The post “வாரிசு’ வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை” – தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ பேட்டி appeared first on Touring Talkies.
]]>இப்படம் 2023 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் ஆந்திரா, தெலங்கானாவில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதை நினைவூட்டி தில் ராஜுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ ஆந்திரா ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், “தொடக்கத்திலிருந்தே ‘வாரிசு’ படம் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியிடப்படும் என சொல்லிருந்தோம். மே மாதமே நாங்கள் கூறிவிட்டோம்.
அதன் பிறகு சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ சங்கராந்தி வெளியீடு என ஜூன் மாதம்தான் அறிவிக்கப்பட்டது. அதேபோல பாலகிருஷ்ணாவின் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தை டிசம்பரில் வெளியிடத்தான் திட்டமிட்டிருந்தனர். ஆனால், படப்பிடிப்பு தாமதமானதால் அதுவும் சங்கராந்தி ரேஸில் இணைந்தது.
பண்டிகை காலங்களில் மூன்று படங்கள் வெளியாகும் அளவிற்கு போதுமான திரைகள் உள்ளன. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் என்னுடன் நல்லுறவில் தான் இருக்கின்றனர். அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தப் புகாரையும் அளிக்காதபோது, மற்றவர்கள் ஏன் பிரச்சினை செய்கிறார்கள் என புரியவில்லை.
ஹைதராபாத்தில் உள்ள 420 திரைகளில் 37 திரைகளை லீஸுக்கு எடுத்துள்ளேன். ஏசியன் சுனில் 100 திரைகளை வைத்துள்ளார். மற்ற திரைகள் உரிமையாளர்களால் நடத்தப்படுகின்றன. விநியோகஸ்தர் வட்டாரத்தில் எங்களுக்கு நல்ல நட்பு உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
The post “வாரிசு’ வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை” – தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ பேட்டி appeared first on Touring Talkies.
]]>The post ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்திற்காக பூவிருந்தவல்லி அருகே நேற்றைக்கு நடந்த ஷூட்டிங்கில் யானைகள் பயன்படுத்தப்பட்டன. அனுமதியின்றி அந்த யானைகள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே மக்களிடம் நேர்காணல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை செய்தியாளர்களை தாக்கி பெரும் பிரச்சினையாகி, இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் கைதாகியுள்ளனர். மேற்கொண்டு படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதால் புதிய பிரச்னை ஒன்றும் உருவாகியுள்ளது.
அனுமதியின்றி யானைகள் கொண்டுவரப்பட்டது தொடர்பாக ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு விலங்குகள் நல வாரியம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில், “விலங்குகளை பயன்படுத்தும் முன்பு விதி 31ன்படி விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். வாரியத்தின் அனுமதியின்றி பயன்படுத்துவது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 26ன் கீழ் குற்றமாகும். வன விலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 அட்டவணை-1ன் கீழ் யானைகள் பாதுகாக்கப்படும் விலங்குகள் ஆகும். மற்றும் விதி 7(2)இன்படி, திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெறுவது அவசியம். அதேபோல் பயன்படுத்தும் விலங்கு வகை, விலங்குகளின் வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவை குறித்தும் முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். எனவே அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ‘வாரிசு’ படத்துக்கு தொடர்ந்து எழும் சிக்கல்களால் படக் குழு பெரிதும் கவலையடைந்துள்ளது.
The post ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் appeared first on Touring Talkies.
]]>The post “இப்போவெல்லாம் விஜய்தான் கதை கேக்குறார்” – அப்பா எஸ்.ஏ.சி.யின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>இது குறித்து ஏஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில், “வாரிசு படத்தில் அரசியல் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. நானும் விஜய்யும் ஒண்ணா உக்காந்து கதை கேட்ட காலமெல்லாம் மாறிருச்சு. இப்போவெல்லாம் அவரே கதை கேட்கிறார். அவரே தீர்மானிக்கிறார். அவரே முடிவெடுக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர் தொடங்கி எல்லாத்தையும் அவரே முடிவு செய்றார். அதுல நான் தலையிடப் போறதில்லை.
அதனால இப்போவரைக்கும் எனக்கு வாரிசு படத்தோட கதை என்னன்னு தெரியாது. என்னதான் நம்ம குழந்தைகளா இருந்தாலும் அந்தந்த வயசு வரும்போது அவங்களுக்கான சுதந்திரத்தை நாம கொடுத்திரணும். இல்லைன்னா அதுவே வம்பாகியிரும்..” என்று சொல்லியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
The post “இப்போவெல்லாம் விஜய்தான் கதை கேக்குறார்” – அப்பா எஸ்.ஏ.சி.யின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>The post விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு எழுந்துள்ள புதிய சிக்கல்..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு தமிழில் ‘வாரிசு’ என்றும் தெலுங்கில் ‘வாரசுடு’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.
