The post ‘வள்ளி மயில்’ முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், பாரதிராஜா, ‘புஷ்பா’ படப் புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, G.P.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இசை – டி.இமான், ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, படத் தொகுப்பாளர் – ஆண்டனி, கலை இயக்கம் – உதயகுமார், மக்கள் தொடர்பு – சதீஷ் AIM, விளம்பர வடிவமைப்பு – ட்யூனி ஜான்.
‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜீவா’ போன்ற பல வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களின் பெரு வரவேற்பை பெற்று வரும் இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
1980-களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இந்த ‘வள்ளி மயில்’ திரைப்படம் உருவாகிறது.
திண்டுக்கல் மாநகரில் 1980 காலக்கட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன.
மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது.
விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக, பழமையான சென்னையை கட்டமைக்கும் வகையில், பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னையை தொடர்ந்து டெல்லியிலும் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
The post ‘வள்ளி மயில்’ முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது appeared first on Touring Talkies.
]]>The post விஜய் ஆண்டனியை இயக்கவிருக்கும் சி.எஸ்.அமுதன் appeared first on Touring Talkies.
]]>இந்த இரண்டு படங்களின் முழு விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் Infiniti Film Ventures நிறுவனம் மூன்றாவது முறையாக விஜய் ஆண்டனியுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறது.
பரபர திரில்லராக உருவாகவுள்ள இப்படத்தை ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் C.S.அமுதன் இயக்குகிறார்.
இந்தப் புதிய படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, “Infiniti Film Ventures நிறுவனத்துடன் நான் மூன்றாவது முறையாக இணைவதை நினைத்தால், பெருமையாக உள்ளது.
Infiniti Film Ventures நிறுவன தயாரிப்பாளர்கள் தரம் மிகுந்த, கொண்டாட்டமான படைப்புகளை தேர்ந்தெடுத்து செய்பவர்கள். ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ படங்கள் மூலம் அது உறுதியாகியுள்ளது.
இயக்குநர் C.S.அமுதன் என்னிடம் இக்கதையினை சொன்னபோது முற்றிலும் வாயடைத்து போனேன். தமிழ்ப் படங்களின் குறைபாடுகளை கிண்டலடிக்கும், ஸ்பூஃப் வகை படங்களிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு திரில்லர் கதையை அவர் படைத்திருந்தார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அமுதன் மிகச் சிறந்த திரில்லர் இயக்குநராகக் கொண்டாடப்படுவார்…” என்றார்.
இயக்குநர் C.S.அமுதன் இந்தப் புதிய படம் பற்றிப் பேசும்போது, “நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் இணைந்து, பணியாற்றும் செய்தியை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். அதிலும் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனமான Infiniti Film Ventures நிறுவனத்துடன் இணைவது பெரும் மகிழ்ச்சி.
என்னுடைய வழக்கமான நகைச்சுவை பாணியிலிருந்து மாறுபட்டு இம்முறை ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகளைத் தற்போது துவக்கியுள்ளோம். படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்…” என்றார்.
இப்படத்தினை கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.P மற்றும் Infiniti Film Ventures நிறுவன பங்கஜ் போரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
The post விஜய் ஆண்டனியை இயக்கவிருக்கும் சி.எஸ்.அமுதன் appeared first on Touring Talkies.
]]>The post “விஜய் ஆண்டனி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான்..” – பாராட்டுகிறார் நடிகை ஆத்மிகா..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். ஆத்மிகா நாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் விஜய் ஆண்டனியின் 14-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவு – N.S.உதயகுமார், இசை – நிவாஸ் கே.பிரசன்னா, தயாரிப்பு – T.D.ராஜா, இணை தயாரிப்பு – கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B பிரதீப், பன்காஜ் போஹ்ரா, விக்ரம் குமார், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது. ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய இயக்குநரான ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க Dr.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.
படத்தின் நாயகனான விஜய் ஆண்டனி படம் பற்றி பேசும்போது, “கொலைகாரன்’ படத்திற்குப் பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில் நடிப்பேன். ஆத்மீகாவுடன் நடித்ததிலும் மகிழ்ச்சி . அவர் ஒரு திறமையான நடிகையும்கூட. நிவாஸின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது..” என்றார்.
படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ஆத்மிகா பேசும்போது, “இந்தப் படத்தில் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹீரோவுடன் இணைந்தே கடைசிவரையிலும் பயணிக்கக் கூடிய ஒரு கேரக்டர். இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
கொரோன காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த சில நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள். படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும், தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக் கொண்டு நடித்தார். விஜய் ஆண்டனி ஸார் ரியல் லைஃபிலும் ஹீரோதான்..” என்றார்.
படத்தை பற்றி இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் பேசும்போது, “இந்தக் ‘கோடியில் ஒருவன்’ படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மெட்ரோ’ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார்.
