The post “மக்கள் சினிமா பார்த்தால்தான் நாங்கள் வாழ முடியும்” – நடிகர் ராதாரவி பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>உபாசனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சென்றாயன், வையாபுரி, ரெமோ சிவா, சாம்ஸ், வினோதினி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தினை தயாரித்ததோடு பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார் தயாரிப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ்.
இந்த ‘லோக்கல் சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நேற்று காலை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ராதாரவி, சினேகன், இசையமைப்பாளர் தீனா, சங்கர் கணேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.
இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசுகையில், “லோக்கல் சரக்கு’ என்று தலைப்பு வைத்திருப்பதால் இந்தப் படம் நன்றாக ஓடும். சரக்கு போட்டுவிட்டால் படம் புரியாது. லோக்கல் சரக்கு இல்லையென்றால் எந்த அரசையும் நடத்த முடியாது.
குடியை நிறுத்த முடியும் என்று சொன்னால் “இரவு நிறுத்தினேன்; மீண்டும் காலையில் ஆரம்பித்தேன்” என்பார்கள். நாங்கள் அப்படி பழகிவிட்டோம். ஒரு முறை குடிக்கப் பழகிவிட்டு அதை விடமுடியாமல் மீண்டும், மீண்டும் குடிக்கிறார்கள். சினிமா தியேட்டருக்கு மக்கள் தற்போது வருவதே இல்லை. ஆனால், டாஸ்மாக் அப்படியா? கூட்டம் அதிகமாக இருக்கும். சினிமாவில் டிக்கெட் வாங்குவதுபோல மது வாங்குகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது ஒரேயொரு ஆள்தான் படம் வாங்குகிறார் என்று சொல்கிறார்கள். அதனால்தான் கமல் படம் 100 நாட்கள் ஓடுகிறது. நான் 100 நாட்கள் பார்த்தே ரொம்ப நாள் ஆகிறது.
தவறான தலைப்பை வைத்தால்தான் மக்கள் பார்க்கிறார்கள். நல்ல தலைப்பை வைத்தால் பார்க்க மாட்டார்கள். மக்கள் சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்த்தால்தான் நாங்கள் வாழ முடியும். அப்படிதான் இது மாதிரி நிகழ்வுகளில் பேச முடியும்.
சினிமா விமர்சனத்தை 3 நாட்கள் கழித்தெல்லாம் எழுத வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். இப்போதெல்லாம் முதல் காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விமர்சனம் செய்கின்றனர்.. உலகம் அவ்வளவு வேகமாக உள்ளது..” என்றார்.
The post “மக்கள் சினிமா பார்த்தால்தான் நாங்கள் வாழ முடியும்” – நடிகர் ராதாரவி பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>The post “தமன்னா அவ்ளோ கலரு..” – ராதாரவியின் கிண்டல் பேச்சு appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர், ஸ்வாதி கிருஷ்ணன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – The Nightangle Production, எழுத்து, இயக்கம் – சமய முரளி, இசை -தென்மா & சதிஷ் சக்ரவர்த்தி, ஒளிப்பதிவு – பாஸ்கர், பத்திரிகை தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்ரு மாலை சென்னை, பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது, “என் சினிமா கேரியரில் நான் முதன்முதலில் கன்னட படத்தில்தான் நடித்தேன். கமல்தான் இங்கு ‘மன்மத லீலை’ படத்தில் என்னை சிக்க வைத்தார். ஸ்ரீதர் ஆடினாலே நல்லாருக்கும். அதேபோல் வேல்முருகன் மாரியாத்தாளுக்கு என்றே இருக்குற ஆள். நல்லா பாடுவார். வேல்முருகன் பாட்டு எனக்கு எப்பவுமே பிடிக்கும். வேல்முருகன் மனசுல இருந்து பாடிருக்கார். மெட்ராஸ் கானா பாடல்களை மேடையில் அழகாக பாடிய தம்பிகளுக்கு ஹேட்ஸ் ஆப்!
கானா கும்பலோட எல்லாம் சுத்துனவன்தான் நான். ஆனால் இந்தப் பசங்க நல்லா பாடினாங்க. தென்மா எக்ஸ்லண்டா மியூசிக் பண்ணிருக்கார். சதிஷும் மியூசிக் பண்ணிருக்கான். கேமராமேன் நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கார்.
