The post சின்ன திரையில் என்ட்ரியாகும் வைகைப்புயல்! வடிவேலு கேட்ட சம்பளத்தை கண்டு அதிர்ச்சியான பிரபல தொலைக்காட்சி… appeared first on Touring Talkies.
]]>சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால், 2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி வடிவேலு திரையுலகில் ஓரம் தள்ளப்பட்டார். ஜெயலலிதாவை பார்த்து பயந்து, யாரும் வடிவேலுவிற்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இதனால், சுமார் 10 ஆண்டுகள் வரை படங்களில் நடிக்கும் வாய்ப்பே இல்லாமல் இருந்தார்.
பின்னர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் மீண்டும் நுழைந்த வடிவேலு, அந்தப் படத்தின் மோசமான விமர்சனங்களால் துவண்டார். ஆனால், அடுத்து வந்த மாமன்னன் படம் பெரிய வெற்றியாக அமைந்தது.
இருப்பினும், எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால், புதிய டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவு செய்தார். ஆனால், அதிக சம்பளம் கேட்டதால் சன் டிவி யோசித்து வருவதாகவும், வடிவேலு சம்பள விஷயத்தில் ஸ்ட்ரிக்ட்டாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சின்ன திரையில் என்ட்ரியாகும் வைகைப்புயல்! வடிவேலு கேட்ட சம்பளத்தை கண்டு அதிர்ச்சியான பிரபல தொலைக்காட்சி… appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… appeared first on Touring Talkies.
]]>வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது இப்படத்தில் ரஜினிகாந்த்தும் அமிதாப் பச்சன்-ம் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதே கூலி தலைப்பில் அமிதாப் பச்சன் ஒரு படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார் பத்திரிகையாளர் அந்தணன்.
அதாவது அவர், தமிழில் சரத்குமார் ஹீரோவாக நடித்து வெளிவந்த கூலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை அதோபோல் அமிதாப் பச்சன் கூலி என்கிற பெயரில் ஹிந்தியில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது.
அந்த படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் நடந்துகொண்டிருந்த போது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அச்சமயத்தில் ஃபைட் மாஸ்டர் அமிதாப் பச்சனை எட்டி உதைக்க போது அமிதாப் அருகில் இருக்கக்கூடிய நாற்காலியில் விழ வேண்டும் அப்படி உதைக்கும் போது அமிதாப் பச்சனை சற்று ஃபைட் மாஸ்டர் கொஞ்சம் ஓங்கி மிதிக்க அமிதாப் நேராக சென்று அந்த சேரில் விழுந்தார். அப்போது அந்த சேரின் ஏதோ ஒரு கூர்மையான பகுதி அமிதாப்பின் விலா எலும்பில் குத்தி ரத்தமாக வடிந்துள்ளது.
அப்படியே மயக்க நிலைக்கு சென்ற அமிதாப் பச்சனை கண்டு படக்குழுவும் அதிர்ச்சியாகியது அந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான மருத்துவ வசதிகள் இருந்தாலும் போக்குவரத்து வசதி உடனடியாக இல்லை. அமிதாப் பச்சன்க்கு ஏற்பட்ட விபத்து பற்றி விஷயத்தை அறிந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு ப்ரைவேட் ஹெலிகாப்டரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்து அமிதாப்பை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவினார்.இந்த விபத்தால் மும்பையில் ஒரு மாதத்திற்கு மேல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு பின்னர் அவர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் எனவும் அப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது எனவும் பகிர்ந்து உள்ளார்.
The post சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… appeared first on Touring Talkies.
]]>The post தி கோட் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள கங்கை அமரன்!!! appeared first on Touring Talkies.
]]>தளபதி விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.இப்படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விஜய்யின் புதிய கீதை படத்திற்குப் பிறகு, மீண்டும் விஜய்யோடு இணைந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கோட் படத்தின் அப்டேட் கேட்ட போது அதற்கு சொல்ல முடியாது என்று சிரித்துக்கொண்டே பேசினார்.மேலும், இந்த முறை மனசுல க்ளியரா இருக்கேன். பேச்சு கிடையாது வீச்சுதான்.எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன்.ஒட்டுமொத்த படக்குழுவினரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். படத்தின் பின்னணி இசையும் நீண்ட காலம் பேசப்படும் என்று கணிக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.
தற்போது மேலும் ஒரு புதிய தகவல் வந்துள்ளது அது என்னவென்றால், யுவன் சங்கர் ராஜா இசையில் கங்கை அமரன் ஒரு பாடலை எழுதியிருப்பதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே பல பாடல்களை இட்டாக கொடுத்த கங்கை அமரன் இந்தப் பாடலையும் சிறப்பாக எழுதி இருப்பார் என இப்பாடலின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
The post தி கோட் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள கங்கை அமரன்!!! appeared first on Touring Talkies.
