The post தென்காசி சாமிநாதனை சந்தித்த வித்தியாசமான அனுபவம் – Director Viji | Part – 5 | CWC appeared first on Touring Talkies.
]]>The post ஜெயம்ரவிக்கு ஏ.ஜீ.எஸ் வைத்த செக்! #Thani Oruvan 2 appeared first on Touring Talkies.
]]>இந்த இரண்டு படங்களையும் அவர் வெற்றி தரும் என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளார். குறிப்பாக சீனி படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படுகிறது. ஜெயம் ரவியின் படங்களில் இதுவே மிகுந்த பட்ஜெட்டில் தயாராகும் படம். இதற்கான 100 கோடிக்கு மேல் பட்ஜெட் என்கிறார்கள்.
இப்படி ஜெயம் ரவி கையில் என்னதான் படங்கள் இருந்தாலும் தனிஒருவனை தவிர இதுவரை ஒரு பிளாக்பஸ்டர் படம் இன்னும் இல்லை,இந்நிலையில் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கிய படம் தான் தனி ஒருவன், அதன் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்கவிருக்கிறார்கள்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் கல்பாத்தி, ஜெயம் ரவியையும் மோகன் ராஜாவையும் அழைத்து, இந்த வருட இறுதிக்குள் தனி ஒருவன் 2 படத்தை வெளியிட வேண்டும் என்று கர்ரராக சொல்லியிருக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
The post ஜெயம்ரவிக்கு ஏ.ஜீ.எஸ் வைத்த செக்! #Thani Oruvan 2 appeared first on Touring Talkies.
]]>The post தக் லைஃப் படத்தில் இணையும் அசோக் செல்வன்? மணிரத்னம் போட்ட ப்ளான்… appeared first on Touring Talkies.
]]>ஆனால் ஜெயம் ரவி எதையும் ஏற்காமல் நடிக்க மறுத்துவிட்டாராம். மணிரத்தினத்தின் தக் லைப் படத்தில் சிம்பு நடிக்க வந்தது பிடிக்காமல் ஜெயம் ரவி அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் முன்பில் இருந்தே பிரச்சனை நீடிப்பதாக சொல்லப்படுகிறது.
இருந்த போதிலும் மணிரத்தினம் சிம்புவை மட்டும் விட்டுக் கொடுக்கவே இல்லை.யார் போனாலும் பரவாயில்லை சிம்பு இந்த படத்தில் வேண்டுமென்று அடம்பிடித்து இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பொழுது ஜெயம் ரவி கதாபாத்திரத்திற்கு வளரும் இளம் நடிகரான அசோக் செல்வனை தேர்ந்தெடுத்துள்ளார் மணிரத்தினம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் சூட்டிங் இப்பொழுது டெல்லியில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post தக் லைஃப் படத்தில் இணையும் அசோக் செல்வன்? மணிரத்னம் போட்ட ப்ளான்… appeared first on Touring Talkies.
]]>The post ‘சங்கமித்ரா’ கதையை தூசி தட்டும் சுந்தர் சி! நியூ அப்டேட்… appeared first on Touring Talkies.
]]>அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இப்படத்திற்கு முன்னதாக வெளியான அரண்மனை 1 மற்றும் 2 படங்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது பின்னர் அரண்மனை 3 திரைப்படம் வெளியாகி சற்று சுமாரான வரவேற்பைப் தான் பெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் அரண்மனை 4 படம் திரையரங்குகளில் ரிலீசாகி இருக்கிறது.
இந்த படம் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.என்று இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் ஒன்றில் பேசிய சுந்தர் சி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட சங்கமித்ரா கதை குறித்து பேசி உள்ளார்.
இப் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியிலேயே துவங்கவுள்ளதாக சுந்தர் சி பேசியுள்ளர். அவரது இந்த பேச்சு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகுள்ள இந்த கதைக்களத்தில்இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
The post ‘சங்கமித்ரா’ கதையை தூசி தட்டும் சுந்தர் சி! நியூ அப்டேட்… appeared first on Touring Talkies.
]]>The post கோடையை கொண்டாட்டமாக்க வரிசைகட்டி நிற்கும் படங்கள்! என்னென்ன பாருங்களேன்… appeared first on Touring Talkies.
]]>கமல்ஹாசன், பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி, சுந்தர்.சி.யின் அரண்மனை 4, பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகும் டீன்ஸ் சந்தானம் நடித்த இங்க நான்தான் கிங்கு, கவின் நடித்த ஸ்டார், சாய் தன்ஷிகா, அஷோக் நடித்த தி ஃபுரூப், உள்ளிட்ட படங்கள் மே மாதத்தில் வெளியாகவுள்ளன. இவை ரிலீஸ் ஆகும் என்றாலும், அதிகாரபூர்வ தேதி இன்னும் சில நாட்களில் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.