இந்தப் படத்தில் அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், சிக்கலைகளையும் மற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இது முழுக்க, முழுக்க ஒரு ஜனரஞ்சகமான விறுவிறுப்பான படம்..” என்றார்.
விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான Dr.தனஞ்செயன் பேசும்போது, “கோடியில் ஒருவன்’ என்ற இந்தப் பாசிட்டிவான படத் தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது. ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குநர். இந்தப் படத்தை நாங்கள் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்திலும் அனைவரின் ஒத்துழைப்போடும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
விஜய் ஆண்டனி இந்தப் படத்தில்தான் முதன்முதலாக எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி கடுமையான உழைப்பாளி. படப்பிடிப்பு நடக்கும்போதே ஷூட் முடித்ததும் மறுபுறம் எடிட்டிங் வேலைகளை கவனிப்பார்.
படத்தின் முதல் பாதி அருமையாக வந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்…” என்றார்.
The post “விஜய் ஆண்டனி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான்..” – பாராட்டுகிறார் நடிகை ஆத்மிகா..! appeared first on Touring Talkies.
]]>The post “மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைுப் பெறும்…” – நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்து appeared first on Touring Talkies.
]]>தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத் தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் சிபிராஜ், நடிகை நந்திதா ஸ்வேதா, நடிகர் ஜெயப்பிரகாஷ், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பேசும்போது, “இந்தப் படத்தின் நாயகனான சிபி ரொம்பவும் இனிமையான மனிதர். மிகப் பெரிய நட்சத்திரன் மகன் என்ற அடையாளமே இல்லாமல் இருப்பார். நான் இசையமைப்பாளராக இருக்கும்போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாகவும் பழகுவார்.
இசையமைப்பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர். அவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக தெலுங்கிலும் அவர் அறிமுகமாகுகிறார். அதற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய முதல் படத்தின் கலை இயக்குநர் நிதேஷ், இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார், அவருக்கும்ம் எனது வாழ்த்துகள். எப்போதுமே எடிட்டர் பிரவீன் சாரின் பணி சிறப்பாக இருக்கும். அவருடைய கட்டிங்ஸை பார்த்து நான் ரசிப்பேன். அவரும் இந்த படத்தில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சி.
படத்தின் இரண்டாவது ஹீரொ ஜே.எஸ்.கே. சார். நான் அவரை ரொம்பவும் ரசிப்பேன். ‘அக்னி சிறகுகள்’ படம் மூலம் அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ரொம்ப சிறந்த மனிதர். ரொம்ப இயல்பாக நடிக்க கூடியவர் ஜெயப்பிரகாஷ் சார். அவரை நான் எப்போதும் ஆச்சரியமாகவே பார்ப்பேன். ஒரு தயாரிப்பாளர் எப்படி இப்படி நடிக்கிறார் என்று வியந்து பார்த்ததுண்டு. படக் குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. ‘மாஸ்டர்’ போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் என்றால்கூட பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்டமான காலக்கட்டத்தில் படங்களை பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது.
மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும், பெரிய படங்கள் போல சிறிய படங்களும் வெற்றி பெற வேண்டும். இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம்தான். நிச்சயம் தமிழிலும் மிகப் பெரிய வெற்றி பெறும்…” என்றார்.
சமீபத்தில் வெளியான ‘கபடதாரி’ படத்தின் டிரைலர் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றதோடு, மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் ஜனவரி 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
The post “மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைுப் பெறும்…” – நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்து appeared first on Touring Talkies.
]]>The post விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருப்பது ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>அரை டஜன் படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்தப் படம் எதுவாக இருக்கும் என்கிற குழப்பம் திரையுலகத்தில் நிலவி வந்தது.
விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘தமிழரசன்’ என்ற படத்தை பெப்சி சிவா தயாரித்துள்ளார். மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. படம் முடிவடைந்து வெளியீட்டுத் தயாராக இருந்தாலும் தயாரிப்பாளர் உடனேயே வெளியிடத் தயங்குவதால் இந்தப் படம் அப்படியே இருக்கிறது.
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டி.சிவா தயாரிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருப்பதால் இந்தப் படம் இன்னமும் முடிவடையவில்லை.
‘காக்கி’ என்ற படத்திலும் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் பாக்கியிருக்கிறதாம். கொரோனாவுக்காக காத்திருந்தவர்கள் தற்போதுதான் கிளம்புவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருப்பதால் இதுவும் தாமதமாகவும் என்கிறார்கள்.
இதற்கிடையில் ‘கோடியில் ஒருவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தை மட்டும் மீண்டும் மின்னல் வேகத்தில் தட்டியெழுப்பிய விஜய் ஆண்டனி இந்தப் படத்தை முழுமையாக நடித்து முடித்துவிட்டு டீஸரையும் வெளியிட்டுவிட்டார்.
தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனால், விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்தத் திரைப்படம் ‘கோடியில் ஒருவனா’கத்தான் இருக்கும்..!!!
The post விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருப்பது ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>