The post “தேங்க்யூ டியர்” – பிரபாஸூக்கு நன்றி சொன்ன ராஜமெளலி appeared first on Touring Talkies.
]]>இந்த திரைப்படத்தின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த நடிகர் – இயக்குநர் கூட்டணி நட்புறவில் படத்தை தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது.
சமீபத்தில் பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
“@ssrajamouli அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குநருக்கான LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள்.
சிறந்த இசையமைப்பாளருக்கான LA ஃபிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ் பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்.
இந்த மனமார்ந்த வாழ்த்துகளை பார்த்த எஸ்.எஸ்.ராஜமௌலி அதற்கு “தேங்க்யூ டார்லிங். என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள்…” என்று பதிலளித்துள்ளார்.
ஆர்மேக்ஸ் ஊடக அறிக்கையின்படி, ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 ஹிந்தி திரையரங்க படங்களில் இடம் பெற்ற இரண்டு பழமையான திரைப்படங்களின் வரிசையில் பிரபாஸின் ‘பாகுபலியும்’ ஒன்றாகும். மேலும், நடிகர் பிரபாஸ் – இயக்குநர் ராஜமௌலி நட்புறவு எப்போதுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டணியும் அந்த உறவை மதித்து ஒருவரை ஒருவர் பாராட்டி வருகின்றனர்.
The post “தேங்க்யூ டியர்” – பிரபாஸூக்கு நன்றி சொன்ன ராஜமெளலி appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் பிரபாசுக்கு கிடைத்திருக்கும் வித்தியாசமான பிறந்த நாள் பரிசு..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அமிதாபச்சன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க படத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இத்தருணத்தில் படத்தின் நாயகனான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு படக் குழு பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது.
அந்த போஸ்டரில் நடிகர் பிரபாஸின் கை காற்றில் தன் சக்தியைக் காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடன் ‘நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்’ என்ற வாசகத்தை இடம் பெற வைத்து பிரபாஸின் நாயக பிம்பத்தை செறிந்த வீரத்துடன் விவரித்திருக்கிறார்கள்.
‘புராஜெக்ட் கே’ படக் குழு வெளியிட்டிருக்கும் அர்த்தமுள்ள போஸ்டர், பிரபாஸின் ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது.
The post நடிகர் பிரபாசுக்கு கிடைத்திருக்கும் வித்தியாசமான பிறந்த நாள் பரிசு..! appeared first on Touring Talkies.
]]>The post அமிதாப்பச்சனின் பிறந்த நாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக் குழு appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வருகிறார்.
நேற்று அமிதாப்பச்சனின் 80-வது பிறந்த நாள். இதனை கொண்டாடும் வகையில் ‘புராஜெக்ட் கே’ படக் குழுவினர் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவரது கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்தும் வகையில், அவருடைய முஷ்டி மடக்கிய கையை மட்டும் தனித்துவத்துடன் வடிவமைத்து போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதனுடன் ‘அழியாத தன்னிகரற்ற சாதனையாளர்’ என்ற வாசகத்தையும் எழுதி வாழ்த்திருக்கிறார்கள்.
திரைப்பட தயாரிப்பு துறையில் பொன்விழா ஆண்டு காணும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், ”கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக ரசிகர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்வித்து கொண்டிருக்கும் சக்தி மையம்!. இந்தத் தருணத்தில் உங்களுடைய புதிய அவதாரத்தை உலகுக்கு காட்ட ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்களிடம் இருக்கும் ஆற்றல் உங்களுடனேயே நீடித்து இருக்கட்டும். எங்களுக்கு பின்னால் இருக்கும் அளவற்ற சக்தி நீங்கள்தான். அமிதாப்பச்சன் ஐயா…! – புராஜெக்ட் கே பட குழு” என தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு அவர் நடித்து வரும் ‘புராஜெக்ட் கே’ பட குழுவினரின் புதிய போஸ்டர் வடிவிலான வாழ்த்து, ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.
The post அமிதாப்பச்சனின் பிறந்த நாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக் குழு appeared first on Touring Talkies.
]]>The post “ஆதி புருஷ்’ படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும்” – மத்தியப் பிரதேச அமைச்சர் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.
]]>ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர்-டிரெய்லரை படக் குழவினர் சமீபத்தில் அயோத்தியில் வெளியிட்டனர்.
டிரெயிலரை பார்த்த சினிமா ரசிகர்கள் பலரும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். நடிகர்கள் அனைவரும் பொம்மை போலவே காட்சிப்படு்த்தப்பட்டிருப்பது போலவும், சோயாபீம் தொடரில் வரும் கதாபாத்திரங்கள் போல இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படு்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம்போல அரசியல்வாதிகளிடமிருந்தும் இந்தப் படத்திற்கு எதிர்ப்புக் குரல் வந்துவிட்டது. மத்திய பிரதேச உள்துறை மந்திரியான நரோட்டம் மிஸ்ரா ஆதி புருஷ் படத்திற்குத் தனது கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.