]]>The post கங்குவா ஆயிரம் கோடி வசூல்! பான் வேர்ல்ட் கன்டென்ட் இருக்கு… appeared first on Touring Talkies.
]]>சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த கங்குவா படத்தை யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்து உள்ளன.தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு ஹிந்தி கன்னடம் என 10 மொழிகளில் மிகவும் பிரமாண்டமாக இப்படம் தயாராகிய கொண்டு இருக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
கங்குவா திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா இப்படத்தை பெரிதும் எதிர் பார்த்து கொண்டு இருகிறார் படம் வெளியாக இன்னும் ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் அதற்குள்ளாக எல்லா பிஸ்னஸூம் முடிந்து விடும். இந்தி மொழியில் பாகுபலி மற்றும் கே.ஜி.எப் 500 கோடி வசூலித்துள்ளது போல கங்குவா திரைப்படம் ஏன் அந்த வசூலை பெறாது வசூலை பெறும் அந்த அளவுக்கு கங்குவா திரைப்படத்தில் கன்டென்ட் இருக்கிறது என்றார்.
வட இந்தியாவில் நடிகர் சூர்யா அறிந்த முகம் தான் எனவே ஏன் ஒரு மகத்தான வசூலை எதிர்பார்க்க கூடாது ஞானவேல் ராஜா இந்த எதிர்பார்ப்பில் தான் உள்ளார்.கங்குவா படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இந்த மொழியில் வெளியிடலாம் என போன் செய்து கேட்ட வண்ணம் உள்ளனர். கங்குவா திரைப்படத்தின் டீசர் ஆங்கிலத்தில் வெளியான நிலையில் சரிகமப போச்புரி மொழியில் வெளியிட சொல்லிக்கேட்டனர் நான் ஞானவேல் ராஜாவிடம் இதைப்பற்றி சொன்னபோது அவர் அந்த மொழி மட்டும் இன்றி குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா என ஆறு மொழிகளிலும் டப்பிங் செய்ய சொல்லி இருக்கிறார்.அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.இதுவே கங்குவா பட கன்டென்ட் வெற்றியாகும் என்றார்.
உலகளவில் கிறிஸ்டோபர் நோலன் அவர் நாட்டில் நடந்த சம்பவத்தை பயோபிக்காக எடுத்து வெற்றி அடைந்தார்.அவரின் படத்தை அனைவரும் இங்கு பார்க்கிறோம் நம் தமிழ் சினிமாவை ஏன் பான் வேர்ல்ட் படமாக எடுத்து செல்ல கூடாது என்றார். இது தமிழ் சினிமாவில் ஒர்கவுட் ஆகாது என கமெண்ட்ஸ்-ல் சொல்லுவார்கள் அவர்களுக்கு நான் கூறுவது ஒன்று தான் நம்பிக்கை தான் வாழ்க்கை இந்த படத்தை நாம் பான் வேர்ல்ட் படமாக இருக்கும் என்று நம்ப வேண்டும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
The post கங்குவா ஆயிரம் கோடி வசூல்! பான் வேர்ல்ட் கன்டென்ட் இருக்கு… appeared first on Touring Talkies.
]]>The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார்.
“தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காட்சியில் எனக்கும், நாசருக்கும் சண்டை நடக்கும போது நாசரின் தலை வெட்டப்பட்டு துண்டாக உருண்டு ஓடும்.
அப்போது நான் அதன் பின்னால் ஓடி சென்று அழுவேன். “இப்போது உனக்கு சந்தோஷமா.. உன்ன மாதிரியே என்னையும் கிரிமினலாக்கிட்டியே..?” என்று அழுது கொண்டிருக்கும்போது நாசரின் தலை மட்டும் வாயில் எச்சி வடிய எதோ கூறுவது போல் இருக்கும். அந்த தலையில் இருந்து ரத்தம் வடிய மெதுவாக அந்த கண்கள் மூடும் காட்சி புல்லரித்துவிட்டது” என்று கமல் கூறினார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>The post “நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ஆனந்த்ராஜ்தான் ஹீரோ” – பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதம்பாவா பேசும்போது, “வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் தடவை. பெரும்பாலும் அவரை கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். அவர் கதையின் நாயகன் அல்ல. கதாநாயகன்தான்.
இந்த படத்தை தயாரித்து இந்த நிலைக்கு கொண்டு வர நிறைய காலதாமதம் ஆனது உண்மைதான். அதேசமயம் இந்த படம் உருவாகும்வரை என்னை அவர் நம்பினார். அவரை நான் நம்பினேன். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவதன் மூலம் இன்னும் பெரிய அளவிற்கு இந்தப் படம் பேசப்படும்.
இந்தப் படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. இந்த படத்தில் நடிகர் ஆனந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில்கூட ஹீரோ ஆனந்தராஜ்தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்…” என்று கூறினார்.
The post “நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ஆனந்த்ராஜ்தான் ஹீரோ” – பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>The post “தேங்க்யூ டியர்” – பிரபாஸூக்கு நன்றி சொன்ன ராஜமெளலி appeared first on Touring Talkies.