இந்தப் படம் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கு திரையுலகின் சில முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் ‘வாரிசு’ படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கலாகி, அதன் வசூல் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர் வருத்தத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அவரை மேலும் கவலையடைய செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு, “பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின்போது அதிகளவில் டப்பிங் படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. நேரடி தெலுங்கு படத்திற்கு, டப்பிங் படங்களைவிட குறைந்த அளவில்தான் திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன.
தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த வேண்டுமானால் இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுத்து திரையரங்குகளை அதிகமாக ஒதுக்க வேண்டும். மீதமிருக்கும் திரையரங்குகளை வேண்டுமானால் டப்பிங் படங்களுக்கு ஒதுக்கலாம்…” என்று கூறியிருந்தார்.
தனக்குத்தானே சூனியம் வைத்தது போன்று 2019-ம் ஆண்டு தயாரிப்பாளர் தில் ராஜு இப்படி பேசியது, இப்போது அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டப்பிங் படங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை சுட்டிக் காட்டி “பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும். டப்பிங் படங்களுக்கு மீதமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும்..” என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.
‘வாரிசு’ படம் முழுக்க, முழுக்க தமிழ் மொழியில் உருவான படம் என்று இதன் இயக்குநர் வம்சி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார், இதனால் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாகப் போகும் வாரிசு படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் குறைவான திரையரங்குகளே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் ‘வாரிசு’ படம் வெளியாகும் அதே தினத்தில் ‘வீரசிம்ம ரெட்டி’ மற்றும் ‘வால்டர் வீரய்யா’ போன்ற நேரடி தெலுங்கு படங்கள் வெளியாகப் போவதால், ‘வாரிசு’ படத்தின் வசூலிலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
The post விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு எழுந்துள்ள புதிய சிக்கல்..! appeared first on Touring Talkies.
]]>The post “வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் காப்பியடிக்கப்பட்டதா..?” – கவிஞர் விவேக்கின் பதில் appeared first on Touring Talkies.
]]>இந்தப் பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி பாடியிருந்தனர். இந்தப் பாடல் இதுவரை 4 கோடி பார்வையாளர்களை சென்று அடைந்துள்ளது. ஆனால் கூடவே இந்தப் பாடல் மற்றும் நடனம் குறித்து சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் போட்ட நடன அசைவுகளை அப்படியே காப்பி அடித்துள்ளார் நடன இயக்குநர் ஜானி என்று சொல்லி 2 பாடல்களையும் ஒப்பிட்டு வீடியோக்களை சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அது மட்டுமில்லாமல் 1994-ம் ஆண்டில் வெளியான ‘உளவாளி’ படத்தில் இடம் பெற்ற ‘மொச்ச கொட்ட பல்லழகி.. முத்து முத்து சொல்லழகி…’ என்ற பாடலின் மெட்டும் இந்த ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலின் மெட்டும் ஒரே போல உள்ளது எனவும் இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு ‘ரஞ்சிதமே’ பாடலை எழுதிய கவிஞர் விவேக் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு மெட்டை தொடர்ந்து பல மெட்டுக்கள் அதுபோல உருவெடுக்கும். ‘மொச்ச கொட்ட பல்லழகி…’ என்ற பாடல் 1990-களில் வெளியானது.. அதன் பின்னர் ‘சிலம்பாட்டம்’ படத்தில் ‘பார்ட்டிக்கு போகலாமா..’ என்ற பாடலும் ‘தர்மதுரை’ படத்தில் ‘மக்க கலங்குதப்பா…’ ஆகிய பாடல்களும் இதே போல இருக்கும்.
நான் ‘வாரிசு’ படத்தில் வசனங்களையும் எழுதியுள்ளேன். எனவே ‘ரஞ்சிதமே’ பாடலை எழுதும் போதும் இந்த ‘மொச்ச கொட்ட பல்லழகி’ பாடலை தமனிடம் சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டே காட்சிகளை வைத்தோம். ‘மொச்ச கொட்ட பல்லழகி’ என்ற பாடலுக்கான காரணத்தையும் காட்சிகளாக வைத்துள்ளோம். படம் வரும்போது புரியம்.” என்றார் விவேக்.
The post “வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் காப்பியடிக்கப்பட்டதா..?” – கவிஞர் விவேக்கின் பதில் appeared first on Touring Talkies.
]]>The post இணையத்தில் வைரலாகியிருக்கும் விஜய்யின் ‘வாரிசு’ பட புரமோ பாடல் appeared first on Touring Talkies.
