The post “டாப்ஸி ஒரு பி கிரேட் நடிகை…” – கங்கனா ரணாவத் கடும் தாக்கு..! appeared first on Touring Talkies.
]]>இன்றைக்கு இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பான நடிகையென்றால் அது கங்கனா ரணாவத்துதான். சாதாரணமான கருத்து வேறுபாட்டைக்கூட சண்டையாக்கிவிடுவார். அவரும், அவரது சகோதரியும்தான் இன்றைக்கு பாலிவுட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களுக்கு மிகப் பெரிய எதிரிகள்.
அக்கா ஒன்று சொல்வதும், தங்கை அதற்கு ஒத்து ஊதுவதும், தங்கை குற்றம்சாட்டினால் அக்கா அதை எடு்த்துக் கொடுப்பதுமாக சில வருடங்களாக இந்த சகோதரிகளால் பாலிவுட் சகல பக்கங்களிலும் அடி வாங்கியுள்ளது.
இப்போது இவர்களின் குறி நடிகை டாப்ஸி. டாப்ஸிக்கும் இந்த சகோதரிகளுக்கும் இடையில் நல்லுறவே கிடையாது. “கங்கனாவின் நடிப்பு ஸ்டைல், டிரெஸ்ஸிங் சென்ஸ், பேச்சு.. இதையெல்லாம் அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்து செய்கிறார் டாப்ஸி” என்று கங்கனாவின் சகோதரி ஒரு முறை குற்றம்சாட்டி எழுதியிருந்தார். அப்போது டாப்ஸிக்கு இந்த இரண்டு சகோதரிகளும் சேர்ந்து ‘சீப்பான காப்பி’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைக்க ஆரம்பித்தார்கள்.
அன்றில் இருந்து இன்றுவரையிலும் இரு தரப்பினருக்கும் இடையில் மல்லுக்கட்டுதான். சொற்போர்தான். கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்தது. தற்போது மீண்டும் முதலில் இருந்து துவங்கியுள்ளது.
டாப்ஸியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஹஸீல் தில் ரூபா’ என்ற திரைப்படம் நாளை நெட் பிளிக்ஸில் வெளியாகிறது. இதையொட்டி டிவீட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடினார் நடிகை டாப்ஸி.
அப்போது ஒரு ரசிகர், “கங்கனா டிவீட்டரில் இல்லையே..? நீங்க அவரை மிகவும் மிஸ் செய்கிறீர்களா..?” என்று கேட்டிருக்கிறார். இதற்குப் பதிலளித்த டாப்ஸி, “எனது வாழ்க்கையில் கங்கானாவுக்கு எந்த தொடர்பும், சம்பந்தமும் இதுவரையிலும் இல்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. அவர் என்னை தனிப்பட்ட முறையில் என் குடும்பத்தையே மிகவும் காயப்படுத்திவிட்டார். அவர் என்னுடைய சக நடிகை. நான் வேலை செய்யும் துறையில் இருக்கும் இன்னொரு நபர். அவரைப் பற்றி நல்லதோ, கெட்டதோ எதுவும் என்னிடத்தில் இல்லை.. அவ்வளவுதான்.” என்று சொல்லியிருக்கிறார்.
இதைப் படித்துவிட்டு கங்கனா இன்ஸ்டாகிராமில் டாப்ஸிக்கு பதில் சொல்லியிருக்கிறார்.
“டாப்ஸி ஒரு பி கிரேடு நடிகை.! அவரைப் போன்றவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னுடைய பெயரைப் பயன்படுத்தி, என்னுடைய ஸ்டைலில் நடிப்பது, சான்ஸ் கேட்பது, தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்வது என்று செய்து வருகிறார்கள். இவர்களுக்கு நான் ஒருபோதும் மரியாதை கொடுப்பதில்லை. ஆனால் நான் வைஜெயந்திமாலா, வஹீதா ரஹ்மான், ஸ்ரீதேவி ஆகியோர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்து அவர்களை பின்பற்றுபவள்.. இந்த ‘சீப்பான காப்பி’யை கண்டு கொள்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. அவர் எனது பெயரால்தான் விளம்பரம் பெற்று வாழ்ந்து வருகிறார்.. அவரைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை..” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார்.
அழகு தேவதைகள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டால் நாம் யார் பக்கம் பேசுவது..?
The post “டாப்ஸி ஒரு பி கிரேட் நடிகை…” – கங்கனா ரணாவத் கடும் தாக்கு..! appeared first on Touring Talkies.
]]>The post கங்கனா ரணாவத், இந்திரா காந்தியாக நடிக்கும் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இதைத் தொடர்ந்து இந்திரா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகளுக்குத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டது. நெருக்கடி நிலை அமலில் இருந்த 21 மாதங்களும் இந்தியாவே சிறையில் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.
அடுத்து வந்த பொதுத் தேர்தலில் “நான் நெருக்கடி நிலையை கொண்டு வந்தது மிகப் பெரிய தவறு. மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்…” என்று மன்னிப்பும் கேட்டார் இந்திரா காந்தி.
