The post “ஆடுகளம் 2 ”: கிசோர் சொல்லும் தகவல் appeared first on Touring Talkies.
]]>ஆடுகளம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆடுகளம் கிசோர் சமீபத்தில் இது குறித்து பேசினார்.
அவர், “என்னிடம் கூட பலரும் இதே கேள்வியை கேட்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறனிடமே இது குறித்து நான் கேட்டேன். அவரும்,’இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்’ என்றார். ஆனால் உறுதியாகச் சொல்லவில்லை. ஆனாலும் அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றே நினைக்கிறேன்” என்றார் கிசோர்.
ஆக, ரசிகர்களின் ஆசை நிறைவேறப்போகிறது.
The post “ஆடுகளம் 2 ”: கிசோர் சொல்லும் தகவல் appeared first on Touring Talkies.
]]>The post “என் படத்தை தானே பார்ப்பதில்லை!”: வெற்றிமாறன் appeared first on Touring Talkies.
]]>தொடர்ந்து விசாரணை, வடசென்னை, அசுரன் என அதிரடியான… அதே நேரம் உணர்வுபூர்வமான படங்களை அளித்து சிறந்த இயக்குநர் என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு இருப்பவர்.
ஆனால் தான் இயக்கிய படங்களை தானே பார்ப்பதில்லை என ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார்.
“திரைப்படத்தைப் பொறுத்தவரை நான் திருப்தி அடையவே மாட்டேன். இயக்கி முடித்து, போஸ்ட் புரடக்சன் வேலை முடிந்து படம் தயாரான பிறகு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவேன். ஏனென்றால் மீண்டும் படத்தைப் பார்த்தால்… ‘அட.. இந்த காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாமே என தோன்றும். அது மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆகவே தொலைக்காட்சிகளில் எனது படத்தின் பாடல்கள், காட்சிகள் ஓடினாலும் உடனே சேனலை திருப்பிவிடுவேன்” என்று சொல்லி இருக்கிறார் வெற்றி மாறன்.
The post “என் படத்தை தானே பார்ப்பதில்லை!”: வெற்றிமாறன் appeared first on Touring Talkies.
]]>The post பிரபாகரன்-ராஜராஜ சோழன் வாழ்க்கைக் கதையை படமாகத் தயாரிக்கப் போகும் சீமான் appeared first on Touring Talkies.
]]>ராஜராஜ சோழன் தமிழனா, இந்தியனா என்கிற சர்ச்சையை இயக்குநர் வெற்றி மாறன் ஆரம்பித்துவிட.. இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நேரத்தில் “ராஜராஜ சோழன் இந்து இல்லை” என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குநருமான சீமான் ராஜராஜ சோழன் மற்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுத்தம்பி பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக தான் தயாரிக்கப் போவதாகவும், அந்தப் படங்களை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், “தமிழர்களின் போற்றுதலுக்குரிய மூதாதை’, ‘எங்கள் பாட்டன்’, ‘அரசனுக்கரசன்’, அருள்மொழி சோழன் அவர்களின் உண்மையான வரலாற்றையும்,
இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி, எங்கள் அண்ணன், ‘தமிழ்த் தேசியத் தலைவர்’ மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச் சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத் தம்பி வெற்றி மாறன் இயக்குவார்.
‘வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் தங்களுக்கான வரலாற்றை தாங்களே எழுதுவார்கள்’ என்ற ‘அறிவாசான் அண்ணல்’ அம்பேத்கர் அவர்களின் புரட்சி மொழிக்கேற்ப ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்குத் தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரிய வரும்..” என்று குறிப்பிட்டுள்ளார் சீமான்.
The post பிரபாகரன்-ராஜராஜ சோழன் வாழ்க்கைக் கதையை படமாகத் தயாரிக்கப் போகும் சீமான் appeared first on Touring Talkies.
]]>The post “மணிரத்னத்திடம் போய் கேளுங்கள்” – நடிகர் சரத்குமாரின் பதில்..! appeared first on Touring Talkies.
]]>கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், ”பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த கேரக்டருக்கு நான் பொருந்துவேன் என்கிற எண்ணம் மணிரத்னத்திற்கு உதித்தது மிகப் பெரிய விஷயம். வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தைப் பார்த்து பலரும் எனக்கு போன் செய்தார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அனைவர் மத்தியிலும் சென்றடைந்திருக்கிறது” என்றார்.
மேலும், ”குறை சொல்பவர்கள், அந்தக் குறையை இயக்குநரிடம் சென்று இப்படி சித்தரித்து இருக்கிறீர்களே என்று கேட்க வேண்டும். தவறு இருக்கிறது என்றால் இயக்குநரிடம் சொல்ல வேண்டும். வெற்றிமாறன் ஒரு கருத்தினை பதிவு செய்திருக்கிறார். இது ஜனநாயக நாடு. சுதந்திர நாடு. யார் என்ன கருத்து சொல்ல விரும்புகிறார்களோ அதைச் சொல்ல அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அவர் கருத்து சொல்லி இருக்கிறார் என்றால் அதை யாரிடம் கேட்க வேண்டுமோ, அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
என்னைப் பார்த்து அந்த கருத்தை கேட்டால் நான் சொல்லும் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுமா? படத்தில் நடித்ததினால் என்னிடம் கேட்க வேண்டுமா? இயக்குநரிடம் சென்று கேளுங்கள். “இப்படி சித்தரிக்கப்பட்டது தவறு என்று நினைக்கிறோம். இப்படி படத்தில் சொல்லி இருக்கிறீர்கள்” என்று நீங்கள் ஜெயமோகனிடம் கேளுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன்” என தெரிவித்தார்.