சமய முரளி இந்தப் படத்தின் கதையைச் சொன்னார். அருமையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். இயக்குநர் இப்படியொரு கதையை எடுத்ததுக்கு ஹேட்ஸ் ஆப்.
சிலர் “நான் கீழ இருந்து வந்தேன். அதனால் இப்படி படம் எடுத்தேன்” என்பார்கள். ஆனால் சமய முரளி மேலே இருந்து வந்தவர். இப்பலாம் யார், யார்லாமோ நடிக்க வந்துட்டாங்க. சனியன் நானூறு படம் நடிச்சிட்ட பிறகும் நானே சிலரிடம் “நான் நல்லா நடிப்பேன்”னு சொல்ல வேண்டியிருக்கு.
எல்லாரும் ஓடிடி ன்னு சொல்லிட்டிருக்காங்க. எல்லா பெரிய ஹீரோக்களுக்கும் சொல்றேன். இப்பம் கொடுப்பான் ஓடிடி. பிறகு அவனே பிக்ஸ் பண்ணுவான். படம்னா தியேட்டர்லதான் பார்க்கணும்.
இந்தக் கனல் படத்தை நான் பார்க்காமலே பேச முடியும். இயக்குநரிடம் கனலா அனலா என்ன? என்று கேட்டேன்.
நடிகை தமன்னாவைப் பார்த்தபோது நான் பெரிதும் வியந்தேன். அந்தப் பொண்ணை சுத்திச் சுத்தி வந்து பார்த்தேன். ஒரு இடமும் கருப்பும் இல்ல. இந்தப் பொண்ணு காவ்யாவும், தமன்னா போல அவ்ளோ கலரு. நல்லா நடிச்சிருக்கு பொண்ணு. நல்லாவும் தமிழ் பேசினாங்க. புரொடக்சன்ல இருந்தேன்னு சொன்னது ஆச்சர்யம்.
அற்புதமான குருப் இது. சினிமாவைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையாக இருங்கள். சினிமாவில் ஒற்றுமைதான் முக்கியம். கமல் எவ்வளவு திறமைக்காரர் பாருங்க. இந்த நேரத்துலயும் நம்பர் ஒன் கலெக்ஷனை எடுத்தான் பாருங்க. அதான் திறமை. கீழ இருக்கவனை பத்தி படம் எடுக்குற சமய முரளி மனசுக்கு இந்தப் படம் பெரிதாக ஹிட் ஆகும்” என்றார்.
The post “தமன்னா அவ்ளோ கலரு..” – ராதாரவியின் கிண்டல் பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post “6 படங்களைத் தயாரித்து கடன்பட்டதுதான் மிச்சம்” – ராதாரவியின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடைபெற்ற ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ராதாரவி இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசும்போது, “இந்த படத்தின் நாயகன் அசார் டிவியிலிருந்து வந்தவர். உனக்கு உதாரணமாக பலரை சொல்லுவார்கள். அதைக் காதில் கேட்கவே கூடாது. உனக்கு என்று தனியாக பெயர் கிடைக்கும், இந்தப் படத்தின் ஒரிஜினல் எனக்குத் டைட்டில் தெரியும். ஆனால், சொல்ல மாட்டேன்,
நாஞ்சில் சம்பத் “நான் நடிகன் இல்லை.. ஆனால் என் கையில் இரண்டு படம் இருக்கு” என்றார். ஆனால் இங்கு நடிகனுக்கு படமே இல்லை. உங்களுக்கு படமிருக்கு என்று சந்தோசப்படுங்கள்.
சினிமாவில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காகத்தான் நான் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறேன். வசதி இலவசமாக வருவது இந்த சினிமா துறையிதான்.
தயாரிப்பாளர்களால்தான் இந்த சினிமாவுலகம் வாழ்கிறது. இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் அற்புதமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.
நான் இதுவரையிலும் ஆறு படங்களைத் தயாரித்துள்ளேன். அதனாலேயே பெரிய கடனாளியாகிவிட்டேன். ஆனாலும் விடமாட்டேன். அடுத்ததாக 10 சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கப் போகிறேன்.
சினிமா வாழ வேண்டுமானால் இந்த மாதிரி சின்ன படங்களும் ஓட வேண்டும். மிக விரைவில் தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் இடையேயான சம்பள ஒப்பந்தம் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகப் போகிறது. அதனால் தமிழ்ச் சினிமா கண்டிப்பாக வளரும்.
