The post அவருக்கே இவர் பாடம் எடுப்பாரு…பாலவை மிஞ்சிய இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>ஆனால் இவருக்கு மேலாக கண்டிப்பான இயக்குநர் ஹரி என்கிறார்கள்.அவரது இயக்கத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டால், அதில் வரும் நடிகர்கள் அனைவரும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
பெரிய நடச்சத்திரங்கள் சின்ன நட்சத்திரங்கள் என அவரிடம் பாரபட்சம் எல்லாம் கிடையாது. அவர் சொல்லும் ஹோட்டலில் தான் தங்க வேண்டும். அதேபோன்று அந்த ப்ரொடக்ஷனில் எந்த மாதிரி சாப்பாடுகள் வழங்கப்படுகிறது அதைத்தான் சாப்பிட வேண்டும். நடிகர் நடிகைகளுக்கு அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் சாப்பாடு தான் என பல நிபந்தனைகள் இவரிடம் இருக்கிறதாம்.
மேலும், நான் உங்களை நன்றாக கவனித்துக்கொள்கிறேன் எந்தக் கணக்கும் ஹரி கிட்ட செல்லுபடியாகாது. ஒரு நடிகர் ஒருமுறை என்னிடம், தனக்கு ஜிம் உள்ள ஹோட்டல் அறை வேண்டும் என்று கூறிகியிறார்.கிராமத்தில் சூட்டிங் எடுக்கிறோம் அது போன்ற வசதியான ஹோட்டல் எல்லாம் கிடைக்காது என்று சொல்லி அவர் புக் பண்ணிய ஹோட்டலில் தான் தங்க வைத்திருக்கிறார். மேலும், அவரது படத்தில் ஹீரோயினாக ஹரிக்கு நெருக்கமான நடிகரின் காதலி நடித்துள்ளார்.
அந்த சமயத்தில் படத்தின் ஹீரோ, அந்த நடிகரின் காதலியிடம் கொஞ்சம் நெருக்கமாக பழகி இருக்கிறாராம். இதை கவனித்த இயக்குனர் ஹரி படத்தின் அடுத்தடுத்த காட்சிகளில் இருவருக்கும் ஒன்றாக நடிக்கும் சீன் இல்லாதபடி படத்தையே எடுத்து முடித்தாராம். அந்த அளவுக்கு பயங்கரமான கண்டிப்பான இயக்குனர் பெரிய ஹீரோ என்பதெல்லாம் இவர் கிட்ட செல்லுபடி ஆகாதாம்.
The post அவருக்கே இவர் பாடம் எடுப்பாரு…பாலவை மிஞ்சிய இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>The post ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஷால் எப்போதும் போல இது நம்ப ஏரியா என்றவாறு சண்டக்கோழி, தாமிரபரணி படங்களில் எந்த மாதிரி ஆக்ஷனில் தெறிக்கவிட்டிருந்தாரோ அதேபோல் இந்த படத்திலும் பறக்கவிட்டு இருக்கிறார். பிரியா பவானி சங்கருக்கு இந்த படத்தில் டபுள் ஆக்ஷன். தனக்கு கொடுத்த ரோல்-ஐ சற்றும் குறைவின்றி நிறைவாக முடித்திருக்கிறார். சமுத்திரகனி மற்றும் கெளதம் மேனன் தங்களுக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்ய மெயின் வில்லனாக மாஸ் காட்டியுள்ளார் தெலுங்கு நடிகர் முரளி ஷர்மா.
படத்தின் நிறை என்னவென்று பார்த்தோம் என்றால், ஹரி இயக்கம் என்றாலே ஆக்ஷன் தான் அப்படி இருக்க ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டும் அளவுக்கு தாமிரபரணி படத்தை போல எமோஷனல் காட்சிகளில் க்ளாஸ் காட்டியுள்ளார்.பிரியா பவானி சங்கருக்கும் விஷாலுக்கும் இடையேயான உறவு என்ன என்பதில் வைத்திருக்கிறார் ஹரி ட்விஸ்ட்.பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன் என பல சண்டை இயக்குநர்கள் சேஸிங் சீன்களை அல்டிமேட்டாக கொடுத்துள்ளனர்.
