The post தலைவர் 170: அமிதாப்புக்கு ஒரு நாளைக்கு 10000000 சம்பளமா? appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் இந்த படத்துக்காக அமிதாப் பச்சன் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இதற்காக அவருக்கு ரூ.15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது அதாவது ஒரு நாளைக்கு ரூ. ஒரு கோடி ரூபாய் சம்பளமாம்.
The post தலைவர் 170: அமிதாப்புக்கு ஒரு நாளைக்கு 10000000 சம்பளமா? appeared first on Touring Talkies.
]]>The post “முதல்ல உங்களால எங்களுக்கு கொடுங்க!”: விஜய் தேவரகொண்டாவுக்கு பஞ்ச் கொடுத்த விநியோகஸ்தர் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘வேர்ல்டு ஃபேமஸ் லவர்’ படத்தின் விநியோஸ்தரான அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்துள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: “அன்புள்ள விஜய் தேவரகொண்டா, ‘வேர்ல்டு ஃபேமஸ் லவர்’ படத்தை விநியோகம் செய்ததால் நாங்கள் ரூ.8 கோடி பணத்தை இழந்தோம். ஆனால் அதுபற்றி யாரும் பேசவில்லை. இப்போது நீங்கள் உங்களது பெரிய மனதால் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்குகிறீர்கள். எங்களது வெளியீட்டாளர்கள் மற்றும் விநியோகதஸ்கர்களின் குடும்பங்களையும் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
கிராந்தி மாதவ் இயக்கிய ‘வேர்ல்டு ஃபேமஸ் லவர்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேதரின் தெரசா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வி அடைந்தது.
The post “முதல்ல உங்களால எங்களுக்கு கொடுங்க!”: விஜய் தேவரகொண்டாவுக்கு பஞ்ச் கொடுத்த விநியோகஸ்தர் appeared first on Touring Talkies.
]]>The post ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆன ஆதிபுருஷ்! appeared first on Touring Talkies.
]]>சச்செத் – பரம்பரா இசையமைத்துள்ளார்.
படத்தில் இடம்பெற்றுள்ள ராம் சீதாராம் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் 170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகி உள்ளது. பிபள் மீடியா கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை வாங்கியிருக்கிறது. மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டரிகல் உரிமை, வெளிநாட்டு உரிமை, சேட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமை ஆகியவை உள்ளன.
ஆகவே, ரிலீஸ் ஆவதற்கு முன்பே, அதிகமாக வருமானம் ஈட்டிய படம் என்ற பெருமையை ஆதிபுருஷ் பெற உள்ளது.
The post ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆன ஆதிபுருஷ்! appeared first on Touring Talkies.
]]>The post பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் ரூ.204 கோடி? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் நியூயார்க் நகரில் நடந்த மிகப்பெரிய பேஷன் ஷோ நிகழ்ச்சியான மெட் காலாவில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த வைர நெக்லசும், ஆடையும் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக அவர் அணிந்து வந்த நெக்லஸ் பற்றியே பலரும் பேசினார்கள். இது பல்கேரியாவை சேர்ந்த 11.6 கேரட் டைமண்ட் நெக்லஸ் வகை என்று கூறப்படுகிறது.
இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.204 கோடி என்றும் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
The post பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் ரூ.204 கோடி? appeared first on Touring Talkies.
]]>The post “ஒரு கோடி ரூபாய் வாங்கிய போது..!”: ராஜ்கிரண் நினைவலை appeared first on Touring Talkies.
]]>இருபது வருடங்களுக்கு முன்பாக, என்னப் பெத்த ராசா படத்தில் முதன் முதலாக நடித்ததில் இருந்து இன்று வரை, மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நடிகராக உள்ளார் ராஜ்கிரண். நாயகனாக மட்டுமின்றி, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மனதில் நிற்பவர். தற்போது இவரது நடிப்பில் வெளியாகி உள்ள, ‘பட்டத்து அரசன்’ படமும் ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் ராஜ்கிரண், தான் முதன் முதல் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். அவர், “நான் 16 வயதில் சென்னைக்கு வந்து முதன்முதலில் வாங்கிய சம்பளம் 4 ரூபாய் 50 பைசா. அப்போது நான் தினக்கூலியாக இருந்தேன். பிறகு, என்னுடைய உழைப்பையும், நேர்மையையும் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனியிலேயே கிளர்க்காக பதவி உயர்வு கொடுத்தார்கள். அப்போது மாதம் 150 ரூபாய் சம்பளம். அடுத்து 170 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். அந்த ஒரு கம்பெனியில் தான் நான் வேலை பார்த்தேன்.
இதையடுத்து சொந்தமாக விநியோக கம்பெனி ஆரம்பித்து படிப்படியாக சினிமாவில் வளர்ந்தேன். அதன்பின் நானே படம் இயக்கி நடித்தேன். அதெல்லாம் பெரிய அளவில் ஹிட் ஆகின. அதையடுத்து என்னை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்காக நடிக்க அழைத்தபோது 1 கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பளமாக தருவதாக சொன்னார்கள். இதை என் உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக தான் பார்த்தேன். 4 ரூபாய் 50 பைசா சம்பளம் வாங்கும்போது என்ன உணர்வு இருந்ததோ அதே தான் ஒரு கோடி சம்பளம் வாங்கும் போதும் இருந்தது” என கூறினார் ராஜ்கிரண்.
ஞானியைப் போன்ற மனநிலை!
The post “ஒரு கோடி ரூபாய் வாங்கிய போது..!”: ராஜ்கிரண் நினைவலை appeared first on Touring Talkies.
]]>