The post “மணிரத்னத்திடம் போய் கேளுங்கள்” – நடிகர் சரத்குமாரின் பதில்..! appeared first on Touring Talkies.
]]>The post “வெற்றி மாறன் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது” – நடிகை குஷ்பூ அட்வைஸ்..! appeared first on Touring Talkies.
]]>அந்த விழாவில் பேசிய வெற்றிமாறன், “தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள்” என பேசியிருந்தார். வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு ஒரு சேர ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது.
இந்த நிலையில் வெற்றி மாறனின் இந்தப் பேச்சுக்கு நடிகை குஷ்பூ இன்று பதிலளித்துள்ளார்.
இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த குஷ்பு, “இயக்குநர் வெற்றி மாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதைத்தான் பார்க்க வேண்டும். அனைத்திலும் தப்பு கண்டுபிடிக்க வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வரலாறு பற்றி ஆய்வு தெரியாமல் மணிரத்னம் படம் எடுத்திருக்க மாட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தமிழ் படம் தெலுங்கு படம் என்று இல்லை. இது ஒரு பான் இந்தியா படம். தமிழர்களின் வரலாறை கூறியிருக்கும் படம். முகம் காட்டாமல் விமர்சனம், எதிர்கருத்து சொல்பவர்களை பற்றி கவலையில்லை..” என்றார்.
The post “வெற்றி மாறன் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது” – நடிகை குஷ்பூ அட்வைஸ்..! appeared first on Touring Talkies.
]]>The post வெற்றிமாறன் வழங்கும் பேட்டைக்காளி வெப் சீரீஸ் appeared first on Touring Talkies.
]]>‘ஜல்லிக்கட்டு’ உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்துவமான கதைகள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் என்ற அடிப்படையில் பல அசத்தலான படைப்புகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆஹா தமிழின் அடுத்த படைப்பான ‘பேட்டைக்காளி’, ஜல்லிக்கட்டு கதையை அடிப்படையாகக் கொண்டது.
சமகால தமிழ் சினிமாவில் கவனிக்கத்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் படைப்பாக வரும் இந்த இணைய தொடரில் மக்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு ஜல்லிக்கட்டு உலகத்தை பார்ப்பார்கள்.
ஏற்கனவே ‘பேட்டைக்காளி’ என்ற இந்தத் தலைப்பு, பார்வையாளர்காளிடையே ‘யாரந்த பேட்டைக்காளி’ என்ற ஆர்வத்தை உருவாக்கி உள்ளது.
இந்த இணையத் தொடர், நல்ல கதையம்சத்துடன் கூடிய நடிகர்கள் மற்ற தொழில் நுட்பக் குழுவை கொண்டது.
இயக்குநர் வெற்றி மாறன் இதன் ஷோ-ரன்னராக இருந்தாலும் ‘பேட்டைக்காளி’ படத்தை வெற்றி மாறனின் நீண்ட கால உதவி இயக்குநரான ராஜ்குமார் இயக்கி உள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழு குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.
The post வெற்றிமாறன் வழங்கும் பேட்டைக்காளி வெப் சீரீஸ் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா-வெப் சீரீஸ் என்று இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ஷீலா ராஜ்குமார்..! appeared first on Touring Talkies.
]]>பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகும் நடிப்பு திறமையும் அவரது கதாபாத்திரங்களில் பிரதிபலிக்க, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நாயகியாக மாறியுள்ளார் ஷீலா ராஜ்குமார்.
பல சர்வேதேச விருதுகளை பெற்ற ‘டூ லெட்’, விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற ‘மண்டேலா’ என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்றால் “ஷீலா ராஜ்குமாரை கூப்பிடுங்கள்” என சொல்லும் அளவுக்கு யதார்த்த நடிப்பால் ரசிகர்களை மட்டுமல்ல, இயல்பான படைப்புகளை தர விரும்பும் படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளார் ஷீலா ராஜ்குமார்.
அதற்கேற்ற மாதிரி திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் தனது முத்திரையை பதிக்க துவங்கியுள்ளார்.
தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஷீலா ராஜ்குமார்.
“வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகிவரும் ‘பேட்ட காளி’ என்கிற வெப் சீரிஸில் நடிக்கிறேன். ‘அண்ணனுக்கு ஜே’ படத்தை இயக்கிய ராஜ்குமார் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார்.
‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் நாயகனான ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணனின் இசை என்று ஒரு திரைப்படத்திற்கு இணையாக இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது.
