The post ரஜினி பட தலைப்பில் விமல் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் நடிகர் விமல் நாயகனாக நடிக்கிறார். மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – ஓடியன் டாக்கீஸ், தயாரிப்பாளர் – கே.அண்ணாத்துரை, இயக்கம் – வேலுதாஸ், இசை – ராகவ் பிரசாத், ஒளிப்பதிவு – ராம்மி, படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் – கண்ணன், சண்டைப் பயிற்சி இயக்கம் – சிறுத்தை கணேஷ், பத்திரிகை தொடர்பு – K.S.K.செல்வா
இந்தப் படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுளார். இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, ‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றவர்.
மும்பையை சேர்ந்த ‘இந்தியன் சகீரா’ என அழைக்கப்படும் சினேகா குப்தா இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். படத்தின் ஹை லைட்டான அம்சங்களில் ஒன்றாக அந்தப் பாடல் இருக்கும்.
பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் நிழலாகவே, அவருடன் 23 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவரும், அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்மி ‘யாமிருக்க பயமே’ படத்தில் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல இந்தியில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் மூன்று படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்திற்கு பணியாற்றிய லாரன்ஸ் கிஷோர் இந்தப் படத்தின் படத் தொகுப்பை கவனிக்கிறார். ‘சக்ரா ‘ படத்திற்கு பணியாற்றிய கண்ணன் இந்தப் படத்தின் கலை வடிவமைப்பை கையாண்டுள்ளார். படத்தில் இடம் பெறும் நான்கு சண்டை காட்சிகளையும் ‘சிறுத்தை’ கணேஷ் வடிவமைத்துள்ளார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் வேலுதாஸ் பேசும்போது, “இந்தப் படத்தில் யூ டியூப் சேனல் நடத்தும் நிருபராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக சதீஷ் நடித்துள்ளார். ஒரு நிருபர் தன் வேலையை செய்கிறார். அதனால், அவருக்கு மிகப் பெரிய இடத்தில் இருந்து ஏற்படும் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இதுவரை நகரத்து இளைஞனாக அதிகம் நடித்திராத ஒருவர் நடித்தால், அந்த கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், இந்த படத்திற்கு ஹீரோவாக விமலை தேர்வு செய்தோம். விமல் படப்பிடிப்பில் எங்களுக்கு அருமையாக ஒத்துழைப்பு தந்தார். நடிகர் சுரேஷ் மேனனும் ஒரு ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்பதால், எனக்கு இருக்கும் சுமையை புரிந்து கொண்டு, அதை எளிதாக்கும்விதமாக நடித்து கொடுத்தார்..” என்கிறார்.
நகரத்து கதை என்பதால் சென்னையிலேயே 45 நாட்கள் மொத்த படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
The post ரஜினி பட தலைப்பில் விமல் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் விமல் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>தற்போது அவர் புதிதாக நடிக்கவிருக்கும் படத்தை உதய் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் புதிய படத்தில் நடிகர் பாண்டியராஜன் விமலின் தந்தையாக நடிக்கிறார். சகோதரியாக அனிதா சம்பத் நடிக்கிறார்.
மேலும், வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன், பால சரவணன், தீபா, நேகா ஜா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.
எழுத்து, இயக்கம் – மார்ட்டின் நிர்மல் குமார், திரைக்கதை – மார்ட்டின் நிர்மல் குமார் மற்றும் வத்சன் வீரமணி, ஒளிப்பதிவு – கமில் ஜே அலெக்ஸ், இசை – காட்வின்.
குடும்ப உறவுகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவுள்ளது. தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கவுள்ளது.
The post நடிகர் விமல் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>The post A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய பேய் படம்..! appeared first on Touring Talkies.
]]>மேலும் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா நடிப்பில், A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரஜினி’ படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.
தற்போது மீண்டும் A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தையும் இதே நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று நடைபெற்றது.
விழாவில் நாயகன் விமல், படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தம்பி ராமைய்யா, படத்தின் இசையமப்பாளர் அம்ரீஷ், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் மகேந்திர குமார், களாபி, பரமசிவம், முருகானந்தம், கலைமகன் முபாரக், திருமலை, ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிர்வாக தயாரிப்பு – ராஜா ஸ்ரீதர், தயாரிப்பு மேற்பார்வை – பூமதி – அருண், மக்கள் தொடர்பு – மணவை புவன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.வெங்கடேஷ், தயாரிப்பு – V.பழனிவேல்.
