The post பாலிவுட் ஹீரோ மஹத் சொன்ன நிஜ சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் தற்போது பாலிவுட்டில் ஹீரோ ஆகி இருக்கிறார். சித்ரம் ரமணி இயக்கத்தில் டபுள் எக்ஸ்எல் என்ற பெயரில் உருவாகும் இந்தித் திரைப்படம்தான் அது.
படம் குறித்து வீடியோ பேட்டி ஒன்றில் கூறிய மஹத் ராகவேந்திரா, “ஆணோ பெண்ணோ, குறிப்பிட்ட வயதில் தங்கள் உடல் குறித்த அதிருப்தி ஏற்படும். குண்டாக இருக்கிறோம், ஒல்லியாக இருக்கிறோம், கருப்பாக இருக்கிறோம்.. என்று பல மாதிரியாக தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்வார்கள். இது அவர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்தத் தாழ்வு மனப்பான்மை தேவையில்லை என்பதை உணர்த்தும் படம்தான் டபுள் எக்ஸ்எல்” என்றவர், “ எனக்குத் தெரிந்தே இப்படி ஒருவர் இருந்தார். எதிர்பாராத வகையில் அதே போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்துள்ளது. ஆகவே அந்த நபரை மனதிற்குள் கொண்டு வந்து நடிக்கிறேன். அதே போல இயக்குநரும் கதாபாத்திரத்தை மோல்ட் செய்கிறார்” என்று தெரிவித்து உள்ளார் மஹத் ராகவேந்திரா.
The post பாலிவுட் ஹீரோ மஹத் சொன்ன நிஜ சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்னொரு ஹீரோ! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் அப்படி திரை ஹீரோ ஆனவர் முகேன். மலேசியாவைச் சேர்ந்த இவர் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன.
இவரைத் தொடர்ந்து பிக்பாஸ் மூலம் திரைத்துறைக்கு வந்திருப்பவர், பாலா. பிக்பாஸ் நான்காவது சீசனில் அல்டிமேட் டைட்டில் வென்ற இவர் புதிய படத்தில் நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர்.
இது குறித்து பாலா, “ என் லட்சியம் திரைத்துறையில் நடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் சிறுவயதில் இதைச் சொன்னபோது என்னை ஊக்கப்படுத்தியவர்களும் உண்டு.. கிண்டல் செய்தவர்களும் உண்டு. பாராட்டையும் சரி, இகழ்ச்சியையும் சரி.. சரி சமமாக எடுத்துக்கொண்டு எனது இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தேன். இன்று இலக்கை அடைந்திருக்கிறேன். ஆனால் இதோடு பயணம் முடிந்துவிடாது. இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்” என்று கூறியிருக்கிறார்.
பரவாயில்லை.. தத்துவம் போல் கூறினாலும் தன்னம்பிக்கை வார்த்தைகள்!
The post பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்னொரு ஹீரோ! appeared first on Touring Talkies.
]]>The post “குழந்தைகள் வேண்டும்.. கல்யாணம் வேண்டாம்!”: சுஷ்மிதா சென் appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்தார்.
அவர், “யாரைப் பார்த்தாலும் ‘ஏன் தனியாக இருக்கிறாய்.. எப்போது திருமணம்’ என்கிறார்கள். இந்தக் கேள்வி அலுப்பூட்டுகிறது. ஏன், ஒரு பெண் தனியாக இருக்கக்கூடாதா? தவிர நான் தனியாகவும் இல்லையே.. என் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகத்தானே வாழ்கிறேன்!
மூன்று முறை திருமணம் செய்துகொண்டேன.. அப்படி ஒரு சூழல். ஆனால் எனக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை. ஆனாலும் மூன்று முறையும் இறைவன் என்னை காப்பாற்றினார். அந்த நபர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை சொல்லக்கூட முடியாது.
என் திருமண வாழ்க்கை முறிந்துபோனாலும், என் மகள்கள் சூழலை நன்கு உணர்ந்துள்ளனர்.. அந்த முறிவுகளை இயல்பாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இனி என் வாழ்வில் திருணம் என்பதே கிடையாது. என் குழந்தைகள்தான் எல்லாமே!” என்று கூறியிருக்கிறார்.
