The post விரைவில் கலகலப்பு 3 இவருக்கு பதில் இவராம்! சுந்தர் சி வைத்த ட்விஸ்ட்… appeared first on Touring Talkies.
]]>இச்சமயத்தில் சுந்தர் சி அரண்மனை போல் தனது மற்றொரு ட்ரேட் மார்க் படமான கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த மாத இறுதியில் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை ஆரம்பிக்கப் போகிறார். அதற்கான முன் வேலைகளை ஏற்கனவே முடித்துவிட்டார் என தெரிகிறது.
முதல் பாகம் போல் கலகலப்பு இரண்டாம் பாகம் பெரிதாக ஜோலிக்கவில்லை. முதல் பாகத்தில் நடிகர் சந்தானம் இருந்ததால் காமெடி காட்சிகள் தூள் பறந்தன. இப்பொழுது மூன்றாம் பாகத்தில் சிவா மற்றும் விமல் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்படத்தில் சந்தானம் இல்லாத குறையை வேறு ஒரு நடிகரை வைத்து தீர்க்க சுந்தர் சி.அரண்மனை நான்காம் பாகத்தில் காமெடியில் கலக்கிய நகைச்சுவை பிரபலமான விடிவி கணேசை வைத்து தான் கலகலப்பு 3 காமெடியை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக கணேஷின் காமெடி வொர்க் அவுட் ஆகிறது என்பதால் சுந்தர் சி இந்த முடிவை எடுத்துள்ளார் என கருதப்படுகிறது.
The post விரைவில் கலகலப்பு 3 இவருக்கு பதில் இவராம்! சுந்தர் சி வைத்த ட்விஸ்ட்… appeared first on Touring Talkies.
]]>The post ஜீவா நடிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப் புகழ்) கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் பிரக்யா நாகரா, V.T.V.கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, T.S.K., E.ராமதாஸ், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மொட்டை ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த் N.B., நடன இயக்கம் – ராஜு சுந்தரம், பிருந்தா, பாடல்கள் – மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன், சண்டை இயக்கம் – R.சக்தி சரவணன், கலை இயக்கம் – மோகன், ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், ஒப்பனை – எஸ்.ஏ.சண்முகம், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா.
அறிமுக இயக்குநரான சந்தோஷ் ராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் சசியிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நடிகர் ஜீவாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது.
ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தினைப் போன்று இப்படத்தினை எதிர்பார்க்கலாம் என்கிறது படக் குழு.
The post ஜீவா நடிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் appeared first on Touring Talkies.
]]>The post “சுந்தர்.சி-யும் நானும் ஒண்ணா..?” – கோபப்பட்ட இயக்குநர் மிஷ்கின்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தின் உருவாக்கத்தின்போது தனக்கும், படத்தின் இயக்குநரான மிஷ்கினுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
அவர் பேசும்போது, “முதலில் ‘முகமூடி’ படத்தில் சூர்யா ஸார்தான் நடிப்பதாக இருந்தது. பின்பு ஒரு கட்டத்தில் பல்வேறு காரணங்களினால் அவர் விலகிக் கொள்ள ஜீவாவை செலக்ட் செய்தோம். அப்போது ‘கோ’ படம் வெளிவந்து சக்ஸஸ்புல்லாக ஓடிக் கொண்டிருந்தது.
நாயகி பூஜா ஹேக்டே, நரேன், நாசர், கிரிஷ் கர்னார்டு என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. படத்தின் மொத்த பட்ஜெட் 18 கோடி. இது ஜீவாவின் படங்களிலேயே மிக அதிகமான பட்ஜெட். ரொம்ப ரிஸ்க் என்பது எனக்குத் துவக்கத்திலேயே தெரியும். ஆனால், இந்தப் படத்தின் கதை மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்.
ஆனால், படம் உருவாக, உருவாக.. மிஷ்கின் என்னிடம் சொல்லியிருந்த கதையையோ அப்படியே மாற்ற ஆரம்பித்தார். பல காட்சிகளை புதிதாக சேர்த்தார். ஒரு கட்டத்தில் ஜீவாவே இது பற்றி என்னிடம் சொன்னார். கிளைமாக்ஸ் காட்சியை மிகச் சாதாரணமாக படமாக்கியிருந்தார் மிஷ்கின். அது பற்றியும் ஜீவா என்னிடம் சொல்லி நிரம்ப வருத்தப்பட்டார்.
ஆனால், என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. “படம் முடிந்து ரெடியான பின்புதான் என்னால் இதில் தலையிட முடியும்…” என்று ஜீவாவிடம் சொன்னேன். ஜீவா அரை மனதுடன்தான் அந்தப் படத்தில் நடித்து முடித்தார்.
