The post ‘வட சென்னை 2-ம் பாகம்’ பற்றி வெற்றி மாறன் சொன்ன அப்டேட் appeared first on Touring Talkies.
]]>இப்போது இது குறித்து இயக்குநர் வெற்றிமாறனே புதிய அப்டேட் ஒன்றை தந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றி மாறன், “வடசென்னை-2 படத்தின் 40 சதவீத காட்சிகள் எங்கள் கையில் உள்ளது. நான் தற்போது சூர்யாவின் ‘வாடிவாசல்’ மற்றும் ‘விடுதலை’ ஆகிய படங்களில் பிசியாக இருக்கேன். எனது அடுத்த படம் கண்டிப்பாக தனுஷுடன்தான். அது பற்றி விரைவில் தகவலை தெரிவிக்கிறோம்” என்று பேசியுள்ளார்.
The post ‘வட சென்னை 2-ம் பாகம்’ பற்றி வெற்றி மாறன் சொன்ன அப்டேட் appeared first on Touring Talkies.
]]>The post ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷூடன் நடிக்கும் ஸ்வீடன் நடிகை..! appeared first on Touring Talkies.
]]>அவர் ஸ்வீடன் நடிகையான Elli AvrRam. இவர் ஏற்கெனவே தமிழில் வெளிவரவிருக்கும் ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் காஜல் அகர்வாலுடன் நடித்தவர். தற்போது தனுஷூக்கு ஜோடியாக ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கிறார்.
‘நானே வருவேன்’ படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நடைபெற்றுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியோபோஸப்கா என்ற நடிகை நடிக்கவிருக்கிறார் என்று சென்ற வாரம்தான் அறிவித்திருந்தார்கள்.
அதற்குள்ளாக மற்றுமொரு தமிழ்ப் படத்தில் மற்றுமொரு வெளிநாட்டு நடிகை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷூடன் நடிக்கும் ஸ்வீடன் நடிகை..! appeared first on Touring Talkies.
]]>The post தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>தமிழ்ச் சினிமாவின் தற்போது மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தாங்கள் இருவரும் மனமொத்து பிரிவதாக இன்றைக்கு அறிவித்துள்ளனர். இது குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும், நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும், இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று அந்த அறிக்கையில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தம்பதிகள் பற்றிய எந்தவொரு நெகட்டிவ் செய்தியும் எப்போதும் வெளிவந்திருக்காத நிலையில் இந்தத் திடீர் பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தமிழ்த் திரையுலகத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
The post தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post தனுஷ்-செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>நடிகர் தனுஷ் 2002-ம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்கியவர் அவருடைய அண்ணன் செல்வராகவன்.
இதைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’, 2006-ம் ஆண்டு ‘புதுப்பேட்டை’, 2011-ம் ஆண்டில் ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களில் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்திருந்தார் தனுஷ்.
இப்போது 5-வது முறையாக மீண்டும் தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று பெயர் வைத்துள்ளார் செல்வராகவன். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
படத்திற்கு செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றப் போகிறார். இந்தப் படத்தில் இசையமைப்பளராக யுவன் சங்கர் ராஜா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது கை நிறைய படங்களை வைத்திருக்கும் தனுஷ் இந்தப் படத்தில் எப்போது நடிக்கவிருக்கிறார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இப்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ம் தேதியன்று துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் தற்போது சென்னையில்தான் உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் நானே வருவேன் படத்தில் நடித்துக் கொடுக்கவிருக்கிறார்.
The post தனுஷ்-செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post நேரடி தெலுங்கு படத்தில் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்..! appeared first on Touring Talkies.
]]>தெலுங்கு திரையுலகில் விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் இயக்குநர் என்றால் அது இப்போதைக்கு சேகர் கம்முலாதன்.
1999-ம் ஆண்டில் தான் இயக்கிய ‘டாலர் டிரீம்ஸ்’ என்ற முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர் இயக்குநர் சேகர் கம்முலா.
இதன் பின்பு ‘ஆனந்த்’, ‘கோதாவரி’, ‘ஹேப்பி டேய்ஸ்’, ‘அவகாய் பிரியாணி’, ‘லீடர்’, ‘லைஃப் இஸ் பியூட்டிபுல்’, ‘அனாமிகா’, ‘பிடா’ ஆகிய விருதுகளை வாங்கிக் குவித்த படங்களை இயக்கியிருக்கிறார்.
