Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் விஜய் சேதுபதி – Touring Talkies https://touringtalkies.co Sat, 18 Sep 2021 09:48:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் விஜய் சேதுபதி – Touring Talkies https://touringtalkies.co 32 32 மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதியின் பேச்சு..! https://touringtalkies.co/vijay-sethupathis-talk-about-acting-in-mysskins-direction/ Sat, 18 Sep 2021 09:47:37 +0000 https://touringtalkies.co/?p=18100 தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில், ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு-2’. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த ‘பிசாசு-2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தான் எப்படி இப்படத்தில் இணைந்தேன் என்பது பற்றியும், இயக்குநர் மிஷ்கினின் கலை ஆர்வம், இயக்கத் திறமைகள் குறித்தும் சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி விவரித்துள்ளார். அந்தப் […]

The post மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதியின் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில், ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு-2’.

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த ‘பிசாசு-2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தான் எப்படி இப்படத்தில் இணைந்தேன் என்பது பற்றியும், இயக்குநர் மிஷ்கினின் கலை ஆர்வம், இயக்கத் திறமைகள் குறித்தும் சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி விவரித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், “மிஷ்கின் அவர்களுடைய பல நேர்காணல்களில் அவர்  நான் அகிர குரோசோவோவுடன் பத்து வருடம் டிராவல் பண்ணினேன்’ என்று சொல்லியிருப்பார். ‘இவர் அகிர குரோசோவோ படம்தானே பார்த்திருப்பார். எப்படி டிராவல் பண்ணியிருக்க முடியும்..?’ என்ற எண்ணம் நமக்கு வரும்.

உண்மை என்னவெனில் திருவள்ளுவர் இப்போது இல்லை. ஆனால் குறள் வழியாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைப் போன்ற உறவுதான் அகிர குரோசோவோ-மிஷ்கினின் உறவு. அதை நான் அவரை சந்தித்த பிறகு… சைக்கோ’ படத்தைப் பார்த்த பிறகு அவர் அகிர குரோசோவாவுடன் எவ்வாறு பயணப்பட்டு இருப்பார் என்பதை உணர்ந்தேன்.

உண்மையிலே ‘சைக்கோ படம் பார்த்து பிரமித்துப் போனேன். அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் கதை சொன்னது. ஒரு நாள் இயக்குநர் மிஷ்கினை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தேன்.

அப்போது “நாம் சந்திக்கலாமா..?” என்று கேட்டதும் ‘வா கண்ணம்மா’ என்று அழைத்தார். சந்தித்தோம். மீட்டிங் சிறப்பாக முடிந்தது. அப்போது இந்த ‘பிசாசு-2′ கதையை சுருக்கமாக சொன்னார்.

அந்தப் படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் நான் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறேன் என்று அவர் சொல்லும்போது ஒரு சினிமா கலைஞனாக நான் ஆச்சரியமும், பெருமிதமும் அடைந்தேன்.

“நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம். அதுவும் சீக்கரமாக பண்ணுவோம்” என்றேன். அதனால்தான் இந்த ‘பிசாசு-2’ படத்தில் எனக்காக ஒரு பிரத்யேகமாக சிறிய கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.

“உங்கள் சிந்தனையில் நான் படம் பண்ணனும். நான் ரெடியாக இருக்கிறேன். உங்களுடன் படம் பண்ணும்போது என்னால் சினிமாவை மேலும் கற்றுக் கொள்ள முடியும்” என்று பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

The post மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதியின் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
கமலுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி..! https://touringtalkies.co/actor-vijay-sethupathy-will-act-as-villain-in-kamals-vikram-2-movie/ Tue, 18 May 2021 07:28:48 +0000 https://touringtalkies.co/?p=15145 விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்-2’ பட த்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி முன்னர் கூறுகையில்,“விக்ரம்-2′ படத்துக்காக இயக்குநர் தரப்பில் என்னை அணுகியது உண்மைதான். அது வில்லன் கதாபாத்திரம். ஆனால் அது இன்னமும் உறுதியாகததால், அந்தப் படத்திற்கு இதுவரையிலும் நான் தேதிகளை ஒதுக்கவில்லை. ‘விக்ரம்-2’ […]

The post கமலுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி..! appeared first on Touring Talkies.