இந்தப் படம் இந்த வித்தியாசமான டைட்டிலுக்காகவே நிச்சயமாக ஓடும்..” என்றார்.
The post “6 படங்களைத் தயாரித்து கடன்பட்டதுதான் மிச்சம்” – ராதாரவியின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர். சுட்டாரா..? – ராதாரவி எழுப்பும் பகீர் கேள்வி…! appeared first on Touring Talkies.
]]>அப்போது ‘எம்.ஜி.ஆரை. சுட்ட எம்.ஆர்.ராதா தானும் சுட்டுக் கொண்டார்’ என்று இதுநாள்வரையிலும் பல்வேறு பத்திரிகைகளிலும், செய்தித் தளங்களிலும் வரலாறுகள் பதிவாகியுள்ளன.
ஆனால் இதனை எம்.ஆர்.ராதாவின் மகனும், நடிகருமான ராதாரவி மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “ஒருவர் இறந்துவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் உண்மைக்குப் புறம்பாகப் பேசக் கூடாது. மூன்று நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட அந்த விஷயத்தில் ஏதோ அனைவரும் உடனிருந்து பார்த்ததுபோல இப்போதும் பேசிக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது. அன்றைய தினம் உண்மையில் நடந்ததே வேறு.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தை தயாரிப்பாளர் வாசு தயாரித்து வந்தார். இவர் என் எப்பாவுக்கு மிக நெருங்கிய நண்பர். இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டி வாசு என் அப்பாவிடம் கடன் உதவி கேட்டபோது, எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு எதிரேயிருந்த எங்களது தோட்டத்தை ஒரு சேட்டிடம் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று வாசுவிடம் கொடுத்திருந்தார் எங்கப்பா.
அந்தப் படத்திற்கு ஏனோ எம்.ஜி.ஆர். சரிவர கால்ஷீட் கொடுக்கவில்லை. படமும் இழுத்துக் கொண்டே போனது. அந்தப் பணம் வெளியானால்தான் எங்கப்பா கொடுத்த கடன் தொகையான ஒரு லட்சம் ரூபாய் திரும்பவும் எங்களது கைக்கு வரும் நிலைமை.
ஆனால் எம்.ஜி.ஆரோ இந்தப் படத்தின் ஷூட்டிங் பற்றிக் கவலைப்படாமல் இருந்தார். இதனால் எங்கப்பாவுக்கு எம்.ஜி.ஆர். மீது கோபம் வந்தது. ‘எம்.ஜி.ஆரை சுடப் போகிறேன்’ என்று எங்கப்பா கோபத்துடன் ஒரு சிலரிடம் சொல்லியிருக்கிறார். இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம், “எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகலாம். வா” என்று அழைத்திருக்கிறார் எங்கப்பா. அவர் பயந்துபோய் ஓடிவிட்டார். இதேபோல் வேறு சிலரிடமும் சொல்லியிருக்கிறார்.
இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்கும் எட்டியிருந்தது. அப்போது வாசு எம்.ஜி.ஆருக்கு போன் செய்து தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டார். எம்.ஜி.ஆரும் அவரை வரச் சொன்னார். “உடன் ராதா அண்ணனும் வர்றார்” என்று வாசு சொல்ல.. “அவரையும் கூட்டிட்டு வாங்க. ஆனால் அவர்கிட்ட துப்பாக்கி இருக்கு. அதை வாங்கிப் பத்திரமா அங்கேயே வைச்சிட்டு வாங்க…” என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
அன்றைய தினம் எம்.ஆர்.ராதா, நடிகை ராதிகாவின் தாயாருடன் இருந்திருக்கிறார். அவர்களது வீட்டில் இருந்துதான் அவரும் வாசுவும் எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாவரம் தோட்டத்திற்குக் கிளம்பியிருக்கிறார்கள். எம்.ஆர்.ராதா கொஞ்சம் குடித்திருந்ததும் உண்மை. அப்போது தன்னுடைய துப்பாக்கியை வாசுவுக்கே தெரியாமல் தனது இடுப்பு வேட்டியில் சொருகி வைத்திருந்தார் எம்.ஆர்.ராதா.
