The post திரைப்பட துறையில் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் ‘வள்ளி மயில்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>1980-களின் நாடகக் கலையின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இவ்விழாவினில் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி பேசும்போது, “குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் இயக்குநர் சுசீந்திரன். எனது நாவலை படித்துவிட்டு, அதை ‘அழகர்சாமியின் குதிரை’ என்ற படமாக மாற்றினார். இந்த ‘வள்ளி மயில்’ படத்தின் திரைக்கதையை வெகு நாட்களாகவே பேசி கொண்டிருந்தோம். கடுமையான உழைப்பில் உருவான கதை ‘ வள்ளி மயில்’. இந்தப் படம் திரைத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்..!” என்றார்.
நடிகை அறந்தாங்கி நிஷா பேசும்போது, ““சில படங்கள் பண்ணி இருந்தாலும், காமெடி கதாபாத்திரத்தில் என்னை வெளிப்படுத்திக் கொள்ள, எனக்கு பெரிய வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது.
கலைஞர்களின் பரிந்துரைகளுக்கு மரியாதை கொடுப்பவர் இயக்குநர். எனக்கு அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கும்.
விஜய் ஆண்டனி சார் மற்ற கலைஞர்களை பாராட்டும் குணம் கொண்டவர். தமிழ் சினிமாவிற்கு ஃபரியா எனும் சிறந்த நடிகை இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளார். ‘வள்ளி மயில்’ திரைப்படம் நாடக கலைஞர்களை போற்றும் ஒரு படமாக இருக்கும். இந்த படம் பெரிய வெற்றி பெறும்..!” என்றார்.
நடிகை ஃபரியா அப்துல்லா பேசும்போது, “நான் தியேட்டர் கலைஞராகத்தான் என் பயணத்தை தொடங்கினேன். சுசீந்திரனுடைய பொறுமைதான், இந்தக் கதை சிறப்பாக உருவாக காரணம். அவர் என்னிடம் கதை சொல்லும்போதே மியூசிக் எல்லாம் போட்டுக் காட்டினார், நான் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பித்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்..!” என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, “இந்தப் படத்தில் சுசீந்திரனிடமிருந்து நான் இயக்கத்தை கற்றுக் கொண்டேன். இயக்கத்தில் நானும் இறங்கியதால் நான் ஒவ்வொன்றையும் கவனித்திருக்கிறேன். படத்தை தரமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுசீந்திரன். இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அவர்களுடைய நடிப்பு திறமை அபாரமானது…!” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை நான்கு வருடங்களாக நான் எழுதி வந்தேன். இந்தப் படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இது எல்லோரும் எளிதில் ரிலேட் செய்து கொள்ளும் படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர்தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
மறைந்த மலையாள நடிகையான கல்பனாவின் மகள் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். கனி அகத்தியன் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். எனக்கு இந்தப் படம் முக்கியமான திரைப்படம். இமான் கடினமான உழைப்பாளி. அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும்…“ என்றார்.
The post திரைப்பட துறையில் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் ‘வள்ளி மயில்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post ‘வள்ளி மயில்’ முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், பாரதிராஜா, ‘புஷ்பா’ படப் புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, G.P.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இசை – டி.இமான், ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, படத் தொகுப்பாளர் – ஆண்டனி, கலை இயக்கம் – உதயகுமார், மக்கள் தொடர்பு – சதீஷ் AIM, விளம்பர வடிவமைப்பு – ட்யூனி ஜான்.
‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜீவா’ போன்ற பல வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களின் பெரு வரவேற்பை பெற்று வரும் இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
1980-களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இந்த ‘வள்ளி மயில்’ திரைப்படம் உருவாகிறது.
திண்டுக்கல் மாநகரில் 1980 காலக்கட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன.
மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது.
விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக, பழமையான சென்னையை கட்டமைக்கும் வகையில், பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னையை தொடர்ந்து டெல்லியிலும் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
The post ‘வள்ளி மயில்’ முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது appeared first on Touring Talkies.
]]>The post சத்யராஜ், விஜய் ஆண்டனி, பாரதிராஜா நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா மூவரும் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கு படமான ‘ஜதி ரத்னலு’ படத்தில் நாயகியாக நடித்த ஃபரியா அப்துல்லா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
மேலும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலரும் நடிக்கவுள்ளனர்.
எழுத்து, இயக்கம் : சுசீந்திரன், இசை : D.இமான், ஒளிப்பதிவு : விஜய் k.சக்கரவர்த்தி, படத் தொகுப்பு : ஆண்டனி, கலை இயக்கம் : K.உதய குமார், பாடல்கள் : யுகபாரதி, நடன இயக்கம் : ஷோபி, சண்டை பயிற்சி இயக்கம் : ஸ்டன் சிவா, உடைகள் வடிவமைப்பு : ராதிகா சிவா, பத்திரிகை தொடர்பு : ஜான்சன், விளம்பர வடிவமைப்பு : ட்யூனி ஜான், இணை தயாரிப்பு : கார்த்திக், தயாரிப்பு நிறுவனம்: நல்லுசாமி பிக்சர்ஸ், தயாரிப்பாளர் : தாய் சரவணன்.
