The post எங்கள் நட்பு தொடரும் யாரும் காயப்படுத்த வேண்டாம்…. ஜி.வி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து விவகாரம்! appeared first on Touring Talkies.
]]>ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. பல வருடங்கள் காதலித்த பிறகு, 2013 ஆம் ஆண்டு பெற்றோரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.அன்வி என்ற ஒரு மகளைக் கொண்டுள்ள ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி, விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துவிட்டதாக கடந்த 13-ம் தேதி அறிவித்தனர். இதனையடுத்து, யூடியூப் வீடியோக்கள் குறித்த சைந்தவி வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் தங்கள் விவாகரத்து பற்றிய கற்பனை கதைகள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன.எங்களின் முடிவுக்கு மதிப்பளிக்க கோரிய பின்பும் இவ்வாறு கதைகள் உருவாகுவது வேதனையாக உள்ளது. ஆதாரமின்றி ஒருவரின் குணாதிசயத்தை சிதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்தை கருதி எடுக்கப்பட்டது. நான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் பள்ளிப் பருவத்தில் முதல்முறையாக நண்பர்களாக இருந்தோம், 24 வருட நட்பு. அதே நட்புடன் தொடர்வோம் என்று சைந்தவி குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இதுகுறித்து, “இந்த சிரமமான நேரத்தில் என்னுடன் இருக்கிறவர்களுக்கும், நண்பர்களுக்கும், என் முன்னாள் மனைவி சைந்தவிக்கும் நன்றி” என கூறியுள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
The post எங்கள் நட்பு தொடரும் யாரும் காயப்படுத்த வேண்டாம்…. ஜி.வி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து விவகாரம்! appeared first on Touring Talkies.
]]>The post தனி மனித உணர்வுகளை காயப்படுத்தாதீங்க… ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட மற்றொரு அறிக்கை! appeared first on Touring Talkies.
]]>“புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.
தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனி நபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததால் பின்னணியையும் காரணங்களையும் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.
அனைவரிடமும் கலந்த ஆலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமைகளோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்பிற்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.” என ஜி.வி. பிரகாஷ் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
The post தனி மனித உணர்வுகளை காயப்படுத்தாதீங்க… ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட மற்றொரு அறிக்கை! appeared first on Touring Talkies.
]]>The post நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்… ஜி.வி போட்ட பதிவு அதிர்ச்சியில் திரையுலகம்… appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.ஜி.வி. பிரகாஷ்குமார் தனது மனைவி சைந்தவியுடன் பிரிவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில், நீண்ட யோசனைக்குப் பிறகு சைந்தவியும் நானும், எங்கள் திருமண வாழ்க்கையின் 11 ஆண்டுகளுக்குப் பின், ஒருவருக்கு ஒருவர் மரியாதையுடன், எங்கள் மன அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் பிரிந்து செல்ல தீர்மானித்தோம்.
இந்த ஆழமான தனிப்பட்ட மாற்றத்தின் போது எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதை ஏற்றுக்கொண்ட நாங்கள், இது இருவரின் நலனுக்காக எடுத்த சிறந்த முடிவு என்று நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவை வேண்டுகிறோம் என பதிவிட்டுள்ளார்.
The post நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்… ஜி.வி போட்ட பதிவு அதிர்ச்சியில் திரையுலகம்… appeared first on Touring Talkies.
]]>The post இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் கலக்க வரும் ஜி.வி பிரகாஷ்! #13TheMovie appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷ் -ன் ரிபெல், கள்வன் மற்றும் டியர் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று தந்தாலும் அதோடு னால வரவேற்பையும் பெற்று தந்தது. தன்னுடைய இசையில் 100 படங்களையும் நடிப்பில் 25 படங்களையும் கடந்துள்ளார் ஜிவி பிரகாஷ். டார்லிங் படம் இவரது என்ட்ரி படமாக தமிழில் அமைந்த நிலையில், தற்போது 25வது படமாக கிங்ஸ்டன் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து அடுத்ததாக மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில் 13 படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இந்தப் படத்தில் அவருடன் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். கே. விவேக் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இன்றைய தினம் படத்தின் டப்பிங்கை பேசி ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.தற்போதுஇப்படத்திற்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.
இதனிடையே, 13 படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அதன் கதைக்களம் புதிதாக இருப்பதாகவும் டார்லிங் படத்திற்குப் பிறகு தான் நடித்துள்ள ஹாரர் படம் இது, நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்றும் ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
The post இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் கலக்க வரும் ஜி.வி பிரகாஷ்! #13TheMovie appeared first on Touring Talkies.