அங்கே போனவுடன் பலவித பிரச்சினைகள் அவர்களிடையே பேசப்பட்டிருக்கிறது. கால்ஷீட் பிரச்சினை.. “படம் முடிந்தால்தான் எனக்குப் பணம் கிடைக்கும் சூழல் இருக்கிறது…” என்று எங்கப்பாவும் எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆரோ “அந்தப் பணத்தை நான் உங்களுக்குக் கொடுக்குறேன்…” என்றெல்லாம் எங்கப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.
திடீரென்று கோபமாகி எங்கப்பா பேசப் போக.. பதிலுக்கு எம்.ஜி.ஆரும் கோபமாகப் பேசியிருக்கிறார். இந்த நேரத்தில்தான் திடீரென்று துப்பாக்கி வெடித்திருக்கிறது. எம்.ஜி.ஆரின் மீதும் குண்டுகள் பாய்ந்திருக்கிறது. அவர் ரத்தம் வடிந்த நிலையில் வாசலுக்கு ஓடியிருக்கிறார்.
எங்கப்பா அங்கேயே விழுந்திருக்கிறார். அவரது கழுத்திலும் வலது கன்னத்தின் மேல் பகுதியிலும் குண்டு பாய்ந்திருந்தது. எம்.ஜி.ஆரை காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு போயிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து எங்கப்பாவை வேலூர் நாராயணன் தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார்.
ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் காரை நிறுத்தி ரத்தம் வடிய, வடிய.. ஸ்டேஷனுக்குள் போன எங்கப்பா “எம்.ஜி.ஆர். என்னைச் சுட்டார். நானும் பதிலுக்கு அவரைச் சுட்டேன்…” என்று புகார் சொல்லியிருக்கிறார். அதன்படி புகாரும் பதிவு செய்யப்பட்டது.
இதன் பின்பு அப்பா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு உயிர் தப்பினார். இதேபோல் எம்.ஜி.ஆரும் உயிர் தப்பினார். எங்கப்பா எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்ய நினைத்திருந்தால் அவரது தலை வெடித்திருக்கும். மிக அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டால் தலை சிதறிவிடும். இந்த உண்மை அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் இங்கே என் அப்பாவுக்கு அதெல்லாம் ஆகவில்லை. அவரது உடலில் குண்டுகள் பாய்ந்திருந்தது. அவ்வளவுதான்.
ஆக.. இந்த 2 குண்டுகள் எப்படி எங்கப்பா மீது பாய்ந்தது..? யார் சுட்டது..? எதிரில் இருப்பவர் யாரோ ஒருவர் சுட்டிருக்க வேண்டுமல்லவா..? அது யார்..? இதைத்தான் எங்களது தரப்பு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் கேள்வியாகக் கேட்டார். இந்த சந்தேகத்தினால்தான் உச்சநீதிமன்றம் எங்கப்பாவுக்கு “இதுவரையிலும் அனுபவித்த தண்டனையே போதும். அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்” என்று உத்தரவிட்டது.
எம்.ஜி.ஆரின் உடலில் பாய்ந்திருந்த குண்டுகள் எங்கப்பாவின் துப்பாக்கியில் இருந்து சென்றதுதான். நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எங்கப்பாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டுகளின் நம்பர் என்ன..? அது எந்தத் துப்பாக்கியில் இருந்து வெளியேறியது என்று நீதிமன்றத்தில் நாங்கள் கேட்டபோது அரசுத் தரப்பு அதற்கு பதிலே அளிக்கவில்லை.
எங்கப்பா நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் “எம்.ஜி.ஆர். என்னைச் சுட்டார். நானும் பதிலுக்கு சுட்டேன்…” என்றுதான் கூறினார். அப்போது இருந்த தி.மு.க. அரசு எம்.ஜி.ஆரை காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுட்டதை மறைத்துவிட்டு எம்.ஆர்.ராதா மட்டுமே சுட்டதாக கதை எழுதிவிட்டது. இதுதான் நடந்த உண்மை.
இந்த உண்மையறியாமல் பலரும் இப்போது என் அப்பா மட்டும்தான் எம்.ஜி.ஆரை சுட்டார் என்று எழுதுவது சரியல்ல..” என்று குமுறித் தள்ளியிருக்கிறார்.