1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக இத்திரைப்படம் உருவாகிறது.
இந்த ‘வள்ளி மயில்’ படத்தின் படப்பிடிப்பு இன்று திண்டுக்கல்லில் பூஜையுடன் துவங்கியது. தமிழக உணவு துறை அமைச்சர் சக்ரபாணி கிளாப் அடித்து இந்தப் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோவிலில் ஆரம்பமான இந்தப் படப்பிடிப்பு, திண்டுக்கல்லைச் சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது.
இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் விஜய் நடிகர் ஆண்டனி, நாயகியான ஃபரியா அப்துல்லா இருவரும் கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்து, சத்யராஜ், பாரதிராஜா, மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா ஆகியோரும் கலந்து கொண்டு நடிக்கவிருக்கிறார்கள்.
இதையடுத்து, கொடைக்கானல், தேனி, காரைக்குடி, கோபிசெட்டிபாளையம், பழநி ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
The post சத்யராஜ், விஜய் ஆண்டனி, பாரதிராஜா நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் சுசீந்திரன் ஆன்லைனில் நடிப்புப் பயிற்சி அளிக்கிறார்..! appeared first on Touring Talkies.
]]>தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சுசீந்திரன். ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’, ‘மாவீரன் கிட்டு’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘ஜீனியஸ்’, ‘கென்னடி கிளப்’, ‘சாம்பியன்’, ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்களை இயக்கியவர்.
தற்போது ‘ஏஞ்செலீனா’, ‘சிவா சிவா’ ஆகிய படங்களும் இவருடைய இயக்கத்தில் உருவாகி வெளியாக தயாராக உள்ளது.
தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தை மிக பயனுள்ளதாக ஆக்குவதற்காக இயக்குநர் சுசீந்திரன் ஆசிரியப் பணியை செய்யப் போகிறாராம்.
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது உதவி இயக்குநர்களாகப் பணியாற்றுபவர்களுக்கும், பணியாற்ற எண்ணியிருப்பவர்களுக்கும், நடிகர்களாகத் துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் ஆன்லைனிலேயே நடிப்புப் பயிற்சியினைத் தரப் போகிறார் இயக்குநர் சுசீந்திரன்.
இந்த ஆன்லைன் நடிப்புப் பயிற்சி வரும் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூன் 25-ம் தேதிவரையிலும் நடைபெறவுள்ளது. தினமும் மாலை 5 மணியில் இருந்து 6.30 மணிவரையிலும் இந்த வகுப்புகள் நடைபெறுமாம். இடையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினங்களாகும்.
பயிற்சி முடிந்த அடுத்த நாள் அதாவது ஜூன் 26-ம் தேதியன்று இயக்குநர் சுசீந்திரன் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பாராம்.
இந்த நடிப்புப் பயிற்சி வகுப்பில் சேர கட்டணமாக ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுமாம்.
இந்தப் பயிற்சி வகுப்பு நிறைவடைந்ததும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் தான் இயக்கப் போகும் அனைத்துப் படங்களிலும் இந்தச் சான்றிதழ் வைத்திருப்போருக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் இயக்குநர் சுசீந்திரன் அறிவித்திருக்கிறார்.
இந்தப் பயிற்சி வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகள் வழங்கும் நுழைவுக் கட்டணம் முழுவதும் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
The post இயக்குநர் சுசீந்திரன் ஆன்லைனில் நடிப்புப் பயிற்சி அளிக்கிறார்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஈஸ்வரன்’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post ‘ஈஸ்வரன்’ படத்தின் போஸ்டர், டீசருக்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது appeared first on Touring Talkies.
]]>மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ஒரு உத்தரவின்படி திரைப்படங்களில் வன விலங்குகளைப் பயன்படுத்தினால் அதற்கு விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து ‘ஆட்சேபணையில்லை’ என்னும் ஒப்புதல் கடிதத்தைப் பெற வேண்டும் என்பதுதான்.
இதற்காக எந்த விலங்கைப் பயன்படுத்துகிறோம்.. எத்தனை நாட்கள் பயன்படுத்துகிறோம்.. எப்படி நடிக்க வைக்கிறோம்.. படப்பிடிப்பு நடைபெறும் நாட்களில் கால்நடை மருத்துவர் உடன் இருக்கிறாரா போன்ற விவரங்களையெல்லாம் அளித்தால்தான் அந்த அனுமதி கடிதமே கிடைக்கும்.
