The post டைரக்டர் லோகேஷ் கனகராஜூடன் நிஜமாகவே சண்டை போடுபவர்.. appeared first on Touring Talkies.
]]>லோகேஷ் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து எடிட்டிங் செய்வது இவர்தான். சமீபத்தில் ஒரு பேட்டியில், “எடிட்டிங் நேரத்தில் பெரும்பாலும் லோகேஷ் எண்ணமும் எனது எண்ணமும் ஒத்துப்போய்விடும். ஆனால் சில சமயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுவது உண்டு. அப்போது கடுமையாக வாக்குவாதம் செய்துகொள்வோம்.. சண்டை போடுவோம்.
பிறகு யார் சொல்வது சிறப்பாக இருக்கறதோ அதை ஒப்புக்கொள்வோம்.
தனிப்பட்ட விசயத்துக்காகவா சண்டை போடுகிறோம்… திரைப்படத்துக்கா.. ஒரு படைப்பு சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகத்தானே” என்று கேள்வி கேட்கிறார் பிலோமின் ராஜா.
சரியான கேள்விதான்!
The post டைரக்டர் லோகேஷ் கனகராஜூடன் நிஜமாகவே சண்டை போடுபவர்.. appeared first on Touring Talkies.
]]>The post லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக ஒரு வாய்ப்பு..! appeared first on Touring Talkies.
]]>‘மாநகரம்’ படம் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்கள் மூலம் தமிழில் முன்னணி இயக்குநராக தற்போது அவர் வலம் வருகிறார். தனது படங்களில் தொடர்ந்து போதைப்பொருட்களுக்கு எதிரானக் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார் லோகேஷ்.
இந்நிலையில், கோவை காவல் துறையும், தனியார் நிறுவனமும் இணைந்து குறும் படப் போட்டி ஒன்றை கல்லூரி மாணவர்களுக்கு அறிவித்துள்ளன. போதைப் பொருள் வழக்கத்தைத் தடுக்கும் வகையில் ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் இந்தக் குறும் படம் அமைந்திருக்க வேண்டும். இதில் முதல் ஐந்து இடங்களுக்குள் வருபவர்களுக்கு இயக்குநர் லோகேஷூடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். அதில் இருந்து ஒருவர் இயக்குநர் லோகேஷூடன் அடுத்தப் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிவார் என்று அறிவித்துள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய்யின் 67-வது படத்தை இயக்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக ஒரு வாய்ப்பு..! appeared first on Touring Talkies.
]]>The post “அவர் இல்லாமல் கதை எழுத முடியாது!”: வருத்தப்பட்ட லோகேஷ் கனகராஜ் appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை சொல்லாத ஒரு விசயத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அவர், “ஒன்பது வருடங்களில் பல கதைகளை முழுதாக எழுதி வைத்திருக்கிறேன். இவற்றில் எல்லா கதாபாத்திரங்களையும் ஒருவரை மனதில் வைத்தே எழுதினேன். அவர் அருண் அலெக்சாண்டர். மாநகரம் படத்துல முக்கிய வில்லனாக வருவார். கைதி படத்துல கார்த்தி முதுகுல கத்தியால குத்தும் கதாத்திரத்திலும், மாஸ்டர் படத்துல முதல் சீன்ல சேதுவை கொல்றவராகவும் நடிச்சிருப்பார்.
அவரை என் அண்ணன் என்றும் சொல்லலாம். அற்புத நடிகர். வில்லன், காமெடியன், காரெக்டர் ரோல் என்று எந்த கதாபாத்திரத்துக்கும் பொருந்தக்கூடிய நடிகர். அவரை மனதில் வைத்துத்தான் ஒவ்வொரு கதையையும், கதாபாத்திரங்களையும் உருவாக்கினேன்.
அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு அவரை நினைத்து எழுதுவது சிரமமாக ஆகிவிட்டது” என நெகிழ்ச்சியுடன் கூறிய லோகேஷ் கனகராஜ் கண்கலங்கிவிட்டார்.
The post “அவர் இல்லாமல் கதை எழுத முடியாது!”: வருத்தப்பட்ட லோகேஷ் கனகராஜ் appeared first on Touring Talkies.
]]>The post விஜய்க்கு வில்லனாக விஷாலா..? appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் 6 வில்லன்கள் என்பதால் மன்சூரலிகான், சஞ்சய் தத், நிவின் பாலி ஆகியோர் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
தற்போது படத்தின் பிரதான வில்லன் வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் விஷாலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
விஷால் தற்போது நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே நேரில் சென்ற லோகேஷ் கனகராஜ் இது குறித்து விஷாலிடம் பேசியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
The post விஜய்க்கு வில்லனாக விஷாலா..? appeared first on Touring Talkies.
]]>The post விஜய்க்கு வில்லனாக நிவின் பாலி நடிக்கிறாரா..? appeared first on Touring Talkies.