]]>இந்த திரைப்படத்தின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த நடிகர் – இயக்குநர் கூட்டணி நட்புறவில் படத்தை தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது.
சமீபத்தில் பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
“@ssrajamouli அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குநருக்கான LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள்.
சிறந்த இசையமைப்பாளருக்கான LA ஃபிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ் பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்.
இந்த மனமார்ந்த வாழ்த்துகளை பார்த்த எஸ்.எஸ்.ராஜமௌலி அதற்கு “தேங்க்யூ டார்லிங். என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள்…” என்று பதிலளித்துள்ளார்.
ஆர்மேக்ஸ் ஊடக அறிக்கையின்படி, ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 ஹிந்தி திரையரங்க படங்களில் இடம் பெற்ற இரண்டு பழமையான திரைப்படங்களின் வரிசையில் பிரபாஸின் ‘பாகுபலியும்’ ஒன்றாகும். மேலும், நடிகர் பிரபாஸ் – இயக்குநர் ராஜமௌலி நட்புறவு எப்போதுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டணியும் அந்த உறவை மதித்து ஒருவரை ஒருவர் பாராட்டி வருகின்றனர்.
The post “தேங்க்யூ டியர்” – பிரபாஸூக்கு நன்றி சொன்ன ராஜமெளலி appeared first on Touring Talkies.
]]>The post OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>நடிகை சமந்தாவுடைய ஆக்ஷன்- த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ சமீபத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நல்ல சாதனை படைத்தது.
சமந்தாவுடைய வியக்கவைக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் அவருடைய நடிப்பு, திரைக்கதையின் ட்விஸ்ட் இவை எல்லாம் பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை திரையரங்குகளில் அதிகரித்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்பு தற்போது அமேசான் பிரைமில் ‘யசோதா’ ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது.
ஆச்சரியமாக, திரையரங்குகளில் கிடைத்ததற்கு இணையாக ஓடிடி தளத்திலும் யசோதாவிற்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு இருக்கிறது. தங்களது விமர்சனங்கள் மூலம் படத்திற்கு அன்பையும் ஆதரவையும் ரசிகர்கள் இணையத்தில் கொடுத்து வருகின்றனர். இதனால், ‘யசோதா’ திரைப்படம் ப்ரைமின் வாட்ச் லிஸ்ட்டில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஸ்ரீதேவி மூவிஸின் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் படத்தைத் தயாரித்து இருக்க, ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். ‘மெலோடி பிரம்மா’ மணி ஷர்மா படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
உன்னி முகுந்தன் மற்றும் வரலக்ஷ்மி இருவரும் சமந்தாவுடன் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்பிரிடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
The post OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம் appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம். மாணவர்கள் கல்வி கற்க உணவு கொடுத்து அடிப்படைக் கல்வியை கொடுத்து வருகிறது.
ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது. கல்வி கற்க கல்விக் கடன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
உயர் படிப்புகளை படிப்பதற்கான திறமையும், தகுதியும் இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் பலரால் படிக்க முடியாமல் போகிறது.
அதிலும் கல்விக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்களின் நிலைமை பெரும் துயரமானது. கல்விக் கடன் வாங்குவதிலிருந்து அதை கட்டி முடிக்கும் வரையிலும் மாணவர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சினைகள் ஏராளம்.
இந்தப் படம் அந்தக் கல்விக் கடன்கள் குறித்துதான் விரிவாகப் பேசுகிறது. அதை இளைஞர்களுக்கு பிடிக்கும்விதமாக பொழுதுபோக்கு அம்சங்களோடு பேசியிருக்கிறோம். இந்த காலேஜ் ரோடு படம் சஸ்பென்ஸ் நிறைந்த கலகலப்பான படமாக இருக்கும். கமர்சியல் கலந்த சமூகப் பொறுப்புள்ள படமாக உருவாக்கியிருக்கிறோம்…” என்றார்.
நிகழ்வில் இயக்குநர் ஜெய் அமர்சிங், மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர்.
The post கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம் appeared first on Touring Talkies.
]]>The post ராஜ் மோகன் இயக்கும் ‘பாபா பிளாக் ஷீப்’ படம்..! appeared first on Touring Talkies.
]]>“பாபா பிளாக் ஷீப்” படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.
பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தில் R.J.விக்னேஷ் காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கலை – மாதவன், படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம், நடனம் – அசார், பாடல்கள் – யுகபாரதி, A.PA.ராஜா, வைசாக், பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கோபி பிரசன்னா, புரொடக்ஷன் மேனேஜர் – மலர்கண்ணன், பத்திரிகை தொடர்பு – சதீஷ் – சிவா (AIM).
2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
The post ராஜ் மோகன் இயக்கும் ‘பாபா பிளாக் ஷீப்’ படம்..! appeared first on Touring Talkies.
]]>