இந்த வெப் சீரீஸில் ‘பேட்ட காளி’ என்கிற ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்
‘மண்டேலா’ படத்தை தொடர்ந்து நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் தேடி வருகின்றன. அந்த வகையில் ஒரு நல்ல படத்தில் நானும் முக்கிய பங்களிப்பை கொடுத்திருந்தது என் திரையுலக பயணத்தில் வெளிச்ச புள்ளியாக மாறியுள்ளது.
பார்ப்பவர்கள் அனைவருமே ‘மண்டேலா’வுக்கு பிறகு உங்களது படங்களை பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம் என்று கூறுவதை கேட்பதற்கே பெருமையாக உள்ளது. அவர்களை போல நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன்.
இந்தப் படத்திற்குப் பிறகு ‘கோலி சோடா’ உள்ளிட்ட படங்களுக்கு படத் தொகுப்பு செய்த ராஜா சேதுபதியின் முதல் தயாரிப்பான ‘ஜோதி’ என்கிற படத்திலும் நான் கதாநாயகியாக நடித்துள்ளேன்.
‘8 தோட்டாக்கள்’ படத்தின் ஹீரோவான வெற்றி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். க்ரிஷா குரூப், ‘ராட்சசன்’ சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கிருஷ்ணா அண்ணாமலை இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தற்போதைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
இன்னொரு பக்கம் மலையாளத்தில் ஏற்கனவே ‘கும்ப்ளாங்கி நைட்ஸ்’ என்கிற படத்தில் நடித்ததற்காக நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. தற்போது மீண்டும் மலையாளத்தில் ‘பெர்முடா’ என்கிற படத்தில் நடித்து வருகிறேன். ராஜீவ் குமார் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இது தவிர தமிழில் இன்னும் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறேன். அவற்றை பற்றிய தகவல்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது…” என்றார் ஷீலா ராஜ்குமார்.
The post சினிமா-வெப் சீரீஸ் என்று இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ஷீலா ராஜ்குமார்..! appeared first on Touring Talkies.
]]>The post வெற்றி மாறனின் இயக்கத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன் appeared first on Touring Talkies.
]]>நடிகர் விக்ரம் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோருடன் இணைந்து ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்துக்குப் பிறகு கமலின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ‘பாபநாசம்-2’ படத்தில் அவர் நடிக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் இயக்குநர் வெற்றிமாறனும் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அந்தச் சந்திப்பு பற்றி வெற்றி மாறன் பேசும்போது “அது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று மட்டுமே கூறியிருந்தார். ஆனால், இப்போது வெற்றி மாறனின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப் போவது உறுதியாகியுள்ளது.
டூரிங் டாக்கீஸ் யூடியுப் தளத்திற்கு நடிகையும், மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான நடிகை ஸ்ரீப்ரியா நீண்ட பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியின்போது. “உங்களுடைய தயாரிப்பில் ‘பாபநாசம்-2’ படம் எப்போது ரெடியாகும்..?” என்று கேட்கப்பட்டபோது, “இப்போது ‘பாபநாசம்-2’ படம் பண்ணும் அளவுக்கு கமல் சாருக்கு நேரமில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் என பிசியாக இருக்கிறார். மேலும் ‘விக்ரம்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதெல்லாம் முடிந்தால்தான் ‘பாபநாசம்-2’ பற்றி யோசிக்கவே முடியும்…” என்று பதில் அளித்தார் நடிகை ஸ்ரீப்ரியா.
கமல் – வெற்றி மாறன் கூட்டணி இணையும் படத்தினை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சூர்யாவின் நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை முடித்துவிட்டு, அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post வெற்றி மாறனின் இயக்கத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன் appeared first on Touring Talkies.
]]>The post SIIMA விருதுகளில் 10 பிரிவுகளில் ‘அசுரன்’ படம் போட்டியிடுகிறது appeared first on Touring Talkies.
]]>சமீப ஆண்டுகளில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றது. 2019-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் இந்தப் படமே பெற்றிருந்தது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தனுஷுக்கு இந்தப் படம் பெற்றுத் தந்தது.
மேலும் அந்த வருடத்திய பல்வேறு நிறுவனங்கள் வழங்கிய சினிமா விருதுகளையும் இத்திரைப்படம்தான் அதிகமாகக் கைப்பற்றியது. இப்போது மேலும் கூடுதலாக மேலும் பல விருதுகளை அள்ளப் போகிறது இத்திரைப்படம்.
சைமா(SIIMA) எனப்படும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான சர்வதேச விருதுகளுக்கு இத்திரைப்படம் 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல், சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப் பாடகி, சிறந்த அறிமுக நடிகர் ஆகிய 10 பிரிவுகளில் இத்திரைப்படம் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிச்சயமாக இதில் 8 விருதுகளை இத்திரைப்படம் அள்ளப் போவது உறுதி..!
The post SIIMA விருதுகளில் 10 பிரிவுகளில் ‘அசுரன்’ படம் போட்டியிடுகிறது appeared first on Touring Talkies.
]]>