The post சிம்புவுடன் நடிக்க ஜெயம் ரவி விரும்பாதது ஏன்? appeared first on Touring Talkies.
]]>ஜனவரி மாதம் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த இயக்குநர் மணிரத்னம், இரண்டாவது கட்ட படப்பிடிப்பை செர்பியா நாட்டில் நடத்த முடிவு செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கமல்ஹாசன் பிசியாக இருப்பதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இதனால், ஏற்கனவே ஒப்பந்தமான படத்தில் நடிக்க துல்கர் சல்மான் சென்றுவிட்டார். இந்தப் படத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துவிட்டார். இதனால், துல்கர் சல்மான் நடிக்க இருந்த பாத்திரத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார். இதை அறிந்த ஜெயம் ரவி இந்தப் படத்திலிருந்து வெளியேறி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
சிம்பு அந்தப் படத்தில் கமிட்டாவார் என்று ஜெயம் ரவி எதிர்பார்க்கவில்லை. சிம்பு வந்ததால்தான் ஜெயம்ரவி வெளியேறிவிட்டார் என்றும் அவர்கள் இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சினை என்றும் ரசிகர்கள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது.
சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கக்கூடாது என்பதில் ஜெயம்ரவி உறுதியோடு இருக்கிறார். அதற்கு காரணம் நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்த சென்ற போது சிம்புவும் ஜெயம்ரவியும் நண்பர்களாக ஒரே குழுவாகதான் இருந்தார்கள். வெளிநாட்டில் அவர்களுக்குள் நடந்த விளையாட்டுக்கள் வினையானது. செல்போன் உடைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் அரங்கேறின.
கலை நிகழ்ச்சிக்கு செல்லும் போது ஒன்றாக சென்றவர்கள் திரும்பும் போது பிரிந்தே வந்தார்கள். அப்போது முதல் சிம்புவுடன் பழகுவதை ஜெயம்ரவி நிறுத்திவிட்டார். அதனால், சிம்புவுடன் நடிக்க ஜெயம் ரவி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
The post சிம்புவுடன் நடிக்க ஜெயம் ரவி விரும்பாதது ஏன்? appeared first on Touring Talkies.
]]>The post ஜெயம் ரவி அடக்கம் இல்லாத பிள்ளை…! கோபப்பட்ட அம்மா appeared first on Touring Talkies.
]]>ஜெயம் ரவி சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும். ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். பின் அவரது அண்ணன் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய பெயருக்கு முன் ஜெயம் என்று சேர்த்துக் கொண்டார்.
தந்தை மோகன் சினிமாவில் தொகுப்பாளராக இருந்தவர். மகன் ரவி பற்றி கேட்ட போது. எனது மூத்த பிள்ளை அடக்கமானவன்,அறிவாளி,சொன்னதை கேட்பான். ஆனால் ரவி அப்படி இல்லை அடங்க மாட்டான். அவன் சின்ன வயதில் ரவி அழகாக இருப்பார். இரண்டாவது பிள்ளை என்பதால் செல்லம் அதிகம் அதனால் அடக்கம் இல்லாமல் வளர்ந்து விட்டான் என்றார். சேட்டை அதிகம் என்று சொல்வதற்கு பதில் இப்படி சொல்லி விட்டார்.
உடன் இருந்த ரவி அம்மாவுக்கு கோவம் வந்து விட்டது என்ன இப்படி சொல்ரீங்க…பையனை நீங்க எப்படி சொல்லலாம் என அந்த பேட்டில் ரவியின் அப்பாவிடம் சண்டைக்கு வந்து விட்டார்.
அம்மா பாசம்ன்னா சும்மாவா..பிள்ளையை விட்டு கொடுக்க மாட்டாங்க என்றார் ரவியின் அப்பா.
The post ஜெயம் ரவி அடக்கம் இல்லாத பிள்ளை…! கோபப்பட்ட அம்மா appeared first on Touring Talkies.
]]>