The post ’கங்குவா’படப்பிடிப்பு விபத்து:’நலமுடன் இருக்கிறேன்’’சூர்யா பதிவு appeared first on Touring Talkies.
]]>’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்து நடிகர் சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், “நலமுடன் இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், “நண்பர்கள், நலம் விரும்பிகள், அன்பான ரசிகர்களே… விரைவில் குணமடைய வேண்டி நீங்கள் அனுப்பிய மெசேஜ்களுக்கு மனமார்ந்த நன்றி. நலமுடன் இருக்கிறேன். உங்கள் அன்புக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.
சூர்யா நடித்து வரும் திரைப்படம் ’கங்குவா’ இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார்.இந்த படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு.இசை தேவிஸ்ரீ பிரசாத். தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
‘கங்குவா’ படத்தின் சண்டைகாட்சி தொடர்பான படப்பிடிப்பு நவ.22 இரவு நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரோப் கேமரா ஒன்று அறுந்து விழுந்து சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டது. உடனடியாக சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இரண்டு வாரம் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
The post ’கங்குவா’படப்பிடிப்பு விபத்து:’நலமுடன் இருக்கிறேன்’’சூர்யா பதிவு appeared first on Touring Talkies.
]]>The post விபத்தில் சிக்கிய யூ டியூபர் டிடிஎஃப் வாசன்! ஐசியூவில் தீவிர சிகிச்சை! appeared first on Touring Talkies.
]]>விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிப்பது, காவல்துறை வழக்கு பதிந்தால் அதை பொருட்படுத்தாதது என இவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
இந்த நிலையில், காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே, பைக்கில் வீலிங் ( ஒற்றை சக்கரத்தில் ஓட்டுவது) செய்ய முயன்றபோது, பள்ளத்தில் விழுந்தார்.
பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து திரும்பினார்.
அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து உள்ளனர்.
டிடிஎஃப் வாசன் தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post விபத்தில் சிக்கிய யூ டியூபர் டிடிஎஃப் வாசன்! ஐசியூவில் தீவிர சிகிச்சை! appeared first on Touring Talkies.
]]>The post படப்பிடிப்பில் விபத்து: ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை appeared first on Touring Talkies.
]]>இப்படம் தவிர மற்றொரு படத்தின் படப்பிடிப்பிலும் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்துக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு ஷாருக் கான் சமீபத்தில் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா திரும்பியுள்ள ஷாருக் கான் தற்போது நலமுடன் இருப்பதாகவும், காயம் சரியானதும் விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஷாருக்கான் விரைவில் குணமடைய சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
The post படப்பிடிப்பில் விபத்து: ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை appeared first on Touring Talkies.
]]>The post குடும்பத்தை இழந்த மாணவி.. நெகிழ வைத்த டி.இமான் appeared first on Touring Talkies.
]]>கணப்பொழுதில் குடும்பத்தையே இழந்து நிற்கதியாக நிற்கிறார். இந்த தகவல் அறிந்த இசையமைப்பாளர் டி.இமான் உதவி செய்திருக்கிறார். தவிர வாழ்க்கை முழுதும் சகோதரனாக துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளார்.
டி.இமானை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
The post குடும்பத்தை இழந்த மாணவி.. நெகிழ வைத்த டி.இமான் appeared first on Touring Talkies.
]]>The post படப்பிடிப்பில் விபத்து: கல்யாணி பிரியதர்ஷன் காயம் appeared first on Touring Talkies.
]]>கடந்த மே மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்துக்காக சமீபத்தில் ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. டூப் போடாமல் கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள அவர், “சண்டைக் காட்சிகள் உடல் பலவீனமானவர்களுக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
The post படப்பிடிப்பில் விபத்து: கல்யாணி பிரியதர்ஷன் காயம் appeared first on Touring Talkies.
]]>The post கார் விபத்து: நடிகை பலி appeared first on Touring Talkies.
]]>பஞ்சர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் வைபவி பலியானார். அவரது வருங்கால கணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
The post கார் விபத்து: நடிகை பலி appeared first on Touring Talkies.
]]>The post ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து! appeared first on Touring Talkies.
