The post பெண் குழந்தைகளுக்கு அம்மா ஆகிறாரா சமந்தா? appeared first on Touring Talkies.
]]>பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா அதன் மூலம் பல உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல தரப்பட்ட நோய்களால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்த அமைப்பின் மூலம் ஆதரவில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை அவர் தத்தெடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
The post பெண் குழந்தைகளுக்கு அம்மா ஆகிறாரா சமந்தா? appeared first on Touring Talkies.
]]>The post ’புஷ்பா 2’அல்லு அர்ஜுன் சம்பளம் என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தை அதிக பட்ஜெட்டில் உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு அல்லு அர்ஜுன் சம்பளம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த வருமானத்தில் 33 சதவிகிதம் சம்பளமாக வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்றும் அதனால் அல்லு அர்ஜுனுக்கு ரூ. 330 கோடி சம்பளம் கிடைக்கும் என்று தெலுங்கு சினிமாவில் கூறி வருகின்றனர். இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. இது உண்மை என்றால் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் இருப்பார் என்கிறார்கள்.
The post ’புஷ்பா 2’அல்லு அர்ஜுன் சம்பளம் என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post “கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – யசோதா பட தயாாிப்பாளர் சொன்ன உண்மை..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தெலுங்கு சினிமா துறையில் 40 வருடங்களாக பணியாற்றி வருகிறார். 450-க்கும் மேற்பட்ட மொழி மாற்றம் செய்த படங்களை ஆந்திராவில் அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களை அவர் தயாரித்தும் இருக்கிறார்.
இப்போது அவர் பான் இந்தியா படமான ‘யசோதா’ வை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 11ம் தேதி வெளியிட இருக்கிறார். இந்த ‘யசோதா’ படம் குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களை ஊடகத்திடம் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பகிர்ந்து இருக்கிறார்.
“இந்த ‘யசோதா’ படத்தைப் பான் இந்தியா அளவில் வெளியிடவும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் சரியான நபராக சமந்தா இருப்பார் என நினைத்தோம். ’ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸ் மூலம் தேசிய அளவில் பார்வையாளர்களின் கவனத்தை சமந்தா கவர்ந்திருந்தார்.
அதனால், அவர் இந்தக் கதையைக் கேட்பாரா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது. சமந்தா எல்லாருடையக் கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பதாக அவரின் மேலாளர் மகேந்திரா எங்களுக்கு நம்பிக்கைக் கொடுத்தார்.
கடைசியாக சென்ற வருடம் செப்டம்பர் 8-ம் தேதி அவர் இந்த யசோதா கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒத்துக் கொண்டார். மேலும், பல மொழிகளில் வெளியாவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பல முக்கியமான நடிகர்களைத் திரைக்கதையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தோம்.
’யசோதா’ படத்தின் கதையைக் கேட்ட நொடியில் இருந்து அவர் கதையுடன் பயணம் செய்ய ஆரம்பித்தார். ’சாகுந்தலம்’ படம் முடித்ததும் அவருடைய கவனம் முழுவதும் இந்தப் படம் மீதுதான் இருந்தது.
சமந்தாவின் உடல் நிலை பற்றி டப்பிங்கின்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. அவர் தெலுங்கில் டப்பிங் பேசிய அதே சமயம் தமிழிலும் அவரே டப்பிங் பேசினார். அப்போது அவர் எனர்ஜி லெவல் குறைவாகவே இருந்தது. வேறு டப்பிங் கலைஞரைக் கொண்டு வரலாம் என நாங்கள் கருத்து தெரிவித்தோம்.
அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார். அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்...” என்றார் தயாரிப்பாளர்.
The post “கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – யசோதா பட தயாாிப்பாளர் சொன்ன உண்மை..! appeared first on Touring Talkies.
]]>The post சமந்தா நடிக்கும் ‘யசோதா’ நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது! appeared first on Touring Talkies.
]]>ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.
இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை: மணிஷர்மா, வசனம்: புலகம் சின்நாராயனா, Dr. செல்லா பாக்யலஷ்மி, பாடல்: ராமஜோகியா சாஸ்த்ரி, கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜஸ்தி, கேமரா: M. சுகுமார், கலை: அஷோக், சண்டைப் பயிற்சி: வெங்கட், யானிக் பென், படத் தொகுப்பு: மார்தாண்ட். K.வெங்கடேஷ், லைன் புரொடியூசர்: வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பாளர்: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, எக்ஸிக்யூடிவ் புரொடியூசர்: ரவிக்குமார் GP, ராஜா செந்தில், இயக்கம்: ஹரி மற்றும் ஹரிஷ், தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், பேனர்: ஸ்ரீதேவி மூவிஸ்.
படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், “இந்த ’யசோதா’ படம் இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது. இந்தக் கதைக்காகவும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத்தமும் வியர்வையும் கொடுத்து உழைத்திருக்கிறார். பின்னணி இசையில் இதுவரை நீங்கள் கேட்டிராத மணிஷர்மாவின் இசையை கேட்டு மகிழ்வீர்கள்.
இப்போதைக்கு, இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கான சென்சார் விரைவில் முடிவடைந்து விடும். இந்தப் படத்தின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு செலவுகளில் எந்தவொரு காரணத்திற்காகவும் நாங்கள் சமரசம் செய்யவில்லை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களில் முடித்துள்ளோம்.
இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு வரக்கூடிய த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த ‘யசோதா’ நிச்சயம் பிடிக்கும். வரும் நவம்பர் 11 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது” என்று கூறினார்.
The post சமந்தா நடிக்கும் ‘யசோதா’ நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது! appeared first on Touring Talkies.
]]>The post ஒரு பாடல் தவிர்த்து, சமந்தாவின் ‘யசோதா’ படப்பிடிப்பு முடிந்தது.!! appeared first on Touring Talkies.
]]>தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சார்பில் 14-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
இசை – மணி சர்மா, வசனம் – புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்யலட்சுமி, பாடல்கள் – ராமஜோகையா சாஸ்திரி கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி, ஒளிப்பதிவு – M.சுகுமார், கலை இயக்கம் – அசோக், சண்டை பயிற்சி இயக்கம் – வெங்கட், படத் தொகுப்பு – மார்த்தாண்டன், K.வெங்கடேஷ், லைன் புரடியூசர் – வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பாளர் – சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, இயக்கம் – ஹரி – ஹரிஷ், தயாரிப்பாளர் – சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், பேனர் – Sridevi Movies.
திறமையான இயக்குநர் கூட்டணியான ஹரி-ஹரிஷ் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள்.
இந்த யசோதா படம் பற்றி தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பேசும்போது,
“இப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறோம். இதுவரை 100 நாட்கள் கடந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் ஓர் பாடல் தவிர்த்து படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டது.
ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக சிஜி வேலைகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இம்மாதம் 15-ம் தேதி முதல் டப்பிங் பணிகள் தொடங்கும் நிலையில், மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணியை ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இந்த பான்-இந்திய படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். படத்தை தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.
இந்த எட்ஜ்-ஆஃப் சீட் த்ரில்லர் உலகம் முழுவதும் ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. சமந்தா இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார் அதிலும், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில், முழு அர்ப்பணிப்பையும் தந்து அசத்தியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்…” என்றார்.
The post ஒரு பாடல் தவிர்த்து, சமந்தாவின் ‘யசோதா’ படப்பிடிப்பு முடிந்தது.!! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒப்பனை : பாஷா, ஆடை வடிவமைப்பாளர்கள் : ராஜேஷ், ஹார்மான் கௌர் மற்றும் பல்லவி சிங், கலை இயக்கம் : உத்தர் குமார், சந்திரிகா, சண்டை பயிற்சி இயக்கம் : பீட்டர் ஹெய்ன், வசன உதவி : நரேஷ் பாபு, மக்கள் தொடர்பு : யுவராஜ், தயாரிப்பு நிர்வாகி : தினேஷ் நரசிம்மன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், படத்தொகுப்பு : பிரவீன் புடி, இசை : ஹிஷம் அப்துல் வஹாப், தலைமை நிர்வாக அதிகாரி : செர்ரி, ஒளிப்பதிவு : ஜி முரளி, தயாரிப்பாளர்கள் : நவீன் எர்னானி, ரவிசங்கர் யெலமஞ்சிலி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஷிவா நிர்வாணா.
இந்த ‘குஷி’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர்.
இவர்கள் திரையில் நல்ல ஜோடியாக வலம் வருவார்கள் என்றும், இவர்களிடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களிடத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
‘குஷி’ உற்சாகமான.. வண்ண மயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதையும், இந்த முன்னணி ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையேயான தோற்றம் உறுதிபடுத்தி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
The post விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>The post 12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகை சமந்தா..! appeared first on Touring Talkies.
