Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
complaint – Touring Talkies https://touringtalkies.co Fri, 13 Oct 2023 04:13:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png complaint – Touring Talkies https://touringtalkies.co 32 32 குடிபோதையில் டார்ச்சர்: போலீஸில் நடிகை புகார் https://touringtalkies.co/actress-divya-prabha-alleges-harassment-on-flight-files-complaint/ Fri, 13 Oct 2023 04:13:23 +0000 https://touringtalkies.co/?p=37095 பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழில் கயல், கோடியில் ஒருவன் படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று முன் தினம் மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்குத் திரும்பினார். அப்போது, இவரது பக்கத்து இருக்கையில் இருந்த நபர் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், விமானப்பணிப்பென் இருக்கையை மாற்றித்தந்ததோடு விட்டுவிட்டார் எனவும் கூறினார். இது குறித்து தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குடிபோதையில் டார்ச்சர்: போலீஸில் நடிகை புகார் appeared first on Touring Talkies.

]]>
பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழில் கயல், கோடியில் ஒருவன் படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று முன் தினம் மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்குத் திரும்பினார்.

அப்போது, இவரது பக்கத்து இருக்கையில் இருந்த நபர் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், விமானப்பணிப்பென் இருக்கையை மாற்றித்தந்ததோடு விட்டுவிட்டார் எனவும் கூறினார்.

இது குறித்து தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குடிபோதையில் டார்ச்சர்: போலீஸில் நடிகை புகார் appeared first on Touring Talkies.

]]>
ஊழல்!:  விஷால் புகாருக்கு மத்திய அரசு பதில் https://touringtalkies.co/corruption-centerl-government-response-to-vishals-complain/ Sat, 30 Sep 2023 04:21:01 +0000 https://touringtalkies.co/?p=36754 ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘  ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்தி டப்பிங்கை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்தோம்.  இதை இரு  தவணைகளாக ராஜன் என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தினோம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” […]

The post ஊழல்!:  விஷால் புகாருக்கு மத்திய அரசு பதில் appeared first on Touring Talkies.

]]>
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘  ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்தி டப்பிங்கை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்தோம்.  இதை இரு  தவணைகளாக ராஜன் என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தினோம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில் “அரசாங்கம் ஊழலை சற்றும் பொறுத்துக் கொள்ளாது.
புகார் குறித்து விசாரிக்க, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ர் இன்றே மும்பைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.

மேலும், சென்சார் போர்டு குறித்த புகார் இருந்தால் jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்” என கூறப்பட்டு உள்ளது.

The post ஊழல்!:  விஷால் புகாருக்கு மத்திய அரசு பதில் appeared first on Touring Talkies.

]]>
கொலை மிரட்டல் :நடிகர் பிரகாஷ்ராஜ் போலீசில் புகார் https://touringtalkies.co/death-threats-are-coming-actor-prakashraj-has-filed-a-police-complaint/ Fri, 22 Sep 2023 04:09:20 +0000 https://touringtalkies.co/?p=36479 நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கர்நாடகா மாநிலம் கலபுரகியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டு பேசும்போது, சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது இந்தநிலையில், பெங்களூருவில் உள்ள அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த […]

The post கொலை மிரட்டல் :நடிகர் பிரகாஷ்ராஜ் போலீசில் புகார் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கர்நாடகா மாநிலம் கலபுரகியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டு பேசும்போது, சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது

இந்தநிலையில், பெங்களூருவில் உள்ள அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘சனாதன தர்மம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் யூ-டியூபில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கொலை மிரட்டல் :நடிகர் பிரகாஷ்ராஜ் போலீசில் புகார் appeared first on Touring Talkies.

]]>
“கவர்ச்சிப் படங்கள்!”  போலீசில் பாலா புகார்! https://touringtalkies.co/some-one-ask-for-sexy-pictures-in-my-name-bala-complaint-to-the-police-director-fake-instagram-account/ Wed, 20 Sep 2023 01:38:56 +0000 https://touringtalkies.co/?p=36412 இயக்குநர் பாலாவின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க கோரி சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அவரது தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து  பாலா தரப்பு அளித்த புகாரில்,  “பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு யாரோ ஒருவர் முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.  திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில்  இன்பாக்சில் பேசுகிறார். தவிர  கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார். இதுகுறித்து […]

The post “கவர்ச்சிப் படங்கள்!”  போலீசில் பாலா புகார்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பாலாவின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க கோரி சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அவரது தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து  பாலா தரப்பு அளித்த புகாரில்,  “பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு யாரோ ஒருவர் முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.  திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில்  இன்பாக்சில் பேசுகிறார். தவிர  கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார். இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இயக்குநர் கவனத்துக்கு வந்தன.

சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

The post “கவர்ச்சிப் படங்கள்!”  போலீசில் பாலா புகார்! appeared first on Touring Talkies.

]]>
“ ஏமாற்றிவிட்டனர்..!:  இயக்குனர், தயாரிப்பாளர் மீது மோசடி புகார்! https://touringtalkies.co/they-cheated-fraud-complaint-against-director-producer/ Wed, 09 Aug 2023 23:48:08 +0000 https://touringtalkies.co/?p=35184 நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தாயை பிரிந்து வந்த ரகு, பொம்மி ஆகிய 2 குட்டி யானைகளை பாகன் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோர் பராமரித்து வளர்த்து வந்தனர். இதையறிந்த கார்த்தகி கொன்சால்வேஸ் என்ற இயக்குனர்   குட்டி யானைகளை வளர்த்த விதத்தை 2 ஆண்டுகளாக வனப்பகுதியில் தங்கி ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் ஆவணபடமாக எடுத்தார்.  இது ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி, ஜனாதிபதி […]

The post “ ஏமாற்றிவிட்டனர்..!:  இயக்குனர், தயாரிப்பாளர் மீது மோசடி புகார்! appeared first on Touring Talkies.

]]>
நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தாயை பிரிந்து வந்த ரகு, பொம்மி ஆகிய 2 குட்டி யானைகளை பாகன் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோர் பராமரித்து வளர்த்து வந்தனர்.

இதையறிந்த கார்த்தகி கொன்சால்வேஸ் என்ற இயக்குனர்   குட்டி யானைகளை வளர்த்த விதத்தை 2 ஆண்டுகளாக வனப்பகுதியில் தங்கி ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் ஆவணபடமாக எடுத்தார்.  இது ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி ஆகியோர், முதுமலைக்கு வந்து, பாகன் தம்பதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு லட்ச ரூபாய் பரிசளித்தார்.

இந்த நிலையில் ஆவணப்படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு பாகன் தம்பதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.அதில், “ வயதான காலத்தில் எங்களுக்கு நடக்க கூட முடியாத நிலையிலும் கஷ்டத்தை பொறுத்து கொண்டு, காட்டில்  இரவு பகல் பாராமல் நடித்தோம். படம் முடிந்ததும் எங்களுக்கு வீடு, பணம், நிலம், பேரக் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் எதுவுமே தரவில்லை. இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்டால், ‘கொஞ்சம் பிசியாக இருக்கிறேன். உங்கள் வங்கி கணக்கில் பணம் போட்டு விட்டேன்’ என்கிறார்.  ஆனால் போடவில்லை”  என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆஸ்கர் விருது காரணமாக  பட தயாரிப்பாளர், இயக்குனருக்கு ரூ.7 கோடி  கிடைத்ததாக  தெரிகிறது.

The post “ ஏமாற்றிவிட்டனர்..!:  இயக்குனர், தயாரிப்பாளர் மீது மோசடி புகார்! appeared first on Touring Talkies.

]]>
இளையராஜா மீது இன்னொரு புகார்! https://touringtalkies.co/another-complaint-against-ilayaraja-music-director-ar-rahman-minmini-singer-roja-chinna-chinna-aasai/ Mon, 26 Jun 2023 01:44:15 +0000 https://touringtalkies.co/?p=33788 இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த பல பாடல்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஆனாலும் ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அவரது வழக்கம். இந்த நிலையில் அவர் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த முதல் திரைப்படம் ரோஜா. இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்! இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. இதில் ஒன்று,  சின்ன சின்ன ஆசை பாடல். இப்பாடலை மின்மினி பாடியிருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் மலையாள இசை […]

The post இளையராஜா மீது இன்னொரு புகார்! appeared first on Touring Talkies.

