The post “நாடகத்தில் நடிக்கணும்” – ஒய்.ஜி.மகேந்திரனிடம் ஆசையை வெளிப்படுத்திய சிலம்பரசன். appeared first on Touring Talkies.
]]>வி ஹவுஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இத்திரைப்படம் அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி,மகேந்திரன், உதயா, பிரேம்ஜி, மனோஜ் கே.பாரதி, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், மகத் ராகவேந்திரா, டேனி, அரவிந்த் ஆகாஷ் என நட்சத்திரத் தேர்விலேயே பிரமிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
குறிப்பாக இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தால்தான், பொருத்தமாக இருக்கும் என அவரை ஒரு மனதாக தேர்வு செய்துள்ளனர் இயக்குநர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும்.
நடிகர் திலகம் சிவாஜி, ரஜினி, கமல் என ஒரே சமயத்தில் 3 ஜாம்பவான்களுடன் நகைச்சுவையில் கலக்கிய ஒய்.ஜி.மகேந்திரன், இப்போது சிலம்பரசன் காலகட்டத்திலும் அதே உற்சாகத்துடன் வளைய வருகிறார் என்பது ஆச்சர்யம்.
‘மாநாடு’ படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் பணியாற்றுவது மற்றும் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்து ஒய்.ஜி.மகேந்திரன் சமீபத்தில் பத்தரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, “கடந்த வருடமே “மாநாடு” படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. எனக்கு இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்கள் மிகவும் பிடிக்கும். நானும் வெங்கட் பிரபுவும் நகைச்சுவை என்கிற ஒரே ஏரியாவில் பயணிப்பவர்கள் என்பதால் இந்த ‘மாநாடு’ படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன்.
சிலம்பரசனை நான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அவருடன் இதற்கு முன் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்கிற படத்தில் நடித்திருந்தேன். அதில் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் கொஞ்சமே இருந்தன. ஆனால், இந்தப் படத்தில் படம் முழுவதும் வருகின்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்.
அதேபோல சிம்புவுடன் பல காட்சிகளில் நான் நடித்தாலும், படத்தில் நான் எஸ்.ஜே.சூர்யா தரப்பு ஆளாக வருகிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னவென்று இப்போது என்னால் சொல்ல முடியாது. காரணம் கதையில் பல திருப்பங்களுக்கு காரணமான ஒரு கதாபாத்திரம் என்னுடையது. படப்பிடிப்பின்போது என்னுடைய ஸ்டைலிலேயே நடிக்கும்படி எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்து விட்டார் வெங்கட் பிரபு.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தில் வெங்கட் பிரபு கையாண்டுள்ள திரைக்கதை அரசியல் பின்புலம் உள்ள திரைப்படங்களில் மிகச் சிறந்த திரைக்கதைகளில் ஒன்றாக இருக்கும். இப்போது நான் சொல்வதைவிட, படமாக நீங்கள் பார்க்கும்போது அதை நிச்சயம் உணர்வீர்கள்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தினசரி படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். படக் குழுவினரின் தேவைகளை அருகில் இருந்து கவனிப்பதுடன் படைப்பாளியின் சுதந்திரத்தில் எந்த குறுக்கீடும் செய்யாமல், அனைவருக்கும் சுதந்திரம் அளித்து ஒரு மிகச் சிறந்த தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுவரை கிட்டத்தட்ட முன்னூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே, உடனே திரையில் பார்த்தாக வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். இந்த “மாநாடு” படம் அப்படி ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.
இப்போது வரும் படங்களில் காமெடி ஸ்டைலும், மேக்கிங்கும் மாறி இருக்கிறது. நான் நாடக நடிகன் என்பதால், எதுவாக இருந்தாலும் அதிலும் என்னை பொருத்திக் கொண்டு முட்டி மோதி நடிக்க முடியும். அந்த வகையில் “மாநாடு” படத்தின் கதையும் வித்தியாசமாக இருந்ததுடன் என்னுடைய கதாபாத்திரமும் சவால் நிறைந்ததாக இருந்தது.
சிலம்பரசன் சினிமாவைப் பற்றி அனைத்தும் தெரிந்தவர். திறமையானவர். இந்த “மாநாடு” படம் அவரது திரையுலகப் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். அந்த அளவுக்கு படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்துள்ளார்.