படத்தின் குறை என்னவென்று பார்த்தோம் என்றால், ஹீரோயினை காப்பாற்ற எத்தனை பேர் வந்தாலும் விடாமல் பறக்கவிடும் ஹீரோவாக தோற்றமளிக்க இது கொஞ்சம் என்னடா இது என்றவாறு கேட்க்க தோன்றுகிறது.படத்தின் முதல் பகுதியில் தப்பை தட்டிக் கேட்கும் நாயகனாக காட்டி கதையை கடைசியில் நாயகியின் பக்கம் மொத்த படத்தையும் திருப்பி விட்டது படம் வலுவிலக்க காரணமாகிவிட்டது.
அதேபோல் யோகி பாபு காமெடி என்ற பெயரில் இந்த படத்தில மொக்கைப் போட ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பின்னணி எல்லாம் ஒருவிதத்தில் ஓகேவாக அமைந்துள்ளது. பாடல்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. ஹரி மற்றும் விஷாலின் கமர்ஷியல் படங்களை ரசிக்க கூடியவராக இருந்தால் இது ஒரு முறை பார்க்கும் படம்.
The post ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>The post தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… appeared first on Touring Talkies.
]]>இன்று படம் வெளியான நிலையில் நேற்று மாலைக்கு முன்னர் வரை பல திரையரங்கில் டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருக்கவே என்ன காரணம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்தை வெளியிட விடாமல் சதி செய்வதாக விஷாலே வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை கிளப்பியது.
தமிழ்நாட்டில் ரத்னம் திரைப்படத்தை திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறாங்க என்றும் இதுக்கு பேர் கட்ட பஞ்சாயத்து என நடிகர் விஷால் அதிரடியாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.இப்படி ரத்தமும் வியர்வையும் சிந்தி இந்த படத்தில் நடிச்சிருக்கேன். என்னுடைய நண்பர்கள் இந்த படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.இப்படி கடைசி நேரத்தில் இப்படி பண்ணால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும், கடைசி நேரத்தில் ஒரு கடிதத்தை கொடுத்து விட்டார்கள் என படத்திற்கு தடை விதிப்பது சரியான நடைமுறை அல்ல என விஷால் எச்சரித்து பேசியிருந்தார்.
குறிப்பிட்ட திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியா திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் கடிதம் ஒன்றை கடைசி நேரத்தில் கொடுத்தால் படத்தை வெளியிடாமல் தடுப்பீங்களா? எனவும் காலையில் இருந்து உங்களுக்கு கொள்ள போன் செய்கிறேன்.ஆனால் நீங்கள் வெயிட்டிங்கிலேயே வைத்து வருகிறீர்கள். பண்ணுங்க, எவ்ளோ பண்ண முடியுமோ பண்ணுங்க, என்று கூறியிருந்தார் எனக்கே இந்த நிலைமை அப்படி என்றால் மற்ற சாதாரண நடிகர்களுக்கு என்ன நிலை தமிழ் சினிமாவில் தெரிந்து கொள்ளட்டும் என்று பேசியிருந்தார்.
அதன்பின்னர், நேற்று மாலை ஒரு வழியாக பிரச்சினை தீர்ந்து இன்று திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரத்னம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
The post தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… appeared first on Touring Talkies.
]]>The post விமான பணிப்பெண்களின் விருப்பத்தை தெரிந்து கொண்ட விஷால் appeared first on Touring Talkies.
]]>முதல் முறையாக இயக்குனராக அடியெடுத்து வைப்பதால் அந்தப் படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்று முடிவு செய்திருக்கும் விஷால், அந்தப் படத்தை வெளிநாடுகளில் அதிக காட்சிகளை படமாக்க இருக்கிறார்.
இதற்காக கடந்த மாதம் லொக்கேஷன் பார்க்க லண்டன், அஜர்பைஜான், மால்டா ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று படபிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்துள்ளார். அங்கிருந்து சென்னை திரும்பிய விஷாலுக்கு விமான பணிப் பெண்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனது வலைப்பக்கத்தில், “துபாய் வழியாக இந்தியா திரும்பும் போது விமான பணிப் பெண்களிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆசீர்வாதத்துக்கு நன்றி. காயத்ரி, டயானா, ரிஷிட், ரீனா, கிம் ஆகியோர் எனது நாளை உற்சாகமானதாக மாற்றினார்கள்.