]]>
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்-2’ பட த்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி முன்னர் கூறுகையில்,“விக்ரம்-2′ படத்துக்காக இயக்குநர் தரப்பில் என்னை அணுகியது உண்மைதான். அது வில்லன் கதாபாத்திரம். ஆனால் அது இன்னமும் உறுதியாகததால், அந்தப் படத்திற்கு இதுவரையிலும் நான் தேதிகளை ஒதுக்கவில்லை. ‘விக்ரம்-2’ படத்தில் நான் வில்லனாக நடிப்பதற்கு ஏதேனும் சிறப்பான விஷயங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்தப் படத்தில் நடிப்பதில் அர்த்தம் இல்லை…” என்றே கூறியிருந்தார்.

இந்நிலையில் இதே ‘விக்ரம்-2’ படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாக உறுதியானத் தகவல்கள் கிடைத்தன. நடிகர் பகத் பாசிலும் இதனை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவருடன் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post கமலுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி..! appeared first on Touring Talkies.

]]>
“இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் வெளியாகும்” – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..! https://touringtalkies.co/laabam-movie-will-release-on-april-month/ Sat, 20 Mar 2021 11:20:45 +0000 https://touringtalkies.co/?p=13766 சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கடைசியாக இயக்கியிருக்கும் ‘லாபம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் நிச்சயமாக வெளியாகும் என்று அந்தப் படக் குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், விஜய் சேதுபதி புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கின்றன. நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனியல், சாய் தன்ஷிகா என இன்றைய இளம் […]

The post “இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் வெளியாகும்” – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கடைசியாக இயக்கியிருக்கும் ‘லாபம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் நிச்சயமாக வெளியாகும் என்று அந்தப் படக் குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், விஜய் சேதுபதி புரடக்ஷனும் இணைந்து தயாரிக்கின்றன.

நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனியல், சாய் தன்ஷிகா என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இமான் இசை அமைத்துள்ள இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன்.

உணவு அரசியலும், கல கல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில், பல புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது.  

சில வருட இடைவெளிக்குப் பிறகு ஜனநாதன் இயக்கியிருக்கும் திரைப்படம் இது என்பதால் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவால் இயக்குநர் ஜனநாதன் மரமணடைந்தது அந்தப் படக் குழுவினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

படத்தின் படத் தொகுப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த இந்தச் சூழலில் ஜனநாதனின் மரணம் நிகழ்ந்துள்ளதால் படம் பற்றிய விசாரணைகள் தமிழ்த் திரையுலகத்தில் தொடர்ந்து நடந்தன.

இது குறித்து தற்போது அந்தப் படத்தைத் தயாரித்து வரும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தில், “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக் கூடியவை.

‘லாபம்’ படத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த தருணத்தில் ஜனநாதன் மறைந்தது எங்களுக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கிறது. ‘லாபம்’ படத்தின் அனைத்து வேலைகளையும் முழுமையாக அவர் முடித்து கொடுத்து விட்டார். மிச்சமிருக்கும் சில பணிகளை எங்கள் படக் குழுவினரே முடித்து வெளியிடவுள்ளோம்.

அனைத்து பணிகளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டப்படி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் பிரமாண்டமாக படம் வெளியாகவுள்ளது” என அறிவித்துள்ளது.

The post “இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் வெளியாகும்” – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்- வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி https://touringtalkies.co/vijay-sethupathy-cake-cutting-news/ Sat, 16 Jan 2021 07:34:02 +0000 https://touringtalkies.co/?p=12178 பொதுவாக போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிகள் லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பவர்கள்தான் சமீப காலமாக தங்களுடைய பராக்கிரமத்தைக் காட்டுவதற்காக தங்களது பிறந்த நாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால், இப்போது ஒரு நடிகர்.. அதுவும் இப்போதைய இளைஞர்களிடத்தில் மிகப் பெரிய ஆதரவைப் பெற்றிருப்பவர்.. நடிகர் விஜய் சேதுபதி இதைச் செய்திருப்பதுதான் இன்றைய ஹாட்டான டாபிக். இன்று நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாள். இதையொட்டி இன்று தனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் பிறந்த […]

The post பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்- வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி appeared first on Touring Talkies.