கீர்த்தி சுரேஷின் ரீவால்வர் ரீட்டா மற்றும் ரகு தாத்தா ஆகிய இரண்டு படங்களும் வெளியீட்டிற்காக தயாராகி விட்டன. இரண்டில் ஒன்றை திரையிட முயன்றனர். ஆனால், இரண்டு படங்களின் வெளியீடும் தள்ளிப்போகிறது என்று தகவல்.அதேபோல, துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி நடித்த ‘கருடன்’ படம் வெளியாகும் என்றனர். ஆனால், படத்தின் பேட்ச் வொர்க் இன்னும் முடியாமல் இருப்பதால், அது முடிந்த பிறகு மட்டுமே அறிவிப்பு வெளியாகும்.
மிஷ்கினின் பிசாசு 2, அமீர் நடித்த உயிர் தமிழுக்கு ஆகிய படங்கள் வெளிவரும் எண்ணத்தில் உள்ளன. தற்போது ‘கல்கி 2898 ஏடி’ படத்திற்கே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, அன்னா பென் ஆகியோர் நடிக்கின்றனர்.
அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதியன்று மங்காத்தா மறுவெளியீடு செய்யப்படுகின்றன.
The post கோடையை கொண்டாட்டமாக்க வரிசைகட்டி நிற்கும் படங்கள்! என்னென்ன பாருங்களேன்… appeared first on Touring Talkies.
]]>The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.
]]>கங்குவா படத்தின் டீசரை பார்த்த நடிகர் அஜித் சிறுத்தை சிவாவை அழைத்து பாராட்டியுள்ளார்.சூர்யாவின் டெடிகேஷன் சூப்பராக இருக்கு என்றும் அதோடு சூர்யாவுக்கு குட்டி அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் அஜித். அதாவது இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோலை விட நீங்கள் இன்னும் ஸ்கோர் பண்ணனும் என்று கூறியியதாகவும் சூர்யாவும் அதற்கு சிரித்துக் கொண்டே சரி என்று சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பீஸ்ட் மற்றும் டாடா படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக்கிற்கும் திருமணம் இனிமையாக நடந்துள்ளது.அபர்ணாதாஸ் மற்றும் தீபக் இருவரும் சேர்ந்து மனோகரம் என்ற படத்தில் நடித்திருந்தனர்.அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்து இப்போது கல்யாண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் திருமணம் குருவாயூரில் எளிமையாக நடந்துள்ளது அந்த திருமணத்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் எம் ஜி ஆர் நகர ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த கே கே நகர இளைஞர் ராஜா (வயது 33) சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.ராஜா ஜெயம் ரவி மீதுள்ள மிகுந்த அன்பால் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகளை செய்து வந்தார்.தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும் மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியாக இருந்தாலும் நிச்சயமாக நான் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
கில்லி ரீ ரிலிஸை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் இதை பற்றி திரிஷா சோஷியல் மீடியா பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிரகாஷ் ராஜ் அவரது எக்ஸ் பக்கதில் அதில் லவ் யூ ஆல் செல்லம்ஸ் முத்துபாண்டி கதாப்பாத்திரத்தை காதலித்ததற்கு . உங்கள் அன்பில் நான் மிகவும் மெய் சிலிர்த்து போகிறேன். இயக்குனர் தரணி சாருக்கும் தயாரிப்பாளரான ரத்னம் சாருக்கும், ம்ய் டியர் விஜய்க்கும் , என்னோட செல்ல திரிஷாவுக்கும் என் நன்றிகள் பல என கூறியுள்ளார்.
மிர்ச்சி சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளிவரவுள்ள சூது கவ்வும் 2 படத்தின் இரண்டாம் பாடலான ‘மண்டைக்கு சூரு ஏறுதே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரேம் ஜி, ஸ்டீபன் செக்கரியா மற்றும் கர்ணன் கணபதி இணைந்து பாடியுள்ளனர். ஸ்டீபன் செக்கரியா சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் பாடகர்.அவரின் பல பாடல்கள் யூடியூப்ல் வைரலானவை தான்.பிரேம் ஜி இந்த பாடலில் தானும் பாடியுள்ளதாகவும் அதை அனைவரும் நிச்சயம் கேட்டு என்ஜாய் செய்யும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post டெல்லி பறந்த மணிரத்தினம் !கமலும் ரெடி சிம்புவும் ரெடி சூடு பிடித்த தக் லைஃப் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.
]]>கடந்த 2022ம் ஆண்டு கமலின் பிறந்தநாள் அன்று KH 234 படத்தின் துவக்கம் குறித்த அப்டேட் வெளியானது.அதன்பிறகு கடந்தாண்டு கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 டைட்டில் தக் லைஃப் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் குறித்த அறிவிப்புகள் வெளியாகின.