]]>விஜய்யின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆறு பேர் நடிக்கிறார்கள். இந்த 6 பேரில் மன்சூர் அலிகானும், இயக்குனர் கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோரும் அடக்கம்.
இவர்கள் மட்டுமில்லாமல் மலையாள நடிகர் பிரித்விராஜூம் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிருத்விராஜ் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் கால்ஷூட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பிருத்விராஜால் இந்தப் படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம். ஆகையால் இவருக்குப் பதிலாக மலையாள நடிகரான நிவின் பாலி நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post விஜய்க்கு வில்லனாக நிவின் பாலி நடிக்கிறாரா..? appeared first on Touring Talkies.
]]>The post சூர்யாவுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சைப் பரிசளித்த கமல்ஹாசன் appeared first on Touring Talkies.
]]>இத்திரைப்படம், கடந்த 4 நாட்களில் உலகளவில் 200 கோடி வசூலைத் தாண்டிவிட்டது. கமல்ஹாசனின் படங்களிலேயே மிக அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுவிட்டது.
இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த நடிகர் கமல்ஹாசன் படத்தை இயக்கிய இயக்குநரான லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.
மேலும் லோகேஷிடம் உதவி இயக்குநர்களாக இந்த விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குநர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிவிஎஸ் அப்பாச்சி இரு சக்கர வாகனத்தைப் பரிசளித்தார்.
மேலும் இத்திரைப்படத்தின் கடைசி காட்சியில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யாவுக்கும் நேற்று தனது டிவீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டார் கமல்ஹாசன்.
இந்த நிலையில் இன்று காலையில் நடிகர் சூர்யாவின் வீ்ட்டுக்கு நேரில் சென்ற கமல்ஹாசன் சூர்யாவுக்கு உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்தார். இந்த வாட்ச்சின் மதிப்பு. 14 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாயாகும்.
The post சூர்யாவுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சைப் பரிசளித்த கமல்ஹாசன் appeared first on Touring Talkies.
]]>The post ‘விக்ரம்’ படத்தை இணையத்தளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “எங்களது ‘விக்ரம்’ படம் மிகப் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானால் எங்களுக்கு மிகப் பெரும் அளவுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும்” என்று கூறப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘விக்ரம்’ படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக அனைத்து இணைய வசதிகளைத் தரும் டெலிகாம் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
‘விக்ரம்’ படம் அடுத்த வார வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில், விரைவில் படத்திற்கான முன் பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி ‘விக்ரம்’ படத்தின் முதல் நாளின், முதல் காட்சிக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
The post ‘விக்ரம்’ படத்தை இணையத்தளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது appeared first on Touring Talkies.
]]>The post கமல்ஹாசனை திட்டித் தீர்த்த ரஜினி-அஜீத்-விஜய் ரசிகர்கள் appeared first on Touring Talkies.
]]>எல்லாம் ஒரேயொரு டிவீட்டால் வந்தது. நேற்றைக்கு முன் தினம் மாலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவீட்டர் பக்கத்தில் “விக்ரம்’ படத்தின் முதல் கட்ட போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்” என்று குறிப்பிட்டார். இதில்தான் பிரச்சினை ஆரம்பித்தது.
“Vikram first look from tomorrow evening at 5 pm” என்று மட்டுமே இதில் இருந்ததால் இதைச் சுட்டிக் காட்டிய அஜீத் ரசிகர்கள் இதுபோல் விஜய் படத்தை இயக்கும் இயக்குநர்கள் விஜய் பெயரைச் சொல்லாமல் அந்தப் படம் பற்றிய ஒரு செய்தியை வெளியிட முடியுமா என்று கேள்வியெழுப்பினார்கள்.
இதற்கு விஜய் ரசிகர்கள் தல என்ற பெயரைப் பயன்படுத்தாமல் அஜீத் படம் பற்றிய செய்தியை வெளியிட முடியுமா.. ஏன் இப்போது வலிமை படத்தின் ஒரு செய்தியைக்கூட அந்த இயக்குநரால் சொல்ல முடியவில்லை. இவராவது சொல்றாரே என்று பதில் சொல்ல.. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இடையில் ரஜினி ரசிகர்களும் நுழைந்து கமல்ஹாசன் தனது படத்தில் வேறு யாருக்கும் முக்கியத்துவமே தர மாட்டார். அவரே இன்றைக்கு இயக்குநருக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் பற்றி செய்தியை சொல்லச் சொல்லியிருக்கிறாரே.. நல்லதொரு மாற்றம் என்று கிண்டல் செய்ய.. இதற்கு கமல் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்க…
கடைசியாக இந்தச் சண்டை அஜீத்-விஜய் ரசிகர்கள் மோதலில் துவங்கி ரஜினி-கமல் ரசிகர்களின் மோதலில் போய் முடிந்திருக்கிறது.