அவர் இது குறித்து பேசும்போது, “ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை நான் பார்த்தேன்.அதில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளன. டிரெய்லரில் அனுமன் தோலால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருக்கிறார். டிரெய்லரில் காணப்பட்ட இந்து தெய்வங்களின் உடைகள் மற்றும் தோற்றம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இவை. இதுபோன்ற காட்சிகளை படத்தில் இருந்து நீக்குமாறு ஓம் ரவுத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்து மத அடையாளங்களை தவறான முறையில் காட்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post “ஆதி புருஷ்’ படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும்” – மத்தியப் பிரதேச அமைச்சர் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் 3-டி தொழில் நுட்பத்தில் வெளியாகியுள்ளது appeared first on Touring Talkies.
]]>இந்திய திரையுலக வரலாற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர்களில் ‘ஆதி புருஷ்’ பட டீசர் ஒன்று. ராமாயண காவியத்தின் நவீன கால பதிப்பைத் தழுவி, முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன், ‘ஆதி புருஷ்’ தயாராகி இருக்கிறது.
உலகின் புனிதமான நகரங்களில் ஒன்றான அயோத்தியின் சரயு நதிக்கரையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையில், ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரம்மாண்டமான டீசர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘ஆதி புருஷ்’ படத்தின் தயாரிப்பாளர்கள் அயோத்தியாவில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒரு தொடக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து தயாராகும் சர்வதேச தரத்திற்கு இணையான படைப்புகளைப் போல், நம்மாலும் உருவாக்க இயலும் என்பதை இந்த படத்தின் டீசர் நிரூபித்திருக்கிறது.
‘ஆதி புருஷ்’ படத்தின் கதைக் களம், நடிகர்களின் பங்களிப்பு … என அனைத்தும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
பிரபாஸ் நடித்திருக்கும் இந்த ‘ஆதி புருஷ்’ படத்தை டி சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார், கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் நிறுவனத்தின் ராஜேஷ் நாயர் ஆகியோர் ஏராளமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாகிறது.
The post ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் 3-டி தொழில் நுட்பத்தில் வெளியாகியுள்ளது appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.
]]>பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதி புருஷ்’.
இதில் ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.
ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடர், ராஜேஷ் நாயர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.
‘ஆதி புருஷ்’ இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.
இப்படத்தின் கதையின் நாயகனான ஸ்ரீ ராமபிரான் பிறந்த புனித இடமாக கருதப்படும் அயோத்தி மாநகரில் உள்ள சரயு நதிக்கரையில், பிரம்மாண்டமான ஒலி ஒளி அமைப்பு, லேசர் விளக்குகள் மற்றும் வாண வேடிக்கைகளுடன் டீசரும், போஸ்டரும் வெளியிடப்பட்டது.
நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் போஸ்டர், 50 அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்டு, சரயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
ராமபிரான், மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்பதும், தசரத சக்கரவர்த்தி சரயு நதிக்கரையில் மேற்கொண்ட புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக அவருக்கு மகனாக பிறந்தவர். அவர் நன்மைக்கும், தீமைக்கும் இடையேயான போட்டியில் , வானர படைகளின் உதவியுடன் தீமையின் வடிவமான இராவணனை வென்றார் என்பதுதான் ராமாயணம்.
இந்தப் படத்தின் டீசரில் ராமனாக நடித்திருக்கும் நடிகர் பிரபாஸ், நீருக்கடியில் தியானம் செய்து கொண்டிருக்கும் காட்சியும், பனி படர்ந்த பிரதேசத்தில் ராவணனாக நடித்திருக்கும் சயீப் அலி கான் தோன்றும் காட்சியும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.
ராமாயண காவியத்தை தற்போதைய இணைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் ‘ஆதி புருஷ்’ தயாராகி இருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்தில் அனைத்து மொழிகளிலும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி அன்று ஐமேக்ஸ் மற்றும் 3டி வடிவிலும் உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.
]]>The post அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் appeared first on Touring Talkies.
]]>பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’.
இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
‘ஆதி புருஷ்’ படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. படத்தைப் பற்றிய புதிய தகவலுக்காக காத்திருந்த அவர்களுக்கு, படக் குழு, இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகும் தேதியும், இடத்தையும் அறிவித்து உற்சாகமடைய செய்திருக்கிறது.
வரும் அக்டோபர் 2-ம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தின் புனித பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படவிருக்கிறது.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
தீமைக்கும், நன்மைக்கும் இடையேயான போட்டி குறித்து, ராமாயணத்தை மையப்படுத்தி தயாரான இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு, உத்திரப்பிரதேசத்தில் உள்ள இந்து மதம் சார்ந்த புனித நகரமாக கருதப்படும் ராமர் பிறந்த பூமியில் நடைபெறுவது பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.