]]>
பொதுவாக போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிகள் லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பவர்கள்தான் சமீப காலமாக தங்களுடைய பராக்கிரமத்தைக் காட்டுவதற்காக தங்களது பிறந்த நாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்கள்.

ஆனால், இப்போது ஒரு நடிகர்.. அதுவும் இப்போதைய இளைஞர்களிடத்தில் மிகப் பெரிய ஆதரவைப் பெற்றிருப்பவர்.. நடிகர் விஜய் சேதுபதி இதைச் செய்திருப்பதுதான் இன்றைய ஹாட்டான டாபிக்.

இன்று நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாள். இதையொட்டி இன்று தனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஒரு மிகப் பெரிய பட்டாக்கத்தியை வைத்து கேக்கை வெட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்தப் புகைப்படம் வைரலாகப் பரவத் துவங்கியவுடன் விஜய் சேதுபதிக்கு பல இடங்களில் இருந்தும் கண்டனங்கள் வந்து குவிந்துவிட்டன.

அதிர்ந்து போன விஜய் சேதுபதி அடுத்த அரை மணி நேரத்தில் இதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்.

ஆர்வக் கோளாறில் உடனிருப்பவர்களின் சந்தோஷத்திற்காக எதையாவது செய்துவிட்டு பின்பு வருத்தப்படுவது கலைஞர்களின் வாடிக்கையாகிவிட்டது.

அதில் விஜய் சேதுபதி போன்ற ‘மக்கள் செல்வன்’ என்று போற்றப்படுபவர்களும் சிக்குவது வருத்தத்திற்குரியது.

The post பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்- வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி appeared first on Touring Talkies.

]]>
‘துக்ளக் தர்பார்’ படப் பிரச்சினை – சீமானிடம், பார்த்திபன் சமாதானப் பேச்சு..! https://touringtalkies.co/parthiban-spoke-to-seeman-about-duglaq-durbar-movie-crisis/ Wed, 13 Jan 2021 08:39:35 +0000 https://touringtalkies.co/?p=12133 ‘துக்ளக் தர்பார்’ படத்தில் ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை கிண்டல் செய்து சில வசனங்களும், காட்சிகளும் அமைந்திருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள் ‘துக்ளக் தர்பார்’ படக் குழுவுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். “அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் தமிழ்நாட்டில் ஒரு ஷோ கூட முழுமையாக ஓடாது” என்று எச்சரித்திருந்தார்கள். இந்த நிலையில் இந்தப் படத்தில் சீமானைப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பார்த்திபன், […]

The post ‘துக்ளக் தர்பார்’ படப் பிரச்சினை – சீமானிடம், பார்த்திபன் சமாதானப் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
துக்ளக் தர்பார்’ படத்தில் ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை கிண்டல் செய்து சில வசனங்களும், காட்சிகளும் அமைந்திருப்பதாக புகார் எழுந்தது.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள் ‘துக்ளக் தர்பார்’ படக் குழுவுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் தமிழ்நாட்டில் ஒரு ஷோ கூட முழுமையாக ஓடாது” என்று எச்சரித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் சீமானைப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பார்த்திபன், தனது டிவீட்டர் செய்தியில் சீமானிடம் தான் இது குறித்து சமாதானம் பேசியதாகக் குறிப்பி்ட்டிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய பார்த்திபனின் கேரக்டர் பெயரான ‘ராசிமான்’ என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருவதாக பார்த்திபன் கூறியிருக்கிறார்.