]]>பீஸ்ட் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் அடுத்தப் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், டிரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் வந்து போன தீபாவளி தினத்தில் இந்த ‘வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனிடையே ரசிகர்களை குஷிப்படுத்தும்விதமாக ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் புரமோ பாடல் இன்றைக்கு வெளியானது.
தமன் இசையில் விவேக் எழுதிய இந்தப் பாடலை விஜய் மற்றும் மானசி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ என தொடங்கும் இந்த பாடலின் ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி டிரெண்ட்டிங்கிலும் இடம் பிடித்துவிட்டது.
மேலும் மிகக் குறுகிய நேரத்தில் 10 லட்சம் பார்வைகளைப் பெற்று சாதனையும் படைத்துள்ளது.
விஜய் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு குடும்ப பின்னணி கொண்ட படத்தில் நடித்துள்ளதால் இந்த ‘வாரிசு’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ‘வாரிசு’ படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post இணையத்தில் வைரலாகியிருக்கும் விஜய்யின் ‘வாரிசு’ பட புரமோ பாடல் appeared first on Touring Talkies.
]]>The post பண்டிகை தினங்களில் மோதிய விஜய் – அஜீத் படங்களின் பட்டியல்..! appeared first on Touring Talkies.
]]>இதற்கு முன்பு இதேபோல் பல்வேறு தேதிகளில் அஜித் – விஜய் படங்கள் மோதிய லிஸ்ட் இங்கே :
பண்டிகை தின ரிலீஸ் :
கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் தினத்தன்று விஜய் நடித்த ‘ஃபிரண்ட்ஸ்’ படமும், அஜித்தின் ‘தீனா’ படமும் ஒரே நாளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன.
2003-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் அஜித்தின் ‘ஆஞ்நேயா’ மற்றும், விஜய்யின் ‘திருமலை’ படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில் ‘திருமலை’ படம் வெற்றி பெற்றது.
4 வருடங்களுக்குப் பிறகு, 2007-ம் ஆண்டு விஜய்யின் ‘போக்கிரி’ மற்றும் அஜித்தின் ‘ஆழ்வார்’ படங்கள் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. இதில் ‘போக்கிரி’ படம் வெற்றியடைந்தது.
7 ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் ‘வீரம்’ படமும் விஜய்யின் ‘ஜில்லா’ படமும் வெளியானது. இதில் அஜித்தின் ‘வீரம்’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படங்களை தவிர்த்து, 2000-க்கு முன்பு…
1996-ம் ஆண்டு விஜய் நடித்த ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ மற்றும் அஜித்தின் ‘வான்மதி’ இரண்டு படங்களும் 3 நாட்கள் வித்தியாசத்தில் வெளியாகின.
1996-ம் ஆண்டு அஜித்தின் ‘வான்மதி’ ஜனவரி 12-ம் தேதியன்றும், ஜனவரி 15-ம் தேதியன்று, விஜய்யின் கோயமுத்தூர் மாப்ளையும், அதே ஆண்டு அதாவது 1996-ம் ஆண்டே பிப்ரவரி மாதம் 18-ம் தேதி விஜய்யின் ‘பூவே உனக்காக’ படமும், அஜித்தின் ‘கல்லூரி வாசல்’ படமும் ஒரே நாளில் வெளியானது.
1997-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அஜித்தின் ‘ரெட்டை ஜடை வயசு’ படமும், விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ டிசம்பர் 19-ம் தேதியன்றும் வெளியானது.
1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதியன்று விஜய் நடித்த ‘நிலவே வா’ படமும், ஆகஸ்ட் 15-ம் தேதியன்று அஜித்தின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படமும் வெளியானது.
2000-ம் ஆண்டு மே 19-ம் தேதி விஜய்யின் ‘குஷி’, அஜித்தின் ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி வரவேற்பை பெற்றன.
The post பண்டிகை தினங்களில் மோதிய விஜய் – அஜீத் படங்களின் பட்டியல்..! appeared first on Touring Talkies.
]]>The post தன்னம்பிகைக்கு உதாரணம் விஜய்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவர் பட்ட சிரமங்கள் அதிகம். துவக்க காலத்தில் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்தான், விஜயை வைத்து படங்களை இயக்கி தயாரித்தார். இவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.
ஒரு கட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், “இனி உன்னை வைத்து படம் எடுக்க மாட்டேன். நடிப்பை மறந்துவிடு. உன்னால் என் இரண்டு வீடுகளை விற்றுவிட்டேன்” என்று ஆத்திரமாகக் கூறி இருக்கிறார்.
இதனால் வருத்தமடைந்த விஜய் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அப்போது அவரது தாயார், ஷோபா தான், “இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் விஜயை வைத்து எடுங்கள். அது சரியில்லாவிட்டால் விஜயை நடிப்பில் இருந்து ஒதுங்கச் செய்து விடலாம்” என்று கூறியிருக்கிறார்.