ஒரு தேசிய விருது, 3 முறை நந்தி விருதுகள், 2 பிலிம் பேர் விருதுகள், 4 சினிமா விருதுகள், ஜீ சினிமா விருது என்று பல விருதுகளைப் பெற்ற திறமைமிக்க இயக்குநர் சேகர் கம்முலா.
இவருடைய இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பது பொருத்தமான தேர்வாகத்தான் இருக்கிறது. ஏனெனில், வணிக ரீதியான வெற்றிகளின் படங்களை இயக்குவதில் கம்முலா ஒரு மாஸ்டர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தை நாராயண் தாஸ் கே.நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி.(ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக (தயாரிப்பு எண் 4) மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது.
இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கான தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் அது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தற்போது தனுஷ் தனது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்து சென்னைக்கு வந்ததும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். அதன் பின்பு மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் பாலாஜி மோகனின் படத்திலும் அவர் நடிக்க வேண்டும். அதன் பின்புதான் இந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும் தெலுங்கிலும் கால் வைப்பது என்று தனுஷ் முடிவெடுத்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான்..!
The post நேரடி தெலுங்கு படத்தில் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்..! appeared first on Touring Talkies.
]]>The post “தனுஷை மும்பையில் வீடு வாங்க விடமாட்டேன்…” – இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் பாசமான பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>பாலிவுட் இயக்குநரான ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார். அந்தப் படம் தனுஷை இந்தியா முழுவதும் கொண்டு போய் சேர்த்தது. இப்போது இதே இயக்குநரின் இயக்கத்தில் ‘அந்ங்கி ரே’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாக உள்ளது.
இந்த நிலையில் இந்தப் படம் பற்றி இயக்குநர் ஆனந்த் எல்.ராய் பேட்டியளிக்கும்போது நடிகர் தனுஷ் பற்றியும் உணர்ச்சிகரமாய் பேசினார்.
அந்தப் பேட்டியில், “ராஞ்சனா’ படத்தின் கதையை சொன்ன உடனேயே ‘நான் இதில் நடிக்கிறேன்’ என்று தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்டார் தனுஷ். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.
சினிமாக்காரர்கள் பெரும்பாலும் சுயநலமாக இருப்பதாகக் கூறப்படுவது உண்டு. ஆனால் நான் அப்படி இல்லை. நடிகர் தனுஷ் எனக்கு தம்பி போன்றவர். அதனால்தான் அவரை நான் இதுவரையிலும் மும்பையில் வீடு வாங்க விடவில்லை. அவர் எப்போது மும்பைக்கு வந்தாலும் என்னுடைய வீட்டில்தான் தங்க வேண்டும் என்று சொல்லி என் வீட்டில்தான் அவரைத் தங்க வைக்கிறேன். இனிமேலும் அப்படித்தான்..” என்று நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார்.
The post “தனுஷை மும்பையில் வீடு வாங்க விடமாட்டேன்…” – இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் பாசமான பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஜகமே தந்திரம்’ படத்தில் வில்லத்தனம் காட்டியிருக்கும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் appeared first on Touring Talkies.
]]>வெளியான நிமிடத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்தப் படத்தின் ட்ரெய்லர், இணையம் வழியே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் லோக்கல் கேங்ஸ்டராக தனுஷ் நடிக்க, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி, பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் மிரட்டும் கேங்ஸ்டர் ‘சிவதாஸ்’ என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஜோஸப், ‘ஜூன்’, ‘வைரஸ்’, ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’, ‘டிரான்ஸ்’, ‘ஒன்’, ‘ஆணும் பெண்ணும்’, சமீபத்தில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றிருக்கும் ‘நாயாட்டு’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தனது மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் பெரும் புகழை குவித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜ், இந்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பெரும் எதிர்பார்ப்புடன் இந்தப் படம் வெளியாவதால் ஜோஜு ஜார்ஜ் பெரும் உற்சாகத்தில் உள்ளார்.
இது குறித்து ஜோஜு ஜார்ஜ் பேசும்போது, “நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மிகப் பெரிய விசிறி. ‘பீட்சா’ படம் பார்த்துவிட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை. நான் மலையாளத்தில் பிரபலமாக தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கின.