எனக்காக வாழ்த்துக் குறிப்பு எழுதுவதற்கும் சாக்லேட் கொடுப்பதற்கும் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நிச்சயம் உழைப்பேன்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.
The post விமான பணிப்பெண்களின் விருப்பத்தை தெரிந்து கொண்ட விஷால் appeared first on Touring Talkies.
]]>The post தெற்கில் இருந்து வடக்கிற்கு வந்த ரத்னம் விஷால்! சிங்கம் 4 வருமா? அருவா வராதா? தகவல் சொன்ன ஹரி… appeared first on Touring Talkies.
]]>தாமிரபரணி, பூஜை படத்தில் இருக்கிற மாதிரி இல்லாம, இதுல ஃபேமிலியோட கான்செப்ட் குறைச்சுட்டு ஃபுல்லா ஆக்ஷன் இறக்கி இருக்கேன். இந்த படத்துல மொத்தம் எட்டு ஆக்சன் சீன்ஸ் இருக்கும். இது நிச்சயமா இளைஞர்களோட படமாக இருக்கும். கதைக்கு ஏத்த மாதிரி தான் ஆக்சன் சேர்த்திருப்பேன். இது முதன் முதலா நான் வட மாவட்டங்களை பின்னணியா வச்சு எடுத்திருக்க படம். என் படத்துல பெரிய விஷயம் அப்படின்னாலே பரபரப்பான கட்டிங், ஸ்பீடு, சேசிங், ஃபைட், தேடுவது இதெல்லாம் தான். ஆடியன்ஸ்க்கு இப்படி ஸ்பீடு இருந்தா தான் புடிக்கும் அப்படின்றதுக்கு ஏத்த மாதிரி இந்த படத்தை கொண்டு வந்து இருக்கேன்.
இதுல ஹீரோ பாசத்துக்கும் அரவணைப்புக்கும் ஏங்குற பையன் , அவன் ஒரு பொண்ண பார்த்ததிலிருந்து அவன் இழந்ததெல்லாம் அவனுக்கு கிடைச்ச மாதிரி உணருரான். அவன் அந்த பொண்ணோட எப்படி ட்ராவல் பண்றான் அவனுக்கு வர பிரச்சனை, அதிலிருந்து எப்படி வெளியே வந்தான் அப்படின்றது தான் இந்த படத்தோட கதை. இதுல நிறைய திருப்பங்கள் இருக்கும், யாரும் கைல எடுக்காத ஒரு பிரச்சனையை நான் இதுல எடுத்துருக்கேன். இதில் வர சண்டை காட்சி நீங்க சீட் நுண்ணிக்க வந்து தான் பாக்குற மாதிரி இருக்கும். இது என்னுடைய ஸ்டைல்ல நிஜமான கமர்சியலா படமா அமையும்.
சினிமால கதை நல்லா அமையனும், நல்ல புரடுயூசர் வேணும், அப்படி இருக்கிறப்போ ஹீரோவுக்கு நல்ல ஹீரோயினி அமையும் அப்படின்றது தான் நான் எதிர்பார்த்தேன். ஒரு தமிழ் பொண்ணு நடிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு புரிஞ்சுகிட்டு நல்ல தமிழ் தெரிஞ்ச பொண்ணவும் புரிஞ்சு நடிக்கிற பொண்ணாவும் பவானிசங்கர் கண்டிப்பா இருப்பாங்க அப்படின்னு அவங்கள தேர்வு செஞ்சேன்.நடிப்பு நடனம் அப்படின்னு எல்லா விஷயத்திலும் உழைக்குற பொண்ணு அவங்க. ஏன் கடைசி படமா நான் யானை படுத்துக்கோ இவங்க தான் ஹீரோயின்.
யோகி பாபுவ மண்டேலா படம் பார்த்ததிலிருந்து எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. என் படத்துல அவருக்கு வேற வேற கேரக்டர் கொடுத்து அழகு பார்த்துட்டு இருக்கேன். சமுத்திரக்கனி அவர்கள ரொம்ப நாளாக கவனிச்சேன். கொடூரமான வில்லனா, அன்பான அப்பாவா, அருமையான புருஷனா என எல்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி அருமையா வந்து நடிப்பாரு.