அவர் இது போன்ற கதைகளையும் கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தார் என்றால், இன்னும் மிகப் பெரிய இடத்துக்குச் செல்வார். சிலம்பரசனைப் பொறுத்தவரை ஸ்பாட்டில் நடிக்கும்போது புதிது புதிதாக நிறைய விஷயங்களை மெருகூட்டிக் கொள்வார். என்னைப் போன்ற நாடகக் கலைஞர்கள் கையாளும் பாணி அது.
இதைவிட ஒரு விஷயம் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.. ‘இந்தப் படம் எல்லாம் முடிந்து ப்ரீ ஆனதும் உங்களுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடிக்க வேண்டும் சார்’ எனக் கூறினார். அது நடந்தால் நன்றாக இருக்கும்” என்றார் ஒய்.ஜி.மகேந்திரன்.
The post “நாடகத்தில் நடிக்கணும்” – ஒய்.ஜி.மகேந்திரனிடம் ஆசையை வெளிப்படுத்திய சிலம்பரசன். appeared first on Touring Talkies.
]]>The post 6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு appeared first on Touring Talkies.
]]>மேலும், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத், டேனியல் போப், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் ஜே குமார் கலையை கவனிக்க, ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியைக் கையாள, மதன் கார்க்கி பாடல்கள் எழுத, நடனம் அமைக்கிறார் ராஜூ சுந்தரம். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பினை கவனித்துக் கொள்கிறார்.
அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ‘அப்துல் காலிக்’ என்கிற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்றைய படப்பிடிப்பின்போது, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்கினார் வெங்கட் பிரபு. படத்தின் மிக முக்கியமான, கிட்டத்தட்ட ஆறு நிமிடம் நீளமாகக் கொண்ட இந்த காட்சியில், ஒரே டேக்கில் நடித்து அசத்தினார் சிம்பு.
சிம்பு சிங்கிள் டேக் நடிகர் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஆறு நிமிட காட்சியை கூட, ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்ததை கண்டு அசந்துபோன படக் குழுவினர், காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும்… உடனே கை தட்டல் மூலமாக நடிகர் சிம்புவுக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
The post 6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு appeared first on Touring Talkies.
]]>The post சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>சிம்புவின் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக மாறியுள்ள ‘மாநாடு’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியதுதான் இதற்குக் காரணம்.
சென்னையை அடுத்த ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் இருக்கும் பரந்த மைதானத்தில் ‘மாநாடு’ படத்திற்காக ‘மாநாடு’ போன்ற செட் அமைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன் நடித்திருக்கிறார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், சந்திரசேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தினமும் இரவு நேரத்தில்தான் இங்கே படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் துணை நடிகர்களாக 500 பேர் நடிக்கிறார்களாம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பட்ஜெட்டை இந்த 10 நாட்கள் ஷூட்டிங்கே முழுங்கப் போகிறதாம்.
படத்தில் சிம்பு வெடித்துச் சிதறப் போவது ‘முத்தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சிக்கு எதிராகவாம். அவருடைய அப்பாவான டி.ராஜேந்தர் நடத்தி வரும் கட்சியின் பெயர் ‘லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துகிறோம்.
அரசியல் கலந்த படம் என்பதால் இப்போதே இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிம்புவின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தை மிகவும் கொண்டாடி வருகிறார்கள்.
The post சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>The post தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! appeared first on Touring Talkies.
]]>இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான ஒரு விஷயத்தையும் செய்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் தேர்தல் தோல்வியடைந்தாலும் “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்கித் தர வேண்டும்” என்று கொள்கையில் இருக்கிறார் டி.ராஜேந்தர்.
அந்தக் கொள்கைக்குத் துணை கொடுக்க தனது மகன் சிம்புவை நாடியிருக்கிறார் டி.ராஜேந்தர். அப்பா பேச்சுக்கு செவி கொடுத்த சிம்பு இதற்கு டபுள் “ஓகே” சொல்லியிருக்கிறாராரம்.
படத்திற்கு ‘மெண்டல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தையும் இயக்குநர் வெங்கட் பிரபுதான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
இந்த ஒரு படத்தின் மூலமாகக் கிடைக்கும் லாபத் தொகை முழுவதும் அப்படியே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அளிக்கப்படுமாம். தோராயமாக 10 அல்லது 12 கோடி ரூபாய் இதன் மூலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாகத் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.ராஜேந்தரின் இந்த உயரிய எண்ணத்திற்கு சிம்புவின் காட் மதரான உஷா ராஜேந்தரும் ஒப்புதல் அளித்துவிட்டாராம். எனவே, படம் தயாராவது உறுதி. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பேங்க் பேலன்ஸை டி.ராஜேந்தர் உயத்தப் போவதும் உறுதி.
