The post சிரஞ்சிவீ நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல் வெளியானது appeared first on Touring Talkies.
]]>‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே. எஸ். ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் ‘வால்டேர் வீரய்யா’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான ‘வால்டேர் வீரய்யா’ படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
வெகுஜன மக்களுக்கான திரைப்படம் என்பதால் இயக்குநர் பாபி கொல்லி, கூடுதல் கவனத்துடன் படைப்பை உருவாக்கி வருகிறார். இதுவரை யாரும் திரையில் கண்டிராத வகையில் தனது தேவதையை காட்சிப்படுத்தி இருக்கிறார். மேலும் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடல்களிலும் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு, காட்சிகளையும், நடனங்களையும் செதுக்கி வருகிறார்.
‘பாஸ் பார்ட்டி..’ பாடலுக்கான குறு முன்னோட்டம் வெளியாகி, சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, வைரலானது. மேலும் ‘பாஸ் பார்ட்டி..’ பாடல், இந்த ஆண்டின் தன்னிகரற்ற பார்ட்டி என கொண்டாடப்படும் இரவு விருந்துக்குரிய பாடலாகத் திகழும்.
‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத், ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மீதான தன்னுடைய அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடலை ராப் இசை பாணியில், இசையமைத்து, எழுதி, பாடியிருக்கிறார். ‘பாஸ் பார்ட்டி..’ பாடல், ‘ராக் ஸ்டார்’ டி எஸ் பி பாணியில் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய பாடலாக வெளியாகி இருக்கிறது. இதற்கு பின்னனி பாடகர் நகாஷ் அஜீஸ் மற்றும் பாடகி ஹரிப்ரியாவின் சக்தி மிக்க குரல்களும் இணைந்து இரட்டிப்பு இன்னிசையை வழங்கி இருக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடலுக்கான மெட்டை விறுவிறுப்பாகவும், முழு நேர பொழுதுபோக்கு அம்சங்களுடனும் உருவாக்கி இருப்பதால், இந்தப் பாடலை கேட்டவுடன் அனைவருக்கும் சக்தி பிறக்கிறது. ஆற்றல் தொற்றிக் கொள்கிறது.
இந்தப் பாடலுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி தன்னுடைய அற்புதமான நடன அசைவுகளால், பாடலை மேலும் அழகு சேர்த்திருக்கிறார். அவருடைய தோற்றமும், நடன அசைவும் வெகுஜன மக்களின் ரசனைக்குரியவை. இந்தப் பாடலில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன் இணைந்து நடனமாடியிருக்கும் நடிகை ஊர்வசி ரௌத்லாவும், அவருக்கு இணையாக நடனமாடி ரசிகர்களை கவர்கிறார். இந்தப் பாடலுக்கான நடனத்தை, நடன இயக்குநர் சேகர் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன், ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். கமர்ஷியல் அம்சங்களுடன் மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி. கே. மோகன் இணை தயாரிப்பாளராகவும், ஏ. எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.
கதை, வசனத்தை பாபி எழுத, இயக்குநர் கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரை கதையை எழுதியுள்ளனர். இவர்களுடன் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லூரி ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, நிரஞ்சன் தேவராமனே படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
அனைத்து தரப்பு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ திரைப்படம், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்தி திருவிழா விடுமுறையில் வெளியாகிறது.
The post சிரஞ்சிவீ நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல் வெளியானது appeared first on Touring Talkies.
]]>The post ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வால்டேர் வீரய்யா’. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருடைய இணைய பக்கத்தில், ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்” என பதிவிட்டிருக்கிறார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அதிவேக நடனத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். இந்நிலையில் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்லாவும் இணைந்து நடனமாடி இருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம் பெற்றிருக்கும் சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
The post ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் appeared first on Touring Talkies.
]]>The post ‘ஆச்சார்யா’ படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டிய சிரஞ்சீவி..! appeared first on Touring Talkies.
]]>தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்த படம் ‘ஆச்சார்யா’.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான கொரடாலா சிவா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
தந்தை, மகன் இருவரும் இணைந்து நடித்ததால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இப்படம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியானது. ஆனால், வெளியான முதல் நாளே எதிர்மறை விமர்சனங்களை பெற்றதால், ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் குறைந்தது. படம் படு தோல்வியடைந்தது.
