The post ஒரே ஹோட்டலில் ரஜினி மற்றும் விஜய்! எப்போது சந்திப்பு? appeared first on Touring Talkies.
]]>தி கோட் படப்பிடிப்பு சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.திருவனந்தபுரத்தில் நடக்கும் தி கோட் படப்பிடிப்பில் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மாஸ்கோவிற்கு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். விஜய் திருவனந்தபுரம் வந்தது முதல் கேரள ரசிகர்கள் விஜய் செல்லும் இடம்பெறலாம் சூழ்ந்த வண்ணம் உற்சாகத்தில் உள்ளனர்.
வேட்டையன் படப்பிடிப்பும் திருவனந்தபுரத்தில் துவங்கிய நிலையில் திருவனந்தபுரம் சென்றுள்ள ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கியுள்ளனர் என்பதே சுவாரஸ்யம் இப்படி இருக்க இவர்கள் இருவரும் விரைவில் சந்திக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் கேரளா சென்றுள்ள விஜய் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
The post ஒரே ஹோட்டலில் ரஜினி மற்றும் விஜய்! எப்போது சந்திப்பு? appeared first on Touring Talkies.
]]>The post நடிகை அசின்:அவர் செய்யும் பிரியாணிக்கு அடிமையாம்..! appeared first on Touring Talkies.
]]>விஜய் உடன் பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை அசின்.போக்கிரி படத்தில் அவர் நடித்து கொண்டு இருக்கும் போது விஜய் வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். அப்போது விஜயின் அம்மா மகனுக்கு பிடித்த பிரியானியை அடிக்கடி செய்வதும் வழக்கமாம்.
அவரது பிரியாணிக்கு ஒரு கட்டத்தில் அடிமையாகி விட்டா அசின் சாப்பிடுவதற்காகவே அவரது வீட்டுக்கு போவாராம்.
இதனை ஒரு பேட்டியில் விஜயின் அம்மா செய்யும் வெஜ் முதல் நான்வெஜ் வரை எல்லா பிரியாணியும் அருமையாக செய்வார் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக் கூறியிருந்தார் அசின்.
The post நடிகை அசின்:அவர் செய்யும் பிரியாணிக்கு அடிமையாம்..! appeared first on Touring Talkies.
]]>The post விஜயையே டார்ச்சர் செய்த நடிகர்! appeared first on Touring Talkies.
]]>அவர் ஜெய்.
இதோ அவரது மொழியிலேயே..
“விஜய்க்கு நான் தம்பி முறை. ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நாயகனாக தோன்ற.. ரீமா சென், வடிவேலு, நான் எல்லோரும் நடித்தோம். விஜயின் தம்பியாக நடித்தேன். இது எனது முதல் படம் என்பதால் விளையாட்டுத்தனமாகவே இருந்தேன். ஆக்ஷன் என இயக்குநர் கூறியவுடன், என்ன ஆங்கிள் எனக் கேட்பேன். கேமராவை பாருப்பா என அவர் கூறினால் எதிர் திசையில் முகத்தைத் திருப்புவேன்.
இதெல்லாம் விஜய்க்கு ரொம்ப டார்ச்சர் ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில், இவன் ரொம்ப சேட்டை செய்யறானே.. வேற ஆளை நடிக்க வச்சிரலாமா என விஜய் நினைக்கும் அளவுக்கு போய்விட்டது. ஆனால் அதற்குள் படப்பிடிப்பே முடிந்துவிட்டது” என்று சொல்லி சிரித்தார் ஜெய்.
The post விஜயையே டார்ச்சர் செய்த நடிகர்! appeared first on Touring Talkies.
]]>The post பயந்த அந்த நிமிடங்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் appeared first on Touring Talkies.
]]>எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், 1987ம் ஆண்டு இவரது இயக்கத்தில் நீதிக்கு தண்டனை என்ற படம் வெளியானது. இப்படத்துக்கு கதை வசனம் எழுதியவர், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து உருவான படம் இது.
படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்க, சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு.
குறிப்பிட்ட நேரத்துக்கு எஸ்.ஏ.சி. சென்றுவிட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். காக்கவைத்துவிட்டார்.
நேரம் ஆக நேரம் ஆக சந்திரசேகருக்கு ஒருவித பயம் ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அழைக்க.. அறையினுள் எஸ்.ஏ.சி. சென்றார்.
