The post மீண்டும் ’புதிய புராடக்ட்’ அறிமுகம் செய்த நயன்தாரா.! appeared first on Touring Talkies.
]]>பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்திருக்கிறேன். சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதையும் கவனிக்கிறேன். இந்த மகிழ்ச்சி அனைத்தும் இன்று ஒருங்கிணைந்துள்ளது.
பெண்களின் நல்வாழ்வுக்காக பலகட்ட யோசனையில் இருந்து உருவான திட்டமான ‘Femi9’ஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இது வெறும் பிசினஸ் மட்டுமல்ல. இது நான் நேசித்த ஒரு கனவு! அது திரைகளுக்கு அப்பால் சென்று பெண்கள் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட முறையில் கனெக்ட் ஆகும்.
‘Femi9’ ஒரு பிராண்ட் மட்டுமல்ல. இது பெண்களின் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் பிரதிநிதித்துவம். தனிப்பட்ட சுகாதார உலகில், இது பெண்களால், பெண்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பயணத்தின் ஒவ்வொரு பகுதியும் அதாவது ஆரம்பம் முதல் இப்போது வரை அதில் ஒரு பகுதியாக இருக்கும் பெண்களால் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் உருவாக்கப்பட்டது.
தனிப்பட்ட வெற்றியை அடிக்கடி முன்னிலைப்படுத்தும் ஒரு துறையில், ‘Femi9’ என்பது ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, நம்பிக்கையின் கொண்டாட்டமாகும். தனிப்பட்ட சுகாதாரத்தில் இந்த முயற்சியை எடுக்க என்னைத் தூண்டியவர்களுக்கும் கொடுத்த ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன்.
என் வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் நன்றி. ‘Femi9’ என்பது நமது கூட்டு சாதனையாகும். நாம் ஒற்றுமையுடன் இருந்து ஒருவரையொருவர் உயர்த்தும்போது அனைவருக்கும் அது நன்மை கொடுக்கிறது.
‘Femi9’ ஒரு புராடக்ட், அது வாங்குபவர்களின் வீடுகளுக்குச் செல்கிறது என்பதையும் தாண்டி உலகெங்கிலும் உள்ள பெண்களின் இதயங்களைச் சென்றடையும் ஒரு பிராண்ட். இது அதிகாரமளிக்கும் ஆதாரமாகவும், ஆறுதலாகவும், ஒன்றாக இணைந்து, நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாகவும் இருக்கட்டும். அன்புடனும் நன்றியுடனும்,
நயன்தாரா
ஏற்கனவே இவர் ’9 ஸ்கின்’ என்ற புராடக்ட்,வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
The post மீண்டும் ’புதிய புராடக்ட்’ அறிமுகம் செய்த நயன்தாரா.! appeared first on Touring Talkies.
]]>The post இல்லாத பூவை எழுதிய கங்கை அமரன்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் இதில் புகழ் பெற்ற, ‘செந்தூரப்பூவே..’ பாடலை எழுதியது யார் என்று பலருக்கும் தெரியாது.
அவர்.. கங்கை அமரன்.
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் ஒரு அற்புதமான பாடலாசிரியரும்கூட.
இந்தப் பாடல்தான் திரையில் அவர் எழுதிய முதல் பாடல்.இது குறித்து, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “செந்தூரப்பூ என்று ஒரு பூ, தமிழ்நாட்டில் கிடையாது. அதனால் இலக்கியங்களிலோ, புராணங்களிலோ இந்த பெயரே இருக்காது.
நான்தான் முதன் முதல் செந்தூரப்பூ என்று எழுதினேன்” என்றார்.
உண்மைதான்..
செந்தூரப் பூ மரம் வட இந்தியாவில் மட்டுமே உண்டு. 16 வயதினிலே படம்.. செந்தூரப்பூவே பாடல்.. வெளியானது 1977ம் ஆண்டு. ஆனால் 45 வருடங்கள் கழித்து, கடந்த (2022)ம் ஆண்டுதான் முதன் திருச்சியில் செந்தூரப்பூ மரக்கன்று நடப்பட்டது
சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து விதைகள் கொண்டுவரப்பட்டு, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் செந்தூரப்பூ மரக்கன்று நடப்பட்டது.
