The post தனது சுயசரிதை கதையை இயக்கி நடித்த சோனா appeared first on Touring Talkies.
]]>‘ஸ்மோக் சீசன் 1’ படப்பிடிப்பு நிறைவுறும் தருவாயில் இருக்கும் நிலையில் இதன் இயக்குனரான சோனா, இந்த வெப்சீரிஸில் தன்னுடைய சொந்த கதாபாத்திரத்தில் தானே நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
சோனாவின் வெவ்வேறு வயதிலான காலகட்டங்களில் அவரது கதாபாத்திரமாக நடிக்கும் ஆதினி (5 வயதில்), ஜனனி (14 வயதில்) மற்றும் ஆஸ்தா அபய் (30 வயதில்) ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
“புகை படர்ந்த கனவுகள் நிறைந்த வாழ்க்கையில், என்னவென்றே தெரியாத இடங்களுக்கோ அல்லது சூழல்களுக்கோ வாழ்க்கை எங்கே என்னை அழைத்து செல்லும் நிலையில் சரியாக என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. என்னுடைய கதையை சொல்வதால், கேட்கப்பட்ட கேள்விகள் அல்லது மறந்துபோன கேள்விகள், ஒளிந்துள்ள உண்மைகள் அல்லது சொல்லப்படாத உண்மைகள் குறித்து இதை இயக்கியுள்ளதுடன் அதில் அனைத்திலும் ஒரு பாகமாகவும் இருந்தேன். என் வாழ்க்கைக்குள் வந்து என்னை பாருங்கள்” என்கிறார், சோனா.
ஷார்ட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த ‘ஸ்மோக் வெப்சீரிஸை யுனிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது
The post தனது சுயசரிதை கதையை இயக்கி நடித்த சோனா appeared first on Touring Talkies.
]]>The post “என் சுயசரிதையை நானே சினிமாவாக எடுக்கப் போகிறேன்..” – நடிகை சோனாவின் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் தனது சுயசரிதையை சினிமாவாகவோ அல்லது வெப் சீரீஸாகவோ தானே தயாரித்து இயக்கப் போவதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் நடிகை சோனா.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய கல்யாண கனவு நடக்காது. என்னென்னவோ முயற்சி செஞ்சு பார்த்துட்டேன். அது இனிமேல் நடக்காதுன்னு எனக்கே தெரிஞ்சு போச்சு. அதனால் என்னோட சுயசரிதையை எழுதணும்ன்ற என்னோட ரொம்ப நாள் ஆசையை நான் இப்போ நிறைவேத்திட்டேன். கூடிய சீக்கிரம் அதை வெப் சீரீஸாகவோ, சினிமாவாகவோ எடுக்கப் போறேன்.
நான் ஏன் அதைப் பண்ணணும்ன்னு அவ்ளோ ஆசைப்படுறேன்னா எல்லாரும் மத்தவங்களை வெளிலதான பார்க்குறோம். இன்க்ளூடிங் நானும்தான்… ஒருத்தரைப் பார்த்து ஈஸியா அவர் அப்படித்தான்னு ஜட்ஜ் பண்ணிடறோம். ஆனால், அப்படி இல்லேன்னு சில விஷயங்கள் இருக்கு. அதைச் சொல்லணும். அதுக்காகத்தான் அந்தப் பிராஜெக்ட்டை பண்ணாத்தான் என் லைப்ல ஒரு நிம்மதி கிடைக்கும். It’s very close to my heart. அதை நானே இயக்குவேன்..” என்று தெரிவித்துள்ளார்.
The post “என் சுயசரிதையை நானே சினிமாவாக எடுக்கப் போகிறேன்..” – நடிகை சோனாவின் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post “சினிமாவில் எனக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது”-நடிகை சோனா புகார் appeared first on Touring Talkies.
]]>கடந்த 3 வருடங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த மீ டூ மற்றும் பாலியல் குற்ற வழக்குகள் தற்போது மீண்டும் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில் இது குறித்து நடிகை சோனா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் இப்படி கூறியுள்ளார்.
நடிகை சோனா இது குறித்துப் பேசும்போது, “பாலியல் குற்றங்கள் எல்லா துறையிலும்தான் இருக்கிறது. எல்லா இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது பாருங்கள், பள்ளிகளில் இருந்தும் இது போல் குற்றசாட்டுகள் எழுந்திருக்கிறது. பாலியல் குற்றங்கள் எங்கு நடந்தாலும் அதற்கான முறையான விசாரணையும், தண்டனையும் அவசியம்.
