Thursday, April 11, 2024

கோபத்தில் விஜய் என்ன செய்வார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேட்டை மன்னன் திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்த, நெல்சன் திலீப்குமார், கோலமாவு கோகிலா படம் மூலம், அனைவரையும் ஈர்த்தார். தொடர்ந்து, சிவ.கார்த்திகேயன் நடித்த டாக்டர் வெற்றிப்படத்தை அளித்தார். அடுத்து விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தை தந்தவர் இவர்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “பொது நிகழ்ச்சியில் நடிகர் விஜய் எப்போதும் ஒரே மாதிரியான முகபாவத்தில் இருக்கிறாரே.. அவர் எப்போது தனது மகிழ்ச்சியை அல்லது கோபத்தை வெளிப்படுத்துவார்”  என கேட்கப்பட்டது.

அதற்கு நெல்சன், “ எனக்கும் அது புரியாத புதிர்தான். ஒரு முறை விஜயிடமே இது குறித்து கேட்டேன். சிரித்த அவர், ‘என் க்ளோஸ் பிரண்ட்ஸ் கூட இதே கேள்வியைத்தான் கேப்பாங்க. நம்ம லைப்ல பாதி சந்தோசம்னா, பாதி பிரச்சினைதான். அந்த நேரத்துல எடுக்கிற எமோசனல் முடிவால எந்த பயனும் இல்லை. இரு தரப்புக்கும் அது மன வருத்தைத்தையே தரும். ஆகவே கோபம் வந்தா சைலண்ட் ஆயிடும். கோபம் போனவுடனே  அது பத்தி யோசிச்சா, இதுக்கா கோபப்பட்டோம்னு தோணும். இதுதான் சரியான விளக்கம் என நினைக்கிறேன்’ என்றார் விஜய்” என விஜயின் கோப ரகசியத்தை பகிர்ந்துகொண்டார் நெல்சன்.

- Advertisement -

Read more

Local News