மேலும் படத்தின் போஸ்டர் வெளியானவுடன், “இது ‘விருமாண்டி’யை காப்பியடித்ததுபோல இருக்கிறது. சொந்த சரக்கையே திரும்பவும் காப்பியடிக்கிறாரா ஆண்டவர்.. அதற்குள்ளாக சரக்கு தீர்ந்துவிட்டதா..?” என்று ரஜினி ரசிகர்கள் கிண்டல் செய்ய.. அதுவே சில மணி நேரங்களில் டிரெண்ட்டிங்காகவும் மாறிப் போனது.
‘தலை’கள் அமைதியாக இருந்தாலும், ‘தளபதிகள்’ மெளனம் காத்தாலும் படை வீரர்கள் மட்டும் அடங்க மறுக்கிறார்களே..!?
The post கமல்ஹாசனை திட்டித் தீர்த்த ரஜினி-அஜீத்-விஜய் ரசிகர்கள் appeared first on Touring Talkies.
]]>The post ‘விக்ரம்’ படத்தில் சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இணைகிறார்கள் appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பான செய்தியையும், புகைப்படத்தையும் நடிகர் கமல்ஹாசன் இன்றைக்கு வெளியிட்டுள்ளார்.
அன்பறிவ் சகோதரர்கள் மிகக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற சண்டை இயக்குநர்களாக முத்திரை பதித்தவர்கள்.
2013-ம் ஆண்டு ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில்தான் சண்டை இயக்குநராக அறிமுகமானார்கள்.
அதன் பின்பு ‘மெட்ராஸ்’, ‘மாயா’, ‘கபாலி’, ‘இருமுகன்’, ‘காஷ்மோரா’, ‘சத்ரியன்’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மெர்க்குரி’, ‘ஜூங்கா’, ‘கே.ஜி.எஃப். சேப்டர்-1’, ‘நோட்டா’, ‘துப்பாக்கி முனை’, ‘சண்டைக் கோழி-2’, ‘தடம்’, ‘கீ’, ‘தேவ்’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘கைதி’, ‘ஆக்சன்’, ‘கே.ஜி.எஃப்.சேப்டர்-2’, ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘ராதே’ ஆகிய புகழ் பெற்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.
இதில் ‘கே.ஜி.எஃப். சேப்டர்-1’ படத்தில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகளுக்கு தேசிய விருதையும் இந்தச் சகோதரர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்தின் சிறப்பம்சமே அந்தப் படத்தில் இருந்த சண்டை காட்சிகள்தான். அதனால்தான் இந்தப் படத்திலும் இவர்கள் சண்டைக்கு வந்திருக்கிறார்கள் போலும்..!
The post ‘விக்ரம்’ படத்தில் சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இணைகிறார்கள் appeared first on Touring Talkies.
]]>The post ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிடக் காட்சிகள் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தியேட்டர்களுக்கு வந்தப் பிரதியில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
கதையின்படி விஜய் பணியாற்றும் கல்லூரியில் மாணவர் தேர்தல் நடந்து முடிந்த பின்பு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவியான கெளரி ஜி.கிஷனை தோற்றுப் போன மாணவனின் தந்தையின் தூண்டுதலால் சில ரவுடிகள் தாக்குவார்கள். விஜய் அவர்களைத் தாக்கி கல்லூரியில் இருந்து வெளியேற்றுவார். காவல்துறையும் அவர்களக் கைது செய்யும்.
இதன் பின்பு நடக்கும் ஒரு காட்சிதான் தியேட்டர்களில் நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கப்பட்ட காட்சி ஓடிடி தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்தக் காட்சிதான் விஜய்-மாளவிகா மோகனன் இடையிலான அறிதலுக்கும், புரிதலுக்கும் இணைப்பான காட்சி. தியேட்டர்களில் இந்தக் காட்சியை நீக்கிவிட்டதால் மாளவிகா மோகனன் விஜய்யை தேடி வந்து பேசும் காட்சியில் லாஜிக்கே இல்லாதது போலவும், உயிர்ப்பே இல்லாததாகவும் இருந்ததது.
நீக்கப்பட்ட இந்தக் காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான வசனங்களாகும். சமீபத்தில் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகளின்போது பல ஆண்களும், பெண்களும் பேசும் பொதுப்படையாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் மீதே வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு விஜய் குரல் கொடுத்திருக்கிறார்.
“பெண்களின் உடைதான் அவர்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது…” என்று ஒரு பெண் பேராசிரியரே சொல்வதும், அதற்கு விஜய் விளக்கம் சொல்வதும் அருமை.
‘மாஸ்டர்’ படத்தில் நீளம் காரணமாக குறைக்கப்பட வேண்டிய பல காட்சிகள் இருக்கும்போது உயிர்த் துடிப்பான இந்தக் காட்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏன் நீக்கினார் என்று தெரியவில்லை..?!
The post ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிடக் காட்சிகள் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>