The post எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர். சுட்டாரா..? – ராதாரவி எழுப்பும் பகீர் கேள்வி…! appeared first on Touring Talkies.
]]>The post “நடிப்பில் உன்னை ஏறி மிதிச்சிருவேன்..” – கமல்ஹாசனிடம் சவால் விட்ட ராதாரவி appeared first on Touring Talkies.
]]>இந்தப் பிரச்சினை எதனால் எழுந்தது என்பது குறித்து நடிகர் ராதாரவி சமீபத்திய ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பேட்டியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “கமல்தான் என்னை கே.பாலசந்தரிடம் சொல்லி ‘மன்மத லீலை’ படத்தில் அறிமுகம் செய்ய வைத்தார். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அப்போதெல்லாம் நானும் அவரும், ‘வாடா’.. ‘போடா’.. என்று பேசக் கூடிய அளவுக்கு நண்பர்களாகத்தான் இருந்தோம்.
இந்த நடிகர் சங்கப் பிரச்சினையின்போதுதான் எனக்கும் அவருக்கும் இடையில் மனத்தாங்கல் ஏற்பட்டது. ஒரு விழா மேடையில் அவர் பேசும்போது, மேடையில் இருந்து அத்தனை பேரையும் அவர்கள் வகிக்கும் பதவியைச் சொல்லி அழைத்தார். ‘இயக்குநர்கள் சங்கத் தலைவர் அவர்களே’.. ‘பெப்சியின் தலைவர் அவர்களே’.. என்றெல்லாம் அழைத்துப் பேசியவர், என்னை மட்டும் ‘ராதாரவி அவர்களே’ என்று மட்டும் சொல்லி அழைத்தார்.
இதைக் கேட்டபோது எனக்குள் சுருக்கென்றானது. கோபம் வந்தது. அதே மேடையில் நான் பேசும்போது ‘சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே’.. ‘சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களே’ என்றெல்லாம் இருக்கிற நடிகர்களையெல்லாம் அவர்களுடைய பட்டப் பெயர் சொல்லி அழைத்துவிட்டு கமல்ஹாசனை மட்டும் ‘கமல்ஹாசன் அவர்களே’ என்று மட்டும் குறிப்பிட்டேன்.
அந்த விழா முடிந்து கீழே இறங்கும்போது கமல் என் கையைப் பிடித்து இழுத்து ‘மத்தவனெல்லாம் சூப்பர் ஸ்டாரு.. நான் மட்டும் கமல்ஹாசனா..?’ என்று கேட்டார். ‘அப்போ மத்தவனெல்லாம் சங்கத் தலைவருங்க.. நான் மட்டும் சாதாரண ராதாரவியா..?’ என்று கேட்டேன். ‘நான் உன் பிரெண்ட்டுடா’ என்றார். ‘அதுனாலதான் நானும் சாதாரணமா கூப்பிட்டேன்’ என்று சொல்லிவிட்டேன்.
இதற்குப் பிறகு கமலுடன் நான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கைக் குறைந்து, கடைசியாக நடிக்கவே முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. கமல்ஹாசனின் படங்களில் நாசர் நடித்த கேரக்டர்களில் நான்தான் நடித்திருக்க வேண்டும். ஆனால், கமலுடன் ஏற்பட்ட இந்தப் பிரச்சினைகளினால்தான் அவர் என்னை அழைத்து வாய்ப்புக் கொடுக்கவில்லை.
இதன் பிறகு ரோட்டரி கிளப் சார்பா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ‘சிவாஜி’ ராம்குமாரின் அழைப்பின்பேரில் நாங்களெல்லாம் மதுரைக்கு ரயிலில் சென்றோம். எங்களுடன் கமலும் வந்தார்.
அப்போது நானும் கமலும் மட்டும் கொஞ்ச நேரம் தனியா பேசினோம். அப்போது, “ஏன்.. ஒய்.ஜி.மகேந்திரனை இப்பல்லாம் கூப்பிடுறதே இல்லை. அவர் நல்ல நடிகர்ய்யா.. அவரைக் கூப்பிட்டு நடிக்க வைய்யா…” என்று கேட்டுக் கொண்டேன். அப்போது “என்னைய மட்டும் உன்கூட நடிக்க வைச்சுப் பாரு.. உன்னை ஏறி மிதிச்சிருவேன்…” என்று கமலிடம் அப்போதே சவால்கூட விட்டேன்.