ஆனால், இதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தற்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.
அவர்களும் ‘தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று சொன்னால்.. தயாரிப்பாளர்கள் சங்கம் நிச்சயமாக வலு பெறும். கஷ்டப்படும் ஏழை, எளிய தயாரிப்பாளர்கள் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.
The post தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! appeared first on Touring Talkies.
]]>The post சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் சிலம்பரசன் T.R. நாயகனாக நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன், எஸ்.ஜே.சூர்யா, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சி., ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், ‘படவா’ கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலரும் நடித்து வருகிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். படத் தொகுப்பை கே.எல்.பிரவீண் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக உமேஷ் பணியாற்றுகிறார். வெங்கட் பிரபு படத்தை இயக்குகிறார்.
ஏற்கனவே சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.. இந்நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், கொரோனா தொற்று காரணமாக படக் குழுவினருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என முடிவு செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படக் குழுவினரின் பாதுகாப்பு நடவடிக்கையாக சித்த மருத்துவர் வீரபாபுவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் படக் குழுவினர் அனைவருக்கும் படப்பிடிப்பு துவங்கும் முன்னரே கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் படக் குழுவினருக்கு தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் மூலிகை கசாயம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி படக் குழுவினருக்கு அவரது வழிகாட்டுதலின்படி ஆரோக்கியமான உணவு முறையும் வழங்கப்படுகிறது.
சொல்லப் போனால், கொரோனா தொற்றில் இருந்து படக் குழுவினரை பாதுகாப்பதற்காக, படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு மருத்துவ குழுவினர் கூடவே இருந்து, கவனித்து கொள்வது என்பது இதான் முதன்முறை. அந்த வகையில் படக் குழுவினர் அனைவரும், கொரோனா தாக்கம் குறித்த எந்த அச்சமும் இன்றி படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு appeared first on Touring Talkies.
]]>The post நான்கு இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்’ appeared first on Touring Talkies.
]]>தயாரிப்பாளர் G.டில்லிபாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழ் சினிமாவில் சீரான தனிப் பாதையில் பயணித்து, மதிப்புமிகு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
2014-ல் ஆரம்பித்த இத்தயாரிப்பு நிறுவனம் வெகு அழகான தரமிக்க படங்களை தந்து வருகிறது.
‘மரகத நாணயம்’, IMDB தளத்தில் இந்திய படங்களின் வரிசையில் முதல் இடத்தை தக்க வைத்திருக்கும் ‘ராட்சசன்’ மற்றும் 2020-ல் மிகப் பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ‘ஓ மை கடவுளே’ என தொடர்ந்து கருத்திலும், சுவையிலும் கலக்கும் படங்களை இந்நிறுவனம் தந்து வருகிறது.
தற்போதைய நிலையில் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மூன்று படங்களை தயாரித்து வருகிறது. மூன்று படங்களும் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் நிலையில், தற்போது ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் இணைந்து நான்கு கதைகள் கொண்ட ‘விக்டிம்’ எனும் ஆந்தாலஜி படத்தை தயாரிக்கவுள்ளது.
இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் நான்கு வெவ்வேறு கதைகளை, இயக்குநர்கள் சிம்பு தேவன் , ராஜேஷ் M, பா. ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு இயக்குகிறார்கள்.
இந்த ‘விக்டிம்’ ஆந்தாலஜி திரைப்படத்தில் தமிழின் சிறந்த நடிகர்களான நாசர், தம்பி ராமையா, பிரசன்னா, அமலா பால், நட்டி (எ) நடராஜ் சுப்பிரமணியம், கலையரசன் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள்.
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கும் கதையில் R. சரவணன் ஒளிப்பதிவாளராகவும், சாம் C.S. இசையமைப்பாளராகவும், லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.
இயக்குநர் ராஜேஷ்.M இயக்கும் கதையில் சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் சேகர் இசையமைப்பாளராகவும், ஆகாஷ் தாமஸ் படத் தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் கதையில் தமிழ் A.அழகன் ஒளிப்பதிவாளராகவும், தென்மா இசையமைப்பாளராகவும், செல்வா.R.J. படத் தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் கதையில் சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராகவும், பிரேம் ஜி இசையமைப்பாளராகவும், வெங்கட் ராஜன் படத் தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவன தயாரிப்பாளர் G.டில்லி பாபு இந்தப் படம் குறித்து பேசும்போது, “எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான படங்களை தருவது மட்டும்தான். எங்கள் படங்களுக்கு ரசிகர்கள் தரும் பெரும் வரவேற்பும், பேராதரவும் எங்களுக்கு பெரும் பொறுப்புனர்வை தந்திருக்கிறது, தொடர்ந்து அவர்கள் கொண்டாடும் வகையிலான படங்களை தர நாங்கள் பாடுபடுவோம்.