என்ன கண்டிப்பான டைரக்டர் அப்படின்னு சொல்ல காரணம் இங்க பணம் அதிகமா புழங்குற இடம்.காலம் பொன்னானது, கமர்சியலா படம் பண்ணும் போது ஹீரோக்களுக்கு என் மேல மரியாதை அதிகமாக இருக்கு. அவங்க சூட்டிங்கு லேட்டா வந்தா நான் விரும்ப மாட்டேன் அப்படின்ற விஷயம் அவங்களுக்கு நல்லாவே தெரியும். சூர்யாவோட அஞ்சு படம், விஷாலோட மூணு படம், விக்ரமோட மூணு படம் அடுத்தடுத்து தனுஷ், சிம்புனு நம்மகிட்ட விஷயம் இல்லாட்டி வருவாங்களா? சக்சஸ் ஃபுல் ஆர்டிஸ்ட் வைத்து நான் சக்ஸஸ்ஃபுல்லா படத்தைக் கொடுத்து இருக்கேன்.
சிங்கம் 4 மற்றும் அருவா வருமா அப்படின்ற கேள்விக்கு, எங்க போனாலும் இத மட்டுமே நிறைய கேட்டுட்டு இருக்காங்க. சிங்கம் படத்த ஹாட்ரிக் அடிக்கிற மாதிரி அடிச்சாச்சு. இதுக்கு அப்புறம் ஒரு பிரமாதமான போலீஸ் ஸ்டோரி ரெடியா இருக்கு. அது யாருக்கு அமையப்போகுதுனு தெரியல. சிங்கம் 4 பத்தி காலம் தான் பதில் சொல்லும். அருவா படத்துக்கு பிளான் அப்படியே இருக்கு. நீங்களே பாருங்க சிங்கம் 4 வைக்காம அருவானு வச்சிருக்கோம். வேறொரு புது படத்தை ஆரம்பிக்கிறோம் அப்படின்னா அதைப்பற்றி சொல்ல இது சரியான நேரமா இருக்காது. எல்லாரும் நினைக்கிற மாதிரி எனக்கும் சூர்யாவிற்கும் பிரச்சனை அப்படின்றது எதுவுமே இல்ல. நாங்க ரெண்டு பேரும் அன்பாகவும் நட்பாகவும் இருக்கிறோம். மறுபடியும் சூழல் வரும் போது அருவா ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார்.
The post தெற்கில் இருந்து வடக்கிற்கு வந்த ரத்னம் விஷால்! சிங்கம் 4 வருமா? அருவா வராதா? தகவல் சொன்ன ஹரி… appeared first on Touring Talkies.
]]>The post ’ரத்னம்’ வெளியானது விஷால் நடிக்கும் புதிய பட அப்டேட்! appeared first on Touring Talkies.
]]>தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்த சமயம் குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக அப்பகுதி மக்கள் சொன்னதும் உடனே 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார் விஷால்.
இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியகியுள்ளது. விஷால் கோபத்துடன் லாரியில் இறங்கிவந்து அரிவாள் எடுத்து அங்கு கட்டிபோட்டிருக்கும் ஒருவரை வெட்டுகிறார். இதை பார்க்கும் ஹரி இயக்கத்தில் வெளியான தாமிரபரணி படத்தை போன்று அதிரடியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.ரத்னம் என தலைப்பு வைக்கபட்டுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
The post ’ரத்னம்’ வெளியானது விஷால் நடிக்கும் புதிய பட அப்டேட்! appeared first on Touring Talkies.
]]>The post படப்பிடிப்பு தளத்தில் விஷால் கொடுத்த விருந்து.! appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஷால் அவர்களின் படப்பிடிப்பில் எப்போதும் கடைநிலை ஊழியர் தொடங்கி பெரிய நட்சத்திரங்கள் உட்பட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை நடிகர் விஷால் உறுதியாக கடைபிடித்து வருகிறார்.
மேலும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தொடங்கி வைத்த இந்த அனைவரும் சமம் நாமும் தொடர வேண்டும் என 10 வருடங்களுக்கு முன்பே அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்று தன்னுடைய படப்பிடிப்பிலும் தன்னுடைய அலுவலகத்திலும் நடிகர் விஷால் உத்தரவாக பிறப்பித்து இருந்ததது குறிப்பிடத்தக்கது.