பெயர் மாற்றுதல் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The post ‘துக்ளக் தர்பார்’ படப் பிரச்சினை – சீமானிடம், பார்த்திபன் சமாதானப் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதி-ரெஜினா நடித்துள்ள ‘முகிழ்’ திரைப்படம் https://touringtalkies.co/mugil-movie-preview-news/ Mon, 04 Jan 2021 08:04:41 +0000 https://touringtalkies.co/?p=11792 தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ள ‘முகிழ்’ எனும் படம். எதார்த்த மனிதர்கள் முதல் எதார்த்தம் மீறிய மனிதர்கள்வரை எல்லோரையும் தனது நடிப்பால் திரையில் பிரதிபலிக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு  ரெஜினா கசான்ட்ரா ஜோடியாகவும், 12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார். மேலும் முதல்முறையாக விஜய் […]

The post விஜய் சேதுபதி-ரெஜினா நடித்துள்ள ‘முகிழ்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ்’ எனும் படம்.

எதார்த்த மனிதர்கள் முதல் எதார்த்தம் மீறிய மனிதர்கள்வரை எல்லோரையும் தனது நடிப்பால் திரையில் பிரதிபலிக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு  ரெஜினா கசான்ட்ரா ஜோடியாகவும், 12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார்.

மேலும் முதல்முறையாக விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி, மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக சத்யா பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழில் கழுகு’ படத்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார், தற்போது பாலிவுட்டிலும் ஒரு படம் செய்திருக்கிறார். முகிழில் கதைக்கு ஏற்ற கேமராக் கோணங்களை அமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை அமைப்பாளராக ரேவா என்ற பெண் இசை அமைப்பாளர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இவர் மராட்டியிலும் மலையாளத்திலும் இசை அமைத்துள்ளார்.

96’ படத்தின் படத் தொகுப்பின் மூலம் மக்களின் மனதில் பதிந்த படத் தொகுப்பாளரான கோவிந்தராஜ் இப்படத்தில் படத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குநரான கார்த்திக் எழுதி, இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

இப்படத்தின் டிரைலர்  குறித்து இயக்குநர் கார்த்திக் பேசும்போது, “ரொம்ப லைவ்-ஆன படம் இது. ஒரு பெற்றோர் ஒரு  குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள்.. அந்தக் குழந்தையாலும், அந்தக் குழந்தைக்கும் ஒரு பிரச்சனை வரும்போது பெற்றோர் அதை எப்படி கையாள்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் மிக அழகாகச் சொல்லியுள்ளோம்.

ரெஜினா கசான்ட்ரா இப்படத்தில் அவரே டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசுவதற்காக அவர் மிகவும் மெனக்கெட்டுள்ளார், முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசியுள்ளதால்  மிகவும் சிரத்தை எடுத்து அழகாகப் பேசியுள்ளார்.

இப்படத்தின் டிரைலரைப் பார்த்த அனைவரும் மிகப் பெரிய பாராட்டுக்களைக் கொடுத்து வருகிறார்கள். அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

இப்படத்தின் டிரைலரில் வரும் பாடல் அனைவராலும் திரும்ப திரும்ப கேட்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஒரு முறை கேட்டாலே பலமுறை மனதில் ஓடும்படி  மிக கேட்சியான ட்யூனாக அது அமைத்துள்ளது. இதுபோல மேலும், இரண்டு பாடல்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி டிரைலரைப்  பார்த்துவிட்டு, அவரின் சொந்த அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டார். தன் சொந்த வாழ்வோடு கனெக்ட் செய்யும்விதமாகவும் இந்த டிரைலர் இருப்பதாக சிலாகித்தார்.

“இந்த டிரைலர் என்னை நிறைய பேச வைத்துள்ளது, எல்லாம் இந்தப் படம் செய்த வேலை. ஒரு பேமிலிமேனாக எனக்கு நிறைவா இருக்கு..” என்று என்னிடம் சொன்னார் விஜய் சேதுபதி.

அவரது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் 100% சதவிகிதம் தகுதியான படமாக ரசிகர்களின் பார்வைக்கும் இப்படம் இருக்கும்…” என்றார்.

இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.