அந்த வகையில் இப்போது நாங்கள் உருவாக்கும் இந் ‘விக்டிம்’ ஆந்தாலஜி திரைப்படத்தை ரசிகர்கள் விரும்பும்வகையில் இயக்குநர்கள் சிம்பு தேவன் , ராஜேஷ் M, பா. ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் உருவாக்கித் தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
‘விக்டிம்’ என்பது ஒரு குற்றசெயல் நடக்கும்போது அதில் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படும் நபரை குறிக்கும் சொல்லாகும். குற்றச் செயலால் ஒருவர் அடையும் உடல் பாதிப்பைவிட, மனதளவிலும் ஏற்படும் பாதிப்பென்பது மிகவும் கொடியதாகும்.
நம்மை நாம் கேள்வி கேட்டுக் கொண்டால் வாழ்வில் நாமும் ஒரு முறை ‘விக்டிமாக’ இருந்திருப்போம். காரணங்கள் வெவ்வேறானதாக இருக்கலாம், ஆனால் குற்றச் செயலால் நாம் அடையும் அழுத்தம், பயம், பதட்டம் அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றாகவே ஏற்பட்டிருக்கும். இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் கரு இந்த விக்டிமை மையப்படுத்தியதே ஆகும்.
தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளாக திகழும் இயக்குநர்கள் சிம்பு தேவன், ராஜேஷ் M, பா. ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் விக்டிம் கருவை அடிப்படையாக வைத்து தங்கள் பார்வையில் நான்கு ‘விக்டிம்’ கதைகளை அழகான வடிவில் தரவுள்ளார்கள்…” என்றார்.
The post நான்கு இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்’ appeared first on Touring Talkies.
]]>The post சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>முதலில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு, வழக்கம்போல ‘பிகு’ செய்து கொண்டிருந்த சிம்பு, கடைசியாக நடந்த சில, பல கட்ட கட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்த இடைவெளியில் ச்சும்மா இல்லாத சிம்பு தன்னுடைய உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். இதற்காகவே கேரளாவுக்கு இரண்டு முறை சென்று ஆயுர்வேத சிகிச்சையெல்லாம் பெற்று 100 கிலோவில் இருந்து தற்சமயம் 70 கிலோவாக உருமாறியுள்ளார்.
அதோடு, ‘மாநாடு’ படத்திற்கிடையே சுசீந்திரனின் படத்திலும் நடிக்க திடீரென்று ஒத்துக் கொண்டார். அதுலேயும் ஒரே ஷெட்யூலில் 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுவதால் தன்னுடைய போர்ஷன் முழுவதையும் ஒரே கட்டமாக நடித்துக் கொடு்க்கப் போவதாக வாக்குறுதியளித்தவர்.. இன்றைக்கு திண்டுக்கல்லில் அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் பாண்டிச்சேரியில் அடுத்த மாதம் துவங்கவிருக்கும் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து நடிக்கப் போகிறாராம் சிம்பு.
இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி கோவிலுக்கும் ஆன்மீகப் பயணமும் மேற்கொண்டிருக்கிறார்.
சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம்… அவரது ரசிகர்களுக்கும், அவரை வைத்து படமெடுக்கத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
சுசீந்திரனின் திரைப்படம், ‘மாநாடு’ திரைப்படம் இரண்டும் சிம்புவால் எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியானால்.. தயாரிப்பாளர்கள் கூட்டம் சிம்புவை மொய்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
“இனி எல்லாமே அவருடைய கைகளில்தான் உள்ளது…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
The post சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>The post பாண்டிச்சேரியில் சிம்பு appeared first on Touring Talkies.
]]>சிம்பு கதாநாயகனாக நடிக்கும் ‘மாநாடு’ படத்துடைய அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது.
நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவெடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி.
“வெங்கட் பிரபு எழுதி இயக்குகின்ற இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் டிசம்பருக்குள் முடிவடைந்துவிடும்” என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
The post பாண்டிச்சேரியில் சிம்பு appeared first on Touring Talkies.
]]>