நீதிக்கு தண்டனை படம் குறித்து எதுவுமே கேட்காத எம்.ஜி.ஆர், “என்னுடைய எம்ஜிஆர் பிக்சர்ஸ் மூலம் நிறைய படங்களை தயாரித்து இருக்கிறேன். ஆனால் இப்பொழுது எந்த படமும் எடுக்கவில்லை. நீங்கள் வருடத்திற்கு இரண்டு படங்கள் இயக்க முடியுமா” என்று கேட்டிருக்கிறார். எஸ்.ஏ.சி.க்கு. ஆச்சரியம்.
இது குறித்து பழைய நினைவுகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் எஸ்.ஏ.சி.
அப்போது, “எம்.ஜி.ஆரை நினைத்து வியந்தேன். அவரை விமர்சித்து படம் எடுத்திருக்கோம். ஏதோ மிரட்டுவார் என எண்ணி வந்த எனககு ஆச்சரியம். எம்ஜிஆர் எப்பொழுது திறமையானவர்களை மிகவும் மதிக்க கூடியவர்” என்று பிரமிப்பாக தெரிவித்தார் எஸ்.ஏ.சி.
The post பயந்த அந்த நிமிடங்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் appeared first on Touring Talkies.
]]>The post கோபத்தில் விஜய் என்ன செய்வார்? appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “பொது நிகழ்ச்சியில் நடிகர் விஜய் எப்போதும் ஒரே மாதிரியான முகபாவத்தில் இருக்கிறாரே.. அவர் எப்போது தனது மகிழ்ச்சியை அல்லது கோபத்தை வெளிப்படுத்துவார்” என கேட்கப்பட்டது.
அதற்கு நெல்சன், “ எனக்கும் அது புரியாத புதிர்தான். ஒரு முறை விஜயிடமே இது குறித்து கேட்டேன். சிரித்த அவர், ‘என் க்ளோஸ் பிரண்ட்ஸ் கூட இதே கேள்வியைத்தான் கேப்பாங்க. நம்ம லைப்ல பாதி சந்தோசம்னா, பாதி பிரச்சினைதான். அந்த நேரத்துல எடுக்கிற எமோசனல் முடிவால எந்த பயனும் இல்லை. இரு தரப்புக்கும் அது மன வருத்தைத்தையே தரும். ஆகவே கோபம் வந்தா சைலண்ட் ஆயிடும். கோபம் போனவுடனே அது பத்தி யோசிச்சா, இதுக்கா கோபப்பட்டோம்னு தோணும். இதுதான் சரியான விளக்கம் என நினைக்கிறேன்’ என்றார் விஜய்” என விஜயின் கோப ரகசியத்தை பகிர்ந்துகொண்டார் நெல்சன்.
The post கோபத்தில் விஜய் என்ன செய்வார்? appeared first on Touring Talkies.
]]>The post விஜய் தவறவிட்ட வெற்றிப்படங்கள்! appeared first on Touring Talkies.
]]>அவர், “நான் இயக்கிய ரன், வேடே்டை, சண்டைக்கோழி ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றி பெற்றன. இந்தப் படங்களை . விஜய் நடிக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்த கதைகளைஉருவாக்கினேன். ஏனோ அவருக்குப் பிடிக்கவில்லை. அதை தவறு என சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சிந்திப்பார்கள். ஆகவே விஜய் தனக்கு இந்த கதைகள் ஒத்துவராது என நினைத்திருக்கலாம்.
ஆனால் இப்போதும் பலர் என்னிடம், ‘விஜயுடன் இணைந்து எப்போது படம் பண்ணப்போகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதைவிட மகிழ்ச்சி ஏது.. காலம் வரட்டும் என காத்திருக்கிறேன்” என்று தனது ஆசையையும் வெளிப்படுத்தினார் லிங்குசாமி.
The post விஜய் தவறவிட்ட வெற்றிப்படங்கள்! appeared first on Touring Talkies.
]]>The post “விஜய்யுடன் தற்போது தொடர்பில் இல்லை” – நடிகர் ஸ்ரீகாந்தின் வருத்தம்..! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இயக்குநர் சங்கரிடம், ‘நண்பன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘Zindagi Na Milegi Dobara’ படத்தை கொண்டு எடுக்கலாம் என்று நாங்கள் மூவரும் தெரிவித்தோம். அவர் “அந்த படத்தில் நடித்தவர்கள் ஆகாயத்தில் இருந்து இறங்குவது போல் காட்சி இருக்கும். நீங்களும் செய்வீர்களா?” என்று கேட்டார். அங்கிருந்து நாங்கள் ஓடி வந்து விட்டோம் என்றார்.