The post விஜய் சேதுபதி-ரெஜினா நடித்துள்ள ‘முகிழ்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் சேதுபதி வாங்கியிருக்கும் விலையுயர்ந்த புதிய கார்..! https://touringtalkies.co/vijay-sethupathy-bought-luxury-car/ Tue, 15 Dec 2020 07:22:27 +0000 https://touringtalkies.co/?p=11053 ‘பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்’ என்பதுபோல பணம் உள்ளவர்கள் புத்தம் புது கார்கள் வாங்குவதில் தவறில்லைதான். ஆனால், 32 வருட கால பழமையான காரை மிக அதிக விலைக்கு வாங்கினால்.. அதை எப்படி ஏற்றுக் கொள்வது..? நடிகர் விஜய் சேதுபதியிடம் ஏற்கெனவே ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற விலையுயர்ந்த கார்கள் இருந்தாலும், தற்போது புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் காரையும் வாங்கியிருக்கிறார். ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இப்போது புதிதாக வாங்குவதாக இருந்தால்கூட யார் வேண்டுமானாலும் வாங்கிவிட முடியாது. சமூகத்தில் மிக […]

The post நடிகர் விஜய் சேதுபதி வாங்கியிருக்கும் விலையுயர்ந்த புதிய கார்..! appeared first on Touring Talkies.

]]>
‘பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்’ என்பதுபோல பணம் உள்ளவர்கள் புத்தம் புது கார்கள் வாங்குவதில் தவறில்லைதான்.

ஆனால், 32 வருட கால பழமையான காரை மிக அதிக விலைக்கு வாங்கினால்.. அதை எப்படி ஏற்றுக் கொள்வது..?

நடிகர் விஜய் சேதுபதியிடம் ஏற்கெனவே ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற விலையுயர்ந்த கார்கள் இருந்தாலும், தற்போது புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் காரையும் வாங்கியிருக்கிறார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இப்போது புதிதாக வாங்குவதாக இருந்தால்கூட யார் வேண்டுமானாலும் வாங்கிவிட முடியாது. சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள்.. பெருமைக்குரியவர்கள்.. அவர்கள் சார்ந்த துறையின் அடையாளமாக இருப்பவர்கள் என்று ஏகப்பட்ட பார்மாலிட்டிகள் இருக்கின்றன.

கடந்த ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க விருப்பப்பட்டு விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்ட இந்திய கோடீஸ்வரர்களின் மனுவை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தள்ளுபடி செய்துவிட்டது. இப்படியொரு கண்டிஷனுடன்தான் அந்தக் கார் உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது.

தமிழ்ச் சினிமாவில் நடிகர் விஜய், நடிகர் தனுஷ், இயக்குநர் ஷங்கர் ஆகிய மூவரும்தான் இந்தக் காரை வாங்கியிருக்கிறார்கள். இந்தக் காரை வாங்க மற்றவர்கள் ஏன் முயலவில்லை என்றால்.. இந்தக் காரை வாங்கினால் அது யானையை வாங்குவது போலத்தான். தீனி போட்டு மாள முடியாது.

ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏதாவது சிறிய சிராய்ப்பு ஏற்பட்டால்கூட அதைச் சரி செய்யும் ஆகும் செலவில் இன்னொரு குட்டி காரையே வாங்கிவிடலாம். ஏதாவது ஒரு உதிரி பாகத்தை மாற்றுவதாக இருந்தால்கூட அதை இறக்குமதி செய்துதான் செய்தாக வேண்டும். சர்வீஸ் செலவே சில லட்சங்களைத் தொடும் என்பதால்தான் கூந்தல் உள்ள மாமிகள் மட்டுமே கொண்டை போடுவதுபோல இதைத் தாங்கும் சக்தியுள்ளவர்கள் மட்டுமே இதை வாங்கியிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் இப்போது இந்த லிஸ்ட்டில் நடிகர் விஜய் சேதுபதியும் சேர்ந்திருக்கிறார்.

விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். ஆனால், இந்தக் கார் புதிய கார் அல்ல. 1968-ம் ஆண்டின் மாடல் கார் என்பதுதான் இதில் இருக்கும் சுவையான செய்தி.

38 ஆண்டுகளுக்கு முந்தைய கார் என்றாலும் இப்போதும் புதிய கார்களுக்கு சவால்விடும் வகையில் ஓடுகிறதாம். பார்த்தவுடனேயே வாங்கியாக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிட்டதாம் அந்தக் கார்.