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, நாசர், கெளதம் கார்த்திக், அபிராமி ஆகியோரும் இப்படத்தில் இணைந்தனர். இவர்களுள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி கால் ஷீட் பிரச்சினை காரணமாக விலகியதாக கூறப்பட்டது.மீண்டும் அவர்கள் மணிரத்தினத்தோடு இணைந்துள்ளனர்.இவர்கள் மட்டுமின்றி சிம்புவும் இணைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
நடிகர் கமல் தேர்தல் பிரச்சார பணிகளில் பிஸியாக இருந்ததால், மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வந்தார் மணிரத்னம். ராஜஸ்தானின் ஜெய்ஸ்சல்மார் பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஷூட்டிங்கில், சிம்புவும் த்ரிஷாவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசன் ஃப்ரீயாக உள்ளதால் தக் லைஃப் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள டெல்லி சென்றுள்ளார்.இதற்கிடையில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மேர் பகுதியில் நடந்துள்ளது.இதைத்தொடர்ந்து டெல்லியில் படப்பிடிப்பு நடைப்பெற உள்ளது.சிம்பு 2 வேடங்களிதும் கமல் 3 வேடங்களிலும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மணிரத்தினம் கமல் மற்றும் சிம்பு ஆகியோரின் படப்பிடிப்பு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
The post டெல்லி பறந்த மணிரத்தினம் !கமலும் ரெடி சிம்புவும் ரெடி சூடு பிடித்த தக் லைஃப் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.
]]>The post மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி? appeared first on Touring Talkies.
]]>இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.தக் லைஃப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில், கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் திட்டமிடப்பட்டது.ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரசாரங்கள் உள்ளிட்ட காரணங்களால் சூட்டிங் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
இந்நிலையில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினையால் அடுத்தடுத்து படங்களில் இருந்து விலகினர்.ஷங்கர் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளாக முடங்கிக் கொண்டிருந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் கையில் எடுத்தார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சூட்டிங் வெகுவாக நடந்த நிலையில் எடுக்கப்பட்ட படத்தின் நீளத்தால் இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டாக உருவாகியுள்ளது.
இதற்கிடையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவிக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி இப்படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் மீண்டும் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் இணையவுள்ளதாகவும் அதேசமயம் சிம்புவும் இந்தப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவுகின்றது.தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
The post மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி? appeared first on Touring Talkies.
]]>The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் என்ற அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் சினிமா ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ள நட்சத்திரங்களை வைத்து இயக்கி வெற்றியும் பெற்றார். இவரின் வித்தியாசமான திரைக்கதை காட்சி அமைப்புகள் பலரையும் கவர்ந்தது.கோமாளி திரைப்படம் புதியதொரு நகைச்சுவை கலந்த அனுபவத்தை தந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப்படம் அதன் திரைக்கதை மற்றும் ஜெயம் ரவியின் வெகுளித்தனமான என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்ற வசனம் படத்திற்கு அடையாளத்தை கொடுத்தது எனலாம்.
விக்னேஷ்.சிவனின் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தில் பிரதீப் மற்றும் கிருத்தி ஷெட்டி , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்நிலையில் அவர் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.இந்தப்படத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாகவும் அவருக்கு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்தப்படத்தை சுதா கொங்கராவின் அசிஸ்டெண்ட்ட் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய கதையை சொல்லி ஓகே வாங்கியதாகவும் தொடர்ந்து இந்த கதையை பிரதிப் ரங்கநாதனும் ஓகே செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் தான் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது எல்ஐசி படத்தில் நடித்துவரும் பிரதீப், விரைவில் இதன் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஏஜிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்தே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அவர் இணையவுள்ளார்.
The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post மாயாஜாலம் செய்யும் Genie ஜெயம் ரவி! இப்படமாவது கைக்கொடுக்குமா? appeared first on Touring Talkies.
]]>ஜெயம்ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சைரன் எதிர்பார்த்தளவில் இல்லை. இந்நேரத்தில் ஜீனி என்ற ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அர்ஜூன் ஜே.ஆர் இயக்கியுள்ளார்.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது.
தற்போது அடுத்தடுத்து என பல படங்களுக்கு இசையமைத்து வரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் எனவே மேலும் இப்படத்திற்கு மவுசை சேர்ந்துள்ளது.
இந்த ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இப்பட போஸ்ட்ர்களை காணும் போது பூதம் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.இப்படம் குழந்தைகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதேபோல் ஜெயம்ரவியின் நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.இத்துடன் ஜீனி இணைந்துள்ளது.
இப்படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன், வாமிக்கா கபி மற்றும் கல்யாணி என மொத்தம் 4 ஹீரோயினிஸ் நடித்துள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்றே புது முயற்சியாக வித்தியாசமான கதை களமாக இப்படம் இருக்கும் எனவும், பேன்டசி என்டர்டெயினராக அதிக பட்ஜட்டில் எடுக்கப்பட்டுள்ளாதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
The post மாயாஜாலம் செய்யும் Genie ஜெயம் ரவி! இப்படமாவது கைக்கொடுக்குமா? appeared first on Touring Talkies.
]]>