” என்று பெறுமை பொங்கக் கூறுகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது.

The post சி.வி.குமார் தயாரிக்கும் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>