இந்தப் படத்தினால் ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்யுமாறு நடிகர் சிரஞ்சீவியிடம் இந்தப் படத்தை வாங்கி விநியோகித்த விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக ராஜ்கோபால் பஜாஜ் என்ற விநியோகஸ்தர், சிரஞ்சீவிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “நீங்களும் உங்களது மகன் ராம் சரணும் சேர்ந்து நடித்திருந்த ஆச்சார்யா படத்தினால் எனக்கு 75 சதவிகிதம்வரையிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் மிகுந்த பண நெருக்கடியில் உள்ளேன். இந்த நிலைமையில் எனக்கேற்பட்டுள்ள பண நெருக்கடிக்கு, தார்மீகப் பொறுப்பேற்று நஷ்ட ஈடு தர வேண்டும்..” என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாக சிரஞ்சீவியிடம் கேள்வி கேட்டபோது ”ஆச்சார்யா’ படம் நஷ்டமானதையடுத்து நானும், ராம் சரணும் நாங்கள் வாங்கிய பணத்தில் 80 சதவிகிதத்தை தயாரிப்பாளர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டோம். படம் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். ‘ஆச்சார்யா’ படம் குறித்த எந்த குற்றவுணர்வும் எனக்கில்லை” என்று வெளிப்படையாக தெரிவித்தார் சிரஞ்சீவி.
The post ‘ஆச்சார்யா’ படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டிய சிரஞ்சீவி..! appeared first on Touring Talkies.
]]>The post ‘காட்பாதர்’ தெலுங்கு படம் அக்டோபர் 14-ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்குதான் இந்த ‘காட்பாதர்’ படம்.
சிரஞ்சீவி, சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கியுள்ளார்.
இந்தப் படம் கடந்த அக்டோபர் 5-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வசூல் 4 நாட்களில் 100 கோடியைத் தாண்டிவிட்டது.
ஆந்திரா, தெலங்கானாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் வரும் அக்டோபர் 14-ம் தேதி தமிழகத்திலும் இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது.
அது மட்டுமல்ல, இந்தப் படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ் டப்பிங்கும் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும்விதமாக மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது, இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மற்றும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோரின் பங்களிப்பும் இந்த படத்தின் சிறப்பம்சமாக அமைந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது..
The post ‘காட்பாதர்’ தெலுங்கு படம் அக்டோபர் 14-ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post 4 நாட்களில் 100 கோடி வசூல் செய்த சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ படம் appeared first on Touring Talkies.
]]>‘காட்ஃபாதர்’ திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்த திரைப்படத்தை பார்ப்பதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‘காட்ஃபாதர்’ திரைப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. காட்ஃபாதர் திரைப்படம் இந்தியிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. நல்ல கதை அம்சமுள்ள படைப்புகளை மக்கள் வரவேற்பார்கள் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நவராத்திரி விடுமுறைகளை முன்னிட்டு மக்கள் திரையரங்குகளில் வருகை தந்து படங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
மேலும் இந்த ‘காட்ஃபாதர்’ படத்தை பற்றிய நேர்மறையான விமர்சனத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக ‘காட்ஃபாதர்’ வசூல் சாதனையில் புதிய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post 4 நாட்களில் 100 கோடி வசூல் செய்த சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ படம் appeared first on Touring Talkies.
]]>The post “தென்னிந்திய-பாலிவுட் நடிகர்கள் இணைந்து நடித்தால் 4,000 கோடியை அள்ளலாம்” – சல்மான்கானின் நம்பிக்கை appeared first on Touring Talkies.
]]>பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘லூசிஃபர்’ படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக்காகியுள்ளது.
இதில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க அவருடன் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் சல்மான்கானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மோகன்ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இன்றைக்கு அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி மும்பையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் சல்மான்கான் பேசும்போது, ”பெரும்பாலானோர் ஹாலிவுட்டில் நடிக்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நான் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். மக்கள் தென்னிந்திய படங்கள் வசூலிக்கும் 300, 400 கோடிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்,
தென்னிந்திய சினிமா நடிகர்களும், பாலிவுட் நடிகர்களும் இணைந்து நடித்தால் பாக்ஸ் ஆபீஸில் படம் 3,000 முதல் 4,000 கோடி வசூலை எட்டும். அதன் மூலம் பரந்த பார்வையாளர்களிடம் படங்களை கொண்டுபோய் சேர்க்க முடியும்” என்றார்.
The post “தென்னிந்திய-பாலிவுட் நடிகர்கள் இணைந்து நடித்தால் 4,000 கோடியை அள்ளலாம்” – சல்மான்கானின் நம்பிக்கை appeared first on Touring Talkies.
]]>