அதுபோல விஜயை நாயகனாக வைத்து படம் எடுக்க ஓரளவு வெற்றி கண்டது. அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்கள் ஆனது. தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விஜயைத் தேடி வந்தனர்.
இந்த அளவுக்கு பெரிய வெற்றி கிடைக்க காரணம், விஜய் தனது நோக்கத்தில் உறுதியாக இருந்ததுதான். லட்சியத்தை நோக்கியே நகர்ந்தால், வெற்றி நிச்சயம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் விஜய்.
The post தன்னம்பிகைக்கு உதாரணம் விஜய்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post “விஜய்யின் சந்திப்பு புத்துணர்ச்சியை தந்தது” – நடிகர் மனோபாலாவின் டிவீட்..! appeared first on Touring Talkies.
]]>அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைக்கு வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்தேன். அவர் அப்படியேதான் இருக்கிறார். நடனம் ஆடும்போது அதிக உத்வேகம். 15 நிமிட சந்திப்பு புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் எனக்கு கொடுத்தது” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் வாரிசு படத்தின் முதல் பாடல் விஜய் ரசிகர்களுக்கான தீபாவளி பரிசாக தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது அந்தப் படத்தின் இசையமைப்பாளரான தமன் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரின்ஸ் பட விழாவில் தெரிவித்துள்ளார்.
The post “விஜய்யின் சந்திப்பு புத்துணர்ச்சியை தந்தது” – நடிகர் மனோபாலாவின் டிவீட்..! appeared first on Touring Talkies.
]]>The post மிகப் பெரிய வருத்தத்தில் இருக்கும் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.
]]>தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை தெலுங்கு திரையுலகத்தின் முக்கியமான தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படம் மிகப் பெரிய வசூலை வாரி குவிக்கும் என்றும் தமிழ் திரையுலகில் தன்னை ஒரு பெரிய தயாரிப்பாளராக நிலை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு தற்போது சில ஏமாற்றங்களை இந்த ‘வாரிசு’ படம் கொடுத்திருப்பதாக தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகத்தில் பலமான பேச்சு எழுந்துள்ளது.
இந்த ‘வாரிசு’ படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிட திட்டமிட்டு வந்தனர். இந்தப் படம் துவங்கியபோது பொங்கல் பண்டிகை படமாக ‘வாரிசு’ மட்டுமே லைனில் இருந்தது. இதனால் 90 சதவிகித தியேட்டர்கள் வாரிசு படத்துக்கே கிடைக்கும். நமக்குப் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று நினைத்த தயாரிப்பாளர் தில் ராஜூ சந்தோஷத்தில் இருந்தார்.
ஆனால், திடீரென்று ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக அஜித்தின் ‘துணிவு’ படமும் அதே பொங்கல் தினத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜூவின் கனவில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
அஜீத், விஜய் இருவருமே தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் என்பதால் இரண்டு படங்களுக்கும் சரி பாதியாகத்தான் தியேட்டர்கள் கிடைக்கும். இதனால் முன்பு எதிர்பார்த்த அளவுக்கான அதிக திரையரங்குகளில் ‘வாரிசு’ படம் வெளியாக வாய்ப்பில்லை. இதனால் ‘வாரிசு’ படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வசூலும், பாதிக்குப் பாதி குறையும்.
தமிழில்தான் இந்த நிலைமை என்றால், தெலுங்குலகத்திலும் இந்த ‘வாரிசு’ படம் வெளியாகும் அதே பொங்கல் பண்டிகை தினத்தில் சில முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்களும் திரைக்கு வரவிருப்பதாகத் தற்போது தெரிய வந்துள்ளது.
பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ மற்றும் சிரஞ்சீவி நடிக்கும் ‘மெகா 154’ ஆகிய இரண்டு படங்களும் அன்றைக்கு வெளியாகப் போவதாக கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பெரிய நட்சத்திர படங்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன.
பாலகிருஷ்ணா நடித்து வரும் அவரது 107-வது படமும், அகில் அக்கினேனி மற்றும் மம்மூட்டி நடிக்கும் ‘அகில்ஸ் ஏஜென்ட்’ படமும் அன்றைக்கு வெளியாகவுள்ளனவாம். கடைசி நேர பிரச்சினைகளினால் இந்த 4 படங்களில் நிச்சயமாக 3 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இந்தப் படங்களினால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் தியேட்டர்கள் குறைவாகக் கிடைத்து அது ‘வாரிசு’ படத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து தயாரிப்பாளர் தில் ராஜூ தற்போது பெருத்த கவலையில் இருக்கிறாராம்.
The post மிகப் பெரிய வருத்தத்தில் இருக்கும் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.
]]>