]]>
இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த பல பாடல்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஆனாலும் ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அவரது வழக்கம்.

இந்த நிலையில் அவர் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த முதல் திரைப்படம் ரோஜா. இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்! இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. இதில் ஒன்று,  சின்ன சின்ன ஆசை பாடல். இப்பாடலை மின்மினி பாடியிருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் மலையாள இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மின்மினி,  “ஏற்கெனவே இளையராஜா இசையில் நான் பாடி வந்தேன். ஆனாலும்  சின்ன சின்ன ஆசை பாடல் தான் எனக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி தந்தது. ஆனால், ஏ ஆர் ரகுமானின் இசையில்  அந்த பாடலை பாடிய பிறகு இளையராஜா எனக்கு வாய்ப்பு வழங்கவே இல்லை” என்றார்.

இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post இளையராஜா மீது இன்னொரு புகார்! appeared first on Touring Talkies.

]]>
“நடிகரால் உயிருக்கு ஆபத்து!”: மனைவி புகார்! https://touringtalkies.co/danger-to-life-by-actor-saravan-wife-complains/ Sat, 13 May 2023 02:37:22 +0000 https://touringtalkies.co/?p=32431 நடிகர் சரவணனால் உயிருக்கு ஆபத்து என அவரது மனைவி சூர்யாஸ்ரீ முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதில், “இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம்.  ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகளே இல்லை. அப்போது நான் சம்பாதித்து அவரைக் காப்பாற்றினேன்.  இதை அவரே  பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பேட்டிகளிலும்  சொல்லியுள்ளார்.  ஆனால் இப்போது, வேறு ஒருபெண்ணுடன் வாழ்கிறார்.  அவர்களால் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை”  என தெரிவித்து உள்ளார். ஆனால்  ஏற்கெனவே இவர், “எனக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கிறது. ஆகவே […]

The post “நடிகரால் உயிருக்கு ஆபத்து!”: மனைவி புகார்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சரவணனால் உயிருக்கு ஆபத்து என அவரது மனைவி சூர்யாஸ்ரீ முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அதில், “இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம்.  ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகளே இல்லை. அப்போது நான் சம்பாதித்து அவரைக் காப்பாற்றினேன்.  இதை அவரே  பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பேட்டிகளிலும்  சொல்லியுள்ளார்.  ஆனால் இப்போது, வேறு ஒருபெண்ணுடன் வாழ்கிறார்.  அவர்களால் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை”  என தெரிவித்து உள்ளார்.

ஆனால்  ஏற்கெனவே இவர், “எனக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கிறது. ஆகவே நான்தான் என் கணவருக்கு அந்த பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தேன்” என்று தெரிவித்து இருந்தார்.

 

The post “நடிகரால் உயிருக்கு ஆபத்து!”: மனைவி புகார்! appeared first on Touring Talkies.

]]>
ராகவா லாரன்ஸ் பட குழுவினர் மீது போலீஸில் புகார்! https://touringtalkies.co/police-complaint-against-rudhran-movie/ Sat, 13 May 2023 02:35:17 +0000 https://touringtalkies.co/?p=32428 ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான படம் ‘ருத்ரன்’. ‘ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்’ சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கியிருந்தார்.  இப்படம், நாளை ஓடிடியில் வெளியாகிறது. இந்த நிலையில் வடபழனி காவல் நிலையத்தில் நடன அமைப்பாளர் ராஜ் என்பவர் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில், “ருத்ரன் படத்துக்காக, நடனக் கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஆனால்அவர்களுக்கு  பல நாட்கள் ஆகியும் சம்பளம் தரவில்லை. திரைப்படத்தின் […]

The post ராகவா லாரன்ஸ் பட குழுவினர் மீது போலீஸில் புகார்! appeared first on Touring Talkies.

]]>
ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான படம் ‘ருத்ரன்’. ‘ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்’ சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கியிருந்தார்.  இப்படம், நாளை ஓடிடியில் வெளியாகிறது.

இந்த நிலையில் வடபழனி காவல் நிலையத்தில் நடன அமைப்பாளர் ராஜ் என்பவர் ஒரு புகாரை அளித்துள்ளார்.