]]>The post ஜிவி பிரகாஷ் தனுஷ் இடையே நடந்த 6 வருட மோதல்! மனம் திறந்த ஜிவி…. appeared first on Touring Talkies.
]]>ஜி.வி பிரகாஷ் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். அப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அமைத்த இசையை கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், சிறு வயதில் இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சிறப்பாக இசையமைத்துள்ளாரே என ஆச்சரியத்துடன் கொண்டாடினர்.
இப்படி பல படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு அமைத்திருந்த இசை உச்சக்கட்டத்திற்கு அலறவிட்டது. அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிடைக்காமல் போனது பலருக்கும் ஏமாற்றத்தை பெற்று தந்தது.தொடர்ந்து இசையமைத்து வந்த அவருக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது.
இதற்கிடையே ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பிது பிரபல நடிகரும் ஆனார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படங்கள் கவனம் பெற்றன.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் இன்று கள்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில். தனக்கும் தனுஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றின் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதாவது, ‘இரண்டு நண்பர்கள் இருக்கும்போது சண்டை வருவது எல்லாம் சகஜமான விஷயம்தான். அப்படித்தான் எனக்கும், தனுஷுக்கும் பிரச்னை வந்தது. இதனால் நாங்கள் இரண்டு பேரும் ஆறு வருடங்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். இப்போது எல்லா பிரச்னைகளையும் சரி ஆகிவிட்டது. தற்போது நானும் தனுஷூம் நல்ல நண்பர்கள் தான் எங்களுக்குள் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என பகிர்ந்து கொண்டார்.
The post ஜிவி பிரகாஷ் தனுஷ் இடையே நடந்த 6 வருட மோதல்! மனம் திறந்த ஜிவி…. appeared first on Touring Talkies.
]]>The post மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த வெற்றிமாறன்? appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சங்க பொருளாளர் பேரரசு, “யானை என்றாலே ராசிதான். யானை என்றால் பிள்ளையார். யானையை வைத்து எடுக்கப்பட்ட படங்களான ‘நல்ல நாள்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘கும்கி’ போன்ற படங்கள் போன்று ‘கள்வன்’ திரைப்படமும் வெற்றிபெற வேண்டும்” என்று கூறினார்.
அதன் பிறகு பேசவந்த இயக்குநர் வெற்றிமாறன் “யானையை வைத்து படம் எடுத்தாலும், டைனோசரை வைத்து படம் எடுத்தாலும் கதையும், திரைக்கதையும் நன்றாக இருந்தால்தான் படம் ஓடும்” என்று குறிப்பிட்டார்.
இவர்கள் இருவரும் பேசிய அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து “பிற்போக்கு தனமாகவும், மூடநம்பிக்கையாகவும் கருத்து தெரிவித்த இயக்குநர் பேரரசுக்கு வெற்றிமாறன் மேடையில் வைத்தே தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார்” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
The post மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த வெற்றிமாறன்? appeared first on Touring Talkies.
]]>The post ’கேப்டன் மில்லர்’ புதிய அப்டேட்…ஜி.வி பிரகாஷ் ட்விட்.! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.
இதைத் தொடர்ந்து ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ’கேப்டன் மில்லர்’ பொங்களுக்கு வெளியாகும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் எந்தவொரு புதிய அப்டேட்டும் வராமல் இருந்து வந்த நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட ஜி.வி. பிரகாஷ் முடிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் பாடிய பாடலின் வரிகளையும் ஸ்டூடியோவில் தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவரது சமூக வலைபக்கமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜி.வி பிரகாஷ்.
The post ’கேப்டன் மில்லர்’ புதிய அப்டேட்…ஜி.வி பிரகாஷ் ட்விட்.! appeared first on Touring Talkies.
]]>The post நாங்குநேரி கொடூரம்: திரையுலகினர் கண்டனம் appeared first on Touring Talkies.
]]>இந்த சம்பவத்துக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என பதிவிட்டுள்ளார்.
மாரிசெல்வராஜ், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என பதிவிட்டுள்ளார்.
மோகன்.ஜி, “மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பல திரையுலகப்புள்ளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post நாங்குநேரி கொடூரம்: திரையுலகினர் கண்டனம் appeared first on Touring Talkies.
]]>The post ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடியே’ படத்தின் முதல் பாடல் வெளியானது! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் ‘அடியே’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ‘வா செந்தாழினி’ என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பகவதி பி.கே எழுதியுள்ள இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடியே’ படத்தின் முதல் பாடல் வெளியானது! appeared first on Touring Talkies.
]]>