ரஜினிதான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கொடுத்திருக்கார். கமல் கொடுக்கலை. ஆனாலும், கமலின் புகைப்படங்கள்தான் என் வீட்டில் அதிகமாக இருக்கும்.
கமல் ஒரு மிகச் சிறந்த நடிகர். சிவாஜிக்குப் பிறகு நான் பெரிதும் மதிக்கும் நடிகர்ன்னா அது கமல்தான். ஆனால் கமல் மட்டுமே தமிழ் சினிமாவுக்கு அத்தாரிட்டி கிடையாது. அவர் மட்டுமே தமிழ் சினிமாவுக்கான டிக்சனரி கிடையாது.. தமிழ்ச் சினிமாவில் இருக்கும் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் அவ்வளவுதான்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.
The post “நடிப்பில் உன்னை ஏறி மிதிச்சிருவேன்..” – கமல்ஹாசனிடம் சவால் விட்ட ராதாரவி appeared first on Touring Talkies.
]]>The post “நடிகர் விஜய் 2026-ல் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்”-ராதாரவியின் கணிப்பு appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “விஜய் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நான்தான் அவருக்கு அப்பாவாக நடித்தேன். அன்றிலிருந்து இன்றுவரையிலும் நான் அவரை நன்கு அறிவேன். அவரை நான் ‘விஜிம்மா’ என்றுதான் கூப்பிடுவேன்.
அவரும் இப்போது அரசியலுக்கு வருவதற்கு ஆர்வமாக்ததான் இருக்கிறார். சூழ்நிலைதான் சரியாக அமையவில்லை. ஆனால், நிச்சயமாகச் சொல்கிறேன்.. 2026-ம் ஆண்டில் விஜய் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். அரசியலில் மிகப் பெரிய இடத்துக்குப் போவார்.. இது எனது நம்பிக்கை..” என்று சொல்லியிருக்கிறார்.
The post “நடிகர் விஜய் 2026-ல் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்”-ராதாரவியின் கணிப்பு appeared first on Touring Talkies.
]]>The post “நீங்க மட்டும் திருடலையா..?” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..! appeared first on Touring Talkies.
]]>ஒரு வீடியோ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ராதாரவி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
அப்போதைய நடிகர் சங்கத்திற்கும், இப்போதைய நடிகர் சங்கத்திற்கும் உள்ள வித்தியாசம் பற்றிய கேள்விக்கு ராதாரவி பதிலளிக்கையில், “அப்போ இருந்த காங்கிரஸ்ல வ.உ.சிதம்பரனார் இருந்தார். இப்போ இருக்குற காங்கிரஸ்ல ப.சிதம்பரம் இருக்கார். அது மாதிரிதான் அப்போ இருந்த நடிகர் சங்கமும்.. இப்போ இருக்குற நடிகர் சங்கமும்.
நான் நடிகர் சங்கத்துல பொறுப்புக்கு வந்தப்போ அந்த இடமே சுடுகாடு மாதிரியிருந்துச்சு. நான் வந்த பின்னாடிதான் டான்ஸ் கிளாஸ், ஜிம், வாலிபால், ஷட்டில் காக் இதையெல்லாம் கொண்டு வந்தேன். எப்பவும் கூட்டம், கூட்டமா.. கலகலப்பா இருந்தது அந்த இடம்.
ஒரு தாயா.. புள்ளையா எல்லார்கிட்டேயும் பழகினோம். இப்போ எல்லாம் போச்சு. சினிமாவை வைச்சு எதையும் கணக்குப் போடக் கூடாது. இவங்க எதையும் பார்மெட்ல செய்யலை. இப்பவே அதற்கான அறிகுறிகள் தெரியுது.
இப்போ ஐசரி கணேஷ் வந்திருக்காரு. நிச்சயமாக நடிகர் சங்கத்தைக் கைப்பற்றுவாருன்னு நினைக்கிறேன். அவர் வர வேண்டியவருதான். வரணும். நல்ல மனுஷன். கொடை வள்ளல். எல்லாருக்கும் நல்லது செய்யுற குணமுடையவர். அவங்கப்பாவும் நாடக நடிகர். அவரும் நாடக நடிகர். அதுனால அந்த நல்ல குணம் அவர்கிட்ட இருக்கு.