அதில், “ருத்ரன் படத்துக்காக, நடனக் கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஆனால்அவர்களுக்கு  பல நாட்கள் ஆகியும் சம்பளம் தரவில்லை. திரைப்படத்தின் மேலாளர், பணம் தர முடியாது எனப் பேசினார்.

இது தொடர்பாக பலமுறை, திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி-யில்  புகார் அளித்திருந்தேன். ஆனால், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

10 நாட்கள் கடுமையாக உழைத்து நடனம் ஆடிய கலைஞர்களுக்கு சம்பளம் வாங்கி தராமல் மேனேஜர் மற்றும் ஏஜென்ட் ஸ்ரீதர் ஆகியோர் ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை வாங்கித் தர வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

The post ராகவா லாரன்ஸ் பட குழுவினர் மீது போலீஸில் புகார்! appeared first on Touring Talkies.

]]>
‘எஸ்.ஏ.சி. மோசடி!” :  விஜயகாந்தின் உதவியாளர் புகார் https://touringtalkies.co/sk-subbiah-complaint-over-sac/ Sun, 30 Apr 2023 06:24:58 +0000 https://touringtalkies.co/?p=32022 நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சி. மீது விஜயகாந்தின் முன்னாள் உதயவியாளர் எஸ்.கே.சுப்பையா,  மோசடி புகார் தெரிவித்து  செய்தியாளர்களிடம் பேசினார். அவர்,“ 1981 ஆம் ஆண்டிலிருந்து விஜயகாந்த்திற்கு உதவியாளராக இருந்தேன். கேப்டன் பிரபாகரன் படத்தில் இருந்து என்னை அவர் ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆக்கினார். அப்போதுதான் எனக்கும் எஸ் ஏ சந்திரசேகருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த பெரியண்ணா படத்தை நான் தயாரித்தேன். இந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார். எனக்கு […]

The post ‘எஸ்.ஏ.சி. மோசடி!” :  விஜயகாந்தின் உதவியாளர் புகார் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சி. மீது விஜயகாந்தின் முன்னாள் உதயவியாளர் எஸ்.கே.சுப்பையா,  மோசடி புகார் தெரிவித்து  செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர்,“ 1981 ஆம் ஆண்டிலிருந்து விஜயகாந்த்திற்கு உதவியாளராக இருந்தேன். கேப்டன் பிரபாகரன் படத்தில் இருந்து என்னை அவர் ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆக்கினார். அப்போதுதான் எனக்கும் எஸ் ஏ சந்திரசேகருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த பெரியண்ணா படத்தை நான் தயாரித்தேன். இந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார்.

எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் வரும் பணத்தை வைத்துக்கொண்டு தான் நான் வீட்டையும், மூன்று பெண் குழந்தைகளுக்கான டெபாசிட் பணத்தையும் போட்டு விட வேண்டும் என்று எஸ் ஏ சியிடம் விஜயகாந்த் சொல்லி இருந்தார்.

இதனால் பெரியண்ணா படம் எடுக்கும்போது ஏழு லட்சம் சம்பளமாக எஸ்ஏசி வாங்கி இருந்தார்.

படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின் அவர் 20 லட்சம் ஆக உயர்த்தி கொண்டார். மேலும், அதிகமாக அவர் பணத்தை கேட்டார். அதற்கும் நான் ஒப்புக்கொண்டேன்.

1999 ஆம் ஆண்டு ஏபிசி பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தில் என்னுடைய பணம் டெபாசிட் செய்வதாக எஸ் ஏ சி என்னிடம் கூறினார். அதோடு பிரைவேட் கம்பெனி சோபாவின் சொந்த பெரியப்பா பையன்னு தான் என்றும், அதில் முதலீடு செய்தால் தான் கேரண்டி என்றும் கூறினார். அதனால் நாங்கள் இருவரும் ஜாயிண்ட் அக்கவுண்டில் கையெழுத்து போட்டு 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்த முதல் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுத்தார்கள்.