]]>நடிகை சமந்தா 2010-ம் ஆண்டு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார். இதன், பின்னர் ‘பாணாக் காத்தாடி“ படம் மூலம் தனி ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சமந்தா.
இதனைத் தொடர்ந்து, ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘24’, ‘அஞ்சான்’, ‘கத்தி’, ‘தெறி’ போன்ற படங்களில் சிம்பு, விக்ரம், விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
அப்படியே தெலுங்கு பக்கமும் சென்ற சமந்தா குறுகிய காலத்தில் அங்கேயும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து டோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக மாறிவிட்டார்.
நடிகை சமந்தா இன்று தனது சினிமா வாழ்க்கையின் 12-வது ஆண்டை இந்த வருடம் கொண்டாடுவதையொட்டி தனது சந்தோஷத்தை தனது சமூக வலைத்தளத்தில் செய்தியாகப் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “நான் இன்றுடன் இந்தச் சினிமா துறையில் காலடியெடுத்து வைத்து சரியாக 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 12 ஆண்டுகளிலும் லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் என பல மறக்க முடியாத அனுபவங்களுடன் வாழ்ந்துள்ளேன்.
இங்கே ஒவ்வொரு தருணமும் எனக்கு மிகச் சிறந்த தருணமாகவே இருந்தது. மேலும், எப்போதுமே என் பக்கம் நிற்கும் உலகிலேயே மிகவும் விஸ்வாசமான ரசிகர்களை நான் பெற்றதே எனது பெரிய பாக்கியம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post 12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகை சமந்தா..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகை ஜமுனாவாக நடிக்கப் போவது சமந்தாவா..? தமன்னாவா..? appeared first on Touring Talkies.
]]>நடிகை ஜமுனா 1960 முதல் 1975-கள் வரையிலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழந்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தெலுங்கில் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’, சிவாஜி கணேசன் நடித்த ‘தெனாலிராமன்’, ‘தங்கமலை ரகசியம்’, ‘நிச்சயத்தாம்பூலம்’, ‘மருத நாட்டு வீரன்’, ஜெமினி கணேசன் நடித்த ‘மிஸ்ஸியம்மா’ உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார் ஜமுனா. இவர் கடந்த 1983-ம் ஆண்டு வெளிவந்த ’தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு கால ஓட்டத்தில் அம்மா வேடத்திலும் பல்லாண்டுகள் நடித்து வந்தார் ஜமுனா. இடையில் அரசியலிலும் நுழைந்து அதிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். தற்போது உடல் நலக் குறைவால் படங்களில் நடிக்க முடியாமல் இருக்கிறார்.
இந்தநிலையில் தற்போது நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக உருவாக்கப் போகிறார்கள். இத்திரைப்படத்தை தமிழ் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறதாம்.
இந்தப் படத்தில் ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் தர வேண்டியிருந்ததால் சமந்தா மறுத்துவிட்டாராம். இதனால் தற்போது நடிகை தமன்னாவிடம் இது குறித்து படத் தயாரிப்புக் குழு பேசி வருகிறார்கள்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post நடிகை ஜமுனாவாக நடிக்கப் போவது சமந்தாவா..? தமன்னாவா..? appeared first on Touring Talkies.
]]>The post ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகலா..? appeared first on Touring Talkies.
]]>நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை 7Screen Productions நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள் என்று கடந்த பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா பாதிப்பினால் உலகமே இயங்காமல் இருந்த சூழலில் இந்தப் படமும் மூலையில் முடங்கியது. இப்போது அனைத்து வழிகளும் திறக்கப்பட்டுவிட்டதால் இந்த மாதம் 12-ம் தேதியன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து நடிகை சமந்தா திடீரென விலகிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விலகலுக்கான காரணத்தை சமந்தா இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனே இயக்கவிருப்பதால் கண்டிப்பாக நயன்தாராவுக்குத்தான் அதிகமான முக்கியத்துவம் இருக்கும் என்று நினைத்தே சமந்தா விலகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வரும் 12-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் முன்னணி ஹீரோயினான சமந்தா விலகியிருப்பதால் அந்தப் படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
The post ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகலா..? appeared first on Touring Talkies.
]]>