நம்ம வாழ்க்கையே ஒரு தற்காலிகமானதுதான். இதுல நடிகன்ற போஸ்ட்டு அதைவிட தற்காலிகமானது. நடிகர் சங்கத் தலைவர்ன்ற பதவி அதைவிட தற்காலிகமானது. அதை அவங்க புரிஞ்சுக்கணும்.
நடிகர் சங்கத்துல நான் 9 வருஷம் தலைவராக இருந்திக்கிறேன். 6 வருஷம் கமிட்டி மெம்பரா இருந்திருக்கேன். 6 வருஷம் செயலாளரா இருந்திருக்கேன். பெப்சியின் செயலாளார 7 வருஷம் இருந்திருக்கேன். இப்போ டப்பிங் யூனியன்ல் 35 வருஷமா பொறுப்புல இருக்கேன். நான் இப்போ வேணாம்ன்னு சொல்லிட்டுப் போனாலும் விட மாட்டாங்க. எல்லாருக்கும் தேவையானதை செஞ்சதாலதான் என்னை வைச்சிருந்தாங்க.
அதுல திருடு போயிருச்சு.. இங்க திருடு போயிருச்சுன்னு சொல்றவங்க சொல்லுவாங்க. நாம செவி சாய்க்கக் கூடாது. நான் சைலண்டா இருக்கேன். ஆனால், அவங்க சைலண்ட்டா இருக்க மாட்டேன்றாங்க.
ஆ.. ஊ..ன்னா சரத்குமாரை பத்தி பேசுறாங்க. அவரைப் பத்திப் பேசக் கூடாது. அவர் நடிகராக, ஹீரோவாக நடித்தவர். கோடில சம்பளம் வாங்கினவர். ச்சும்மா எதுக்கெடுத்தாலும் ‘சரத்குமார் திருடிட்டாரு’.. ‘சரத்குமார் திருடிட்டாரு’ன்னு சொன்னால் எப்படி.. அப்போ நீ திருடலையா..? ‘ஐயோ நாங்க அப்படி பண்ணலை.. நாங்க நடிச்சுக்கிட்டிருக்கோம்ன’்னு சொல்றாங்க. அப்போ நாங்க மட்டும் என்ன செரைச்சுக்கிட்டா இருக்கோம்..? அப்படீன்னு பதில் சொல்லியிருக்கேன்.
இப்பவும் சொல்றேன்.. கடைசியா நடந்த நடிகர் சங்க தேர்தல் மீட்டிங்ல நான் ஒண்ணு சொல்லிட்டு வந்தேன். ‘எங்களைத் தேர்ந்தெடுத்தீங்கன்னா அதுனால எங்களுக்கு நஷ்டம்தான். ஆனால், எங்களைத் தேர்ந்தெடுக்கலைன்னா எங்களுக்கு லாபந்தான்’னு சொன்னேன்.
நிறைய பேர் கடைசி நேரத்துல பணம் வாங்கிட்டுத்தான் ஓட்டு போட்டாங்க. ரித்திஷ் தம்பிதான் பணம் கொடுத்தார். அவங்க ஜெயிச்சாங்க. இப்போ மூணே வருஷத்துல ஆட்டம் காட்டிருச்சு. கம்பியெல்லாம் வெளில தெரியுது. கட்டிடம் கட்டினால்தான் எனக்குன்னு வேகமா பேசுனாங்க.. அதெல்லாம் வெட்டி, வீறாப்பு..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.
The post “நீங்க மட்டும் திருடலையா..?” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..! appeared first on Touring Talkies.
]]>The post “கூட்டிக் கழிச்சுப் பாரு; கணக்கு சரியா வரும்’ – டயலாக் எப்படி வந்தது..?” நடிகர் ராதாரவியின் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>தமிழ்ச் சினிமாக்களில் பல்லாண்டுகளாக நினைவில் நிற்கும்படியான வசனங்கள் இடம் பெற்றிருப்பது ஒரு சில திரைப்படங்களில்தான். அந்த ஒரு வசனமே அந்தப் படத்தின் பெயரைச் சொல்லும் என்பதை போல புகழ் பெற்ற வசனங்களும் உண்டு.