திரைத்துறையை பொறுத்தவரை, தனித்து யாரையும் குற்றம் சொல்ல முடியாது. சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் அது போல் நடந்தது. அப்போதே அதை வெளிப்படையாக சொல்லி போராடினேன். நமக்கான உரிமைக்கு நாம்தான் போராட வேண்டும். அதற்காக அதை கடந்து செல்லாமல் மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதும் நல்லதல்ல.
உங்களுக்கு நடந்தால் அதை வெளிப்படுத்துங்கள். உங்கள் உரிமைக்கு குரல் கொடுங்கள். மக்களுக்கு தெரியும். எதுவும் நடக்கவில்லையெனில் அதை கடந்து செல்லுங்கள். வாழ்க்கை பெரியது. எனக்கு நடந்ததை கடந்து வந்து விட்டேன். அதுதான் எலலாருக்கும் நல்லது…” என்று சொல்லியிருக்கிறார்.
The post “சினிமாவில் எனக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது”-நடிகை சோனா புகார் appeared first on Touring Talkies.
]]>The post “கவர்ச்சி வேடமா வருது. அதான் டிவிக்கு வந்துட்டேன்…” – நடிகை சோனாவின் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>துணிவான பேச்சு, எதிலும் முன்னணியில் நிற்கும் தைரியம், சொந்த பிஸினஸ் என பல பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர்.
காமெடி கதாப்பாத்திரங்களில் இருந்து மாறுபட்டு படங்களில் துணிச்சலான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சோனா, தற்போது Colours Tv க்காக ‘அபி டெய்லர்ஸ்’ என்ற தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த ‘சினிமா டூ சின்னத்திரை’ டிராவல் பற்றி நடிகை சோனா பேசும்போது, “சினிமாதான் எனக்கு அடையாளம் தந்தது. சினிமாதான் என் வாழ்க்கை. தமிழில் ஆரம்பத்தில் நான் கவர்ச்சி கதாப்பத்திரங்களிலேயே நடித்ததால் இப்போதுவரையிலும் அப்படிப்பட்ட வேடங்கள்தான் அதிகம் வந்தன.
ஆனால், மலையாளத்தில் அப்படி இல்லை. அங்கு வில்லி, குணசித்திரம், நகைச்சுவை என மாறுப்பட்ட பாத்திரங்களை செய்து விட்டேன். அதே போல் தமிழிலும் செய்ய வேண்டுமென்பதுதான் என் விருப்பம். இப்போதுதான் கொஞ்சம் மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் என்னை நோக்கி வர துவங்கியுள்ளது.
தொலைக்காட்சியில் இருந்து பல வருடங்களாகவே வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் என் மனதிற்கு பிடித்த மாதிரியான கேரக்டர் அமையாததால், நான் எதையும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்த “அபி டெய்லர்ஸ்” தொலைக்காட்சித் தொடர் வாய்ப்பை என்னால் மறுக்க முடியவில்லை.
இந்தத் தொடரில் நாயகன், நாயகி மற்றும் என்னுடைய கதாப்பாத்திரத்தை வைத்துதான் மொத்தக் கதையும் நகர்கிறது. இதில் எனக்கு மிகவும் வித்தியாசமான கேரக்டர். மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
இந்த ‘அபி டெய்லர்ஸ்’ சீரியலை ‘வாலிப ராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார். படத்தில் வேலை பார்த்த குழுதான் இந்த சீரியலிலும் வேலை செய்கிறார்கள். இது ஒரு சீரியல் போல இருக்காது. படம் போலத்தான் இருக்கும். இதில் நடிக்க நான் ஒத்துக் கொண்டதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.
நிஜத்தில் நான் ரொம்பவும் எளிமையாக, ஜாலியாக இருக்கும் ஆள், ஆனால் எனது கேரக்டர் மிகவும் அழுத்தமிக்க தைரியமான பிஸினஸ் வுமன் பாத்திரம். இது என்னுடைய இயல்புக்கு நேரெதிரானது. என்னால் எல்லா வகை கேரக்டர்களையும் செய்ய முடியும் என்பது இதன் மூலம் நிரூபணமாகும் என நம்புகிறேன்.
சீரியலுக்கு போய் விட்டேன் என்பார்கள். ஆனால் இதுவும் ஒரு நடிப்பிற்கான வாய்ப்பு. அவ்வளவுதான். மற்றபடி சினிமாதான் என் வாழ்க்கை. இப்போதும் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது தமிழில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் மூன்று படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில்தான் இருப்பேன். அதில் எந்த மாற்றமுமில்லை. மாறுபட்ட கதாப்பத்திரங்களுக்காக காத்திருக்கிறேன்…” என்றார்.
The post “கவர்ச்சி வேடமா வருது. அதான் டிவிக்கு வந்துட்டேன்…” – நடிகை சோனாவின் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>