டி சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில், அகில இந்திய அளவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த ‘ஆதி புருஷ்’ திரைப்படம், ஐ மேக்ஸ் மற்றும் 3-டி தொழில் நுட்பத்தில் அடுத்தாண்டு ஜனவரி 12-ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
The post அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் appeared first on Touring Talkies.
]]>The post பாலிவுட் படவுலகம் பற்றி அதிர்ச்சியான கருத்தை பகிர்ந்த நடிகை பாக்யஸ்ரீ appeared first on Touring Talkies.
]]>திருமணம் முடிந்து குழந்தைகளும் பிறந்த பிறகு மீண்டும் பல்வேறு மொழிப் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்கத் துவங்கிய பாக்யஸ்ரீ, இப்போதுவரையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்திருக்கும் பான் இந்தியா படமான ‘ராதேஷ்யம்’ படத்திலும் பாக்யஸ்ரீ ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த ‘ராதேஷ்யம்’ படத்தில் பிரபாஸின் அம்மா வேடத்தில் பாக்யஸ்ரீ நடித்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் மார்ச் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இதையொட்டி நடைபெற்ற இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை பாக்யஸ்ரீ, “பாலிவுட்டில் தற்போது பழைய கதைகளின் காப்பி ஸ்கிரிப்ட்கள்தான் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக” தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, “தெலுங்கு, மலையாள இண்டஸ்ட்ரியில் புதிய ஸ்கிரிப்ட்களும், புதிய கதைகளும் வந்து கொண்டிருக்கிறது. புதிய திறமைசாலிகள் OTT தளங்களில் புதிய படைப்புகளை படைத்து வருகிறார்கள். இந்திய சினிமாவின் நிலை நாளுக்கு நாள் சர்வதேச அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பகுதி சினிமா ரசிகர்களும் இப்போது பான் இந்தியா திரைப்படங்களையும் அது போன்ற கதைகளையும் விரும்புகிறார்கள்
மொழி வேறுபாடின்றி ஒரு நல்ல திரைப்படத்தை பார்வையாளர்கள் பாராட்டுகிறார்கள். இளம் தலைமுறையினரிடமிருந்து புதிய கதைகள் மற்றும் புதிய திரைப்படங்கள் வெளிவருகிறது. அதனால் நானும் புதிய திறமைசாலி இளைஞர்களுடன் மக்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக…” கூறியுள்ளார்.
The post பாலிவுட் படவுலகம் பற்றி அதிர்ச்சியான கருத்தை பகிர்ந்த நடிகை பாக்யஸ்ரீ appeared first on Touring Talkies.
]]>The post பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ படத்திலிருந்து காதல் கீதம் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக காதல் ததும்பும் கீதமான ‘தரையோடு தூரிகை’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலில் படத்தின் நாயகனான பிரபாஸ் நாயகி பூஜாவை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இதயம் தொடும் இசை, இடங்களுக்கு ஏற்ற பொருத்தமான உடை அமைப்பு, கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு ஆகியவை இதை ஒரு கனவு பாடலாக ஆக்கி உள்ளன.
பாடலின் முக்கிய அம்சமாக நாயகன் மற்றும் நாயகிக்கு இடையேயான ‘கெமிஸ்ட்ரி’ உள்ளது. ரசிகர்களை இது மிகவும் கவரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனென்றால், இப்பாடலின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் வெளியான போதே ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ‘தரையோடு தூரிகை’ பாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு மட்டுமில்லாமல் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வரும் ஜனவரி 14, 2021 அன்று பல்வேறு மொழிகளில் ‘ராதே ஷியாம்’ வெளியாகிறது.
யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ள இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.
The post பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ படத்திலிருந்து காதல் கீதம் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>The post முக்கியமான பான் இந்திய படங்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>‘பாகுபலி’ படம் மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்ததாக ‘ஆதி புருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3-டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது.
இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சச்சேத் பரம்பரா இசையமைக்கிறார். இயக்குநர் ஓம் ராவத் இந்தப் படத்தை இயக்குகிறார்.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ‘ஆதி புருஷ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்னொரு பான் இந்திய திரைப்படமான ராக்கெட்ரி படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் மூலமாக அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகியுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் தயாராகியுள்ளது.
இந்த ‘ராக்கெட்ரி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இப்போதெல்லாம் எந்தப் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் பல மாதங்களுக்கு முன்பாகவே தங்களுடைய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுகிறார்கள். இதனால் அகில இந்திய அளவில் தியேட்டர்களுக்கான போட்டிகள் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
நல்ல முடிவுதான்..!
The post முக்கியமான பான் இந்திய படங்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>