The post படப்பிடிப்பு தளத்தில் விஷால் கொடுத்த விருந்து.! appeared first on Touring Talkies.
]]>The post “தாமிரபரணி’, ‘ஐயா’ போல இந்த ‘யானை’ படமும் இருக்கும்” – இயக்குநர் ஹரி விளக்கம் appeared first on Touring Talkies.
]]>Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக, நண்பர்கள் முன்னிலையில் சமீபத்தில் ஜி.ஆர்.டி. கிராண்டேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர் ஹரி பேசும்போது, “நானும், அருண் விஜய்யும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இப்போது இந்தக் கதைதான் நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது.
இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல்தான். இந்த படம் பெரிய பட்ஜெட் படம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான். அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தை கொஞ்சம் வேறு மாதிரி எடுக்க விரும்பினேன். பல மொழி இயக்குநர்களிடம் பல விஷயத்தை கற்றுக் கொண்ட பின்னர்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். நான் ‘தாமிரபரணி’, ‘ஐயா’ போன்ற படங்களை எடுத்தபோது பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றி இப்படத்தை உருவாக்கியுள்ளேன்.
படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகள் உள்ளன. எல்லோரும் இணைந்து ஒத்துழைத்து பணியாற்ற வேண்டிய காட்சிகள் இருந்தது. அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.
சமுத்திரகனி சார் ஒரு உதவி இயக்குநர் போல் இந்தப் படத்தில் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்பகால படங்கள் போல் இப்படம் இருக்கும்…” என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசும்போது, “நானும், இயக்குநர் ஹரியும் ரொம்ப நாளாக பணியாற்ற விரும்பினோம். இவ்வளவு பெரிய பொருட் செலவில், பலமான தொழில் நுட்ப கலைஞர்களுடன் படத்தை உருவாக்க பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் அணுகியது தயாரிப்பாளர் சக்தி ஸாரைத்தான். இந்தப் படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். அது இவருக்கு இருந்தது. இதற்காக தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய நன்றி.
இந்தப் படம் காமெடி நிறைந்த, பொழுது போக்கு திரைப்படம். ரொம்ப நாட்கள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். ஹரி சார் எனக்கு பெரிய உதவியாக இருந்தார். ஹரி சார் கண்டிப்பான மாஸ்டர். அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. அவருடைய வேகம் எங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இது ஹரி சார் தன்னுடைய வழக்கமான பேட்டர்னில் இருந்து மாறி எடுத்திருக்கும் படம்.
சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம்தான், எனது கதாபாத்திரம். படத்தில் பல காட்சிகளில் உணர்ந்து அந்த பாத்திரமாக மாறி நடித்திருக்கிறேன். படத்தின் ஆக்சன் காட்சிகள்தான் பெரிய சவாலாக இருந்தன. படப்பிடிப்பின்போது எனக்கு அடிபட்டது. அதையும் தாங்கிக் கொண்டுதான் படத்தை எடுத்து முடித்தோம்.
இந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். படத்தை அட்டகாசமாக எடுத்துக் கொடுத்துள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷூடன் இது எனக்கு முதல் படம்.
மேலும் படத்தில் நடித்த அனைவருமே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த படம் அனைவரையும் எளிதாக ஈர்க்கும் படமாக இருக்கும். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும் என நம்புகிறோம்…” என்றார்.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசும்போது, “இவ்வளவு பெரிய படத்தை சீக்கிரம் முடிக்க காரணம் இயக்குநர் ஹரி சார்தான். அவருடைய வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. அவருடைய உழைப்பை கணக்கிடவே முடியாது. அருண் சாருக்கு நன்றி. ஹரி சார் உடைய வேகத்திற்கு, ஒளிப்பதிவாளர் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றியுள்ளார்.
ராதிகா மேடம், ஐஸ்வர்யா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது பெரிய மகிழ்ச்சி. சமுத்திரக்கனி, ‘தலைவாசல்’ விஜய் போன்ற கலைஞர்களின் நடிப்பை பார்த்தது பெரிய அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பெரிய ரசிகை நான். இந்தப் படம் ஹரி சார் பாணி படமாக இருக்காது. இது மிக நல்லதொரு உணர்வுபூர்வமான படம்…” என்றார்.
