The post “ரஜினியைக் கண்டித்து செட்டை விட்டு வெளியேறினேன்..” – ‘ஸ்டில்ஸ்’ ரவி சொல்லும் ஒரு சுவாரசியக் கதை..! appeared first on Touring Talkies.
]]>அவர் இது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
“நான் கவிதாலயா தயாரிப்பில் உருவான ‘சிவா‘ படத்தில் புகைப்படக் கலைஞனாகப் பணியாற்றினேன்.
அந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் சாயந்தர வேளையில் ‘இரு விழியின்’ பாடலின் நடனக் காட்சி ஏவி.எம்.மின் 8-வது ப்ளோரில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ரஜினியும், ஷோபனாவும் சூப்பரான காஸ்ட்யூம்ஸ் போட்டிருந்தாங்க.
ஒரு டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் முடிந்ததும் “ரஜினி ஒரு ஸ்டில்..” என்று ரஜினியிடம் கேட்டேன். ரஜினி என்ன நினைத்தாரோ.. திடீரென்று கோபத்துடன் “என்ன… என்ன… உங்களுக்கும் ஆடிக் காட்டணுமா…?” என்று கோபத்துடன் கேட்டார்.
இதைக் கேட்டதும் எனக்கும் சட்டென்று கோபம் வந்தது. பட்டென்று கேமிராவை மூடி கையில் எடுத்துக் கொண்டு, அப்படியே செட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். ஏவி.எம்.மின் 8-வது ப்ளோரில் இருந்து 1-வது ப்ளோர்வரையிலும் நடந்து வந்தேன்.
‘இந்தப் படத்துக்கு இன்னியோட மங்களம் பாடிர வேண்டியதுதான். இனி இந்தப் படத்துல வேலை பார்க்கக் கூடாது’ன்னு நினைச்சுக்கிட்டே நடந்துக்கிட்டேயிருந்தேன்.
அப்போது ரஜினியின் உதவியாளரான ஜெயராமன் என்னைத் தேடி ஓடி வந்தார். “ஸார் கூப்பிடுறாரு…” என்று என்னை அழைத்தார். நான் திரும்பவும் ரஜினியைப் பார்க்கப் போனேன். செட்டுக்குப் பின்னாடி சிகரெட் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.
“என்ன கோச்சுட்டீங்களா..?” என்றார். “ஆமாம்” என்றேன். “என்கிட்ட பெர்ஸனலா கோபப்பட்டா எனக்கு ஒண்ணுமில்லை. ஆனால் என் தொழில்ல ஏதாவது குறுக்கீடு வந்தா எனக்குக் கோபம் வரும்..” என்றேன்.. “ஸாரி.. எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் கோபமாயிருச்சு…” என்றார் ரஜினி.
ஆனா, அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது. “ரஜினிக்கு சாயந்தரமானா தண்ணியடிக்கணும். அந்த நேரத்துல யாராச்சும் லேட் செஞ்சா பயங்கர கோபம் வரும்”ன்னு அந்தப் படத்தோட இயக்குநர் அமீர்ஜான் சொல்லித் தெரிஞ்சுக்கிட்டேன்.
இந்தப் பிரச்சினை அதோடு முடிஞ்சிருச்சு.. என்னிக்குமே ரஜினி அப்படி கோபப்பட மாட்டாரு. அன்னிக்கு ஏதோ ஒண்ணுன்றதால கோபமாயிட்டாருன்னு நினைக்கிறேன்.
பட்.. ரஜினி நிஜத்துல நல்ல மனுஷன். எல்லா விஷயத்துலேயும் பெர்பெக்ட்டான நபர். என்கிட்ட ஸ்டில்ஸ் எடுக்க வர்ற எல்லார்கிட்டேயும் நான் சொல்றது ரஜினி மாதிரி கண்ணாடி முன்பு நின்னு நீங்களே நடிச்சுப் பார்த்து உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்குங்கன்னு.
அவரும் அதை்ததான் செய்வாரு. எவ்வளவு பெரிய நடிகரான பின்னாடியும்.. சில காட்சிகள்ல நடிக்குறதுக்கு முன்னாடி கண்ணாடி முன்னாடி நின்னு நடிச்சுப் பார்த்துக்குவாரு. அப்போதான் ஷாட்ல நல்லா வரும்ன்னு நினைப்பாரு. இதைத்தான் நடிகனா ஆகணும்ன்னு நினைக்கிறவங்களுக்கும் நான் அடிக்கடி சொல்லுவேன்..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.