படம் பற்றி இயக்குநர் A.வெங்கடேஷ் பேசும்போது, “நான் இயக்கும் முதல் பேய் படம் இது. முற்றிலும் மாறுபட்ட இதுவரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான ஹாரர் படம் இது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கின்றன ஆனால், இது வழக்கமான பேய் படம் அல்ல., முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை இதிலிருக்கும். பேய் பயமுறுத்தும் காட்சிகள் இருந்தாலும் காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து ஜனரஞ்சகமான படமாக உருவாக்க இருக்கிறேன்.
விஜய் சத்யா நடிப்பில் நான் இயக்கிய ‘ரஜினி’ படப்பிடிப்பிற்கு ஒரு நாள் தயாரிப்பாளரை பார்க்க விமல் வந்தார். அப்போது நான் இந்த படத்தின் ஒன் லைனை சொன்னவுடன் அங்கேயே தங்கி முழு கதையையும் கேட்டார். உடனே, “கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது. உடனே படப்பிடிப்பை துவங்கிவிடலாம் என்று சொல்லிவிட்டார்.
நாங்களும் உடனே அதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுளோம்…” என்றார்.
The post A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய பேய் படம்..! appeared first on Touring Talkies.
]]>The post “விமல் கொடுத்தப் புகார் பொய்யானது” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் வெளியிட்ட ஆடியோ செய்தி appeared first on Touring Talkies.
]]>நடிகர் விமல் தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாகச் சொல்லி தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், கோபி உள்ளிட்ட மூவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்காததால் “எனது மனு மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் விமல்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட 3 தயாரிப்பாளர்கள் மீதும் வழக்கினை பதிவு செய்து விசாரித்து அறிக்கைை தரும்படி விருகம்பாக்கம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிங்காரவேலன், கோபி, விக்னேஷ் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கடுத்து தயாரிப்பாளர் சிங்காரவேலன் கோர்ட்டில் முன் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ச்சியாக விடுமுறைகள் வருவதால் அவருடைய ஜாமீன் மனு திங்கள்கிழமைதான் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த இடைவெளியில் அவரை போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதால் அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார்.
தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமறைவில் இருந்தும் இந்த வழக்கு குறித்து ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், “விமல் எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டில் துளி கூட உண்மையில்லை. மன்னர் வகையறா படத்தை வெளியிட முடியாமல் அவர் தவித்தபோது தயாரிப்பாளர் கோபியிடம் நான்தான் பேசி விமலுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.
அந்தப் பட வெளியீட்டின்போது விமல் வாங்கிய கடன் தொகையைத் திருப்பித் தராததால்தான் அவர் மீது புகார் கொடுத்தோம். அப்போது விமல் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் சம்பளத்தில் இருந்து கடன் தொகை முழுவதையும் கட்டிவிடுவதாக விமல் எங்களிடம் சொல்லி அதை ஒப்பந்தமாகவும் செய்து கொண்டோம்.
ஆனால் இதற்குப் பிறகு விமல் நடித்த 2 படங்கள் வெளியாகிவிட்டன. அப்போதும் விமல் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதனால்தான் தயாரிப்பாளர் கோபி விமல் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தினார். அப்போது வங்கியில் பணம் இல்லாததால் அது பவுன்ஸாகிவிட்டது. இதனால் கோபி, விமல் மீது செக் மோசடி வழக்கினைத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதேபோல் என்னிடம் வாங்கிய பணத்தையும் அவர் கொடுக்காததால்தான் நானும் அவர் கொடுத்திருந்த செக்கை வங்கியில் செலுத்தினேன். அதுவும் பணமில்லாமல் ரிட்டர்ன் ஆகிவிட்டது. நானும் இது குறித்து விமல் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்.
இந்த இரண்டு வழக்குகளையும் நீர்த்துப் போகச் செய்யத்தான் விமல் இப்போது புதிதாக இப்படியொரு புகாரை எங்கள் மீது சுமத்தியுள்ளார். இந்தப் புகார் கடந்த 2021 மார்ச் மாதம் பதிவானது. அப்போதே விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடம் எங்களது தரப்பு நியாயத்தை ஆதாரத்தோடு சொல்லி நிரூபித்தோம். அதனால்தான் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை. இந்த விசாரணைக்கு பல முறை அழைத்தும் விமல் வரவில்லை.