தமிழ்நாட்டில் இல்லாத பூவை பாடலில் கொண்டு வந்த கங்கை அமரன் ஆச்சரிய கவிஞர்தான்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
https://www.youtube.com/watch?v=PfTZhwHNR2k&t=453s
The post இல்லாத பூவை எழுதிய கங்கை அமரன்! appeared first on Touring Talkies.
]]>The post கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த ஜெய்யின் ‘தீராக் காதல்’ படக்குழு! appeared first on Touring Talkies.
]]>படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், ‘தீராக் காதல்’ படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகப்படுத்தி உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ், ‘ஆரண்யா’ என்ற கதாபாத்திரத்திலும் ஜெய், ‘கவுதம்’ என்ற கதாபாத்திரத்திலும் ஷிவதா, ‘வந்தனா’ என்ற கதாபாத்திரத்திலும் விருத்தி விஷால், ‘ஆர்த்தி’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
‘தீராக் காதல்’ திரைப்படம் மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த ஜெய்யின் ‘தீராக் காதல்’ படக்குழு! appeared first on Touring Talkies.
]]>The post லட்சுமிராயை அறிமுகப்படுத்தியவர்.. இன்று பிச்சை எடுக்கிறார்! appeared first on Touring Talkies.
]]>படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. பிறகு செல்வேந்திரனுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று அவர் ஒருவேளை சோத்துக்கே வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.இந்த நிலையில் யு டியுப் சேனல் ஒன்றில் பேசிய அவர், “சினிமா தான் என்னுடைய வாழ்க்கை. தொடர்ந்து போராடுவேன். விஜய்க்காக கதை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். கண்டிப்பாக அவரை வைத்து படம் எடுப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
The post லட்சுமிராயை அறிமுகப்படுத்தியவர்.. இன்று பிச்சை எடுக்கிறார்! appeared first on Touring Talkies.
]]>The post “நடிக்க தெரியலை!”: மனோரமாவை திட்டிய ஒளிப்பதிவாளர்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் அவரது நடிப்பை புகழ்ந்து, ‘பொம்பளை சிவாஜி’ என்று அழைப்பார்கள்.
ஆனால் அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என இயக்குநர் திட்டிய சம்பவமும் நடந்து உள்ளது.
இது குறித்து, கூறி இருக்கிறார் தயாரிப்பாளர் வீரய்யா. இவர் கண்ணதாசனுடன் பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்தவர்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு சமயம் மனோரமா நாயகியாக நடித்த நாடகத்தை பார்த்த கண்ணதாசன், தான் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தல் அவரை நடிக்க வைக்க முடிவு செய்தார். ஆனால் காமெடி கதாபாத்திரம்.
முதலில் தயங்கிய மனோரமா, பிறகு ஒப்புக்கொண்டார்.
படப்பிடிப்பின் போது, 2, 3 டேக்குகள் வாங்கினார் மனோரமா. அதனால் ஆத்திரமான ஒளிப்பதிவாளர் மனோரமாவை திட்டினர். அதோடு, இந்த படத்தில் இருந்து அவரை நீக்கிவிட வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்.
இதை, மனோரமா தன் தாயிடம் கூறி அழ… அவரது தாயும் சேர்ந்து அழுது புலம்பி இருக்கிறார்.
இந்த விசயம் அறிந்த கண்ணதாசன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு, படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரிடம், ‘மனோரமாவிற்கு நடிக்கத் தெரியவில்லை என்றால் சொல்லிக் கொடுப்பது நம் கடமை’ என்று சொல்லி நடிக்க வைத்தார்!” என்று தெரிவித்தார் தயாரிப்பாளர் வீரய்யா.
நடிப்புக்கு இலக்கணம் என்று போற்றப்படும் மனோரமாவின் முதல் பட சம்பவம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
The post “நடிக்க தெரியலை!”: மனோரமாவை திட்டிய ஒளிப்பதிவாளர்! appeared first on Touring Talkies.
]]>