The post “ரஜினியைக் கண்டித்து செட்டை விட்டு வெளியேறினேன்..” – ‘ஸ்டில்ஸ்’ ரவி சொல்லும் ஒரு சுவாரசியக் கதை..! appeared first on Touring Talkies.
]]>The post மோகனுக்கு ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி..? appeared first on Touring Talkies.
]]>“அத்திரைப்படத்தில் மோகன் நடிப்பதற்கு நான்தான் காரணமாக இருந்தேன்” என்று ஸ்டில்ஸ் ரவி பேட்டியளித்துள்ளார்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனைக் கூறியுள்ளார் ஸ்டில்ஸ் ரவி.
அவர் இது பற்றிக் கூறுகையில், “மோகனுடனான எனது முதல் அனுபவம் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில்தான் கிடைத்தது. அந்தப் படம்தான் அவரது அறிமுகப் படம்.
அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நானும் சுஹாசினியும் கேமிராவுக்கு பின்னால் நின்று கொண்டு அவர் பேசும் தமிழை கிண்டல் செய்து கொண்டிருப்போம். அப்போது மோகனுக்கு கொஞ்சமாகத்தான் தமிழ் தெரியும்.
அது அவரது முதல் படம் என்பதால் அவர் எப்போதும் தனியாகத்தான் இருப்பார். உடன் நடித்த பிரதாப் போன்றவர்களெல்லாம் தினமும் எங்கேயாவது கூட்டமாக வெளியே சினிமாவுக்குப் போவார்கள். ஆனால் மோகனை மட்டும் கூப்பிட மாட்டார்கள்.
இதனால்தான் நான் மோகனுடன் நெருக்கமான நண்பனானேன். அப்போது மோகன் பாம்குரோவ் ஹோட்டலில் தங்கியிருந்தார். நான் தினமும் சாயந்தர நேரத்தில் அங்கே சென்று அவருடன் பேசிக் கொண்டிருப்பேன்.
அந்தப் படம் முடிந்தவுடன் அவருக்கு வாய்ப்பு கேட்டு என்னுடைய ஸ்கூட்டரில் பின்னால் அமர வைத்து பல திரைப்பட நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.
அப்போது கோவைத்தம்பி ஸார் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தைத் துவக்கினார். இந்தப் படத்தில் முதலில் மோகன் நடித்த கதாபாத்திரத்தில் சுரேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், படம் துவங்கிய நேரத்தில் சுரேஷுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போய்விட்டதால் வேறு ஹீரோவைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் அதை நான் கேள்விப்பட்டு அந்தப் படத்துக்கு அப்போது பொறுப்பாளராக இருந்த கங்கை அமரனிடம் மோகனைப் பற்றிச் சொல்லி வாய்ப்பு தர சொன்னேன். அதேபோல் படத்தின் இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜனிடமும் மோகனுக்காக வாய்ப்பு கேட்டேன். அவர்களும் கொடுத்தார்கள். இப்படித்தான் மோகன் அந்தப் படத்தில் நடித்தார்..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.
The post மோகனுக்கு ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி..? appeared first on Touring Talkies.
]]>The post ஒரு புகைப்படத்தால் கோபமான எம்.ஜி.ஆர். – ஸ்டில்ஸ் ரவி சொல்லும் ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>இது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் தளத்தின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
இது பற்றி ‘ஸ்டில்ஸ்’ ரவி கூறும்போது, “என் குருநாதர் சுபா சுந்தரத்திடம் நான் உதவியாளராகப் பணியாற்றி வந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். நடிக்கும் பல படங்களுக்கு சுபா சுந்தரம் போட்டோகிராபராக பணியாற்றி வந்தார். அவர் ஷூட்டிங்கிற்குப் போகும்போது நானும் உதவிக்குச் செல்வேன்.
இப்படி எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை ‘இதயக்கனி’ படப்பிடிப்பில் தனக்கு ஏதோ ஒரு வேலையிருக்கிறது என்று சொல்லி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டார்.