]]>“ஆரம்ப காலகட்டத்தில் தனது ஸ்கூட்டரில்தான் சென்னை முழுக்க சுற்றி வருவார், ரஜினி. முரட்டுக்காளை, போக்கிரிராஜா படங்களுக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். ஆனாலும் இந்த ஸ்கூட்டர் மோகம் அவரை விடவில்லை.
ஒருநாள் ஸ்கூட்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுவிட்டது. ரஜினிக்கு முகத்தில் அடிபட்டுவிட்டது.
அவரை நலம் விசாரிக்கப்போன நான், ”நான் உங்களை நடிகர் என்று மட்டும் நினைத்துச் சொல்லவில்லை. நீங்கள் ஒரு பெண்ணுக்குக் கணவர். குழந்தைக்குத் தந்தை. உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களை நம்பி கணிசமான தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். உங்களது படங்களில் இந்த நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்குமேல் முடக்கப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் நீங்கள் சிந்திக்காமல் இருக்கலாமா? ஸ்கூட்டரில் செல்ல வேண்டிய அவசியம் அப்படி என்ன இருக்கிறது? உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள்? இனிமேலாவது ஸ்கூட்டர் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டேன்.
ரஜினியோ, ”ஸ்கூட்டர் ஓட்டறதெல்லாம் சும்மா ஜாலிக்குத்தான். எனக்கு எதுவும் ஆகாது” என்றார்.
”இனி ஸ்கூட்டர் ஓட்டுவதில்லை என்று உறுதி சொன்னால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன்” என்றேன். ரஜினி சிரித்தபடியே அதை ஏற்றுக் கொண்டார். எனக்குத் தெரிந்து அப்புறம் ரஜினி ஸ்கூட்டர் ஓட்டவில்லை” என்று தெரிவித்துள்ளார் ஏவிஎம் சரவணனந்.
The post ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து! appeared first on Touring Talkies.
]]>The post அஜித் – ஷாலினி: விபத்தில் தொடங்கிய காதல்! appeared first on Touring Talkies.
]]>ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் மலையாளம், தமிழ் படங்களில் நடித்தார். , இயக்குநர் சரண், அஜித் நடிப்பில் உருவாகிய ‘அமர்க்களம்’ படத்திற்கு அவரி ஷாலினியை அணுகினர். ஷாலினி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால் அந்த வாய்ப்பை நிராகரித்தார். நடிகர் அஜித் தலையிட்டு, படப்பிடிப்பால் அவரது படிப்புக்கு இடையூறு ஏற்படாது என உறுதியளித்தார்.
இந்த படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை அஜித் பழைய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும் போது தவறுதலாக ஷாலினியின் கை கத்தியால் வெட்டுப்பட்டது. ஷாலினி வலியில் கதறி அழுததை பார்த்த அஜித்துக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. ஷாலினியின் உடல்நிலை குறித்து அஜித் மிகவும் கவலைப்பட்டார். இது ஷாலினியை மிகவும் பாதித்தது.
படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார் அஜித். பயத்துடன் சொன்னார். அப்போது ஷாலினியின் மனதில் அஜித் இடம் பிடித்திருந்தார்.
இதையடுத்து இவர்களது திருமணம் ஏப்ரல் 24, 2000 அன்று நடைபெற்றது.
இதைத்தான் அந்த பேட்டியில் அஜீத் கூறியிருந்தார்.
The post அஜித் – ஷாலினி: விபத்தில் தொடங்கிய காதல்! appeared first on Touring Talkies.
]]>The post விபத்தில் சிக்கிய பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமார்! appeared first on Touring Talkies.
]]>இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் மோதும் ஆபத்தான சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. இதில் டூப் நடிகரை பயன்படுத்துமாறு அக்ஷய்குமாரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் நானே நடிப்பேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார்.
இந்த நிலையில் சண்டை காட்சியில் அக்ஷய்குமாருக்கு பலத்த அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சண்டை காட்சியை படமாக்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
The post விபத்தில் சிக்கிய பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமார்! appeared first on Touring Talkies.
]]>The post விபத்து: உடல் நிலை குறித்து விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் நலம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், , “மலேசியாவில் படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்திலிருந்து நான் குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், தனது உடல் நிலை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.
The post விபத்து: உடல் நிலை குறித்து விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி! appeared first on Touring Talkies.
]]>