தற்போது நடிகர் விஜய்யுடன் தற்போது தொடர்பில் இல்லை. நண்பன் படத்திற்கு முன்பு நானும், அவரும் பழகி வந்தோம். நண்பன் படத்திலும் நானும் அவரும் நண்பராகவே நடித்தோம். என்னிடம் உள்ள மிகப் பெரிய கெட்ட பழக்கம் என்னவென்றால் யாருடனும் Keep in Touch என்பது கிடையாது. அந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அது முடியவில்லை” என்றார்.
The post “விஜய்யுடன் தற்போது தொடர்பில் இல்லை” – நடிகர் ஸ்ரீகாந்தின் வருத்தம்..! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் கதை கேட்பது எப்படி தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இதை தற்போது அவர் நடித்து வரும் வாரிசு பட இயக்குநர் வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
“விஜய் சார் வீட்டுக்கு போனவுடனே சில நிமிடம் காத்திருக்கச் சொன்னாங்க. மெதுவா கதவு திறந்து விஜய் வந்தார். அவரே எங்களுக்கு தண்ணீர் கொடுதது உபசரிச்சார்.
நலம் விசாரிச்சார்.
அப்புறம் நான் கதை சொல்ல ஆரம்பித்தேன். அவர் இடையில குறுக்கிடவே இல்லே. நான் சொல்றதையே கவனிச்சுக்கிட்டு இருந்தார். அவ்வளவு அமைதியா கவனிச்சார்.
முகத்துல எந்தவித ரியாக்சனும் இல்லே. நாம சொல்றது அவருக்கு பிடிக்குதா இல்லாயானே என்னால கணிக்க முடியலை.
எனக்கு வியர்த்தது.
இதை கவனிச்ச விஜய், ஏசியின் கூலிங்கை அதிகமாக்கினார்.
இப்படியே கிளைமாக்ஸ் சொல்ல ஆரம்பிச்சேன். அப்பவும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.
சரி அவருக்குப் பிடிக்கலை போல என நினைத்துக்கொண்டே இருந்தேன்.
முப்பது விநாடிகள் இருக்கும்.. சரி பண்லாம் என்றார்.. அப்போ ஏற்பட்ட மகிழ்ச்சி உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார் வம்சி
The post விஜய் கதை கேட்பது எப்படி தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post விஜய்க்கு வில்லனாக விஷாலா..? appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் 6 வில்லன்கள் என்பதால் மன்சூரலிகான், சஞ்சய் தத், நிவின் பாலி ஆகியோர் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
தற்போது படத்தின் பிரதான வில்லன் வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் விஷாலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
விஷால் தற்போது நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே நேரில் சென்ற லோகேஷ் கனகராஜ் இது குறித்து விஷாலிடம் பேசியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
The post விஜய்க்கு வில்லனாக விஷாலா..? appeared first on Touring Talkies.
]]>The post “விஜயுடன் காதல் மீட்டிங்!” வாரிசு இயக்குநர் வம்சி appeared first on Touring Talkies.
]]>விஜயும் தானும் இணைந்தது குறித்து இவர் கூறும்போது, “ நான் இயக்கிய ஐந்து படங்களில் நான்கை தயாரித்தவர் ராஜூ. இருவருக்கும் தயாரிப்பாளர் – இயக்குநர் என்றில்லாமல் சகோதரர்கள் போல அன்பு உண்டு.
அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்துவிட்டு அவரிடம் கொடுத்தேன். அவர், ‘ இந்த படத்துக்கு விஜய் சாரை ட்ரை பண்ணா என்ன’ என்றார்.
எனக்கு அதிர்ச்சி. ‘அவர் ஒப்புக்கொள்வாரா’ என கேட்டேன். அதற்கு தயாரிப்பாளர் ராஜு, ‘ஒப்புக்கொள்வது இரண்டாவது விசயம். அவரை சந்தித்துவிடலாமே’ என்றார்.
ஹீரோவும், இயக்குநருக்கும் இடையேயான முதல் சந்திப்பு என்பது காதலர்களின் முதல் மீட் போல ரொம்ப முக்கியமானது. அதனால பதட்டமா இருந்தேன்.
கதையைச் சொல்லி அவர் ஓகே சொல்றவரை அந்த பதட்டம் குறையவில்லை. காதல் ஓகே ஆன மாதிரி அத்தனை சந்தோசம் எனக்கு” என்கிறார்.
ஹீரோ ஹீரோயினுக்கு மட்டுமல்ல.. ஹீரோவுக்கும் இயக்குநருக்கும்கூட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகணும் போல.
The post “விஜயுடன் காதல் மீட்டிங்!” வாரிசு இயக்குநர் வம்சி appeared first on Touring Talkies.
]]>