அந்த வகையில் ‘பாட்ஷா’ படத்தில் இடம் பெறும் ‘நான் ஒரு தடவை சொன்னா’ என்ற வசனம்போல் ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்தில் இடம் பெறும் ‘கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்’ என்ற டயலாக்கும் பெரும் பெயரைப் பெற்றது. ஆனால் இந்த டயலாக்கை பேசியவர் அந்தப் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ராதாரவி.
இது குறித்து சமீபத்தில் ஒரு தனியார் யுடியூப் சேனலுக்கு ராதாரவி அளித்த பேட்டியில் இந்த வசனம் வெளிவந்த விதம் பற்றிய கதையை சுவாரசியமாகச் சொல்லியுள்ளார்.
அவர் இது பற்றிப் பேசும்போது, “பொதுவா நான் நடிக்கிற படங்கள்ல என்னோட மேக்கப், தோற்றம், மாடுலேஷன் இதையெல்லாம் சொந்தமா அமைச்சுக்குவேன். இயக்குநர்களும் என்கிட்ட அதை விட்ருவாங்க.. ஏன்னா.. என்னோட கேரக்டர் நல்லாயிருக்கணும்.. ரசிகர்கள்கிட்ட அது நல்லா ரீச் ஆகணும்ன்னு நினைப்பேன்.
அப்படித்தான் இந்த ‘அண்ணாமலை’ படத்துலேயும் நினைச்சேன். மேனரிசமா மார்லன் பிராண்டோ ‘காட்பாதர்’ படத்துல செஞ்ச மாதிரி தலைல சொரியறதை செய்யணும்ன்னு செஞ்சு பார்த்தேன். அப்புறம்தான் இதை ‘நாயகன்’ல கமல் செஞ்சுட்டாரேன்னு தோணுச்சு.. சரின்னு அப்படியே கையைப் பின்னாடி கொண்டு போய் அடிக்கடி முதுகைத் தேய்க்கிற மாதிரி பேசுறதை மேனரிசமா வைச்சுக்கிட்டேன்.
அப்புறம் ரஜினி ஸார் அடிக்கடி என்கிட்ட ‘இதுல டிரேட் மார்க்கா வர்ற மாதிரி ஏதாவது டயலாக்கை பிடிங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. நானும் அது பத்தியே யோசனை செஞ்சுக்கிட்டிருந்தேன். அந்த யோசனைல வந்ததுதான் நிழல்கள் ரவிகிட்ட நான் பேசுற அந்த ‘கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்’ என்ற டயலாக். இது நல்லாயிருந்ததால படம் முழுக்க வைச்சுக்கிட்டாங்க..
ஆனால், இந்த டயலாக் என்னோடதுல்ல.. ‘படிக்காத மேதை’ படத்துல வந்த வசனம்தான். அந்தப் படத்துல சிவாஜி அப்பாவை வீட்டைவிட்டு துரத்திருவாங்க. அவருக்கு வேற வேலையும் தெரியாது. எங்க போறதுன்னு தெரியாம இருக்கிறவரை துரைசாமின்ற நடிகர் மம்மட்டி வேலைக்குக் கூட்டிட்டு வருவாரு.. அதைப் பார்த்திட்டு சிவாஜி அப்பா.. ‘இதை வைச்சு என்ன செய்றது’ன்னு அப்பாவியா கேப்பாரு. அப்போ துரைசாமி அதை வைச்சு எப்படி மண்ணு தோண்டுறதுன்னு சொல்லிக் கொடுத்திட்டு.. ‘வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்.. தெரியாததையெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டி வரும். கத்துக்கிட்டுத்தான் ஆகணும்.. கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு புரியும்’ன்னு சொல்லுவாரு..
அந்த டயலாக் இந்த நேரத்துல எனக்கு சட்டுன்னு ஞாபகம் வந்தது.. உடனேயே அப்படியே பக்குன்னு பிடிச்சுட்டேன். இத்தனை வருஷம் கழிச்சும் இன்னிக்கும் ஒரு வில்லன் நடிகர் பேசுன டயலாக்குக்கு இத்தனை மாஸ் இருக்குறதை நினைச்சா ரொம்பவும் பெருமையா இருக்கு..” என்றார் பெருமையோடு..!
The post “கூட்டிக் கழிச்சுப் பாரு; கணக்கு சரியா வரும்’ – டயலாக் எப்படி வந்தது..?” நடிகர் ராதாரவியின் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>