Friday, April 12, 2024

மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதியின் பேச்சு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில், ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு-2’.

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த ‘பிசாசு-2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தான் எப்படி இப்படத்தில் இணைந்தேன் என்பது பற்றியும், இயக்குநர் மிஷ்கினின் கலை ஆர்வம், இயக்கத் திறமைகள் குறித்தும் சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி விவரித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், “மிஷ்கின் அவர்களுடைய பல நேர்காணல்களில் அவர்  நான் அகிர குரோசோவோவுடன் பத்து வருடம் டிராவல் பண்ணினேன்’ என்று சொல்லியிருப்பார். ‘இவர் அகிர குரோசோவோ படம்தானே பார்த்திருப்பார். எப்படி டிராவல் பண்ணியிருக்க முடியும்..?’ என்ற எண்ணம் நமக்கு வரும்.

உண்மை என்னவெனில் திருவள்ளுவர் இப்போது இல்லை. ஆனால் குறள் வழியாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைப் போன்ற உறவுதான் அகிர குரோசோவோ-மிஷ்கினின் உறவு. அதை நான் அவரை சந்தித்த பிறகு… சைக்கோ’ படத்தைப் பார்த்த பிறகு அவர் அகிர குரோசோவாவுடன் எவ்வாறு பயணப்பட்டு இருப்பார் என்பதை உணர்ந்தேன்.

உண்மையிலே ‘சைக்கோ படம் பார்த்து பிரமித்துப் போனேன். அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் கதை சொன்னது. ஒரு நாள் இயக்குநர் மிஷ்கினை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தேன்.

அப்போது “நாம் சந்திக்கலாமா..?” என்று கேட்டதும் ‘வா கண்ணம்மா’ என்று அழைத்தார். சந்தித்தோம். மீட்டிங் சிறப்பாக முடிந்தது. அப்போது இந்த ‘பிசாசு-2′ கதையை சுருக்கமாக சொன்னார்.

அந்தப் படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் நான் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறேன் என்று அவர் சொல்லும்போது ஒரு சினிமா கலைஞனாக நான் ஆச்சரியமும், பெருமிதமும் அடைந்தேன்.

“நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம். அதுவும் சீக்கரமாக பண்ணுவோம்” என்றேன். அதனால்தான் இந்த ‘பிசாசு-2’ படத்தில் எனக்காக ஒரு பிரத்யேகமாக சிறிய கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.

“உங்கள் சிந்தனையில் நான் படம் பண்ணனும். நான் ரெடியாக இருக்கிறேன். உங்களுடன் படம் பண்ணும்போது என்னால் சினிமாவை மேலும் கற்றுக் கொள்ள முடியும்” என்று பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

- Advertisement -

Read more

Local News