.
The post “குழந்தைகள் வேண்டும்.. கல்யாணம் வேண்டாம்!”: சுஷ்மிதா சென் appeared first on Touring Talkies.
]]>The post தென்னிந்திய படங்களைப் பார்த்து பாலிவுட் கற்ற வேண்டும்!: சஞ்சய் தத் appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றுக்காக பெங்களூரு வந்த சஞ்சய் தத், “எத்தனையோ இந்திப் படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பது புது அனுபவமாக இருக்கிறது. இங்கே சரியான நேரத்துக்கு படப்பிடிப்பைத் துவங்கி விடுகிறார்கள். தவிர, விறுவிறுவென படப்பிடிப்பு நடக்கிறது.
இன்னொரு விசயம்.. தென்னிந்திய படங்களில் காதல், காமெடி, ஆக்சன், சென்டிமெண்ட் என அனைத்தும் சம அளவில் கொடுக்கப் படுகின்றன.. இந்திப் படங்களில் இவற்றில் ஏதாவது ஒன்று தூக்கலாக இருக்கும். ஆகவே தென்னிந்திய படங்களைப் பார்த்து இந்தித் திரையுலகம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
க.க.போ!
The post தென்னிந்திய படங்களைப் பார்த்து பாலிவுட் கற்ற வேண்டும்!: சஞ்சய் தத் appeared first on Touring Talkies.
]]>The post நடிகையின் முன் இயக்குநர் செய்த அசிங்கமான செயல்..! appeared first on Touring Talkies.
]]>பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் சஜித்கான். இவர் திரைப்பட இயக்குநரான பாராகானின் உடன் பிறந்த தம்பி.
கடந்த சில ஆண்டுகளாகவே இவர் மீது ஹந்தி திரையுலகில் இருக்கும் நடனப் பெண்மணிகளும், நடிகைகளும் மீ டூ புகார் அளித்து வந்தனர். இதுவரையிலும் சஜித்கான் மீது 10-க்கும் மேற்பட்ட மீ டூ புகார்கள் வெளிப்படையாக சொல்லப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது நடந்து வரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீஸனில் இந்த சஜித்கானும் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தியும் டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“இயக்குநர் சஜித்கான் மீது Me Too இயக்கத்தின்போது, பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்” என்று அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இயக்குநர் சஜித் கானை ‘பிக் பாஸ்’ தொடரில் வெளியேற்றுமாறு பிரபல இந்தி நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா, அதிரடி குற்றச்சாட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மீ டூ இயக்கத்தித் சஜித் கான் மீது புகார் அளித்த 10 பெண்களில் ஷெர்லினும் ஒருவர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் முன்னால், சஜித் கான் தனது அந்தரங்க உறுப்பை காட்டி, இதற்கு 0 – 10 வரை மார்க் போடச் சொல்லி சொன்னார். தற்போது, அந்த ‘பிக்பாஸ்’ வீட்டில் புகுந்து மார்க் போடலாம் என்று இருக்கிறேன். பாலியல் தொல்லை கொடுத்தவரிடம், பாதிக்கப்பட்டவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை பார்ப்போம்…” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘இந்த விவகாரத்தில் நீங்கள் யார் பக்கம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற முறையில் நடிகர் சல்மான் கானையும் டேக் செய்துள்ளார்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் இணைப்பையும் அந்த பதிவுடன் இணைத்துள்ளார் ஷெர்லின் சோப்ரா.
இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
The post நடிகையின் முன் இயக்குநர் செய்த அசிங்கமான செயல்..! appeared first on Touring Talkies.
]]>The post பாலிவுட்டில் தடம் பதிக்கும் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம் appeared first on Touring Talkies.
]]>‘ஓர் இரவு’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சி.எஸ்.சாம். இதைத் தொடர்ந்து ‘விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ்த் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை, பாடல்களையும் தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசையும் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றது.