பின்னர் அடுத்த மாதம் 15,000 ஆக வட்டியை குறைத்தார்கள். இதனால் எனக்கு பயம் ஏற்பட்டு பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அந்த பணத்தை தரவில்லை. அதோடு சங்கிலி முருகன், விக்ராந்தின் அப்பா சிவா, நடிகர் விவேக் என பலரும் எஸ் ஏ சியிடும் பணம் குடுத்து ஏமாந்து விட்டார்கள். அதோடு என்னுடைய பொண்ணுக்கு கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடந்து. இதனால் தொடர்ந்து அவரிடம் நான் பணம் கேட்டு வருகிறேன்.

ஆனால், அவர் பணம் திருப்பி தராமல் ஏமாற்றிக் கொண்டே வருகிறார். இதனால் தான் நான் பத்திரிகையாளர்களை சந்தித்தேன். மேலும், என்னுடைய மகளின் திருமண பத்திரிக்கை கொண்டு எஸ்ஏசி இடம் கொடுக்கும் போது வாட்ச்மேன் உள்ளே விட மறுத்துவிட்டார். இது எனக்கு ரொம்ப மன வேதனை அளிதத்து என்று கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்

 

 

The post ‘எஸ்.ஏ.சி. மோசடி!” :  விஜயகாந்தின் உதவியாளர் புகார் appeared first on Touring Talkies.

]]>
ஷாலு  சோகம்.. காவல்துறையில் புகார்! https://touringtalkies.co/shalu-shammu-complaint-in-police/ Sun, 16 Apr 2023 02:38:04 +0000 https://touringtalkies.co/?p=31615 நடிகை ஷாலு சம்மு புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தான் இவர் இரண்டு லட்ச ரூபாய் ஐபோன் ஒன்றை வாங்கி இருக்கிறார்.  இந்த நிலையில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி ஈஸ்டர் பண்டிகையை தன் நண்பர்களுடன் எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஷாலு கொண்டாடி இருக்கிறார். பின் பார்ட்டியை முடித்துவிட்டு இரவு 2 மணிக்கு தன் நண்பர்களுடன் சூளைமேட்டில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டிலேயே சாலு தங்கினார். அதற்குப்பின் அதிகாலை 10 மணிக்கு எழுந்து […]

The post ஷாலு  சோகம்.. காவல்துறையில் புகார்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஷாலு சம்மு புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தான் இவர் இரண்டு லட்ச ரூபாய் ஐபோன் ஒன்றை வாங்கி இருக்கிறார்.  இந்த நிலையில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி ஈஸ்டர் பண்டிகையை தன் நண்பர்களுடன் எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஷாலு கொண்டாடி இருக்கிறார்.

பின் பார்ட்டியை முடித்துவிட்டு இரவு 2 மணிக்கு தன் நண்பர்களுடன் சூளைமேட்டில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டிலேயே சாலு தங்கினார். அதற்குப்பின் அதிகாலை 10 மணிக்கு எழுந்து பார்த்தபோதுதான் இவருடைய ஐ போன் காணாமல் போனது தெரிந்திருக்கிறது. இதன் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஷம்மு,  நண்பர்களுடன் விருந்து உண்ட விடுதிக்கு சென்று பார்த்திக்கிறார். பின் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இருக்கிறார். பின் செல்போன் வாங்கிய ஷோரூம் என பல இடங்களில் தேடியிருக்கிறார். ஆனால், செல்போன் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து ஷாலு கடந்த 11ஆம் தேதி தன்னுடைய செல்போன் காணவில்லை கண்டுபிடித்து தரவேண்டும் என்று பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். போலீசார் செல்போனை எண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் செல்போனை மீட்கும் செயலியான ஐகிளவுட் மூலமாக தீவிரமாக தேடியிருக்கிறார். அப்போது சூளைமேட்டில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டில் செல்போன் கடைசியாக இருந்ததை கண்டுபிடித்திருக்கிறார். இதனால் தனது நண்பர்களின் சிலரின் மீது சந்தேகம் இருப்பதாக ஷாலு மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஷாலு நண்பர்களை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறது.

இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘நண்பன் மீதே இப்படி புகார் அளிப்பேன்னு நான் நினைக்கல’ என்று சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.

The post ஷாலு  சோகம்.. காவல்துறையில் புகார்! appeared first on Touring Talkies.

]]>