அப்புறமென்ன..? இப்போது அந்தக் காரில்தான் விஜய் சேதுபதி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

The post நடிகர் விஜய் சேதுபதி வாங்கியிருக்கும் விலையுயர்ந்த புதிய கார்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..? கூடுதல் சம்பளமா..? https://touringtalkies.co/actor-parthiban-asks-compensation-from-movie-producer/ Thu, 26 Nov 2020 07:27:33 +0000 https://touringtalkies.co/?p=10389 கடந்த இரண்டு நாட்களாக கோடம்பாக்க கிசுகிசு உலகத்தில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் பெயரும் அடிபட்டது. அவர் ஒரு தயாரிப்பாளரிடம் “கூடுதலாக சம்பளம் கொடுத்தால்தான் நடிக்க வருவேன்” என்று சொல்லியதாகத் தகவல்கள் காற்றுவாக்கில் செய்திகள் பறந்தன. விசாரித்தபோது பார்த்தின் சைடில் இருந்து உண்மையான தகவல்கள் வெளியானது. விஜய் சேதுபதியுடன் பார்த்திபன் நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் நடப்பதாக இருந்தது. அந்த மாதத்திலேயே பார்த்திபன் 15 நாட்கள் கால்ஷீட்டை ஒரு மலையாளப் படத்திற்குக் கொடுத்திருந்தார். […]

The post நடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..? கூடுதல் சம்பளமா..? appeared first on Touring Talkies.

]]>
கடந்த இரண்டு நாட்களாக கோடம்பாக்க கிசுகிசு உலகத்தில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் பெயரும் அடிபட்டது.

அவர் ஒரு தயாரிப்பாளரிடம் “கூடுதலாக சம்பளம் கொடுத்தால்தான் நடிக்க வருவேன்” என்று சொல்லியதாகத் தகவல்கள் காற்றுவாக்கில் செய்திகள் பறந்தன.

விசாரித்தபோது பார்த்தின் சைடில் இருந்து உண்மையான தகவல்கள் வெளியானது.

விஜய் சேதுபதியுடன் பார்த்திபன் நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் நடப்பதாக இருந்தது. அந்த மாதத்திலேயே பார்த்திபன் 15 நாட்கள் கால்ஷீட்டை ஒரு மலையாளப் படத்திற்குக் கொடுத்திருந்தார்.

ஆனால், ‘துக்ளக் தர்பார்’ படத்தின் தயாரிப்பாளரோ “அந்த 15 நாட்கள் கண்டிப்பாக எனது படத்திற்கு வேண்டும்…” என்று வற்புறுத்தியதால் பார்த்திபனும் ஒத்துக் கொண்டிருக்கிறார். இதனால், பார்த்திபனால் அந்த மலையாளப் படத்தில் நடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் திடீரென்று விஜய் சேதுபதி ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்க சென்றுவிட்டதால் அந்த ஜனவரி மாதத்தில் பார்த்திபன் கொடுத்திருந்த 15 நாட்கள் கால்ஷீட் வீணாகிவிட்டது. அதற்கடுத்து கொரோனாவும் வந்துவிட.. படப்பிடிப்புகள் மொத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் துவங்க உள்ள நிலையில் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் தயாரிப்பாளரிடம் பார்த்திபன் தான் மலையாளப் படத்தில் நடிக்காமல் விட்டுக் கொடு்த்ததினால் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடாக ஒரு தொகையைத் தரும்படி கேட்டிருக்கிறார். “இது மாதிரியான இழப்பீடுகளுக்கு நஷ்ட ஈடு கேட்பதும், கொடுப்பதும் தொழில் தர்மம்” என்பதால் பார்த்திபன் கேட்டிருக்கிறார்.

“இதனால் அந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சுமூகமாக நான் தொடர்ந்து நடித்துத் தருவேன்.” என்கிறார் நடிகர் பார்த்திபன்.  

இதைத்தான் வெளியில் பார்த்திபன் கூடுதல் சம்பளம் கேட்டதாகச் சொல்லித் திரித்துவிட்டதாக பார்த்திபனே இப்போது வருத்தப்படுகிறார். 

The post நடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..? கூடுதல் சம்பளமா..? appeared first on Touring Talkies.