இறுதியாக இப்படத்தின் எடிட்டர் டிமல் டென்னிஸ் மற்றும் விவேக் ஹர்ஷன் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களை சந்தித்தேன். இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்தார் கார்த்திக்.
படத்தில் நான் ஏற்றிருப்பது மிகப் பெரிய கதாப்பாத்திரம் என்பதால் என்னிடம் ஒரு காட்சியை விவரித்து, நடித்துக் காட்ட சொன்னார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். எனக்கு தெரிந்த அரைகுறை தமிழில், நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். அவர் என்னை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். அந்த நிமிடமே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
இன்னும் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தமிழ் ரசிகர்கள் என்னை மறக்கவியலாத வண்ணம் எனது திறமையைக் காட்டுவேன்..” என்கிறார் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்.
The post ‘ஜகமே தந்திரம்’ படத்தில் வில்லத்தனம் காட்டியிருக்கும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் appeared first on Touring Talkies.
]]>The post “வட்டி கட்ட முடியலை; நான் என்ன செய்வது..?” – ‘ஜகமே தந்திரம்’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்தின் வருத்தமான பேச்சு appeared first on Touring Talkies.
]]>ஏற்கனவே இந்த படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடந்தபோதே படத்தின் நாயகனாந தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், “திரையரங்க உரிமையாளர்கள், விநயோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ‘ஜகமே தந்திரம்’ திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்று பதிவிட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இப்போது, அவரது எதிர்ப்பையும் மீறித்தான் ‘ஜெகமே தந்திரம்’ திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகிறது.
இதனால் தனுசுக்கும் தனக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நடிகர் தனுசும், நானும் கடந்த 10 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். ஆனால், இந்த ‘ஜெகமே தந்திரம்’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடும் பிரச்சினையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான்.
இந்தப் படத்தைத் தியேட்டரில் வந்தால் அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது உண்மைதான். ஆனால், வணிக ரீதியாக அதிக பொருட் செலவில் எடுத்த படத்தை ஒரு வருடமாக கையில் வைத்து இருப்பதால் எனக்குப் பெரும் வட்டி சுமை ஏற்பட்டு உள்ளது.
இந்தப் படத்தை இதற்கு மேலும் வெளியிடாமல் வைத்திருந்தால் எனக்குப் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் வேறு வழியில்லாமல் ஓ.டி.டி.யில் வெளியிடுகிறேன். தனுஷ் ஒரு தயாரிப்பாளராக என் நிலைமையைப் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் சசிகாந்த்.
The post “வட்டி கட்ட முடியலை; நான் என்ன செய்வது..?” – ‘ஜகமே தந்திரம்’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்தின் வருத்தமான பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post மாரி செல்வராஜூடன் மீண்டும் இணையும் தனுஷ்..! appeared first on Touring Talkies.
]]>தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த செய்தியை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில், ’கர்ணன்’ படத்தை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளேன். இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பமாகிவிட்டன. அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்…” என்று அறிவித்துள்ளார்.
இந்த ட்டீவிட்டுற்கு ‘கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு ’அளவில்லா ஆனந்தம்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.
மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் தனுஷ் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தனுஷூம் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தான் நடிக்கவிருக்கும் இயக்குநர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் நரேன் ஆகியோரின் படங்களையும் முடித்துவிட்டு இந்தப் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post மாரி செல்வராஜூடன் மீண்டும் இணையும் தனுஷ்..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பும் அவர் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்புவதாக இல்லையாம். அமெரிக்க சூழலில் ஒரு தமிழ்ப் படத்தை தானே இயக்கப் போவதாகவும் திட்டமிட்டுத்தான் அங்கே சென்றிருந்தார்.
இப்போது அதில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்திருக்கிறாராம் தனுஷ். அந்தப் படத்தை இயக்கும் முடிவை கைவிட்டுவிட்டு நடிக்க மட்டுமே செய்கிறாராம். இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே தனுஷை வைத்து ‘மாரி’, ‘மாரி-2’ ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்தத் தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துக் கொண்டுதான் தனுஷ் தாயகம் திரும்புவார் என்பது கடைசி செய்தி.
The post நடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>