அந்த சோகத்தை நினைவூட்டும் நேற்றைய நாளில் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றினை படமாக்கப் போவதாகவும் அதில் தற்போதைய பரபரப்பு நாயகியான கங்கனா ரணாவத் இந்திரா காந்தியாக நடிக்கப் போவதாகவும், இந்தப் படத்தை கங்கனாவே இயக்கவும் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகை கங்கனா ரனவத் ஏற்கெனவே ‘மணிகர்னிகா’ என்ற படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். சுதந்திர போராட்ட வீராங்கனையான ஜான்சி ராணியின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த படத்தை முதலில் தெலுங்கு இயக்குநர் கிரிஷ்தான் இயக்கினார். பின்னர் கங்கனாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் கங்கனாவே மீதி படத்தை இயக்கினார்.
தற்போது மீண்டும் இயக்கத்தைக் கையில் எடுக்கிறார் கங்கனா. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் இயக்குவதாக அறிவித்திருக்கிறார். இந்தப் படம் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை பிரகடனத்தை மையமாக கொண்டு இந்தப் படம் தயாராகிறதாம்.
இது குறித்து கங்கனாவிடம் கேட்டபோது, “கடந்த ஒரு வருடமாக இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைக்கும் பணி நடந்தது. அதில் நானும் கலந்துக் கொண்டேன். என்னைவிட யாரும் இந்த படத்தை சிறப்பாக இயக்கி விட முடியாது என்பதால் நானே இயக்க முடிவு செய்திருக்கிறேன்…” என்கிறார்.
தற்போது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளராகவே கருதப்படும் கங்கனா இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தால் அது இந்திராவின் பெருமையைக் குலைக்கும் வகையில்தான் இருக்கும் என்பதால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் இப்போதே சலசலப்பு எழுந்துள்ளது.
The post கங்கனா ரணாவத், இந்திரா காந்தியாக நடிக்கும் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post வருமான வரி கட்ட முடியாமல் தவிக்கும் கங்கனா ரணாவத்..! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலைமையில் வாழ்க்கையை ஓட்டுவதற்கே பணம் இல்லாத நிலையில் வரி கட்ட முடியாத நிலையில்கூட பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். இது போன்ற நிலைமை சினிமா நட்சத்திரங்களுக்கும் வந்துவிட்டதாம்.
சென்ற ஆண்டு வருமான வரியை முழுமையாகச் செலுத்தாததால் அதற்குரிய அபராத வட்டித் தொகையையும் சேர்த்து இந்தாண்டு கட்ட வேண்டியுள்ளது என்று புலம்பியுள்ளார் பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “நான் தற்போது இந்தியாவில் அதிகமாக வருமான வரி செலுத்துபவராக இருக்கிறேன். எனது ஆண்டு வருமானத்தில் 45% வருமானத்தை வருமான வரியாக செலுத்துகிறேன்.
ஆனால், கடந்த ஆண்டு வேலை ஏதும் இல்லாத காரணத்தால் வாழ்வில் முதன் முறையாக எனது வருமான வரியின் பாதித் தொகையைக் கூட என்னால் செலுத்த முடியவில்லை. நான் தாமதமாக வருமான வரித் தொகையை செலுத்தியதால் அரசு மீதமுள்ள பணத்திற்கு வட்டியை விதித்துள்ளது.
ஆனால், நான் இதனை வரவேற்கிறேன். தனி ஒரு நபருக்கு காலம் கடினமானதாக இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றிணைந்து அந்த காலத்தைவிட கடினமாக இருப்போம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசின் செல்லப் பிள்ளையாக இருந்து வரும் கங்கனாவுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் நிலைமையைச் சொல்லத்தான் வேண்டுமா..?
The post வருமான வரி கட்ட முடியாமல் தவிக்கும் கங்கனா ரணாவத்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘தலைவி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது..! appeared first on Touring Talkies.
]]>கொரோனா அச்சத்தால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மும்முரமாகத் தொடங்கப்பட்டு நேற்று முடிவடைந்தது.
கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தலைவி’ படம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
“இன்று நாங்கள் வெற்றிகரமாக எங்கள் கனவுத் திரைப்படமான ‘தலைவி’யின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம், எனக்கு ரத்தமும், சதையுமாகக் கிடைத்தது. நான் அதை மிகவும் நேசித்தேன். ஆனால் திடீரென அதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கலவையான உணர்ச்சிகள் மேலிடுகின்றன. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு. ‘தலைவி’ படக் குழுவினருக்கு நன்றி…” இவ்வாறு கங்கனா ரனாவத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, படக் குழுவினர் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
The post ‘தலைவி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது..! appeared first on Touring Talkies.
]]>The post ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.
ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு.தீபக் அவர்களிடம் இருந்து இத்திரைப்படத்திற்கு தடையில்லா சான்று பெற்ற பின்புதான் இந்த ப் படம் உருவாகி வருகிறது.
விப்ரி மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரியும், கர்மா மீடியா அண்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சைலீஸ் ஆர்.சிங்கும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். சசிகலா கதாபாத்திரத்தில் மதுபாலா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், பூர்ணா, ஜிஸ்னு சென்குப்தா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
‘பாகுபலி’ எழுத்தாளர் திரு விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஆண்டனி படத் தொகுப்பு செய்கிறார். ஏ.எல்.விஜய் படத்தினை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா போன்ற தோற்றத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
The post ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்..! appeared first on Touring Talkies.
]]>