‘முகமூடி’ படத்தை டபுள் பாஸிட்டிவ்வில் பார்த்தபோது எனக்கு முழுமையாகத் திருப்தியில்லை. என்னிடம் சொன்ன கதை வேறாக இருந்தது. இப்போது எடுத்திருப்பது வேறாக இருந்தது. அத்தோடு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் எனக்குப் பிடிக்கவில்லை. கூடவே அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருடா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டடித்துவிட்டது. ஆனால், அந்தப் பாடல் காட்சியை மிக சாதாரணமாக படமாக்கியிருந்தார் மிஷ்கின். இதுவும் எனக்கு சரியாகப் படவில்லை.
அதனால், ‘பாடல் காட்சியை புதிதாக படமாக்க வேண்டும்’. ‘கிளைமாக்ஸ் காட்சியை மாற்ற வேண்டும்’ என்று அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். ‘இது என் படம்’ என்றார். ‘பணம் நான் போட்டிருக்கேன்’ என்றேன்.
இப்படி எங்களுக்குள் இது தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்தது. அதற்கு முன்பு நாங்கள் தயாரித்த ‘கலகலப்பு’ திரைப்படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுத்து 12 கோடியை கலெக்ட் செய்தது. அதனை அவரிடம் சொன்னேன்.
உடனேயே ‘சுந்தர்.சியும் நானும் ஒண்ணா..? எப்படி நீங்க சொல்லலாம்..?’ என்று என்னைக் கத்தித் தீர்த்துவிட்டார். நான் எந்த அர்த்தத்தில் சொன்னேன் என்பதையே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இறுதிவரையிலும் அவர் பிடிவாதமாக இருந்ததால் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கடைசிக்கட்ட சம்பளத்தை நான் கொடுக்கவில்லை. ஏனெனில், இந்தப் படத்தால் எங்களது நிறுவனம் நஷ்டப்படும் என்பது எனக்கு முன்பேயே தெரியும்.
இது தொடர்பாக அவர் என் மீது இயக்குநர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார். அவர்களிடத்தில் என் தரப்பு நியாயத்தை நான் தெளிவாக எடுத்துச் சொன்னேன். அதற்குப் பிறகு அவர்கள் என்னிடம் எதையும் கேட்கவில்லை.
ஆனால் இந்தக் கோபத்தில் இந்த முகமூடி படம் தொடர்பான எந்தவொரு புரமோஷன் நிகழ்ச்சியிலும் மிஷ்கின் கலந்து கொள்ளவில்லை. நானும், ஜீாவும் மட்டுமே வந்திருந்தோம்.
படத்தையும் அதே நிலைமையில்தான் வெளியிட்டேன். 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘முகமூடி’ திரைப்படம் மொத்தமாக 20 கோடியை வசூலித்தது. அதற்கு முன்பேயே ஓவர்சீஸ் ரைட்ஸ், ரீமேக் ரைட்ஸ், டப்பிங் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் என்று அனைத்தையும் நான் விற்றுவிட்டதால் எங்களது நிறுவனம் கொஞ்சமேனும் லாபத்தைச் சம்பாதித்து தப்பியது.
ஆனால், இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டப்பட்டார்கள். இவர்களுக்கு எங்களது நிறுவனம் தயாரித்த அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் தொகையை விட்டுக் கொடுத்து சரி செய்தோம்.
அன்றைக்கு மிஷ்கின் ஈகோ பார்க்காமல் நான் சொன்னதை சரி செய்து கொடு்த்திருந்தால் ‘முகமூடி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டடித்து எங்களுக்கும் பெரிய அளவில் லாபம் வந்திருக்கும்.
இதற்கு சில ஆண்டுகள் கழித்து ஒரு பேட்டியில் மிஷ்கின் இது பற்றிப் பேசுகையில், “நான் அப்போது யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை. ஒருவிதமான மிதப்பில் இருந்தேன். அதனால்தான் அந்தப் படம் குறித்து பலரும் சொன்ன ஆலோசனைகளை நான் காதில் வாங்கவில்லை. இதனாலேயே ‘முகமூடி’ படம் தோல்வியடைந்தது..” என்றார். அதைக் கேட்டு ‘இப்போதாவது இதை உணர்ந்தாரே’ என்று நானும் சந்தோஷப்பட்டேன்..” என்று பெருமிதத்துடன் கூறினார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.
The post “சுந்தர்.சி-யும் நானும் ஒண்ணா..?” – கோபப்பட்ட இயக்குநர் மிஷ்கின்..! appeared first on Touring Talkies.