]]>
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! https://touringtalkies.co/udhayanidhi-stalin-maghia-thirumeni-combo-movie-will-starts-on-november-4/ Thu, 29 Oct 2020 10:16:31 +0000 https://touringtalkies.co/?p=9419 பரபரப்பான அரசியல் வேலைகளுக்கிடையிலும் ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். இதுவரையிலும் 12 திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதியின் கடைசி திரைப்படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படம் படைப்பு ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் பின்பு கே.எஸ்.அதியமானின் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும், மு.மாறனின் இயக்கத்தில் ‘ஏஞ்செல்’ படத்திலும் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இதற்கிடையில் மூன்றாவதாக இப்போது இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ‘முன் தினம் பார்த்தனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, […]

The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.

]]>
பரபரப்பான அரசியல் வேலைகளுக்கிடையிலும் ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

இதுவரையிலும் 12 திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதியின் கடைசி திரைப்படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படம் படைப்பு ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது.

இதன் பின்பு கே.எஸ்.அதியமானின் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும், மு.மாறனின் இயக்கத்தில் ‘ஏஞ்செல்’ படத்திலும் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இதற்கிடையில் மூன்றாவதாக இப்போது இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

‘முன் தினம் பார்த்தனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் 5-வது திரைப்படம் இது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 4-ம் தேதி துவங்குகிறது.

இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம் சம்பந்தமான பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.

]]>
“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! https://touringtalkies.co/director-seenu-ramasamy-complaint-about-death-threatens/ Wed, 28 Oct 2020 06:46:33 +0000 https://touringtalkies.co/?p=9370 தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீர் புகார் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் ‘கூடல் நகர்’, ‘தென் மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர். இவருக்குத் தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவரே புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று காலை டிவீட்டரில் […]

The post “800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! appeared first on Touring Talkies.

]]>

தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீர் புகார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் ‘கூடல் நகர்’, ‘தென் மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர்.

இவருக்குத் தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவரே புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று காலை டிவீட்டரில் ஒரு அவசரச் செய்தியொன்றை பகிர்ந்தார் சீனு ராமசாமி.

அதில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலையில் அவசரமாகப் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்துப் பேசுகையில், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ பிரச்சனையில் எல்லோரையும் போலவே நானும் தம்பி விஜய் சேதுபதியிடம் ‘அதில் நடிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் வைத்தேன்.

இதற்கடுத்து நான் விஜய் சேதுபதிக்கு எதிரானவன் என்று சித்தரித்து எனக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் வருகின்றன.

எனக்கும், தம்பி விஜய்சேதுபதிக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை போல இதனை சித்தரிக்கின்றனர். எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அதனைக் கூர்மையாக்கி எங்களிடையே பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

எனக்கு அரசியல் பற்றிய சினிமாக்களை எடுக்கத் தெரியும். ஆனால் சினிமாவிற்குள் இருக்கும் அரசியல் தெரியாது. தம்பி விஜய் சேதுபதியின் நலன் கருதியே அவரை அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று நான் சொன்னேன். ஆனாலும் எனக்கு மிரட்டல்களும், ஆபாச அர்ச்சனைகளும் வந்து கொண்டேயிருக்கின்றன.

இது பற்றி தம்பி விஜய் சேதுபதியிடமும் நான் பேசினேன்.  விஜய் சேதுபதியின் ரசிகர்களும் என்னுடைய தம்பிகள்தான். அவர்கள் இதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். நமக்கு இடையே யாராலும் முரண்பாடுகளை உருவாக்க முடியாது’ என்று விஜய் சேதுபதியும் என்னிடம் கூறியிருக்கிறார்.

ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் நள்ளிரவிலும் மிரட்டல் விடுக்கின்றனர். அதனால்தான் ட்விட்டரில் அப்படி ஒரு பதிவை போட்டேன். இது தொடர்பாக காவல் துறையில் எழுத்துப்பூர்வமாகவும் புகார் தரப் போகிறேன்..” என்று கூறினார் சீனு ராமசாமி.

The post “800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! appeared first on Touring Talkies.

]]>