The post “தாமிரபரணி’, ‘ஐயா’ போல இந்த ‘யானை’ படமும் இருக்கும்” – இயக்குநர் ஹரி விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post அருண் விஜய்-ஹரி கூட்டணியின் ‘யானை’ பட பாடல் ஜனவரி 13-ல் வெளியாகிறது. appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசை – G.V.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு – கோபிநாத், படத் தொகுப்பு – அந்தோணி,
கலை இயக்கம் – மைக்கேல், சண்டை இயக்கம் – அனல் அரசு, நடன இயக்கம் – பாபா பாஸ்கர், தினா, CEO – G.அருண்குமார், இணை தயாரிப்பு – சந்தியா கிஷோர்குமார்.
நிறுவனம் – டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ், தயாரிப்பு – வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்.
நடிகர் அருண் விஜய் இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன் அட்டகாசமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி.
இப்படத்திற்காக இராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி இந்த ‘யானை’ படம் தனது ரசிகர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 13-ம் தேதியன்று காலை பாடல் அறிவிப்பு குறித்தான போஸ்டரை வெளியிடுகின்றனர். அன்று மாலை 5 மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகிறது.
The post அருண் விஜய்-ஹரி கூட்டணியின் ‘யானை’ பட பாடல் ஜனவரி 13-ல் வெளியாகிறது. appeared first on Touring Talkies.
]]>The post கடைசியாக இணைந்துவிட்டனர் மாமனும், மச்சானும்..! appeared first on Touring Talkies.
]]>சூர்யாவை வைத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ‘அருவா’ படத்தை இயக்க முழுக் கதை, திரைக்கதை, வசனத்துடன் தயாராகத்தான் இருந்தார். ஆனால், அவர் அந்தப் படத்தின் கதை சூர்யாவுக்குப் பிடிக்காததால்.. அந்த பிராஜெக்ட்டை அவர் கை கழுவினார். இந்தப் படத்துக்குக் கொடுத்த கால்ஷீட்டை பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்குக் கொடுத்துவிட்டாராம் சூர்யா.
சூர்யா இருக்கும் தைரியத்தில் விஜய்யிடமும், விக்ரமிடம்கூட போகாமல் இருந்த ஹரிக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. இத்தனை மாதங்கள் காத்திருந்தது முழுக்க வீணாகிப் போன கோபத்தில் இருந்தார் ஹரி.
இந்தக் கோபத்தைத்தான் “சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகும்…” என்று சூர்யா சொன்னவுடன், உடனேயே சூர்யாவைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஹரி. இருந்தும் சூர்யா அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இடையில் தான் கையில் வைத்திருக்கும் பட்ஜெட்டுக்கு ஏற்றாற் போன்ற ஹீரோக்களைத் தேடிய ஹரிக்கு ஏமாற்றமே கிடைத்தது. விஜய்யின் பக்கத்திலேயே போக முடியவில்லை. விக்ரமும் இப்போ என் ஸ்டைலே மாறிருச்சு என்று சொல்லி எஸ்கேப்பாக, தனித்து நின்றார் ஹரி.
இப்போது இவருக்குக் கை கொடுத்திருப்பது இவருடைய மைத்துனரான நடிகர் அருண் விஜய். இயக்குநர் ஹரி, தனது இத்தனை வருட கால திரையுலக வாழ்க்கையில் அருண் விஜய்யை வைத்து ஒரு படம்கூட இயக்கியதில்லை. அருண் விஜய்யை ஒரு படத்தில்கூட நடிக்க வைத்ததும் இல்லை.
இப்படியிருக்க நாம் ஏன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று நினைத்த மாமனும், மச்சானும், பட்ஜெட்டை கூற, குறைய மாற்றிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து இதே ‘அருவா’ படத்தைத் துவக்குகிறார்களாம்.
‘தடம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றியிருக்கும் இடம் நோக்கியெல்லாம் ஓடத் துவங்கியிருக்கிறார் அருண் விஜய்.
வெற்றி கிட்டட்டும்..!
The post கடைசியாக இணைந்துவிட்டனர் மாமனும், மச்சானும்..! appeared first on Touring Talkies.
]]>