இப்போது வேண்டுமென்றே எங்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றத்திற்குச் சென்று இப்படியொரு வழக்கினை தொடர்ந்து தீர்ப்பினை பெற்று வந்திருக்கிறார். நாங்கள் இதற்காக ஜாமீன் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளோம்.
ஜாமீன் கிடைத்தவுடன் நிச்சயமாக பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து முழு விளக்கமும் அளிப்போம்..” என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.
The post “விமல் கொடுத்தப் புகார் பொய்யானது” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் வெளியிட்ட ஆடியோ செய்தி appeared first on Touring Talkies.
]]>The post விமல் – தான்யா ஹோப் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாகும் இப்படத்தில் நடிகர் விமல் நாயகனாகவும், நாயகியாக ‘தடம்’, ‘தாராள பிரபு’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் தான்யா ஹோப் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
பல வெற்றிப் படங்களில் தனது சிறந்த ஒளிப்பதிவை வழங்கிய ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பெயர் பெற்ற ‘கனல்’ கண்ணன் இப்படத்திற்கு சண்டை இயக்கத்தை அமைக்கிறார்.
இன்னமும் பெயர் வைக்கப்படாத இந்தப் புதிய படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே.ரித்திஷ் நடித்த ‘நாயகன்’, மற்றும் ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கியவர்.
தயாரிப்பு – MIK Productions (P) Ltd, தயாரிப்பாளர் – P.இளையராஜா, எழுத்து, இயக்கம் – ‘குட்டிப்புலி’ சரவண சக்தி, ஒளிப்பதிவு – ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கர், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, சண்டை இயக்கம் – ‘கனல்’ கண்ணன், கலை இயக்கம் – ஜெயகுமார், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் – கர்ண ராஜா, புரொடக்சன் எக்ஸிகியூட்டிவ் – தர்மராஜ் மாணிக்கம், மக்கள் தொடர்பு – P.தியாகராஜன்.
இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் firstlook போஸ்டரை வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.
The post விமல் – தான்யா ஹோப் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>The post ஒரே ஷாட்டில் படமாகும் விமல் நடிக்கும் ஹாரர் படம்..! appeared first on Touring Talkies.
]]>“1 பந்து 4 ரன் 1 விக்கெட்” படத்தின் இயக்குநரான வீரா இந்தப் படத்தை இயக்குகிறார்..
இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால், இந்தப் படம் ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குநர் வீரா.
இதனால், அவரை கவுரவப்படுத்தும்விதமாக, நன்றிக் கடனாக இந்த பட வாய்ப்பை, அவருக்கு வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன்.
வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.
The post ஒரே ஷாட்டில் படமாகும் விமல் நடிக்கும் ஹாரர் படம்..! appeared first on Touring Talkies.
]]>The post விமலின் ‘கன்னி ராசி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் இயக்கி உள்ளார்.
விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது படத் தொகுப்புப் பணியை மேற்கொள்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.
இப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.முத்துக்குமரன், “காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் படம் இது.
படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.
இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரூம் சந்தித்து கொள்ளும் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம்.
இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்…” என்றார் இயக்குநர்.
இத்திரைப்படம் செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் இப்படம் அப்போது வெளியாகவில்லை.
இப்போது தியேட்டர்கள் திறந்திருக்கும் சூழலில் இம்மாத இறுதியில் நவம்பர் 27-ம் தேதியன்று குடும்பங்களை மகிழ்விக்க ‘கன்னி ராசி’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post விமலின் ‘கன்னி ராசி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் சேதுபதி கதையில் நடிக்கும் ‘விமல்’..! appeared first on Touring Talkies.
]]>விமல் நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ‘தர்ம பிரபு’ இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ‘படவா’, ‘புரோக்கர்’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’ மற்றும் இயக்குநர் வேலுவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இன்னமும் பெயரிடப்படாத படம்… ஆகிய படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு, இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் ‘குல சாமி’ என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குநர் சுராஜின் உதவியாளர் ராஜதுரையின் இயக்கத்தில் ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல்.
‘குலசாமி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது.
The post விஜய் சேதுபதி கதையில் நடிக்கும் ‘விமல்’..! appeared first on Touring Talkies.
]]>