சாம், தான் இசையமைக்கும் படங்களின் இசையில் தனித்துவம் காட்டி தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார். ‘கண்ணம்மா’ என்ற மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது. மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் சாம் திகழ்கிறார்.
மேலும் இவர் இசையமைத்த ‘கைதி’, ‘அடங்க மறு’, ‘சாணிக்காயிதம்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சுழல்’ போன்ற படங்களின் தொடர் வெற்றிகளை அடுத்து, சமீபத்தில் வெளியான ’ராக்கெட்ரி’ படமும் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.
‘ராக்கெட்ரி’ வெற்றியை தொடர்ந்து இவரது இசையமைப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்திப் பதிப்பின் டிரெய்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் இசைக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சாமிற்கு பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் சி.எஸ்.சாம்.
The post பாலிவுட்டில் தடம் பதிக்கும் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம் appeared first on Touring Talkies.
]]>The post “தமிழ் நடிகைகள் அழுகிய தக்காளிகளா?” – நடிகை டாப்சியின் பொறுமல்..! appeared first on Touring Talkies.
]]>நடிகை டாப்ஸி தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமாகி இன்றைக்கு பாலிவுட்டிலும் ஒரு முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.
“பாலிவுட்டில் உங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது..?” என்று சமீபத்திய பேட்டியொன்றில் அவரிடத்தில் கேட்டபோது பொரிந்து தள்ளியிருக்கிறார் நடிகை டாப்சி.
அவர் இது குறித்துப் பேசும்போது, “நான் ஹிந்தியில் அறிமுகமானபோது என்னை தென்னக நடிகையாகத்தான் பார்த்தார்கள். தமிழ் நடிகை என்றாலே இவர்களுக்கு அழுகிய தக்காளிப் பழம் மாதிரிதான் தெரியும். இந்தப் பார்வை இன்னமும் மாறவில்லை.
இத்தனைக்கும் நான் பஞ்சாபி பொண்ணு. ஆனாலும் எனக்கு வேண்டிய மதிப்பும், மரியாதையும் இங்கே பாலிவுட்டில் இப்போதுவரையிலும் கிடைக்கவில்லை. நான் நடிகையாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. பாலிவுட்டிற்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் இங்கே எனக்கான ஒரு இடத்தைத் தக்க வைக்க போராடிக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் ஒன்று சொல்கிறேன்.. என்னை அலட்சியப்படுத்தியவர்களின் மூக்கை உடைக்காமல்விட மாட்டேன்.” என்று உறுதியாய் சொல்லியிருக்கிறார் நடிகை டாப்ஸி.
The post “தமிழ் நடிகைகள் அழுகிய தக்காளிகளா?” – நடிகை டாப்சியின் பொறுமல்..! appeared first on Touring Talkies.
]]>The post பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார் appeared first on Touring Talkies.
]]>கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பப்பிலஹரி, சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
பாலிவுட் திரையுலகினர், ரசிகர்கள் அவரது மறைவிற்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1973-ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான பப்பிலஹரி அதன் பின்னர் ஏராளமான இந்தி படங்களுக்கு இசையமைத்தார். அவர் கடைசியாக 2020-ம் ஆண்டு வெளியான ‘பாஹி 3’ என்ற பாலிவுட் படத்திற்கு இசை அமைத்தார். இவருடைய இசையமைப்பில் வெளியான ‘டிஸ்கோ டான்ஸர்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட் அடித்தன.
தமிழில் வெளியான ‘அபூர்வ சகோதரிகள்’, ‘பாடும் வானம்பாடி’, ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும் தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பப்பிலஹரியின் இறுதிச் சடங்கு நாளை மும்பையில் நடைபெறவுள்ளது.
The post பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார் appeared first on Touring Talkies.
]]>The post பாலிவுட்டில் கால் வைத்திருக்கும் நடிகர் மஹத் ராகவேந்திரா appeared first on Touring Talkies.
]]>மங்காத்தா புகழ் நடிகர் மஹத் ராகவேந்திரா, இப்படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து மற்றொரு நாயகனாக நடிக்கின்றார். பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லண்டனில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு, தற்போது டெல்லியில் தனது கதாபாத்திரத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்குகொண்டுள்ளார் மஹத் ராகவேந்திரா.
இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகர் நடிகர் மஹத் ராகவேந்திரா பேசும்போது, “முதலில் பாலிவுட்டின் பெரும் திறமையாளரான முதாஸ்ஸர் அஜிஸ் போன்றவருடன் இணைந்ததற்கு கடவுளுக்கு நன்றி. மொத்த படக் குழுவும் ஒரு குடும்பத்தில் இருப்பது போலான உணர்வையே எனக்கு தந்தார்கள்.
எந்த ஒரு கதாப்பாத்திரத்திலும் தனித்துவமாக மின்னும், பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் நடிக்க முதலில் எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. படப்பிடிப்பில் ஒரு எந்த ஒரு காட்சியாக இருந்தாலும், ஒரு டேக்கில் நடித்து விடும் அவர்களின் மாயாஜாலத்தை நேரில் அனுபவித்தேன். இருவருமே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்கள். இருவரும் மிகப் பெரிய நட்சத்திரங்களானாலும், என்னிடம் இயல்பாக பழகி, படப்பிடிப்பில் என்னை மிக இலகுவாக உணர வைத்து, நான் நன்றாக நடிக்க நம்பிக்கை தந்தார்கள்.
நான் நடிகர் ஜாஹிர் இக்பால் உடன் மற்றொரு நாயகனாக இணைந்து நடிக்கிறேன். ஆனால், இப்போது அவரை சக நடிகர் என்பதைவிட, ஒரு சகோதரர் என்றே கூற முடியும். அந்தளவு படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இன்னும் அவருடன் படப்பிடிப்பில் இணைந்து நடித்து கொண்டிருக்கிறேன்.
படப்பிடிப்பு தளம் எப்போதும் மிக உற்சாகமாகவே இருக்கும். இவர்களுடன் இணைந்து, இன்னும் பல சிறந்த அனுபவங்களை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இப்படம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால் இது பெண்களுக்காக ஒரு செய்தியை அழுத்தமாக கூறும் படம். இறுதியாக… இது நான் நினைத்தே பார்த்திராத, ஒரு கனவு குழுவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்த அற்புதமான அனுபவத்திற்காக கடவுளுக்கு நன்றி…” என்றார்.
The post பாலிவுட்டில் கால் வைத்திருக்கும் நடிகர் மஹத் ராகவேந்திரா appeared first on Touring Talkies.
]]>The post மதுபானம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக நடிகை ஷப்னா ஆஸ்மி புகார் appeared first on Touring Talkies.
]]>மேலும் வயதானவர்களை கண்டிப்பாக வெளியில் வர வேண்டாம் என்று அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் 70 வயதான பழம் பெரும் பாலிவுட் நடிகையான ஷப்னா ஆஷ்மி மது பானத்தை சப்ளை செய்யும் நிறுவனம் தன்னை ஏமாற்றிவிட்டதாக டிவீட்டரில் புகார் தெரிவித்திருக்கிறார்.
கொரோனாவை முன்னிட்டு தற்போது மும்பையில் வீட்டுக்கே மது பானங்களை சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படியொரு நிறுவனத்தில் சப்னா ஆஷ்மியும் தனக்கான மது பானங்களைக் குறிப்பிட்டு அதற்குரிய பணத்தையும் முன் கூட்டியே கட்டிவிட்டாராம். ஆனாலும் மது பானங்கள் அவர் கைக்கு வரவில்லையாம். இது பற்றி அந்த நிறுவனத்திற்கு தொலைபேசியில் கேட்டபோது முதலில் பதில் சொல்லாதவர்கள் தற்போது ஷப்னாவின் போன் அழைப்பை எடுப்பதே இல்லையாம்.
இதை ஷப்னா தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எந்த பிராண்டு, எவ்வளவு ரூபாய்க்கு என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை. இதனால் பல டிவீட்டர்வாசிகள் அவரிடம் இது குறித்துக் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
The post மதுபானம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக நடிகை ஷப்னா ஆஸ்மி புகார் appeared first on Touring Talkies.
]]>