]]>The post ஜீவா-திஷா பாண்டே நடிக்கும் ‘கொம்பு’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post ஜீவா-திஷா பாண்டே நடிக்கும் ‘கொம்பு’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post ஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 91-வது படம்…! appeared first on Touring Talkies.
]]>தென் இந்திய சினிமா துறையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வரலாறும், பெருமையும் இருக்கிறது.
தென்னக சினிமாவிற்கு பல தரமான கலைஞர்களை அந்நிறுவனம் தந்திருக்கிறது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் வகையிலான படைப்புக்களை, உலக ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம், தொடர்ந்து தந்து வருகிறது. பெரும் வெற்றிப் பயணத்தை பல தசாப்தங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிறுவனம் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றாமல், அவர்கள் கொண்டாடும் படைப்புகளை, தரமான வடிவத்தில் தருவதில் முதன்மையாக இருக்கிறது.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் R.B.சௌத்ரி தற்போது இந்நிறுவனத்தின் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் ஜீவா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரயாகா நாக்ரா இருவரும் இப்படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு V.T.V.கணேஷ், சித்திக், ஷா ரா மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடிக்கவுள்ளார்கள்.
இசை – ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷாநவாஸ் ரெஹிமான், ஒளிப்பதிவு – சித்தார்த் ராமசுவாமி, படத் தொகுப்பு – ராகவேந்திரன் எனும் ஶ்ரீகாந்த், சண்டை இயக்கம் – R.சரவணன், கலை இயக்கம் – R.மோகன், உடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், உடைகள் – கணேஷ், ஒப்பனை – சண்முகம், புகைப்படங்கள் – அன்புராஜ், போஸ்டர் டிசைன்ஸ் – கபிலன், தயாரிப்பு மேலாளர் – நாகராஜ், தயாரிப்பு வடிவமைப்பு – ஶ்ரீநாத்.R.
இப்படத்தை பிரபல இயக்குநர் சசியின் உதவியாளரான சந்தோஷ் ராஜன் இயக்குகிறார்.
இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் சூட்டப்படாததால் தற்போதைக்கு இத்திரைப்படம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ‘தயாரிப்பு எண் 91’ எனக் குறிப்பிடப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குழு கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் நேற்று காலை(அக்டோபர் 21, 2020) தொடங்கியது.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசும்போது, “தென்னிந்திய சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகளுள் ஒருவராக திகழும் R.B.சௌத்ரி அவர்களின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன், இயக்குநராக எனது திரைப் பயணம் துவங்குவது, எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியையும், பெருமையும் அளிக்கிறது.
பல பெரும் கலைஞர்களுக்கு, இயக்குநர்களுக்கு திரையுலகில் திறவுகோலாக, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் வாய்ப்பளித்து, உருவாக்கிய பெருமை கொண்டவர் R.B.சௌத்ரி அவர்கள். அப்படியான நிறுவனத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் ஆசிர்வாதம்.
அதிலும் எனக்கு இது இரட்டை சந்தோஷ தருணம். ஜீவா அவர்கள் தமிழ் சினிமாவின் அரிய திறமைகளில் ஒருவர். அவர் மிக ஆழமான படைப்புகளில் திறமையான நடிப்பை தந்தும், கமர்ஷியல் படங்களில் எளிதாக ரசிகர்களை கவர்ந்தும் சாதனை படைத்தவர். மாஸ் மற்றும் க்ளாஸ் எனும் இரண்டு திறமையும் கொண்டவர் அவர்.
இயக்குநர் சசி அவர்களிடம் ‘டிஷ்யூம்’ படத்தில் உதவியாளராக பணிபுரிந்தபோது படப்பிடிப்பில் நடிகர் ஜீவாவின் நடிப்பு திறமையை கண்டு வியந்திருக்கிறேன். அப்படத்தில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது.
ஜீவா ஸார், இயல்பிலேயே மிகவும் எளிமையான, கலகலப்பான மனிதர். சுற்றியுள்ளவர்களை தன் கலகலப்பான குணத்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.
எனது கதையையும் அப்படியானதொரு கதாப்பாத்திரத்தை கொண்டிருப்பதால் அவரை அணுகினேன். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து, இந்திய அளவிலான முக்கிய நடிகராக மாறிவிட்ட போதிலும், அவர் அதே எளிமையுடனேதான் பழகுகிறார். இதுதான் எந்த ஒரு இயக்குநரும் அவருடன் பணிபுரிய விரும்பும் குணமாக இருக்கிறது.
இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரும் ஆசிர்வாதம். மேலும் இப்படம் தரப் போகும் மிகச் சிறந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன்…” என்றார்.
The post ஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 91-வது படம்…! appeared first on Touring Talkies.
]]>