தற்போது நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் திண்டுக்கல்லில் உருவானது ஈஸ்வரன் திரைப்படம்.
இந்தப் படத்தின் ஒரு காட்சியில் மரக் கிளை ஒன்றில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போலவும், அந்தப் பாம்பை சிம்பு தன் கையால் பிடித்து சாக்குப் பையில் போடுவது போலவும் காட்சி படமானது. இந்தக் காட்சியை படத்தின் விளம்பரத்திற்காக வீடியோவில் வெளியிட்டார்கள். அதுவே இப்போது வினையாகிவிட்டது.
“விலங்குகளை கிராபிக்ஸ் காட்சியில் காட்டினாலும் தடையில்லா சான்று பெற்ற பின்னரே பயன்படுத்த முடியும்…” என்ற விதி இருப்பதை மத்திய விலங்குகள் நல வாரியம் சுட்டிக் காட்டி, இது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க படக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
“அதுவரையிலும் ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை வெளியிடக்கூடாது” என்றும் உத்தரவிட்டுள்ளது மத்திய விலங்குகள் நல வாரியம்.
The post ‘ஈஸ்வரன்’ படத்தின் போஸ்டர், டீசருக்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது appeared first on Touring Talkies.
]]>The post சிம்பு-நிதி அகர்வால்-சுசீந்திரன் இணையும் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.
]]>The post சிம்பு-நிதி அகர்வால்-சுசீந்திரன் இணையும் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.
]]>The post சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார் என்பதும் உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத் துவக்கத்தில் பாண்டிச்சேரியில் துவங்கவுள்ளது.
இந்த இடைவெளியில் மிக சீக்கிரமாக முடிவு செய்யப்பட்ட இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் மின்னல் வேகத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.
‘மாநாடு’ படத்திற்குப் பின்பு சிம்பு நடிக்கவிருப்பது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில்.. இந்தப் படம் கன்னடத்தில் சென்ற ஆண்டு வெளியான மப்டி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கும் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார்.
இந்தப் படத்தை இயக்கவிருந்த இயக்குநர் நார்தன்தான் தற்போது மாற்றப்பட்டுள்ளாராம். சிம்புவின் படம் துவங்க காலதாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இயக்குநர் நார்தனே படத்திலிருந்து விலகிக் கொண்டார்.
இயக்குநர் நார்தன், கன்னடத்தின் ஸ்டார் நடிகரான யாஷ் நடிப்பில் மிகப் பெரிய பொருட்செலவில் கன்னடத்தில் எடுக்கவிருக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறாராம் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த இயக்குநருக்குப் பதிலாக இப்போது சிம்புவின் இந்தப் புதிய படத்தை இயக்கவிருப்பது கிருஷ்ணாவாம். இவர், ஞானவேல்ராஜா தயாரித்த முதல் படமான ‘சில்லுன்னு ஒரு காதல்’ மற்றும் ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது ஆரியை வைத்து ‘மானே, தேனே, பேயே’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
The post சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..! appeared first on Touring Talkies.
]]>The post சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>முதலில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு, வழக்கம்போல ‘பிகு’ செய்து கொண்டிருந்த சிம்பு, கடைசியாக நடந்த சில, பல கட்ட கட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்த இடைவெளியில் ச்சும்மா இல்லாத சிம்பு தன்னுடைய உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். இதற்காகவே கேரளாவுக்கு இரண்டு முறை சென்று ஆயுர்வேத சிகிச்சையெல்லாம் பெற்று 100 கிலோவில் இருந்து தற்சமயம் 70 கிலோவாக உருமாறியுள்ளார்.
அதோடு, ‘மாநாடு’ படத்திற்கிடையே சுசீந்திரனின் படத்திலும் நடிக்க திடீரென்று ஒத்துக் கொண்டார். அதுலேயும் ஒரே ஷெட்யூலில் 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுவதால் தன்னுடைய போர்ஷன் முழுவதையும் ஒரே கட்டமாக நடித்துக் கொடு்க்கப் போவதாக வாக்குறுதியளித்தவர்.. இன்றைக்கு திண்டுக்கல்லில் அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் பாண்டிச்சேரியில் அடுத்த மாதம் துவங்கவிருக்கும் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து நடிக்கப் போகிறாராம் சிம்பு.
இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி கோவிலுக்கும் ஆன்மீகப் பயணமும் மேற்கொண்டிருக்கிறார்.
சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம்… அவரது ரசிகர்களுக்கும், அவரை வைத்து படமெடுக்கத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
சுசீந்திரனின் திரைப்படம், ‘மாநாடு’ திரைப்படம் இரண்டும் சிம்புவால் எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியானால்.. தயாரிப்பாளர்கள் கூட்டம் சிம்புவை மொய்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
“இனி எல்லாமே அவருடைய கைகளில்தான் உள்ளது…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
The post சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>