நானும் ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். சாப்பிடுவது போன்று ஒரு காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். நான் அதற்கு ‘ஸார் ஒரு ஸ்டில்’ என்று கேட்டேன். உடனே எம்.ஜி.ஆர். தட்டருகே கையை வைத்துவிட்டு கேமிரா பக்கம் முகத்தைக் காட்டினார். உடனேயே நான், ‘சாப்பிடுவதுபோல இருந்தால் நல்லாயிருக்கும் ஸார்’ என்றேன்.
உடனேயே அருகில் இருந்தவர்கள் பதட்டத்துடன் என்னிடம் ஏதேதோ சொன்னார்கள். அவர்கள் அனைவரையும் எம்.ஜி.ஆர். அதட்டிவிட்டு நான் சொன்னதுபோலவே வாய் அருகே கையை வைத்து போஸ் கொடுத்தார். அதை கிளிக் செய்தேன்.
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. கட்சியை ஆரம்பிக்க இருந்த சூழலில் சத்யா ஸ்டூடியோவுக்கு பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். ஸ்டூடியோவின் வெளியில் அனைத்து பத்திரிகையாளர்களும் எம்.ஜி.ஆருக்காகக் காத்திருந்தனர்.
அப்போது நான் மட்டும் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக உள்ளே சென்றேன். அங்கே ஒரு பாடல் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். ராதா சலூஜாவுடன் ஆடிக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு ஷாட்டில் ராதா சலூஜாவின் சேலையை எம்.ஜி.ஆர். இழுப்பதுபோல ஷாட் இருந்தது.
எனக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றியதோ.. தெரியவில்லை.. உடனேயே எனது கேமிராவில் அதைப் படமாக்கிவிட்டேன். அப்படியே வெளியேயும் வந்துவிட்டேன்.
பின்பு அதனை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்க.. பல பத்திரிகைளில் அது பிரசுரமாகிவிட்டது. அதன் பின்புதான் அது எம்.ஜி.ஆர். பார்வைக்குப் போயிருக்கிறது.
அவர் உடனேயே சுபா சுந்தரத்திற்கு போன் செய்து “எப்படி அந்த போட்டோவை எடுக்கலாம்..? பிரஸ்ஸுக்குக் கொடுக்கலாம்..?” என்று கோபமாகக் கேட்டிருக்கிறார். “சின்னப் பையன்.. ஒரு ஆர்வத்துல எடுத்துக் கொடுத்திட்டான்..” என்று சொல்லி சமாளித்தார் சுபா சுந்தரம்.
இதேபோல் ‘பல்லாண்டு வாழ்க’ படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஒரு இடத்தில் நடந்து கொண்டிருந்தது. லாங் ஷாட்டில் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு புகைப்படக்கார பையன் அவருக்கே தெரியாமல் ஜூம் செய்த கேமிராவில் புகைப்படம் எடுத்துவிட்டான். அவன் புகைப்படம் எடு்த்ததை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டார்.
உடனேயே அந்தப் புகைப்படம் எடுத்த பையனை அருகில் அழைத்து, அந்தக் கேமிராவை வாங்கி அதில் இருந்த பிலிமை வெளியில் எடுத்துவிட்டார். “எப்போதும் என்னைக் கேட்காமல் படம் எடுக்கக் கூடாது…” என்று கண்டிப்புடன் சொன்னார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். எப்போதும் சிம்பிள்மேன்தான். ஆனால், தன்னுடைய இமேஜை அப்படியே மெயின்டெயின் செய்வார். பலரும் நினைப்பதுபோல பந்தாவாக வருவதோ, செல்வதோ கிடையாது. அவரைச் சுற்றியிருப்பவர்கள் அப்படியொரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள்.
அவருடைய கார் வரும்வரையிலும் செட்டில் சலசலவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். அவரது காரை பார்த்தவுடன் அனைவரும் அமைதியாகி அவரவர் வேலையைக் கவனிக்கப் போவார்கள். அவரும் செட்டில் மிக சாதாரணமாகவே இருப்பார். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவார். பழகுவார்…” என்றார் ஸ்டில்ஸ் ரவி.
The post ஒரு புகைப்படத்தால் கோபமான எம்.ஜி.ஆர். – ஸ்டில்ஸ் ரவி சொல்லும் ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>